ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமருகம் தந்த ஆதிசங்கரர்

Go down

அமருகம் தந்த ஆதிசங்கரர் Empty அமருகம் தந்த ஆதிசங்கரர்

Post by Admin Tue Sep 23, 2008 11:36 pm

அத்வைதம் தந்து உலகம் முழுவதும் ஆன்மீக ஒளி ஏற்றிய ஆதிசங்கரர், காமக்கலையை விளக்கும் ஒரு நூலையும் இயற்றினார் என்றால், உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், அவர் இயற்றிய அந்நூலின் பெயர் அமருகம் காதல், காமம் இவை பற்றி தெளிவாக கூறும் அமருகத்தை ஆதிசங்கரர் இயற்ற ஆரம்பித்த சூழலே வித்தியாசமானதுதான்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

அமருகம் தந்த ஆதிசங்கரர் Empty வாதப் போர்

Post by Admin Tue Sep 23, 2008 11:38 pm

அக்காலத்தில் நர்மதை நதிக்கரையில் தன் மனைவி சரஸவாணியோடு வசித்து வந்தவர் மண்டன மிஸ்ரர். கேள்வி ஞானத்தில் சிறந்து விளங்கிய மண்டன மிஸ்ரர் வாதப் போருக்கு சங்கரரை அழைத்தார். அத்தோடு வாதத்தில் தான் தோற்றுவிட்டால் இல்லறத்தை கைவிட்டு துறவறம் ஏற்பதாகவும் சவால் செய்தார்.

ஒரே சமயத்தில் தொடுக்கப்பட்ட இரு மாலைகளை இருவரும் அணிந்து கொண்டனர். யாருடைய மாலை முதலில் வாடுகிறதோ அவர் தோல்வியடைந்ததாக கருதப்படுவர் என்றபடி வாதம் தொடங்கியது. சிவ அம்சமாகிய ஆதிசங்கரரின் வாதத்திறமைக்கு முன் ஒன்றும் செய்ய இயலாத மண்டனர் தன் தோல்வியை ஒப்புக் கொண்டார். ஆனால் அவரது மனைவி சரஸவாணி சங்கரரின் வெற்றியை ஒப்புக்கொள்ளவில்லை. அவர் தன்னோடும் வாதம்புரிய சங்கரரை அழைத்தாள்.

வாதம் துவங்கியது. வேறு வழியின்றி இல்லற சுகத்தைப் பற்றிய கேள்விகளை கேட்க ஆரம்பித்தாள் சரஸவாணி. காதல், காமம் பற்றிய அவளது கேள்விகள் அனைத்தும் ஆபாசமாகவே இருந்தன. ஆதிசங்கரர் மவுனம் சாதித்தார். சரஸவாணி அவரிடம்

என்ன வாதப்போரில் தோல்வி அடைந்தேன் என இப்போ தாவது ஒப்புக் கொள்கிறீர்களா?- எனக் கேட்டாள்.

என் தோல்வியைத் தற்காலிகமாக நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், எப்படியும் உன் கேள்விகளுக்கு விரைவில் விடை தருவேன் என்றார் சங்கரர். உடனே சரஸவாணி அவரிடம், ஒரு மாதம் உமக்குத் தவணை தருகிறேன். அதற்குள் இல்லற இன்பம் பற்றித் தெரிந்துகொண்டு வாருங்கள் என்றாள்.

ஆதிசங்கரரோ இல்லறவியலைக் கண்டறிய, சிற்றின்பத்தின் எல்லையை அறிய மது, மங்கை, மோகம், காமம் முதலிய கலைகளை அறிய பரகாய ப்ரவேசம் செய்ய முடிவு செய்தார். அதாவது, தனது ஆத்மா வேறொரு உடலில் புகுந்து இல்லற இன்பம் அனுபவிக்க முடிவு செய்தார். சன்னியாசியான ஆதிசங்கரர் தனது உடலால் இன்பம் அனுபவிக்கக்கூடாது என்பதற்காகவே இப்படியொரு முடிவை அவர் எடுத்தார். தான் பிரவேசிக்கப் போகும் சாரீரம் கிடைக்கும் வரை காத்திருக்க முடிவு செய்து ஆத்ம யோகத்தில் அமர்ந்தார் ஆதிசங்கரர்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

அமருகம் தந்த ஆதிசங்கரர் Empty அமருகன் அரண்மனை்

Post by Admin Tue Sep 23, 2008 11:41 pm

ஆதிசங்கரர் மோன தவத்தில் இருந்த அந்த தேசத்து அரசன் அமருகன் என்பவன் காமப்பித்து தலைக்கேறி அலைபவன். எப்பொழுதும் மது அருந்திக்கொண்டேயிருப்பவன். ஒரு நாள் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் மரணமடைந்தான்.

காட்டுப்பகுதியில் தவத்தில் இருந்த ஆதிசங்கரர் உடனே தன் சீடர் பத்ம பாதரிடம், நான் பரகாயப் பிரவேசம் செய்யும் காலம் நெருங்கிவிட்டது. எனக்குத் தேவையான சரீரம் கிடைத்து விட்டது. இந்த தேசத்து மன்னனான அமருகன் கன்னியரிடம் காம வேட்டையாடினான், இப்போது இறந்துவிட்டான் என்றார்.

இதைக்கேட்டு, சீடர் பத்மபாதர் ஆதிசங்கரரிடம், ஞானியரான தாங்கள் அந்தப்புரத்து அழகிகளிடையேயும், அரண்மனை ஆடம்பரங்களிடையேயும் வாழ்வதால் தங்களது சுத்தத் தன்மைக்கு ஊறு வந்துவிடாதா? என்றார்.

ஆதிசங்கரர், தேளாலும், பாம்பாலும் நமக்குப் பயம் உண்டாகிறது. நாமே தேள், பாம்பாக மாறிவிட்டால் பயம் ஏது? நான் சரஸவாணியின் கேள்விகளுக்குப் பதில் சொல்லியே தீர வேண்டிய கடமையுடையவன் அதற்கு வாய்ப்பும் கிட்டிவிட்டது. எனவே, அரசன் அமருகன் உடலில் பிரவே சிக்கப்போகிறேன். அனுபவ பூர்வமாக விடை தெரிந்துகொள்வேன். ஒருமாத கெடுவுக்குள் மீண்டும் இவ்வுடலில் புகுவேன். அமருகன் உடலிலிருந்து மீண்டும் இந்தக் கூட்டில் இந்த ஆத்மா அடைபடும்வரை அகோபில குகையில் என்னுடல் இருக்கட்டும் என்று கூறி ஆதிசங்கரர் கீழே படுக்க அவரது ஆவி பிரிந்து சென்றது.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

அமருகம் தந்த ஆதிசங்கரர் Empty அமருகன் உருவில் ஆதிசங்கரர்

Post by Admin Tue Sep 23, 2008 11:42 pm

படுத்திருக்கும் அமருகன் உடலில் சங்கரஜோதி பிரவேசித்தது. அமருகன் உயிர் பெற்று எழுந்தான். வைத்தியரும் அமைச்சரும் வியப்படைய, அமருகன் புத்துணர்வோடு எழுந்தான். உடனே ராணி தனது கணவனான அமருகனை கட்டிப் பிடித்து ஆனந்தக் கண்ணீர் விட்டாள். நான் பாக்கியசாலி. எனக்கு வாழ்வு கிடைத்தது என்று அமருகனிடம் கூறியவாறு மதுக் கிண்ணத்தைத் தந்தாள். அமருகன் அதை வாங்கி கீழே வைத்து, இந்த நஞ்சை இனி நான் குடிக்க மாட்டேன் என்றான். மீண்டும் மீண்டும் அவள் மதுவை ஊற்றிக் கொடுக்க அமருகன் அதைக் கீழே ஊற்றினான். மங்கையர் பக்கமும் அவன் திரும்பவில்லை.

இதனால் ராணியின் மனதில் சந்தேகம் வலுத்தது. மங்கையர் மோகமே பெரிதென மதித்த தன் கணவர் கன்னியர் உறவைக் கட்டோடு வெறுப்பதைக் கண்ட ராணி மோஹனாங்கி உயிர் போன தனது கணவரின் உடலில் வெறொருவர் புகுந்துவிட்டதை உணர ஆரம்பித்தாள். ஒரு மகா புருஷன் தனது கணவர் சரீரத்தில் பிரவேசித்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்த அவள் இன்னும் சிறிது நாள் தான் சுமங்கலியாக இருக்க வேண்டுமென்ற ஆசையில் அந்த மஹானை தன்னுடனேயே நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று விரும்பினாள்..

ஆகவே, நாடு நகரமெங்கும், நான்கு திக்குகளிலும் காடு, வீடு, மேடு, மலை, குகை, ஆசிரமம் முதலிய எல்லா இடங்களிலும் உளவுப் படைகளை அனுப்பி, எங்கு உயிரற்ற உடல் கிடந்தாலும், அந்த உடலை உடனே தீவைத்து எரியுங்கள் என்று ஆணையிட்டாள்.

ஆனால், அமருகன் உடலில் புகுந்த ஆதிசங்கரரோ அரண்மனையில் தனிமையில் அமர்ந்து அமருகன் பெயரால், அமருகம் என்ற காவியம் எழுத ஆரம்பித்தார். ஆனால், ராணி மோஹனாங்கியோ இந்தக் காவியத்தை எழுதவிடாமல் அவரைத் தடுத்தாள். அவரை அன்பே என்றழைத்து ஆசையோடு பேசினாள். தனிமையில் அம ருகனின் அருகில் உட்கார்ந்து, என் வாழ்வுக்குத் தாங்கள் ஒரு இன்பப் போதை. தாங்கள்தான் என் இந்திரன் என்று கூறி மிளிர்கின்ற தன் மேனியைக் காட்டி அமருகனை மயக்க முயற்சித்தாள்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

அமருகம் தந்த ஆதிசங்கரர் Empty ஓடிவந்த சீடர்கள்

Post by Admin Tue Sep 23, 2008 11:43 pm

அப்போது அங்கே திடீரென ஒரு கூச்சல் கேட்டது. குரல் வந்த திசையை நோக்கி கோபமாகச் சென்றாள் ராணி. அரண்மனை தனியிடத்தில் அத்துமீறி ஆதிசங்கரரின் சீடர்களான ஹஸ்தாமலகர், பத்மபாதர் ஆகியோர் நுழைந்து மன்னரைப் பார்க்க வேண்டும் என்று ராணியிடம் கூறினர்.

ஆனால், ராணியோ மன்னரைப் பார்க்க அனுமதிக்க வில்லை. உடனே அவர்கள் ராணியிடம், நடக்கக் கூடாதது நடந்திருக்கிறது. குகையில் யோகத்தில் இருந்த எங்கள் குருநாதர் உடலை உங்கள் காவலர்கள் கைப்பற்றி அவரைச் சாம்பலாக்க சுடுகாடு தூக்கிச் செல்கின்றனர். இது அக்கிரமம்... அநியாயம்... அடுக்காது... பொறுக்காது.. நீதி வேண்டும். என்றனர்.

அதற்கு ராணி, உங்கள் குருநாதர் சக்தி உடையவரானால் அவரே அவரது உடலை காப்பாற்றிக் கொள்ளட்டும் என்று கூறிவிட்டு செருக்குடன் உள்ளே சென்று தன் கணவன் அமருகனுக்குப் பால், பழம் முதலியவற்றைக் கொடுக்கிறாள். மனைவி தரும் தாம்பூலத்தை அமருகன் உடலில் இருக்கும் சங்கரர் ஏற்கும் சமயம் பத்மபாதரின் ஓலம் கேட்ட அமருகன் நின்ற நிலையிலே இறந்து வீழ்ந்தான். ராணி மோஹனாங்கியும் மன்னன் உடலைத்தழுவி மறைந்தாள். இடுகாட்டில் சிதை எரிந்து கொண்டிருந்தது. அந்த உடலில் புகுந்த சங்கரர் எழுந்து வந்தார்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

அமருகம் தந்த ஆதிசங்கரர் Empty நரசிம்ம ஸ்தோத்திரம்

Post by Admin Tue Sep 23, 2008 11:45 pm

அவரது சீடரான ஹஸ்தாமலகர் சங்கரரின் எரிந்த கைகளைப் பார்த்து, ஸ்வாமி இதென்ன கோரம்? என்றார். ஆதிசங்கரர், ஓங்கார ஸ்வ ரூபனை ஒரு கணம் மறந்ததற்கு ஒரு கரம் இழந்தேன் என்றார். உடனே சங்கரர் நரசிம்ம மூர்த்தியை ஸ்தோத்தரிக்க கரங்கள் மீண்டும் வந்தன. அந்தக் கரங்களில் சுவடிக்கட்டு இருந்தது. பத்மநாதர் சங்கரரிடம், இது என்ன சுவடிக் கட்டு? என்று கேட்டார்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

அமருகம் தந்த ஆதிசங்கரர் Empty அமருகம்

Post by Admin Tue Sep 23, 2008 11:46 pm

அதற்கு ஆதிசங்கரர், இது அமருகம் காமக்கலை நூல் இன்பக்கலையை அமரு கன் சரீரத்தில் இருந்து எழுதியது. சரஸக் கலை நுணுக்கங்களை விளக்க இது போதும், சரஸ வாணியை வெல்வதற்கு அவள் தந்த மாத கெடுமுடிவதற்குள் மாகிஷ்மதி நகரம் செல்ல வேண்டும். உடனே புறப்படுங்கள் என்றார்.

அங்கிருந்து சரஸவாணியின் இல்லம் சென்று உரத்த குரலுடன், எங்கே சரஸவாணி. நீ கொடுத்த கெடு முடிய இன்னும் ஒருநாள் இருக்கிறது. அனுபவ ஞானி வந்திருக்கிறேன். இல்லறவியலை எடுத்தியம்ப அமருகம் என்ற காமத்துறை இலக்கியத்துடன் வந்திருக்கிறேன். தொடு உன் கேள்விகளை என்றார். சரஸவாணி ஓடிவந்து சங்கரரின் கால்களில் விழுந்து தன்னை மன்னிக்கும்படி வேண்டினாள்.

ஆனாலும் சங்கரர் அவளை விடவில்லை. சரஸ வாணியை நோக்கி பேரின்பம் மறந்தவர்தான் சிற்றின்பத்தில் திளைத்து மூழ்கு வர். காதலுக்கு முன்பு காமமில்லை. காதலின் விளைவே காமம். குழந்தை பெறும் முன் மனைவியிடம் இன்பமே காமம் குழந்தை பெற்ற பின் காணுவதே காதல் என்று அடுக்கிக் கொண்டே போனார்.

சரஸவாணி சங்கரரிடம் மன்னிப்புக் கேட்க, அவளது கணவனான மண்டன மிஸ்ரர் சங்கரருடன் ஞான மார்க்கம் செய்யப் புறப்பட்டார். சரஸவானி வானுலகு செல்ல முற்பட்டபோது சங்கரர் அவளை வன துர்க்கா மந்திரத்தால் கட்டிப்போட்டு எவர் கண்ணுக்கும் தெரியாமல் தனது பாதயாத்திரையின்போது தன் பின்னேயே வரும்படி செய்தார்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

அமருகம் தந்த ஆதிசங்கரர் Empty காஞ்சி காமகோடி பீடம் நிறுவுதல்

Post by Admin Tue Sep 23, 2008 11:46 pm

பின்னர் நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று சர்வக்ஞர் என்ற பட்டம் பெற்ற சங்கரர் காஞ்சிபுரத்தில் காஞ்சி சர்வக்ஞ பீடம் நிறுவி அதன் முதல் பீடாதிபதியாக பொறுப்பேற்றார். சரஸவாணி சரஸ்வதியின் அம்சமாவாள். மண்டனமிச்ரர் பிரம்மாவின் அம்சமாவார். என்றும் எதிலும் வெற்றிகண்ட சங்கரருக்கு இந்திரனைப் பணியச் செய்த பெருமை உண்டு.

சங்கரர் காஞ்சியில் சர்வக்ஞ பீடம் நிர்மாணம் செய்து அதன் பீடம் ஏறிய போது இந்திரனின் பெயரையும் சரஸ்வதியின் பெயரையும் இணைத்து காம கோடி பீடம் ஜெகத்குரு இந்திர சரஸ்வதி என்ற பட்டப்பெயர் அவருக்கு வழங்கப்பட்டது. அந்நாளி லிருந்து இன்றுவரை இப்பட்டப் பெயர் வழங்கி வருகிறது. மோட்சம் முதலியவற்றை எண்ணித் தவம் செய்வோர்க்கு இஷ்ட சித்தி அருளுவதால் காஞ்சி மாநகரத்திற்கு காமபீடம் என்ற பெயர் ஏற்பட்டது. காமகோடி என்றால் பார்வதி. காமகோடி பீடம் கலைக்கூடமாக காட்சி கொடுப்பதற்கு சரஸ்வதியின் அருளே காரணம்
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

அமருகம் தந்த ஆதிசங்கரர் Empty Re: அமருகம் தந்த ஆதிசங்கரர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum