ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் ரசித்த கட்டுரை

2 posters

Go down

நான் ரசித்த கட்டுரை  Empty நான் ரசித்த கட்டுரை

Post by mbalasaravanan Tue Mar 05, 2013 12:25 pm

ஒருவனது கடந்த காலம் எப்படி இருந்த போதிலும், அவன் எவ்வளவு தவறுகள் செய்திருந்தாலும், எவ்வளவு அஞ்ஞானத்தில் வாழ்ந்திருந்த போதிலும், அவனது உள்ளத்தின் ஆழத்தில் ஒரு உன்னதமான தூய்மை உள்ளது. அது அற்புதமான சித்தியாக மலர்ந்து வெளிப்பட முடியும். தன்னுடைய கஷ்டங்கள், இன்னல்கள், தடைகள், இடையூறுகள் இவைகளைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு இராமல், அந்த உள்ளத் தூய்மை மீது ஒருமுனைப்படுதல், அதைப் பற்றியே சிந்தித்தல் இதுவே அவன் செய்ய வேண்டியதெல்லாம்....
- ஸ்ரீ அரவிந்த அன்னை
=========================================================================

அது ஒரு பெரிய MNC கம்பெனியின் அனுவல் மீட்டிங். ஏன் எதிர்பார்த்த அளவுக்கு சேல்ஸ் ஆகலைன்னு குரூப் டிஸ்கஷன் நடந்துக் கிட்டு இருக்குது. அங்கு இருந்த ஒவ்வொருத்தரும் ஆளாளுக்கு ஒரு ஒரு காரணம் சொல்லிக்கிட்டு இருக்கிறாங்க.

அப்போ அந்த கம்பெனி CEO ஒரு சின்னதா ஒரு கேஸ் ஸ்டடி சொன்னார்.

ஒரு சிச்சுவேஷன் : ஒரு ஊர்ல ஒரு குளம் இருக்கு. அந்த ஊர்ல ஒரு பத்து குடும்பம் இருக்கு. அந்த குளத்தில தினமும் கடவுள் ஒரு மீன் அனுப்புவாரு. ஒரு நாளைக்கு ஒரு மீன் தான். காலையில் மூணு மணியில் இருந்து நாலு மணிக்குள்ளே அந்த மீன் வந்திடும்.அந்த மீனைப் பிடிக்கிறவங்க, குடும்பத்துக்கு ஒரு நாள் சாப்பாட்டுக்கு அந்த மீன் போதும். மீன் கிடைக்காதவங்க, வெளியிலே கஷ்ட்டப்பட்டு வேலை செஞ்சு வந்தாத் தான் வீட்டிலே அடுப்பு எரியும். ஆனா, வெளியிலே வேலை கிடைக்குமா? கூலி, நேரத்துக்கு கிடைக்குமான்னு எந்த உத்திரவாதமும் இல்லை.

இப்போ, நீங்க அந்த ஊர்ல இருக்கிறதா நினைச்சிக் கோங்க ! வீட்டில குழந்தைங்க ரெண்டு நாளா பட்டினி. ரெண்டு நாளா மீன் பிடிக்கவே போகலை. காலை நேரம். தூக்கம். சோம்பேறித்தனம். வெளியில் வேலை கிடைக்கும்னு நம்பி, எங்கேயும் கிடைக்காம, காசும் கடனுக்கு கிடைக்காம, குழந்தைகளுக்கு சாப்பிட கூட வழி இல்லாத ஒரு நிலை...!

மூணாவது நாள் என்ன செய்வோம்?

கண்டிப்பா மீன் வரும்னு தெரியும். ஒரே ஒரு மீன்தான். வேற யாரும் வந்து பிடிக்கிறதுக்குள்ளே, இன்னைக்காவது பிடிக்கணும்னு தோணும் இல்லே..! பசியோட துடிக்கிற பிஞ்சுங்க முகம் ஞாபகம் வரும்போது - தூக்கமாவது ஒன்னாவது....!

மூணு மணிக்கு மேலே தான் வரும்னு தெரியும்.

நீங்க பன்னிரண்டு மணிக்கே போய் அங்கே நிப்பீங்க தானே... அங்கே பார்த்தா.. உங்களுக்கு முன்னாலே இன்னும் அஞ்சாறு பேர் நிக்கிறாங்க....! இருந்தாலும் நம்பிக்கையோட குளத்திலே இறங்கி தேடுவீங்க தானே....? அந்த நேரத்தில, இது ஆச்சு , அது ஆச்சுன்னு சாக்கு, போக்கு சொல்ல மாட்டோம்ல...?

இதே ஒரு மீனுக்கு பதிலா... நூறு மீன் ஒரு நாளைக்கு வந்தால்.........?அங்கே தன்னைப்போல மெத்தனமும், சோம்பேறித்தனமும் வந்துவிடும்.

"அப்போ , நம்மளை மாதிரி நம்ம போட்டிக் கம்பெனிங்க - ஆயிரம் விக்கிற இடத்துல, நம்ம கம்பெனி ப்ராடக்ட் நூறு கூட தாண்ட மாட்டேங்குது. நாம எல்லாம் இங்க சாக்கு - போக்கு காரணம் சொல்லிக்கிட்டு இருக்கோம். ஏன்? ஒரு மீன் தான் கிடைக்கும்னு நினைச்சு வேலையைப் பாருங்க. இல்லையா, இதே நிலைமைதான் கண்டினியூ ஆகும்னா, இதே அலட்சியம் தான் வாழ்க்கைனா , நாளைக்கு எல்லார் குடும்பமும் - பசியிலதான் வாட வேண்டி இருக்கும். இதுக்கு அப்புறம் உங்க சாமர்த்தியம்..!" னு சொல்லிட்டு எழுந்து போயிட்டார்.
=============================================================================

வாழ்க்கையிலே கிட்டத்தட்ட நாம எல்லோரும் இந்த நிலைமைல தான் இருக்கிறோம். எதாவது கொஞ்சம் நேரம் கிடைச்சாலும், மனசு நம்மளை அடிமைப் படுத்த ஆரம்பிச்சிடும். கூர்ந்து கவனிச்சோம்னா, வாழ்க்கையில எவ்வளவு நேரத்தை வீணடிக்கிறோம், எவ்வளவு அலட்சிய மனப்பான்மையோட இருக்கிறோம்னு நல்லாப் புரியும்.

ஒருபக்கம் ஆண்டவன் சோதனை. நல்ல முயற்சி நடந்துக்கிட்டு இருக்கும்போதே நேரம் சரி இல்லைன்னு ஒன்னும் தர மாட்டாரு. இந்த லட்சணத்துல நமக்கே நம்ம மேலே , நம்ம முன்னேற்றம் மேலே அக்கறை இல்லைனா, ஆண்டவன் கூட ," அடப் போயா "ன்னு , 'அம்போ'ன்னு விட்டிடுவாரு.

பெரும்பாலானோருக்கு இருக்கிற ஒரே அலட்சியம் - இதுதான் . அட, குளம் நிறைய மீன் இருக்குதுயா, பிடிக்கிறவங்க எல்லோரும் பிடிச்சிட்டு போனதுக்கு அப்புறம், நாம மெதுவா போய், பிடிப்போம்..!
அதுக்கு அப்புறம் இருக்கிற எல்லாத்தையும் பிடிச்சிட்டுப் போயிட்டாங்கன்னு, அடுத்தவங்களைப் பார்த்துக்கிட்டு பெருமூச்சு விட்டுக்கிட்டே இருக்க வேண்டியது.....

ஒரே ஒரு மீன் தான்னு நினைச்சிக்கிட்டு ஒட்டு மொத்த முயற்சியும் மனதொருமித்து , எல்லா செயலையும் செய்வோம்....! அப்புறம் பாருங்க ! நிஜமாவே நாமளும் ஜெயிச்சவங்க லிஸ்ட் ல இருப்போம்..! முயற்சி மெய் வருத்த எனில், இறையும் அதற்குத் தகுந்த கூலி நிச்சயம் தரும்!
=====================================================================

சரி இப்போ தலைப்புக்கு வர்றேன். இது எங்க அப்பா அடிக்கடி சொல்ற பொன்மொழி!

வாழ்க்கையில் ஒரு அளவுக்கு மேல் கஷ்டம், சுமை ஏறிய பிறகு, அவனுக்கு சுகமான சங்கீதத்தைக் கூட ரசிக்கும் மனோபாவம் கிடைக்காது. ஒரே வழி, சுமையை குறைக்க வேண்டியதுதான். ( மீன் பிடிச்சே ஆக வேண்டியதுதான்.)

சரி, எடுக்கிற எல்லா விஷயங்களும் சொதப்பலோ , சொதப்பல். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிரச்னை. கடன் கிடைக்கலைன்னு ஒருத்தர் சொன்னா, கொடுத்த காசு வர மாட்டேங்குதுன்னு இன்னொருத்தர். வேலை கிடைக்கலைன்னு ஒருத்தர். வேலைல டார்ச்சர்ன்னு இன்னொருத்தர்.

வீடு கட்ட முடியலைன்னு ஒருத்தர். வீட்டுல குடி வந்தவங்க அடாவடித்தனம்னு இன்னொருத்தர். உங்கள் பக்கம் நியாயம் இருந்து , எதிரிகளின் கை ஓங்கி - கோர்ட் , கேஸ் என்று நீங்கள் போக நினைக்காமல் , பிரச்னை அதே நேரம் சுமுகமாக முடியவேண்டும் என்று நினைக்கிறீர்களா?

"ஆமாம்யா, ஆன்மீக ரீதியில் இதற்க்கு ஒரு தீர்வு , பரிகாரம் இருக்கிறதா"?

இருக்குதுங்கண்ணா!

ஆனால், எல்லோருக்கும் கொஞ்சம் பிடிக்காத ஒரு விஷயம். நல்ல நாள் , விசேஷ தினம் , கூட்டம் அலை மோதுற கோவிலுக்கு, அந்த நாள் போகாம இருக்கிறது. Crazy guys...ன்னு தோணும் இல்லையா! இந்த பிரச்னைகளுக்கு தீர்வு இந்த விஷயத்தில் தான் அடங்கி இருக்கிறது.

ஊர் கூடி தேர் இழுக்கும் திருவிழா நடக்குமே, அந்த நாளில் - கூட்டத்தோடு கூட்டமாக நீங்களும் வடம் பிடித்து, ஒரு இரண்டு அடியாவது நடக்க முடிந்தால் போதும். அதாவது, நீங்கள் இழுக்க , இறைவன் உங்களை நோக்கி வருகிறான்.

ஒரு பெரிய ஜன சமுத்திரமே , இறைவனை மனதில் நினைத்துக்கொண்டு , வடம் பிடிக்கும்போது - மிகப்பெரிய அருள் அலைக்கு பாத்திரமாவீர்கள். அது எப்பேர்ப்பட்ட - இன்னல்களையும் தீய சக்திகளையும் தகர்க்கும். இறைவனே உங்களை நோக்கி வரும்போது, எல்லா நல்ல விஷயங்களும், மன நிம்மதியும், ஐஸ்வர்யமும் தொடர்ந்து கிடைக்கும். உங்களை சுற்றி இருக்கிற நட்பு பலப்படும். நல்லதொரு கூட்டு முயற்சி கிடைக்கும். உங்களுடன் மோதியது மலையே ஆனாலும், அது இருந்த இடம் தெரியாமல் பந்தாடப்படும்.



அடுத்த முறை, கூட்டம் அலர்ஜி என்று எண்ணாமல், தேர் திருவிழாவில் வடம் பிடிக்க வாய்ப்பு கிடைத்தால் தவற விடாதீர்கள்....!

எத்தனை நாள் தான் , தாங்க முடியாத சுமையோடு அமிழ்ந்து கிடப்பது , வாருங்கள் நாமும் சங்கீதம் ரசிப்போம்.....!


நன்றி : http://www.livingextra.com
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

நான் ரசித்த கட்டுரை  Empty Re: நான் ரசித்த கட்டுரை

Post by ராஜா Tue Mar 05, 2013 1:00 pm

எனக்கும் பிடித்தது , பகிர்வுக்கு நன்றி நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum