ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

துள்ளித் திரியும் அணில்கள்

Go down

துள்ளித் திரியும் அணில்கள் Empty துள்ளித் திரியும் அணில்கள்

Post by Powenraj Mon Feb 18, 2013 12:45 pm

http://m.ak.fbcdn.net/photos-f.ak/hphotos-ak-ash3/s720x720/530107_447151968668471_500994703_n.jpg
எப்படியாவது ஒரு வளர்ப்புப் பிராணியை வளர்த்தே ஆக வேண்டும் என்ற என் மாணவப்பருவ எண்ணத்தை, இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவதில் ஆர்வம் காட்டியது குடும்பத் தலைமை. செருப்புக் கழட்டிப் போடும் தாழ்வாரத்தில் கூடு கட்டும் தவிட்டுக் குருவிகளும், அணில் கூடுகளும், அதன் சின்னச் சின்னச குட்டிகளும் என் ஏக்கத்தை வளர்த்தவாறே இருக்கும். அசந்தர்ப்பமாக,அப்போது தான் குட்டி போட்ட தாய் அணிலை, பூனை தனது இரையாக்கிக் கொள்ள, அதன் இரு குட்டிகளும் அனாதைகளாகிப் போயின. அதை வளர்க்கும் பொறுப்பு, என் குடும்பத்தாரால் அரை குறை மனதுடன் என்னிடம் வழங்கப்பட்டது. பிரத்யேகமாகத் தயார் செய்யப்பட்ட அட்டைப் பெட்டியில், இரு குட்டிகளையும் துணியால் மூடி இரு வேளை அல்லது மூன்று வேளை தண்ணீரும்,பாலும், இங்க் பில்லர் உதவியுடன் வழங்கப்பட்டது. சில நாட்களில் ஒன்று இறந்து விட ,மற்றது உயிர் பிழைத்தது. அடியேனின் கண்டுபிடிப்பாக காம்ப்ளான், ஹார்லிக்ஸ் போன்றவை பாலில் கலந்து தரப்பட்டது. சில பழங்களும் அவ்வப்போது தரப்பட ,அதன் ஜீரண உறுப்புகளும் அதை செரிக்கத் தக்கபடி தன்னைத்தகவமைத்துக் கொண்டதன் விளைவாக மிக குறுகிய நாட்களில் "பெருச்சாளி" சைஸில் வளர எல்லோரும் மிரண்டு போனார்கள். ரமண மகரிஷிக்கு அடுத்து, நானே அணிலை வளர்த்த புண்ணியத்திற்கு ஆளானவன் என்ற நினைப்பே, பயமுறுத்துவது போல் அதன் பிற்கால நடவடிக்கைகள் தொடர்ந்தது. யார் வந்தாலும் தயவு தாட்சண்யமின்றி அவர்கள் மேல் ஏறி உட்கார்ந்து கதறவிடுவது, குதிகால்களைச்சுரண்டுவது ,தேவைப்படின் கடிப்பது என்றுபோய், பல தோழர்களையும், தோழிகளையும் வீட்டிற்கு அழைத்துவர துவங்கியபோது ஒட்டுமொத்த குடும்பமே வெகுண்டு எழுந்தது. அந்த சூழ்நிலையில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஏதோ ஒரு பாகத்தில் அதனால் கடிபட்டவர்களே.அ னைத்து விதமான அர்ச்சனைகளும் என்னை வந்து சேர, அருகே உள்ள காட்டில் அதனை விடும்படி ஆனது. அது கூட எனக்கு வருத்தம் தர வில்லை,நான் மரத்தில் விட்ட உடனே ஓடி மறைந்தது, இன்று வரை என்னால் பார்க்க இயலவில்லைஎன்பது தான். எல்லாம் வளர்த்த பாசம்!
-
அணில்கள் கொரித்து உண்ணும் வகையைச் சேர்ந்தவை. உலகெங்கிலும் 250 வகையான அணில்கள் உள்ளன.ஆஸ்திரேலியா, அண்டார்டிகா பகுதிகளில் இவை காணப்படுவதில்லை . மர அணில்,தரை அணில், பறக்கும் அணில்போன்றவை நாம் அன்றாடம் பார்க்கும் வகைகளில் சில. 40 மில்லியன் ஆண்டுகளுக்குமுன்பே இவை வாழ்ந்துள்ளன படிமங்கள் கிடைத்துள்ளன. இப்படிமங்கள் தற்போது வாழ்ந்து வரும் பறக்கும் அணிலை போல் தோற்றம் கொண்டதாக உள்ளது. ஆப்ரிக்க பிக்மி அணில்கள் உருவில் மிகச் சிறியவை. இவை7--10 செ.மீ நீளமும், 10 கிராம் எடையும் கொண்டவை. நீர் நாய் வகை அணில்கள் 5--8 கிலோ எடையும், 50--70செ.மீ நீளமும் கொண்டதாக உள்ளன. அணில்களின் உடல் மிகமிருதுவாகவும், அடர்த்தியான வாலும் ,பெரிய உருண்டைக் கண்களும் கொண்டவை. இவ்வமைப்பே பிற கொரிக்கும் இன வகைகளிலிருந்து பிரித்துக் காட்டுகிறது.
-
சூழ்நிலைக்கும், பருவ கால மாறுதலுக்கும் உட்பட்டு, இவற்றின் நிற அமைப்பு மாறுபடும். இவைகளின் உடலில் உள்ள அனைத்து பாகங்களும் வாழ்வியலுக்குத் தக்க வாறுஉறுதுணையாக உள்ளன. முன்னங்கால்கள்,பின்னங்கால்களை விட குட்டையாக இருக்கும். அதனால் பின்னங்கால்களை"ஸ்டாண்ட் " போல் உபயோகித்து, தன் உடல் முழுதும் அதன் மேல் உட்காரும்படி உபயோகிக்கிறது. கால்களில் 4 அல்லது 5 விரல்கள் உண்டு. முன்னங்காலில் கட்டைவிரல் அமைப்பும் உண்டு. இதை உபயோகித்து, உணவை உண்ணவும், மரக்கிளைகளில் ஏறவும், தாவும்போது நழுவாமல் பிடித்துக் கொள்ளவும் செய்கிறது. இதன் பாதங்கள் மிக மிருதுவாக இருப்பினும், வெப்பத்தையும், குளிரையும்தாங்கும் திறன் கொண்டவை.
-
மழைக்காடுகளும் சரி, பாலைவனத்திலும் சரி, இவைகளை நாம் காணலாம். அதற்கேற்ப தன் வாழ்வியல் அமைப்பை , மாற்றிக் கொள்ளத்தயங்காத ு. பொதுவாக இவை தாவர உண்ணிகள் என அறியப்பட்டாலும் சிறு பூச்சிகள் ,வண்டுகள் , முட்டைகள், சிறிய பாம்பு, போன்றவற்றையும் உண்ணுகின்றன என அறியப்பட்டுள்ளத ு. மிகக் கூர்மையான பார்வையும் , தொடுதல் உணர்ச்சியும்,எதிரிகளிடமிருந ்து தற்காத்துக் கொள்ள ஆயுதமாகப் பயன்படுத்துகின் றன. கொரிப்பதற்கு ஏற்ப அமைந்தஇதன் முன் பற்கள் வாழ்நாள் முழுதும் வளர்ந்து கொண்டேஇருக்கும். பருப்பு வகைகளை இதன் தோலுரித்து உண்பதன் மூலம், ஒன்றுமே இல்லாதபோது மரக்கிளைகளைக் கொரிப்பதன் மூலம் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துக ின்றன.
-
குறவர், பளியர் இன மக்கள், இதை விருப்ப உணவாக உண்பதைப் பார்த்திருக்கிற ேன். அணில் நடமாடும் மரத்திற்கு அருகில் கவை கொண்டு அடிப்பதும், வலையைக் கட்டி, பெண் அணில் போல் குரல் எழுப்புவர். அழைப்பில் ஏமாந்த ஆண் அணில் மிக வேகமாக ஓடிவந்து வலையில் சிக்கிக் கொள்ளும். கூர்ந்து கேட்கும்போது, பெண் அணிலின் குரல் கிரீச்சிட்டும், உச்சஸ்தாயியில் துவங்கி மெதுவாக இறங்குவதுமாக இருக்கும். இவ்வினத்தவர்கள் , விசில் அடிக்கும் முறையில் , மரத்திற்குப் பின்னால் மறைந்து கொண்டு ஓசை எழுப்புவர்.


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

துள்ளித் திரியும் அணில்கள் Empty Re: துள்ளித் திரியும் அணில்கள்

Post by Powenraj Mon Feb 18, 2013 12:53 pm

ஆண்டிற்கு 1--2 முறை குட்டி போடும் இவற்றின் காதல் வாழ்வு சுவாரசியமானது. ஒரு வயது கடந்த ஆணும் ,பெண்ணும் கலவிக்குத் தயாராகும். பெண்ணை அடைவதில் ஆர்வம் கொள்ளும் ஆண்கள் போலியானசண்டையிட்டுக் கொள்ளும் . அவ்வப்போது, மரத்தைச் சுற்றிச் சுற்றி வருவதும், தங்கள் இருப்பிடத்தில் தவ்விக் குதித்து விளையாடுவதுமாக ,பெண்ணைத் தன் பால் கவர முயற்சிக்கும். ரசிப்பில் மூழ்கியவாறே பெண்ணும் பங்கேற்றுக் கொள்ளும். தன்னை வெகுவாகக் கவர்ந்த ஆணை உறவுக்கு அனுமதிக்கும். உறவு மேற்கொள்ளும்பே ாது ,பிற ஆண்களையும் அழைத்துக் கட்டி அணைக்கும். கலவியில் ஈடுபட்ட ஆண் அணிலிற்கு, அதன் குறியும், விந்துப்பையும், 3 மடங்கிலிருந்து 1 மடங்காகச் சுருங்கி உடலில்உட்பாகத்தில் மறைந்து விடும். மீண்டும் எழுச்சி பெற 6 மாதமாகும். அது வரை வேறு எந்தப் பெண்ணோடும் காதல் விளையாட்டில் ஈடுபடாது. பெண்ணோ , பல ஆண்களோடு பல முறை , கலவி கொள்வதில் இன்பம் கொள்ளும். பெண் கீழும், ஆண் மேலே படுத்தவாறு, தன் முன்னங்கால்களால ் பெண்ணின் காதைப் பிடித்துக் கொள்ளும். வெளிப் பார்வைக்கு ஆண்-பெண் பேதம் காணமுடியாது. 30 வினாடி நீடிக்கும் கலவி, முடிந்த உடன் அவை பிரிந்து விடும். இவை கூட்டு வாழ்வை விரும்புவதில்லை . தனிமையாக, சுதந்திரமாக வாழவே விரும்புகின்றன.
-
3--6 வாரங்களில் குட்டி ஈனும். கால இடைவெளியும், குட்டிகளின் எண்ணிக்கையும் இனத்திற்கு இனம் வேறுபடும். பெண்ணே குட்டிகளைக் கவனித்துக் கொள்ளும். பிறந்த உடன் குட்டிகளுக்குக் கண் தெரியாது, காதும் கேட்காது.தாயின் வெப்பத்தை தொடுதலின் மூலமே உணர்ந்துகொள்ளும். இவை தாயிடம் 7 வாரத்திற்குப் பால் குடிக்கும். வளர்ச்சியின்போ து குருவிகளின் முட்டை, தானியம், போன்ற சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளும். ஒரு வருடம் ஆன குட்டிகளைத் தாயானது, தன்கூட்டிலிருந் து விரட்டி விட, அது தன் சுய வாழ்வைத் துவங்குகிறது.
தரை அணில்கள் ,பொதுவாக நாம் பார்க்கும் அணில்கள், சில சமயம் குழுவாகவும், பல சமயம் தனியாகவும் வாழ்வைக்கழிக்கின்றன. தரை மற்றும் மர அணில்கள் பகலில் தன் உணவு வேட்டையையும், காதல் களியாட்டங்களையு ம், மேற்கொள்ளும். இரவில் நன்றாக உறங்கும். இதற்கு நேர் மாறாக பறக்கும் அணில்கள், பகலில் உறங்கி, இரவில் வேட்டையை மேற்கொள்ளும். இரு கால்களுக்கு இடையில் தோல்கள் விரிவடைந்து ஒரு பாராசூட் போல் செயல்படும்அமைப்பே இதைப் பறக்கும் இனமாக வேறுபடுத்திக் காட்டுகிறது. 46 மீட்டர் உயரம் வரை தாவும் இயல்பு கொண்டவை. மரப் பொந்துகளை வசிப்பிடமாகக் கொண்டு வாழும் இவை, அடர்ந்த காடுகளில் வசிக்கின்றன. பழங்குடி இனத்தவர் தவிர்த்து, சில குரங்குகள்,மலைப்பாம்பு, உடும்பு, ராஜாளி போன்றவற்றின் விருப்ப உணவாக உள்ள் இவைகளும், மாமிசத்தை உண்ணும் இயல்பு கொண்டவை.
-
1919 ல் துவங்கி அணில்களின் உணவுப் பழக்கத்தைப் பற்றிய ஆய்வுகள் மேற்கொண்ட போது, பல ஆச்சரியங்கள் தெரிய வந்தன. பெய்லி என்பவர் 13 கோடுகள் உள்ள தரை அணில்கள் இனம் கோழிக் குஞ்சைப் பிடித்து உண்பதைக் கண்டார். விட்டேகர் 139 தரை அணில்களின் வயிற்றை சோதித்துப் பார்த்ததில் அவற்றின் வயிற்றில் மாமிசத்தின் மிச்சங்கள் இருப்பதைக் கண்டார். விஸ்டிராண்ட் என்பவர், சில அணில்கள் அப்போதே கொல்லப்பட்ட சிறு பாம்புகளை உணவாக உட்கொள்வதைக் கண்டதாகத் தன் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ள ார். தென் அமெரிக்காவில் காணப்படும் அணில்கள், அங்கு மண்ணில் புதைந்து வாழும் "ராட்டில்ஸ்நேக்" வகை பாம்புகளை உண்பதை ஆய்வறிஞர்கள் கண்டனர். இதை உண்டவைகளில் உடலில் பாம்பின் வாடை அடிப்பதாகவும், அதை நுகர்ந்த பறவைகளும், சில பெரு உயிரிகளும் இவைகளை விட்டுவிடுவதையு ம் கண்டனர். தன் எதிரிகளைக் கண்டவுடன், எச்சரிக்கை ஒலியாக தொடர்ந்து கிறீச்சிடுவதும் , தன் வாலை உயர்த்தி சுண்டுவதும், பிற சிறு கொறிக்கும் வகைகளையும், தன்னையும் தற்காத்துக் கொள்ள உதவும்சமிக்ஞையாகப் பயன்படுத்துகிறத ு.மரத்திற்கு மரம் தாவும்போதும், குறுகலான பாதையில் மிக வேகமாக ஓடும்போதும், அவைகளின் தடித்த வால், மிகச்சிறந்த சமாளியாகச் செயல்படுகிறது.வால் அறுந்த அணில்கள் குறுகிய நாட்களில் இறந்து விடுகின்றன.
-
அணில்​களின் தோல் மற்றும் மயிர்க்கால்கள், வெளிநாட்டவரின் நாகரீகத் தொப்பிகள், அங்கிகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படு கின்றன. தென் அமெரிக்காவில் பிரதானதொழிலான "அணில்களைக் கொல்லுதல்" நிறைய வருமானம் ஈட்டும் தொழிலாகக் கருதப்படுகின்றன . எண்ணிக்கை மிக வேகமாகக் குறைந்து வருவதைக் கண்ட ஐ.நா. சபை, இவைகளை வேட்டையாடுவதைத் தேசியக் குற்றமாக அறிவித்துள்ளது. இத்தொழிலில் ஈடுபடுபவர்களுக் கு, குட்டிஅணில்களை எங்கு பிடிப்பது, எப்படிக் கொன்று அதன் தோல்களைப் பதப்படுத்துவது என்பன போன்ற பயிற்சிப் பட்டறைகள் நிறைய நடத்தப்படுகின்ற ன.
-
மனித சமுதாயத்தோடு மிக நெருங்கிய தொடர்புக்காக ஏங்கும் இவ்வகையான சிறு உயிர்களையும் மதித்தது இந்து சமுதாயம். காப்பாற்ற அறிவுறுத்தியது ஜைன சமயம். மிகப் பெரிய மழைக்காடுகளும், ஆல்,அரசு, போன்ற பல நூறு வருடம் வாழும் மரங்களும் முளைப்பதற்கு சிறு குருவிகள், அணில்கள் போன்றவற்றின் எச்சங்களே காரணம் என அடித்துக் கூறுகிறது . "வில்மன் கோல்ட் மேயரின் ஆய்வுக்குறிப்பு கள்". இவர் அணில்கள் தொடர்பாக 40 வருடங்களாக ஆராய்ச்சியில் ஈடுபடுபவர் என்பது நோக்கத்தக்கது.
-
- எஸ். கிருஷ்ணன் ரஞ்சனா
—ரிலாக்ஸ் ப்ளீஸ்


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum