Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Ammu Swarnalatha | ||||
ayyamperumal |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பயிரை காக்க சாக்கடையில் இறங்கிய விவசாயிகள்....
3 posters
Page 1 of 1
பயிரை காக்க சாக்கடையில் இறங்கிய விவசாயிகள்....
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தை செழிப்புற செய்த காலிங்கராயன் வாய்க்கால் வற்றியதால், சாக்கடை கழிவு நீரை கொண்டு, குற்றுயிரும், குலைஉயிருமாக உள்ள பயிர்களுக்கு உயிர் தர வேண்டிய, அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
"உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' என்ற, தாரக மந்திரத்தோடு நம் அரசு இயந்திரம் சுழல்கிறது. "உழவன் சேற்றில் கால் வைத்தால் தான், நாம் சோற்றில் கை வைக்க முடியும்' என்பது பழமொழி.ஆனால், நாம் சோற்றில் கை வைக்க வேண்டும் என்பதற்காக, ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகள் சாக்கடையிலேயே கால் வைக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பருவமழை பொய்த்ததால், ஈரோடு மாவட்டத்தில் விவசாய நிலங்கள் யாவும், பாலைனமாக மாறி வருகிறது. "வாடிய பயிரை கண்டபோதெல்லாம் உள்ளம் வாடினேன்' என்ற வள்ளலார் வாக்குக்கு இணங்க, வறட்சியால் வறண்ட நிலத்தில், வாடி நிற்கும் பயிர்களை கண்டு சகிக்க முடியாத விவசாயிகள், தவித்து வருகின்றனர்.ஒரு சில மாவட்டத்தில் வறட்சியை எதிர்த்தும், பயிர்களை காக்கவும் மாற்றுவழிகளை விவசாயிகள் கையாள்கின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் பாசூர் பகுதியில், வற்றிய வாய்க்கால் நீரை உறிஞ்சி, சின்டெக்ஸ் தொட்டியில் நிரப்பி, மருந்து தெளிப்பதை போல, நெற்பயிருக்கு தண்ணீரை தெளிக்கின்றனர்.ஈரோடு நடுமாரியம்மன் கோவில் பகுதியில், சாக்கடை கழிவு நீர் மூலம் விவசாயம் பார்க்கும் அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து விவசாயி பெருமாள் கூறியதாவது:ஈரோடு மாவட்டத்தில் தண்ணீரின்றி, கருகும் பயிர்களை காக்க மாற்று வழிகளை விவசாயிகள் கையாள்கின்றனர். வறட்சியால், அணை, ஆறு, குளம், குட்டை, ஏரி என வறண்டாலும், எக்காலத்திலும் காயாத ஜீவநதியாக, ஈரோட்டில் சாக்கடை மட்டுமே ஓடுகிறது.
பொதுவாக, விவசாயத்தில் கழிவு பொருட்கள் நல்ல உரமாக பயன்படுத்தப்படுகிறது. எனவே, சாக்கடை கழிவு நீரையே உறிஞ்சி, அதன் மூலம் என் பூந்தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சுகிறேன்.வறட்சியால் பூ விளைச்சல் மந்தமாக உள்ளது. சாக்கடையில் இருந்து கழிவு நீரை உறிஞ்சி, தோட்டத்துக்கு பாய்ச்ச, டீஸல் மோட்டருக்கு ஏக்கருக்கு, பத்து லிட்டர் டீஸல் தேவைப்படுவதால், வருமானமின்றி தவிக்கிறோம். வறுமையில் நான் வாடிய காலத்தில், வருமானம் அளித்த, பூச்செடிகள் அழிவை தடுக்க எனக்கு வேறு வழியில்லை, என்றார்.
இதுபற்றி, வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது:குப்பை கழிவு மற்றும் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வரும் கழிவு நீர் மற்றும் கழிவு விவசாயிகளும், பண்ணையாளர்களும் பணம் கொடுத்து வாங்கி செல்கின்றனர்.பாதாள சாக்கடை திட்டம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து மக்கக்கூடிய கழிவுகளை பிரித்து, விவசாயத்துக்கு விற்பனை செய்வதால், சிறந்த உரமாக பயன்படுகிறது.
நேரடியாக சாக்கடையில் இருந்து தண்ணீர் எடுத்து விவசாய நிலத்தில் பாய்ச்சாமல், பண்ணைக்குட்டையில் சாக்கடை நீரை தேக்கி வைக்க வேண்டும்.அப்போது, தேவையற்ற கழிவுகள் தேங்கி, உரத்துக்கு இணையான தண்ணீர் மட்டும் தனியாக கிடைக்கும். அதை விவசாய நிலத்தில் பாய்ச்சலாம். பண்ணைக்குட்டையில் தண்ணீரை தேக்குவதால், நிலத்தடி நீர்மட்டமும் உயர வாய்ப்புள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலான, கரும்பு, வாழை தோட்டத்திலும், நெற்பயிருக்கும், சாக்கடை கழிவு நீரையே பல விவசாயிகள் பாய்ச்சி வருகின்றனர். சாக்கடை கழிவு நீரை பயன்படுத்துவதால், எந்த பாதிப்பும் வராது என்றனர்.
கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கம் நல்லசாமி கூறியதாவது:நாட்டில் மழை பொய்த்து போனதற்கு, இயற்கைக்கு எதிராக மாறிய மனிதர்களேயாகும். ஒரு காகம், தன் வாழ்நாளில் பல்லாயிரக்கணக்கான மர விதைகளை, விதைக்கிறது. ஆனால், நம்மில் எத்தனை பேர் மரக்கன்றுகளை நட்டுள்ளோம்.இயற்கையோடு ஒன்றி வாழ, இனியாவது மனிதர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் சாயம், தோல் கழிவுகள் அதிகம் வருவதால், இதை உணவு பயிர்களுக்கு பாய்ச்சினால் கேன்சர் நோய் வரலாம். விவசாய மண்ணின் தன்மை மாறும் என்றார்.
தினமலர் .
"உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' என்ற, தாரக மந்திரத்தோடு நம் அரசு இயந்திரம் சுழல்கிறது. "உழவன் சேற்றில் கால் வைத்தால் தான், நாம் சோற்றில் கை வைக்க முடியும்' என்பது பழமொழி.ஆனால், நாம் சோற்றில் கை வைக்க வேண்டும் என்பதற்காக, ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகள் சாக்கடையிலேயே கால் வைக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பருவமழை பொய்த்ததால், ஈரோடு மாவட்டத்தில் விவசாய நிலங்கள் யாவும், பாலைனமாக மாறி வருகிறது. "வாடிய பயிரை கண்டபோதெல்லாம் உள்ளம் வாடினேன்' என்ற வள்ளலார் வாக்குக்கு இணங்க, வறட்சியால் வறண்ட நிலத்தில், வாடி நிற்கும் பயிர்களை கண்டு சகிக்க முடியாத விவசாயிகள், தவித்து வருகின்றனர்.ஒரு சில மாவட்டத்தில் வறட்சியை எதிர்த்தும், பயிர்களை காக்கவும் மாற்றுவழிகளை விவசாயிகள் கையாள்கின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் பாசூர் பகுதியில், வற்றிய வாய்க்கால் நீரை உறிஞ்சி, சின்டெக்ஸ் தொட்டியில் நிரப்பி, மருந்து தெளிப்பதை போல, நெற்பயிருக்கு தண்ணீரை தெளிக்கின்றனர்.ஈரோடு நடுமாரியம்மன் கோவில் பகுதியில், சாக்கடை கழிவு நீர் மூலம் விவசாயம் பார்க்கும் அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து விவசாயி பெருமாள் கூறியதாவது:ஈரோடு மாவட்டத்தில் தண்ணீரின்றி, கருகும் பயிர்களை காக்க மாற்று வழிகளை விவசாயிகள் கையாள்கின்றனர். வறட்சியால், அணை, ஆறு, குளம், குட்டை, ஏரி என வறண்டாலும், எக்காலத்திலும் காயாத ஜீவநதியாக, ஈரோட்டில் சாக்கடை மட்டுமே ஓடுகிறது.
பொதுவாக, விவசாயத்தில் கழிவு பொருட்கள் நல்ல உரமாக பயன்படுத்தப்படுகிறது. எனவே, சாக்கடை கழிவு நீரையே உறிஞ்சி, அதன் மூலம் என் பூந்தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சுகிறேன்.வறட்சியால் பூ விளைச்சல் மந்தமாக உள்ளது. சாக்கடையில் இருந்து கழிவு நீரை உறிஞ்சி, தோட்டத்துக்கு பாய்ச்ச, டீஸல் மோட்டருக்கு ஏக்கருக்கு, பத்து லிட்டர் டீஸல் தேவைப்படுவதால், வருமானமின்றி தவிக்கிறோம். வறுமையில் நான் வாடிய காலத்தில், வருமானம் அளித்த, பூச்செடிகள் அழிவை தடுக்க எனக்கு வேறு வழியில்லை, என்றார்.
இதுபற்றி, வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது:குப்பை கழிவு மற்றும் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வரும் கழிவு நீர் மற்றும் கழிவு விவசாயிகளும், பண்ணையாளர்களும் பணம் கொடுத்து வாங்கி செல்கின்றனர்.பாதாள சாக்கடை திட்டம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து மக்கக்கூடிய கழிவுகளை பிரித்து, விவசாயத்துக்கு விற்பனை செய்வதால், சிறந்த உரமாக பயன்படுகிறது.
நேரடியாக சாக்கடையில் இருந்து தண்ணீர் எடுத்து விவசாய நிலத்தில் பாய்ச்சாமல், பண்ணைக்குட்டையில் சாக்கடை நீரை தேக்கி வைக்க வேண்டும்.அப்போது, தேவையற்ற கழிவுகள் தேங்கி, உரத்துக்கு இணையான தண்ணீர் மட்டும் தனியாக கிடைக்கும். அதை விவசாய நிலத்தில் பாய்ச்சலாம். பண்ணைக்குட்டையில் தண்ணீரை தேக்குவதால், நிலத்தடி நீர்மட்டமும் உயர வாய்ப்புள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலான, கரும்பு, வாழை தோட்டத்திலும், நெற்பயிருக்கும், சாக்கடை கழிவு நீரையே பல விவசாயிகள் பாய்ச்சி வருகின்றனர். சாக்கடை கழிவு நீரை பயன்படுத்துவதால், எந்த பாதிப்பும் வராது என்றனர்.
கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கம் நல்லசாமி கூறியதாவது:நாட்டில் மழை பொய்த்து போனதற்கு, இயற்கைக்கு எதிராக மாறிய மனிதர்களேயாகும். ஒரு காகம், தன் வாழ்நாளில் பல்லாயிரக்கணக்கான மர விதைகளை, விதைக்கிறது. ஆனால், நம்மில் எத்தனை பேர் மரக்கன்றுகளை நட்டுள்ளோம்.இயற்கையோடு ஒன்றி வாழ, இனியாவது மனிதர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் சாயம், தோல் கழிவுகள் அதிகம் வருவதால், இதை உணவு பயிர்களுக்கு பாய்ச்சினால் கேன்சர் நோய் வரலாம். விவசாய மண்ணின் தன்மை மாறும் என்றார்.
தினமலர் .
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: பயிரை காக்க சாக்கடையில் இறங்கிய விவசாயிகள்....
இந்த நிலையே நீடித்தால் , உணவு பஞ்சம் ஏற்படும் ..விவசாயம் என்பது கண்காட்சி பொருளாக தான் அமையும் வரும் சந்ததிகளுக்கு ....
அரசு முன்வந்து எதாவது நடவடிக்கை எடுத்து விவசாயத்தை காக்க முன்வரனும்
அரசு முன்வந்து எதாவது நடவடிக்கை எடுத்து விவசாயத்தை காக்க முன்வரனும்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Similar topics
» மாற்றம் என்பது சொல் அல்ல செயல்: தாமிரபரணியை காக்க களம் இறங்கிய மாணவர் படை
» நெற்பயிரை காக்க குடிதண்ணீரை விலைக்கு வாங்கும் விவசாயிகள் : ஒருமுறை பாய்ச்ச ஏக்கருக்கு ரூ.4000 செலவு
» காக்க காக்க -வங்கி கணக்குகளை காக்க.
» காக்க.. காக்க.. கால் சென்டர் காக்க..
» நா காக்க செயல் காக்க - தலையங்கம் (குமுதம்)
» நெற்பயிரை காக்க குடிதண்ணீரை விலைக்கு வாங்கும் விவசாயிகள் : ஒருமுறை பாய்ச்ச ஏக்கருக்கு ரூ.4000 செலவு
» காக்க காக்க -வங்கி கணக்குகளை காக்க.
» காக்க.. காக்க.. கால் சென்டர் காக்க..
» நா காக்க செயல் காக்க - தலையங்கம் (குமுதம்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|