ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களுக்கு உரிமை கொடுங்க ஆனா ஆண்களின் உரிமைய பறிக்காதிங்க !

2 posters

Go down

பெண்களுக்கு உரிமை கொடுங்க ஆனா ஆண்களின் உரிமைய பறிக்காதிங்க ! Empty பெண்களுக்கு உரிமை கொடுங்க ஆனா ஆண்களின் உரிமைய பறிக்காதிங்க !

Post by அகல் Sun Mar 03, 2013 9:03 pm



வணக்கம் !

கட்டுரையின் நோக்கம் என்ன ?

முன்னோர்கள் வாழ்ந்த காலம் முதல் இன்றைய கணினி யுகம் வரை, தொன்றுதொட்டு பெண்களுக்கான உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்தது என்பது அனைவரும் அறிந்ததே. கிராமப் புறங்களில் இது போன்ற நிலைகள் இன்னும் தொடந்தாலும் நகர்ப்புறங்களில் ஆண்களுக்கு இணையானவர்கள் பெண்கள் என்பதை நிருபித்துக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல் பெண்களின் சம உரிமையை நிலை நிறுத்தவும், அவர்களின் பாதுகாப்பிற்காகவும் அரசும் பலவிதமான சட்டங்களை கொண்டு வந்தவண்ணம் உள்ளது.

பெண்களின் சுய உரிமைகள் மறுக்கப்பட்ட நேரங்களில் அதைத் தட்டிக்கேட்டும், ஆண்களுக்கு நிகராக பெண்களும் நடத்தப்பட வேண்டும் என்றும் குரல் கொடுத்து போராடியவர்களில் பெரும்பாலானோர் ஆண்களே. இந்தப் புரட்சியை நமது தமிழ்கவி பாரதி முதல் இன்றைய தலைமுறை ஆண்கள் வரை பெண்களுடன் சேர்ந்து முன்னெடுத்துச் சென்ற வண்ணம் உள்ளனர் என்பதை எவரும் மறுக்க இயலாது. ஆரோக்கியமான இது போன்ற போராட்டங்கள் கண்டிப்பாக வரவேற்கப்பட வேண்டியவையே !

அதே வேளையில், பெண்களுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்ற எண்ணத்தில் அரசு/தனியார் துறைகள்/நிறுவனங்களில் கொண்டுவரப்படும் சில விதிமுறைகள்/சட்டங்கள் என்னவோ ஆண்களின் உரிமையை பரிப்பதாகவோ அல்லது அவர்களின் உணர்வுகளை நசுக்குவதாகவோ உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்வது அவசியமாகிறது. பெண்களுக்கு தரப்பட்டு ஆண்களுக்கு மறுக்கப்படும் அப்படியான ஒரு உரிமையைப் பற்றியே இங்கு தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

நடந்தது என்ன ?

எனது நெருங்கிய நண்பர் ஒருவர், கோயம்புத்தூரில் தனது மனைவியுடன் வசிக்கும் தனது நான்கு மாதக்குழந்தையின் உடல் நலக்குறைவால் அவசரமாக ஹைதராபாத்தில் இருந்து அன்றே கோவை செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். இரண்டு தனியார் பேருந்து நிறுவனங்கள் ஹைதராபாத்தில் இருந்து கோவைக்கு தினசரி பேருந்து சேவையை அளித்துக்கொண்டு வருகிறது. மொத்தம் நான்கு பேருந்துகள்.

வார இறுதி மற்றும் பண்டிகை நாள் நெருக்கம் என்ற அப்போதைய சூழ்நிலையால், துரதிஷ்டவசமாக மூன்று பேருந்துகள் நிரம்பிவிட்டன. ஆனால் நான்காவது பேருந்தில் ஒரே ஒரு காலி இடம் இருந்தது. அந்த காலி இடத்திற்கு பக்கத்து இருக்கையை முன்னரே ஒரு பெண் முன்பதிவு செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலின் அந்த இடத்தை அவர் முன்பதிவு செய்ய முற்பட்டார்.

பக்கத்து இருக்கையை முன்னரே பதிவு செய்திருப்பது ஒரு பெண் என்ற காரணத்தால், காலி இடத்தை முன்பதிவு செய்ய அந்த பேருந்தின் இணையதளம் அனுமதிக்கவில்லை. மற்றும் அவர்கள் கொடுக்கும் பாப் அப் செய்தி. "SELECTED SEATS(X) ARE ADJACENT TO LADIES SEAT. PLEASE SELECT DIFFERENT SEATS". ஆனால் இருப்பது ஒரே ஒரு இடம் தான். வேறு இருக்கையை தெரிவு செய்ய காலி இடங்களும் இல்லை. அந்த இணைய தளத்தின் ஸ்க்ரீன் சார்ட்டை உங்களின் பார்வைக்காக எடுத்துக் கொடுத்துள்ளேன் (எடுத்துக்காட்டிற்காக).

http://4.bp.blogspot.com/-m3C40Z2J4f0/UTNXEKrynQI/AAAAAAAABeI/JWLVTLTYSyc/s1600/Un-man.png

அதே வேளையில், ஒரு இருக்கையை முன்பதிவு செய்தது ஒரு ஆண் என்றும், அதன் பக்கத்து இருக்கையை பதிவு செய்யப்போவது ஒரு பெண் என்றால், அந்த பெண்ணிற்கு அந்த இருக்கையை பதிவு செய்ய அனுமதிப்பதோடு மட்டுமில்லாமல் இவ்வாறாக ஒரு பாப் அப் செய்தி கொடுக்கப்படுகிறது "Management reserves the right to readjust/change seat numbers, especially beside lady passengers. Non Cooperative passengers will be denied boarding". அந்த ஸ்க்ரீன் ஷாட் உங்களுக்காக கீழே.

http://4.bp.blogspot.com/-RNgKcyzkOyY/UTNa5Q71jgI/AAAAAAAABeQ/WvEtMa-NmQQ/s1600/Un-women.png

இந்த பாப் அப் செய்தி கூட, முன்னரே முன்பதிவு செய்த ஆண்களை எச்சரிக்கும் விதமாக அமைந்துள்ளதே தவிர இது பெண்களுக்கான எச்சரிக்கை செய்தி அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் நாம் தெரிந்து கொள்வது என்ன ?

ஒரு ஆண் பதிவு செய்த இருக்கைக்கு அருகில் பெண் பதிவு செய்தால், ஆண்களை எச்சரித்து அந்த பெண்ணிற்கு அந்த இருக்கையை பதிவு செய்ய அனுமதிப்பதும், ஒரு பெண் பதிவு செய்த இருக்கைக்கு அருகில் ஆண் பதிவு செய்தால் அந்தப் பதிவை நிராகரிப்பதும், எதோ ஆண்கள் வர்க்கமே மோசமானது என்ற கண்ணோட்டத்தில் உள்ளது. இது முற்றிலும் ஆண்களை அவமதிப்பதாகவே இருக்கிறது. இது மிகவும் கண்டனத்திற்குரியது.

அதோடு இல்லாமல், அந்த நேரத்தில் ஹைதராபாத்தில் இருந்து கோவைக்கு வேறு பேருந்துகள் கிடையாது. விமானத்தில் உடனே பதிவு செய்து போக வேண்டுமானால் காலி இடங்கள் இருக்க வேண்டும். அப்படியே இருந்தாலும் 8 முதல் 10 ஆயிரம் செலவு செய்யவேண்டும் இது அனைவராலும் இயலாத ஒன்று. ரயிலில் உடனே செல்வது சாத்தியமற்றது. இந்த குறிப்பிட்ட சூழலில், உடல் நிலை சரியில்லாத தனது மகளைப் பார்க்கமுடியாமல் தவிக்கும் ஒரு தந்தையின் மனநிலை எப்படி இருக்கும் ? கணவனை கூட வைத்துக்கொள்ள முடியாத ஒரு மனைவியின் மனநிலை எப்படி இருக்கும் ?

உடனே டிக்கெட் கிடைத்தாலும் அடுத்தநாள் தான் ஊர் போக முடியும். அது கிடைக்காததால் இன்னும் ஒருநாள் தாமதமாகும். இதே நிலை அடுத்த நாளும் தொடர்ந்தால், மீண்டும் இதே சூழலுக்கு ஒரு ஆண் தள்ளப்படுவான். இந்தச் செயல் பெண்களைப் பாதுகாக்கிறோம் என்கிற பெயரில் ஆண்களை முற்றிலும் அவமதிப்பதாகவும் அவர்களின் உரிமையை பறிப்பதாகவும் இல்லையா ? ஆண்களை அனைவரும் மோசமானவர்கள், பெண்கள் அனைவரும் சரியானவர்கள் என்ற இந்தப் பார்வை சரியா ?

பேருந்தில் ஒரு பெண்ணிற்கு உகந்த இடம் கிடைக்காத பட்ச்சத்தில், தங்கள் இருக்கையை மாற்றிக் கொடுத்து அவர்களுக்கு உதவுவது பெரும்பாலும் ஆண்களே. இதை யாராலும் மறுக்க முடியாது. அப்படி இருக்க ஆண்களை இப்படி ஒரு பார்வையில் சித்தரிப்பது அநாகரிகம் இல்லையா ?. இது ஒரு சிறு உதாரணமே. சாதாரண பேருந்து முதல் பல அரசு அலுவலகங்கள் வரை இது போன்ற நிலை தொடர்கிறது.

ஆகையால் ஆண்களுக்கு கொடுக்கப்படும் அத்தனை உரிமையையும் பெண்களுக்கும் கொடுங்கள், தவறில்லை. ஆனால் பெண்களுக்கு நல்லது செய்வதாய்ச் சொல்லிக்கொண்டு எக்காரணத்தைக் கொண்டும் ஆண்களின் உரிமையைப் பறிக்காதீர்கள்.

பெண்கள் அனைவரும் நல்லவர்களுமல்ல, ஆண்கள் அனைவரும் கேட்டவர்களுமல்ல !

குறிப்பு: நண்பர்கள் யாரும் இது போன்று ஒரு செயலால் பாதிக்கப் பட்டிருந்தால் அதைப் பின்னூட்டத்தின் (கமெண்ட்) மூலம் தெரியப்படுத்த வேண்டுகிறேன். இது மறுக்கப்படும் ஆண்களின் உரிமையைப் பற்றிய ஒரு செய்தியாக அமையட்டும்.

Original Source: http://kakkaisirakinile.blogspot.in/2013/03/blog-post.html

நன்றி !

அன்புடன்
அகல்


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

பெண்களுக்கு உரிமை கொடுங்க ஆனா ஆண்களின் உரிமைய பறிக்காதிங்க ! Empty Re: பெண்களுக்கு உரிமை கொடுங்க ஆனா ஆண்களின் உரிமைய பறிக்காதிங்க !

Post by இளமாறன் Sun Mar 03, 2013 11:51 pm

ஆகையால் ஆண்களுக்கு கொடுக்கப்படும் அத்தனை உரிமையையும் பெண்களுக்கும் கொடுங்கள், தவறில்லை. ஆனால் பெண்களுக்கு நல்லது செய்வதாய்ச் சொல்லிக்கொண்டு எக்காரணத்தைக் கொண்டும் ஆண்களின் உரிமையைப் பறிக்காதீர்கள். சூப்பருங்க

நியாயம் தான் ஆண்கள் இப்போ பாவம் தான் ... வேலை கூட கிடைக்க மாட்டேங்குது ... சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பெண்களுக்கு உரிமை கொடுங்க ஆனா ஆண்களின் உரிமைய பறிக்காதிங்க ! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» கல்யாணமாகி சென்றாலும் கூட பெண்களுக்கு உரிமை-உயர்நீதிமன்றம்
» பெண்களுக்கு மது அருந்த உரிமை உண்டு - கேலி செய்த இயக்குனருக்கு பதிலடி கொடுத்த பாடகி
» அண்ணே ஒரு ஹான்ஸ் கொடுங்க, அப்படியே ஒரு சிகரெட் கொடுங்க
» என் இணையம்... என் உரிமை! - இனிமேல் இந்த உரிமை உங்களுக்கு இல்லை!
» திருமணமான பெண்களுக்கு வரும் முதுகு வலி... (பெண்களுக்கு மட்டும்)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum