Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்திய ராணுவ ரகசியங்களை திருடிய சீனா
3 posters
Page 1 of 1
இந்திய ராணுவ ரகசியங்களை திருடிய சீனா
இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ராணுவ ரகசியங்களை திருடியதன் மூலம், இந்தியா மீது, "சைபர்' தாக்குதலை, சீன அரசு நடத்தியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இணையதளம் வழியாக தகவல்களைத் திருடும், "ஹேக்கர்ஸ்' என்று அழைக்கப்படும் திருட்டுக் கும்பல் மூலம், இந்திய ராணுவ ரகசியங்களை சீனா திருடியது தெரிய வந்துள்ளது.
டி.ஆர்.டி.ஓ., எனப்படும், இந்தியாவின், தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவன கம்ப்யூட்டர்களில் இருந்து, பாதுகாப்பு மற்றும் ஏவுகணைத் திட்டங்கள் குறித்த முக்கிய தகவல்களை, இந்த கும்பல் திருடியுள்ளது. பாதுகாப்புத் துறையின் பல முக்கிய பைல்கள் இவர்கள் வசம் இருப்பதாக, பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு ஆண்டாக நடந்த சீனாவின் இந்தச் செயல் குறித்து, இம்மாதம் முதல் வாரத்தில் தான் கண்டுபிடிக்கப்பட்டதாக, செய்திகள் வெளியானது.தொழில்நுட்ப நிபுணர் குழு மற்றும் தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம், தனியார் பாதுகாப்பு வல்லுனர்களுடன் சேர்ந்து, இந்த திருட்டை சீனா நடத்தி இருப்பது தெரிய வந்துள்ளது. "ஆர்மி சைபர் பாலிசி' என்ற இணைப்புடன், டி.ஆர்.டி.ஓ., அதிகாரிக்கு வந்த, "இ - மெயிலை' திறந்தவுடன், அதன் மூலமாக அனைத்து தகவல்களும் திருடப்பட்டு விடுகின்றன.
குவாண்டாங்: இது குறித்த தகவல் தெரிந்தவுடன், இந்திய பாதுகாப்பு நிபுணர்கள் ஆராய்ந்ததில், "ஹேக்' செய்யப்படும் அனைத்துத் தகவல்களும், சீனாவில் உள்ள, "குவாண்டாங்' என்ற இடத்தில் உள்ள, "சர்வர்' மூலம் பதிவேற்றம் செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.தேசிய பாதுகாப்பு அமைப்பு, இதற்கு முன் நடந்த திருட்டை இவ்வளவு துல்லியமாக கண்டுபிடித்ததில்லை. இம்முறை மிகத் துல்லியமாக கண்டறிந்துள்ளது.ஐதராபாத்தில் உள்ள, டி.ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ள இந்திய பாதுகாப்பு குறித்த ஆவணங்கள், ரேடார் மற்றும் ஏவுகணை மேம்பாட்டுத் திட்டங்கள் போன்ற ஆயிரக்கணக்கான பைல்கள், இம்முறையில் திருடப்பட்டுள்ளன.
மீட்பு: திருடப்பட்ட பைல்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில், டி.ஆர்.டி.ஓ., மற்றும் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு இடையேயான ஒப்பந்தம், பிரான்ஸ் ஏவுகணை நிறுவனத்துடனான பணப் பட்டுவாடா உள்ளிட்ட பைல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்தத் திருட்டை தனியார், "ஹேக்கர்'கள் செய்ய முடியாது. இவர்களுடன் சீன அரசு சம்பந்தப்பட்டுள்ளது. "ஹேக்' செய்து பதிவேற்றம் செய்யப்பட்ட, "சர்வர்' சீனாவில் உள்ளது. இதற்காக, 150 கோடி ரூபாய் மதிப்புள்ள, "சர்வர்' பயன்படுத்தப்பட்டு உள்ளது. ஆரம்பத்தில் இருந்தே சீனா, பிற நாடுகளின் ரகசியங்களைத் திருடிவந்துள்ளது. அமெரிக்காவின் ரகசியங்களையும், சீனா, "ஹேக்' செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்தோணி பதில்:இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கம்ப்யூட்டர்களில் இருந்து தகவல்கள் திருடப்பட்டது குறித்து, ராணுவ அமைச்சர், அந்தோணியிடம் கேட்டபோது, ""இது குறித்து, உளவு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன. எனவே, இது தொடர்பாக நான் எதையும் கூற மாட்டேன்,'' என்றார்.
யு.பி.எஸ்.சி., தேர்வு மாற்றங்கள் தமிழர்களுக்கு இழைக்கும் அநீதி : ஜெ., காட்டம்
சென்னை:"ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., தேர்வுகளை தமிழில் எழுத, தமிழ் வழியில் பட்டம் பெற்றவர்கள் தான் தகுதியானவர்கள் என, யு.பி.எஸ்.சி., கொண்டு வந்துள்ள புதிய கட்டுப்பாட்டை, உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்' என, முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
இதுகுறித்து, பிரதமருக்கு ஜெயலலிதா எழுதியுள்ள கடிதம்:மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,), ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., தேர்வுகளை, மாநில மொழிகளில் எழுத முடியாதவாறு, புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. வரும் கல்வியாண்டில் முதல், இது நடைமுறைக்கு வருகிறது.யு.பி.எஸ்.சி., நான்கு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. முதல் மாற்றத்தில், உயர்நிலைக் கல்வி, பட்டப்படிப்பு ஆகியவற்றை தமிழ் வழியில் பயின்றிருக்க வேண்டும். அப்போது தான், ஐ.ஏ.எஸ்., தேர்வை தமிழில் எழுத முடியும் என, கூறியுள்ளது. இவ்விதி, இந்தி மொழிக்கு விதிக்கப்படவில்லை.இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின், 8ம் அட்டவணையில், இந்தி, தமிழ் ஆகிய மொழிகள் சேர்க்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், இந்த புதுவிதி தமிழ் பேசும் மாணவர்களுக்கும் மட்டும் எனக் கூறுவது, தமிழ் பேசுவதாலேயே, தண்டனை விதிப்பது போல் உள்ளது.கிராமப்புற மாணவர்கள், குறிப்பாக, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட மற்றும் சிறுபான்மையின மாணவர்கள், இதனால் கடுமையாக பாதிக்கப்படுவர். அசியல் அமைப்புச் சட்டம், 14 மற்றும் 16வது பிரிவில் அளிக்கப்படும், அனைவரும் சமம் என்ற உரிமையைப் பறிப்பதாக உள்ளது.
இரண்டாவதாக, பட்டப் படிப்பில் விருப்பப் பாடமாக, தமிழ் இலக்கியத்தை பயின்றவர் மட்டுமே, ஐ.ஏ.எஸ்., தேர்வை தமிழில் எழுத முடியும் என, கூறப்பட்டுள்ளது. கணிதம், வரலாறு உள்ளிட்ட பிற முக்கிய பாடங்களுக்கு, தமிழ் இலக்கியம் விருப்பப் பாடமாக இருக்காது. அப்படியென்றால், கணிதம், வரலாறு பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள், தமிழில், ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுத முடியாத நிலை உருவாக்கப்பட்டு உள்ளது.மூன்றாவதாக, மாநில மொழிகளில் தேர்வெழுத, குறைந்தபட்சம், 25 மாணவர்கள் அந்த மொழியில் தகுதி பெற்றிருக்க வேண்டும் என, குறிப்பிட்டுள்ளது. இவ்விதி ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிக்குப் பொருந்தாது என, குறிப்பிடப்பட்டுள்ளது.நான்காவதாக, ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெறுவது. இம்மாற்றம், முழுக்க முழுக்க நகர்ப்புறங்களில், ஆங்கில வழியில் பயன்ற மாணவர்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும்.
யு.பி.எஸ்.சி., செய்துள்ள மாற்றங்கள், இந்திய கூட்டாட்சிக்கும், பிராந்திய மொழிகளுக்கு அரசியல் அமைப்புச் சட்டம் அளித்துள்ள சமத்துவத்துக்கும், பங்கம் விளைவிப்பதாக உள்ளது. எனவே, தாய் மொழியில் ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்காமல், தன்னிச்சையாக, ஜனநாயகமற்ற முறையில், யு.பி.எஸ்.சி., கொண்டு வந்துள்ள மாற்றங்களை திரும்பப் பெற, நீங்கள் உடனடியாகத் தலையிட வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
நன்றி:தினமலர்
டி.ஆர்.டி.ஓ., எனப்படும், இந்தியாவின், தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவன கம்ப்யூட்டர்களில் இருந்து, பாதுகாப்பு மற்றும் ஏவுகணைத் திட்டங்கள் குறித்த முக்கிய தகவல்களை, இந்த கும்பல் திருடியுள்ளது. பாதுகாப்புத் துறையின் பல முக்கிய பைல்கள் இவர்கள் வசம் இருப்பதாக, பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு ஆண்டாக நடந்த சீனாவின் இந்தச் செயல் குறித்து, இம்மாதம் முதல் வாரத்தில் தான் கண்டுபிடிக்கப்பட்டதாக, செய்திகள் வெளியானது.தொழில்நுட்ப நிபுணர் குழு மற்றும் தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம், தனியார் பாதுகாப்பு வல்லுனர்களுடன் சேர்ந்து, இந்த திருட்டை சீனா நடத்தி இருப்பது தெரிய வந்துள்ளது. "ஆர்மி சைபர் பாலிசி' என்ற இணைப்புடன், டி.ஆர்.டி.ஓ., அதிகாரிக்கு வந்த, "இ - மெயிலை' திறந்தவுடன், அதன் மூலமாக அனைத்து தகவல்களும் திருடப்பட்டு விடுகின்றன.
குவாண்டாங்: இது குறித்த தகவல் தெரிந்தவுடன், இந்திய பாதுகாப்பு நிபுணர்கள் ஆராய்ந்ததில், "ஹேக்' செய்யப்படும் அனைத்துத் தகவல்களும், சீனாவில் உள்ள, "குவாண்டாங்' என்ற இடத்தில் உள்ள, "சர்வர்' மூலம் பதிவேற்றம் செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.தேசிய பாதுகாப்பு அமைப்பு, இதற்கு முன் நடந்த திருட்டை இவ்வளவு துல்லியமாக கண்டுபிடித்ததில்லை. இம்முறை மிகத் துல்லியமாக கண்டறிந்துள்ளது.ஐதராபாத்தில் உள்ள, டி.ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ள இந்திய பாதுகாப்பு குறித்த ஆவணங்கள், ரேடார் மற்றும் ஏவுகணை மேம்பாட்டுத் திட்டங்கள் போன்ற ஆயிரக்கணக்கான பைல்கள், இம்முறையில் திருடப்பட்டுள்ளன.
மீட்பு: திருடப்பட்ட பைல்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில், டி.ஆர்.டி.ஓ., மற்றும் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு இடையேயான ஒப்பந்தம், பிரான்ஸ் ஏவுகணை நிறுவனத்துடனான பணப் பட்டுவாடா உள்ளிட்ட பைல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்தத் திருட்டை தனியார், "ஹேக்கர்'கள் செய்ய முடியாது. இவர்களுடன் சீன அரசு சம்பந்தப்பட்டுள்ளது. "ஹேக்' செய்து பதிவேற்றம் செய்யப்பட்ட, "சர்வர்' சீனாவில் உள்ளது. இதற்காக, 150 கோடி ரூபாய் மதிப்புள்ள, "சர்வர்' பயன்படுத்தப்பட்டு உள்ளது. ஆரம்பத்தில் இருந்தே சீனா, பிற நாடுகளின் ரகசியங்களைத் திருடிவந்துள்ளது. அமெரிக்காவின் ரகசியங்களையும், சீனா, "ஹேக்' செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்தோணி பதில்:இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கம்ப்யூட்டர்களில் இருந்து தகவல்கள் திருடப்பட்டது குறித்து, ராணுவ அமைச்சர், அந்தோணியிடம் கேட்டபோது, ""இது குறித்து, உளவு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன. எனவே, இது தொடர்பாக நான் எதையும் கூற மாட்டேன்,'' என்றார்.
யு.பி.எஸ்.சி., தேர்வு மாற்றங்கள் தமிழர்களுக்கு இழைக்கும் அநீதி : ஜெ., காட்டம்
சென்னை:"ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., தேர்வுகளை தமிழில் எழுத, தமிழ் வழியில் பட்டம் பெற்றவர்கள் தான் தகுதியானவர்கள் என, யு.பி.எஸ்.சி., கொண்டு வந்துள்ள புதிய கட்டுப்பாட்டை, உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்' என, முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
இதுகுறித்து, பிரதமருக்கு ஜெயலலிதா எழுதியுள்ள கடிதம்:மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,), ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., தேர்வுகளை, மாநில மொழிகளில் எழுத முடியாதவாறு, புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. வரும் கல்வியாண்டில் முதல், இது நடைமுறைக்கு வருகிறது.யு.பி.எஸ்.சி., நான்கு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. முதல் மாற்றத்தில், உயர்நிலைக் கல்வி, பட்டப்படிப்பு ஆகியவற்றை தமிழ் வழியில் பயின்றிருக்க வேண்டும். அப்போது தான், ஐ.ஏ.எஸ்., தேர்வை தமிழில் எழுத முடியும் என, கூறியுள்ளது. இவ்விதி, இந்தி மொழிக்கு விதிக்கப்படவில்லை.இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின், 8ம் அட்டவணையில், இந்தி, தமிழ் ஆகிய மொழிகள் சேர்க்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், இந்த புதுவிதி தமிழ் பேசும் மாணவர்களுக்கும் மட்டும் எனக் கூறுவது, தமிழ் பேசுவதாலேயே, தண்டனை விதிப்பது போல் உள்ளது.கிராமப்புற மாணவர்கள், குறிப்பாக, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட மற்றும் சிறுபான்மையின மாணவர்கள், இதனால் கடுமையாக பாதிக்கப்படுவர். அசியல் அமைப்புச் சட்டம், 14 மற்றும் 16வது பிரிவில் அளிக்கப்படும், அனைவரும் சமம் என்ற உரிமையைப் பறிப்பதாக உள்ளது.
இரண்டாவதாக, பட்டப் படிப்பில் விருப்பப் பாடமாக, தமிழ் இலக்கியத்தை பயின்றவர் மட்டுமே, ஐ.ஏ.எஸ்., தேர்வை தமிழில் எழுத முடியும் என, கூறப்பட்டுள்ளது. கணிதம், வரலாறு உள்ளிட்ட பிற முக்கிய பாடங்களுக்கு, தமிழ் இலக்கியம் விருப்பப் பாடமாக இருக்காது. அப்படியென்றால், கணிதம், வரலாறு பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள், தமிழில், ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுத முடியாத நிலை உருவாக்கப்பட்டு உள்ளது.மூன்றாவதாக, மாநில மொழிகளில் தேர்வெழுத, குறைந்தபட்சம், 25 மாணவர்கள் அந்த மொழியில் தகுதி பெற்றிருக்க வேண்டும் என, குறிப்பிட்டுள்ளது. இவ்விதி ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிக்குப் பொருந்தாது என, குறிப்பிடப்பட்டுள்ளது.நான்காவதாக, ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெறுவது. இம்மாற்றம், முழுக்க முழுக்க நகர்ப்புறங்களில், ஆங்கில வழியில் பயன்ற மாணவர்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும்.
யு.பி.எஸ்.சி., செய்துள்ள மாற்றங்கள், இந்திய கூட்டாட்சிக்கும், பிராந்திய மொழிகளுக்கு அரசியல் அமைப்புச் சட்டம் அளித்துள்ள சமத்துவத்துக்கும், பங்கம் விளைவிப்பதாக உள்ளது. எனவே, தாய் மொழியில் ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்காமல், தன்னிச்சையாக, ஜனநாயகமற்ற முறையில், யு.பி.எஸ்.சி., கொண்டு வந்துள்ள மாற்றங்களை திரும்பப் பெற, நீங்கள் உடனடியாகத் தலையிட வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
நன்றி:தினமலர்
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..!
» இந்தியர்களை மீட்க மீண்டும் சீனா செல்லும் இந்திய ராணுவ விமானம்
» பாக்.,கிற்கு ராணுவ வெடிமருந்து ரகசியங்களை விற்பனை; இரு ராணுவத்தினர் கைது
» திருடன்கிட்டேயே திருட்டா? கடத்தல் தங்கத்தை திருடிய ராணுவ கர்னல் கைது
» இந்தியாவின் பொருளாதார-ராணுவ பலம்: கவலையில் சீனா -
» இந்தியர்களை மீட்க மீண்டும் சீனா செல்லும் இந்திய ராணுவ விமானம்
» பாக்.,கிற்கு ராணுவ வெடிமருந்து ரகசியங்களை விற்பனை; இரு ராணுவத்தினர் கைது
» திருடன்கிட்டேயே திருட்டா? கடத்தல் தங்கத்தை திருடிய ராணுவ கர்னல் கைது
» இந்தியாவின் பொருளாதார-ராணுவ பலம்: கவலையில் சீனா -
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|