Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்!
+2
RAJESH KANNAN.R
சாமி
6 posters
Page 1 of 1
முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்!
சிவபெருமானைப்பற்றி ஞானசம்பந்தர் பாடியபோது முதன்முதலாக “தோடுடைய செவியன்” என்று பாடினார். செவியன் என்று சொன்னாலே போதும். தோடுடைய செவியன் என்று சொன்னால் அதிலே ஒரு நயம் இருக்கிறது. இந்தத் தேவாரம் எல்லார் காதிலேயும் விழுந்த தேவாரம்தான். அச்வதரன், கம்பளதரன் என்று இரண்டு கந்தர்வர்கள் இருந்தார்கள். இசை நுணுக்கத்திலே பெரியவர்கள். அவர்கள் பாடலைக் கேட்டு ரசிக்கிறவர்கள் யாரும் இல்லை. உயர்ந்த பாடலைக் கேட்பதற்கு தனி ஞானம் வேண்டும்.
இசையிலேயே மிகப்பெரியவர் சிவபெருமான். சிவபெருமான் வீணை வாசிப்பார்.
“வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி”
வீணா தட்சிணாமூர்த்தி. முதன் முதலிலே புல்லாங்குழல் வாசித்தவர் முருகப்பெருமான். கிருஷ்ணர் இல்லை. கிருஷ்ணர் காலம் 5000 ஆண்டு. முருகப்பெருமான் ஆதியும் அந்தமும் இல்லாதவர். திருமுருகாற்றுப்படையிலே,
“குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்”
என்று வருகிறது. குழல் என்றால் புல்லாங்குழல் என்று அர்த்தம். யாழ் செயற்கை வாத்தியம். குழல் இயற்கை வாத்தியம்.
“குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்”
என்று வள்ளுவர் முதலில் குழலைச் சொல்லிவிட்டுப் பிறகு யாழைச் சொல்லுகின்றார். அது முக்கியமோ அதை முதலிலே சொல்லுகின்றார். முருகப்பெருமான் குறிஞ்சி நிலக்கடவுள். குறிஞ்சி நிலத்திலே (மலையிலே) வாழுகின்ற தெய்வம், மலையிலே விளைகின்ற மூங்கிலை வெட்டி அதைத்துளையிட்டு வாசித்தாராம். யார்? சுப்பிரமணிய சுவாமி.
தன்னை அறியாது வாசித்தாராம். ஆகவே, அந்தக்குடும்பமே சங்கீதக் குடும்பம். சிவபெருமான் ஆடவல்லான்; பாடவல்லான். நாட்டியக் கலையிலும் நடராஜா. வீணை வாசிப்பார். அவருக்கு வித்யாபதி என்று பெயர். இந்த இரண்டு கந்தர்வர்களும் சிவபெருமானை வேண்டித் தவம் செய்தார்கள். சுவாமி ரிஷப வாகனத்தோடு காட்சியளித்தார். அவர்கள் வணங்கி, சுவாமி! எங்களுக்கு ஒரு வரம் கொடுக்க வேண்டும்!” என்றனர். “என்ன?” என்று கேட்டார். “24 மணி நேரமும் நாங்கள் பாடிக் கொண்டேயிருப்போம். தேவரீர் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். நீங்கள் கேட்டு எங்கள் பாட்டை ரசிக்க வேண்டும்” என்றார்கள்.
படைத்தல்,காத்தல், ஒடுக்குதல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்து தொழில்களைச் செய்கின்றவர், அத்தனை வேலைகளையும் செய்து கொண்டு 24 மணி நேரமும் எப்படிப் பாட்டைக் கேட்பது? பரமன் வரம் கொடுத்தால் மாற்ற மாட்டார். என்ன பண்ணினார்? இரண்டு பேரையும் தோடாகப் பண்ணிக் காதிலே மாட்டிக் கொண்டாராம். பாடிக்கொண்டேயிருந்தால் கேட்டுக் கொண்டேயிருக்கலாம்.
(செஞ்சொல் உரைக்கோவை – வாரியார் புத்தகத்தில் இருந்து)
இசையிலேயே மிகப்பெரியவர் சிவபெருமான். சிவபெருமான் வீணை வாசிப்பார்.
“வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி”
வீணா தட்சிணாமூர்த்தி. முதன் முதலிலே புல்லாங்குழல் வாசித்தவர் முருகப்பெருமான். கிருஷ்ணர் இல்லை. கிருஷ்ணர் காலம் 5000 ஆண்டு. முருகப்பெருமான் ஆதியும் அந்தமும் இல்லாதவர். திருமுருகாற்றுப்படையிலே,
“குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்”
என்று வருகிறது. குழல் என்றால் புல்லாங்குழல் என்று அர்த்தம். யாழ் செயற்கை வாத்தியம். குழல் இயற்கை வாத்தியம்.
“குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்”
என்று வள்ளுவர் முதலில் குழலைச் சொல்லிவிட்டுப் பிறகு யாழைச் சொல்லுகின்றார். அது முக்கியமோ அதை முதலிலே சொல்லுகின்றார். முருகப்பெருமான் குறிஞ்சி நிலக்கடவுள். குறிஞ்சி நிலத்திலே (மலையிலே) வாழுகின்ற தெய்வம், மலையிலே விளைகின்ற மூங்கிலை வெட்டி அதைத்துளையிட்டு வாசித்தாராம். யார்? சுப்பிரமணிய சுவாமி.
தன்னை அறியாது வாசித்தாராம். ஆகவே, அந்தக்குடும்பமே சங்கீதக் குடும்பம். சிவபெருமான் ஆடவல்லான்; பாடவல்லான். நாட்டியக் கலையிலும் நடராஜா. வீணை வாசிப்பார். அவருக்கு வித்யாபதி என்று பெயர். இந்த இரண்டு கந்தர்வர்களும் சிவபெருமானை வேண்டித் தவம் செய்தார்கள். சுவாமி ரிஷப வாகனத்தோடு காட்சியளித்தார். அவர்கள் வணங்கி, சுவாமி! எங்களுக்கு ஒரு வரம் கொடுக்க வேண்டும்!” என்றனர். “என்ன?” என்று கேட்டார். “24 மணி நேரமும் நாங்கள் பாடிக் கொண்டேயிருப்போம். தேவரீர் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். நீங்கள் கேட்டு எங்கள் பாட்டை ரசிக்க வேண்டும்” என்றார்கள்.
படைத்தல்,காத்தல், ஒடுக்குதல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்து தொழில்களைச் செய்கின்றவர், அத்தனை வேலைகளையும் செய்து கொண்டு 24 மணி நேரமும் எப்படிப் பாட்டைக் கேட்பது? பரமன் வரம் கொடுத்தால் மாற்ற மாட்டார். என்ன பண்ணினார்? இரண்டு பேரையும் தோடாகப் பண்ணிக் காதிலே மாட்டிக் கொண்டாராம். பாடிக்கொண்டேயிருந்தால் கேட்டுக் கொண்டேயிருக்கலாம்.
(செஞ்சொல் உரைக்கோவை – வாரியார் புத்தகத்தில் இருந்து)
Re: முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்!
ஆதி அந்தம் (பிறப்பு,இறப்பு )இல்லாதவர்களையே கடவுள் என்று சித்தர்கள் முனிவர்கள், .கூறுவர்(.முருகன்,பிள்ளையார், சிவன்,சக்தி.)மற்ற அனைவரும் நமக்கு முன்னால் வாழ்ந்த உயர் மனிதர்கள்.
RAJESH KANNAN.R- புதியவர்
- பதிவுகள் : 33
இணைந்தது : 14/02/2011
Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்!
எனக்கு தெரிந்து முதலில் அடுப்பு எறிய ஊது குழல் ஊதியது எங்க அக்கா.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்!
RAJESH KANNAN.R wrote:ஆதி அந்தம் (பிறப்பு,இறப்பு )இல்லாதவர்களையே கடவுள் என்று சித்தர்கள் முனிவர்கள், .கூறுவர்(.முருகன்,பிள்ளையார், சிவன்,சக்தி.)மற்ற அனைவரும் நமக்கு முன்னால் வாழ்ந்த உயர் மனிதர்கள்.
உண்மைதான் நண்பரே!
கடவுள் ஒருவரே!
அவர் பரம்பொருள் சிவன் ஒருவர்தான்.
பேராற்றல் உள்ள அந்த பரம்பொருள் உயிர்களுடன் தொடர்பு கொள்ள சிற்சத்தியாய்
சத்தியாக வருகிறான். அதன்படியே முருகனும் பிள்ளையாரும்!
திருமால், நான்முகன் போன்றவர்கள் அனைவரும் பக்குவப்பட்ட மேன்நிலை உயிர்களே!
Re: முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்!
பயனுள்ள புதிய தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி...
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்!
எங்க வீட்ல ஊதுகுழல் ஊதினா அடுப்பு 'எரியும்'.மாணிக்கம் நடேசன் wrote:எனக்கு தெரிந்து முதலில் அடுப்பு எறிய ஊது குழல் ஊதியது எங்க அக்கா.
அதெப்படி உங்க வீட்டில மட்டும் ஊதினா... அடுப்பு தூர எறிஞ்சு போகுது.
அவ்வளவு பலமா ஊதுவாங்களோ?
ஆரூரன்- இளையநிலா
- பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012
Similar topics
» குண்டுக்கரை விஸ்வரூப முருகப்பெருமான்
» வித்தியாசமான முருகப்பெருமான் ஆலயங்கள்
» கற்றவர்க்கு குழல் மற்றவர்க்கு மூங்கில்
» முருகப்பெருமான் 108 போற்றி !!
» முதன்முதலில் பகவத்கீதை உபதேசிக்கப்பட்டது யாருக்கு தெரியுமா?
» வித்தியாசமான முருகப்பெருமான் ஆலயங்கள்
» கற்றவர்க்கு குழல் மற்றவர்க்கு மூங்கில்
» முருகப்பெருமான் 108 போற்றி !!
» முதன்முதலில் பகவத்கீதை உபதேசிக்கப்பட்டது யாருக்கு தெரியுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|