Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தலையைச் சொறிந்தால் ஞாபகசக்தி பெருகும்!.........
4 posters
Page 1 of 1
தலையைச் சொறிந்தால் ஞாபகசக்தி பெருகும்!.........
என்ன... குழப்பமாக இருக்கிறதா? காலை எழுகிறீர்கள்... கைகளையும் கால்களையும் நீட்டி, உடலை அசைத்து சோம்பல் முறிக்கிறீர்களே... அது எதற்கென்று தெரிந்தா செய்கிறீர்கள்? உடல் அனிச்சையாக அதைச் செய்கிறது. அதன் மூலம் ஒரு உற்சாகத்தையும் அது அடைந்து விடுகிறது. எந்த வித ஊக்க மருந்தையும் எடுத்துக் கொள்ளாமல், நம் உடல் தானே முயன்று ஒரு உற்சாகத்தைப் பெற முடியுமென்றால், நோய்களுக்கான சிகிச்சையை மட்டும் ஏன் பெற முடியாது? இந்தக் கேள்வியில்தான் எழுகிறது அக்கு மருத்துவத்துக்கான அஸ்திவாரம்.
மனிதன் என்ன காரணங்களுக்காக தலையைச் சொறிகிறான்? பேன் தொல்லையால் மட்டும்தானா சொறிகிறான்? கேட்ட கேள்விக்கு பதில் தெரியாமல் தலையைச் சொறிந்து நிற்கும் மாணவர்களைப் பார்த்திருக்கிறீர்கள்தானே? பதில் தெரியாததற்கும் தலையை சொறிவதற்கும் என்ன சம்பந்தம்? தலையைச் சொறிந்தால் மறந்து போன ஒன்று நினைவுக்கு வர வாய்ப்பிருக்கிறதா? நிச்சயம் இருக்கிறது. நம் உடல் செய்யும் எந்த ஒரு அனிச்சை செயலுக்கும் அர்த்தம் இல்லாமல் இல்லை.
விரல்களில் அடிக்கடி சொடுக்கு எடுக்கிறோமே அது ஏன்? கடும் வேலைக்குப் பிறகு உடல் அசதியை நொடிகளில் போக்கி உற்சாகத்தை வரவழைக்கும் அந்த அக்கு சிகிச்சையை நமக்கு சொல்லித் தந்தது யார்? நாடியில் விரல் வைத்து யோசிக்கிறோம்... கோபத்தை அடக்கும்போது பல்லைக் கடிக்கிறோம்... இதெல்லாம் எதற்காக? ஒரு பதற்றம், எதிர்பார்ப்பு, சஸ்பென்ஸ் என்றால் கையைப் பிசைந்து குறுக்கும் நெடுக்கும் அலைவது நமக்கெல்லாம் இயல்பு. அந்தச் செயல் நமக்குள் ‘எண்டார்ஃபின்’ என்ற பொருளைச் சுரக்கச் செய்து, ஆசுவாசப்படுத்துகிறது என்பது தெரியுமா?
அதேபோலத்தான் கை தட்டுவதும். மகிழ்ச்சியின்போதும் மற்றவர்களைப் பாராட்டவும்தான் நாம் கை தட்டுவதாக நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம். கைதட்டலின்போது உள்ளுறுப்புகளில் ஏற்படும் மாற்றங்களின் விளைவாக, ‘அசிட்டைல் கொலைன்’ என்கிற சுரப்பு சுரந்து, உடலையும் மனதையும் ஒருசேர உற்சாகப்படுத்துகிறது. இந்த உண்மை தெரியாமலே அதைச் செய்து கொண்டிருக்கிறோம் நாம். சிரிப்பு சிகிச்சை, இசை சிகிச்சை போல டெல்லியில் ஒரு சாது, தனது பக்தர்களை கை தட்ட வைத்தே கவலைகளைப் போக்குகிறாராம். இப்படி நம்மைச் சுற்றிலும் நாம் அறியாமலே அக்கு சிகிச்சை நிறைந்திருக்கிறது.
இந்த அனிச்சை செயல்கள் தவிர, நம் முன்னோர்கள் சம்பிரதாயமாகச் சொல்லி வைத்த சில மருத்துவ முறைகளும் உள்ளன. காது குத்துவது என்பது நம் அறிவுத் திறனை வளர்க்கும் விஷயம். எனவேதான் பொய் சொல்கிறவரைப் பார்த்து, ‘எனக்கு ஏற்கனவே காது குத்தியாச்சு’ என்கிறோம். சாமி சிலையைப் பார்த்தால் கன்னத்தில் போட்டுக்கொள்கிறோம். பிறந்த குழந்தைக்கு மூன்று முறை முடி எடுப்பது ஆரோக்கியம் என்று நம்புகிறோம். இன்னும் கம்மல், வளையல், கொலுசு போன்ற அணிகலன்களின் அக்கு பலன்கள் பற்றி நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.
பொதுவாகவே நம் ஊரில் ஒரு மனப்பான்மை இருக்கிறது, விலை உயர்ந்ததுதான் சிறந்தது என்று. சொத்தை எழுதிக் கேட்கும் மருத்துவ சிகிச்சைகளுக்கு மத்தியில், செலவே இல்லாத அக்கு மருத்துவம் செல்வாக்கு குன்றியிருப்பது இதனால்தான். ஆனால், இன்று மாற்று மருத்துவத்தை மக்கள் நம்பத் துவங்கியிருக்கிறார்கள். உலகம் முழுக்க அக்கு மருத்துவத்துக்கு செல்வாக்கு உயர்ந்திருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் மட்டும் அக்கு மருத்துவத்துக்கென 17 பல்கலைக்கழகங்கள் இயங்குகின்றன. இந்தியாவிலும் அக்கு மருத்துவத்தின் பலன் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே என்னைப் போன்றவர்களின் விருப்பம். பள்ளிக்கூடப் பாடத்திட்டத்திலேயே இதைக் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்தால் இது சாத்தியமாகலாம். அது நடக்க காலங்கள் ஆகலாம். அதுவரை, உங்களுக்கு நீங்களே டாக்டர். உச்சிமுதல் உள்ளங்கால் வரை ஒவ்வொரு பிரச்னைக்குமான அக்குபிரஷர் தீர்வுகளை இந்த தொடர் முழுக்கப் படித்திருக்கிறீர்கள். அதை வைத்தே உங்களுக்கு மட்டுமல்ல, உங்களின் சுற்றத்தார்களுக்கும் இந்த அதிசய அக்குபிரஷரை அப்ளை பண்ணி ஆரோக்கியமாக வாழுங்கள். ஆல் தி பெஸ்ட்!.
தினகரன்
மனிதன் என்ன காரணங்களுக்காக தலையைச் சொறிகிறான்? பேன் தொல்லையால் மட்டும்தானா சொறிகிறான்? கேட்ட கேள்விக்கு பதில் தெரியாமல் தலையைச் சொறிந்து நிற்கும் மாணவர்களைப் பார்த்திருக்கிறீர்கள்தானே? பதில் தெரியாததற்கும் தலையை சொறிவதற்கும் என்ன சம்பந்தம்? தலையைச் சொறிந்தால் மறந்து போன ஒன்று நினைவுக்கு வர வாய்ப்பிருக்கிறதா? நிச்சயம் இருக்கிறது. நம் உடல் செய்யும் எந்த ஒரு அனிச்சை செயலுக்கும் அர்த்தம் இல்லாமல் இல்லை.
விரல்களில் அடிக்கடி சொடுக்கு எடுக்கிறோமே அது ஏன்? கடும் வேலைக்குப் பிறகு உடல் அசதியை நொடிகளில் போக்கி உற்சாகத்தை வரவழைக்கும் அந்த அக்கு சிகிச்சையை நமக்கு சொல்லித் தந்தது யார்? நாடியில் விரல் வைத்து யோசிக்கிறோம்... கோபத்தை அடக்கும்போது பல்லைக் கடிக்கிறோம்... இதெல்லாம் எதற்காக? ஒரு பதற்றம், எதிர்பார்ப்பு, சஸ்பென்ஸ் என்றால் கையைப் பிசைந்து குறுக்கும் நெடுக்கும் அலைவது நமக்கெல்லாம் இயல்பு. அந்தச் செயல் நமக்குள் ‘எண்டார்ஃபின்’ என்ற பொருளைச் சுரக்கச் செய்து, ஆசுவாசப்படுத்துகிறது என்பது தெரியுமா?
அதேபோலத்தான் கை தட்டுவதும். மகிழ்ச்சியின்போதும் மற்றவர்களைப் பாராட்டவும்தான் நாம் கை தட்டுவதாக நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம். கைதட்டலின்போது உள்ளுறுப்புகளில் ஏற்படும் மாற்றங்களின் விளைவாக, ‘அசிட்டைல் கொலைன்’ என்கிற சுரப்பு சுரந்து, உடலையும் மனதையும் ஒருசேர உற்சாகப்படுத்துகிறது. இந்த உண்மை தெரியாமலே அதைச் செய்து கொண்டிருக்கிறோம் நாம். சிரிப்பு சிகிச்சை, இசை சிகிச்சை போல டெல்லியில் ஒரு சாது, தனது பக்தர்களை கை தட்ட வைத்தே கவலைகளைப் போக்குகிறாராம். இப்படி நம்மைச் சுற்றிலும் நாம் அறியாமலே அக்கு சிகிச்சை நிறைந்திருக்கிறது.
இந்த அனிச்சை செயல்கள் தவிர, நம் முன்னோர்கள் சம்பிரதாயமாகச் சொல்லி வைத்த சில மருத்துவ முறைகளும் உள்ளன. காது குத்துவது என்பது நம் அறிவுத் திறனை வளர்க்கும் விஷயம். எனவேதான் பொய் சொல்கிறவரைப் பார்த்து, ‘எனக்கு ஏற்கனவே காது குத்தியாச்சு’ என்கிறோம். சாமி சிலையைப் பார்த்தால் கன்னத்தில் போட்டுக்கொள்கிறோம். பிறந்த குழந்தைக்கு மூன்று முறை முடி எடுப்பது ஆரோக்கியம் என்று நம்புகிறோம். இன்னும் கம்மல், வளையல், கொலுசு போன்ற அணிகலன்களின் அக்கு பலன்கள் பற்றி நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.
பொதுவாகவே நம் ஊரில் ஒரு மனப்பான்மை இருக்கிறது, விலை உயர்ந்ததுதான் சிறந்தது என்று. சொத்தை எழுதிக் கேட்கும் மருத்துவ சிகிச்சைகளுக்கு மத்தியில், செலவே இல்லாத அக்கு மருத்துவம் செல்வாக்கு குன்றியிருப்பது இதனால்தான். ஆனால், இன்று மாற்று மருத்துவத்தை மக்கள் நம்பத் துவங்கியிருக்கிறார்கள். உலகம் முழுக்க அக்கு மருத்துவத்துக்கு செல்வாக்கு உயர்ந்திருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் மட்டும் அக்கு மருத்துவத்துக்கென 17 பல்கலைக்கழகங்கள் இயங்குகின்றன. இந்தியாவிலும் அக்கு மருத்துவத்தின் பலன் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே என்னைப் போன்றவர்களின் விருப்பம். பள்ளிக்கூடப் பாடத்திட்டத்திலேயே இதைக் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்தால் இது சாத்தியமாகலாம். அது நடக்க காலங்கள் ஆகலாம். அதுவரை, உங்களுக்கு நீங்களே டாக்டர். உச்சிமுதல் உள்ளங்கால் வரை ஒவ்வொரு பிரச்னைக்குமான அக்குபிரஷர் தீர்வுகளை இந்த தொடர் முழுக்கப் படித்திருக்கிறீர்கள். அதை வைத்தே உங்களுக்கு மட்டுமல்ல, உங்களின் சுற்றத்தார்களுக்கும் இந்த அதிசய அக்குபிரஷரை அப்ளை பண்ணி ஆரோக்கியமாக வாழுங்கள். ஆல் தி பெஸ்ட்!.
தினகரன்
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
தலையைச் சொறிந்தால் ஞாபகசக்தி பெருகும்!.........
சும்மா தலையைச் சொறிந்துகொண்டிருக்காமல் உருப்படியாக ஒரு வேலை செய்துள்ளார் டெர்ரர் பாபு ! நான் ஒரு செய்தியைத் தருகிறேன் ! காலையில் தலை வாருகிரீர்கள் அல்லவா ? அப்போது சீப்பைக் கொண்டு 10,15 தடவைகள் அழுத்தி அழுத்தித் தலை சீவுங்கள் அன்று உங்கள் மூளை நன்றாக வேலை செய்யும் ! இது புத்தகத்தில் படித்ததல்ல ! எனது சொந்த ஆய்வு !
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: தலையைச் சொறிந்தால் ஞாபகசக்தி பெருகும்!.........
உடலின் அனிச்சைச் செயல்களுக்கான விளக்கம் அறிந்துகொண்டேன்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தலையைச் சொறிந்தால் ஞாபகசக்தி பெருகும்!......... Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தலையைச் சொறிந்தால் ஞாபகசக்தி பெருகும்!.........
நாம தலைய சொறிஞ்சா பொடுகா இருக்கும்ன்னு
சொல்றவங்கள இனி ஒரு வழி பண்ணிடலாம்
சொல்றவங்கள இனி ஒரு வழி பண்ணிடலாம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தலையைச் சொறிந்தால் ஞாபகசக்தி பெருகும்!.........
யினியவன் wrote:நாம தலைய சொறிஞ்சா பொடுகா இருக்கும்ன்னு
சொல்றவங்கள இனி ஒரு வழி பண்ணிடலாம்![]()
அப்படியே பொடுகு இருந்தாலும் இப்படிச் சொல்லி சமாளித்துக் கொள்ளலாம்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தலையைச் சொறிந்தால் ஞாபகசக்தி பெருகும்!......... Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தலையைச் சொறிந்தால் ஞாபகசக்தி பெருகும்!.........
நெகத்த வெட்டிட்டு சொறியனும் - ரத்தம் வந்துடும் பாஸ்சிவா wrote:அப்படியே பொடுகு இருந்தாலும் இப்படிச் சொல்லி சமாளித்துக் கொள்ளலாம்!
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தலையைச் சொறிந்தால் ஞாபகசக்தி பெருகும்!.........
யினியவன் wrote:நெகத்த வெட்டிட்டு சொறியனும் - ரத்தம் வந்துடும் பாஸ்சிவா wrote:அப்படியே பொடுகு இருந்தாலும் இப்படிச் சொல்லி சமாளித்துக் கொள்ளலாம்!![]()
சரிங்கண்ணா!
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தலையைச் சொறிந்தால் ஞாபகசக்தி பெருகும்!......... Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மீன் சாப்பிட்டால் ஞாபகசக்தி அதிகரிக்கும்; ஆய்வில் தகவல்
» ஞாபக சக்தியை அதிகரிக்க வேண்டுமா? தலையை சொறிந்தால் பலன் கிடைக்கும்!
» என்னே ஞாபகசக்தி…!!??
» ஞாபகசக்தி அதிகரிக்க!
» கர்ப்பத்தடை மாத்திரைகளால் ஞாபகசக்தி பாதிக்கும்!
» ஞாபக சக்தியை அதிகரிக்க வேண்டுமா? தலையை சொறிந்தால் பலன் கிடைக்கும்!
» என்னே ஞாபகசக்தி…!!??
» ஞாபகசக்தி அதிகரிக்க!
» கர்ப்பத்தடை மாத்திரைகளால் ஞாபகசக்தி பாதிக்கும்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|