Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்!
5 posters
Page 1 of 1
பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்!
பிரான்ஸ் அரசாங்கத்தின் உயர் கௌரவமான [Chevalier] செவாலியர் விருதை, இலங்கைத் தமிழரான திருமதி ஷெரின் சேவியர் அவர்கள் பெற்றிருக்கின்றார். இதன் மூலம், இவ் உயர் கௌரவத்தை பெறும் முதல் இலங்கைத் தமிழர் என்னும் பெருமை ஷெரின் சேவியரை சார்கிறது.
யாழ்ப்பாணத்தின் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகக் கொண்டவரான ஷெரின் சேவியருக்கான மேற்படி விருது, இலங்கைக்கான பிரெஞ் தூதுவர் கிறிஸ்டைன் ரொபிசோன் அவர்களால் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.
உலகின் பல பாகங்களிலும் இயங்கிவரும் முன்னனி மனிதர்களை கௌரவிக்கும் வகையில், பிரெஞ் அரசாங்கம் 1957ம் ஆண்டிலிருந்து இவ்விருதை வழங்கிவருகின்றது. தற்போது அவ்வாறான முன்னணி மனிதர்களில் ஷெரீன் சேவியரும் ஒருவராகியிருக்கின்றார். தமிழர் என்னும் இனத்துவ அடையாளத்தின் ஊடாக நோக்குவதாயின், செவாலியர் கௌரவத்தை பெறும் இரண்டாவது தமிழரென்னும் பெருமை ஷெரினைச் சார்கிறது.
இவ்வுயர் விருது, 1995ம் ஆண்டு தமிழ் நாட்டைச் சேர்ந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு வழங்கப்பட்டிருந்தது. சிவாஜியின் கலைத்துறை பங்களிப்பிற்காகவே, அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் ஷெரீன் சேவியர், தனது மனித உரிமைசார் பணிகளுக்காக இவ்வுயர் விருதை பெற்றிருக்கின்றார்.
ஷெரீன் சேவியர் – கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆற்றிவரும், மனித உரிமைசார் கொள்கைகள் தொடர்பான சமூக அபிவிருத்தி விவகாரங்கள், பெறுபேற்று அடிப்படையிலான முகாமைத்துவம், சமூக ஆய்வுகள் மற்றும் உயிர்வாழ் உதவிகள் போன்ற பல்துறைசார் பணிகளுக்கான அனைத்துலக அங்கீகாரமாகவே, இவ்வுயர் விருதை பெற்றிருக்கின்றார்.
தற்போது, இலங்கையின் முன்னணி மற்றும் நீண்ட வரலாற்றைக் கொண்டதுமான [HHR] மனித உரிமைகள் இல்லத்தின் நிறைவேற்று பணிப்பாளராக செயற்பட்டுவரும் திருமதி ஷெரின் சேவியர், யாழ்ப்பாணத்தின் பிரபல சட்டத்தரணியான இன்னாசிமுத்து பிரான்சிஸ் சேவியரின் புதல்வியாவார்.
சிறு வயதிலிருந்தே மனித உரிமைசார் பணிகளில் ஈடுபட்டுவரும், ஷெரீன் உலகின் பல நாடுகளில் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டிருப்பவர். அமெரிக்கா, இந்தியா, கனடா போன்ற நாடுகளில் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டிருக்கும் ஷெரீன், மேலும் ஆபிரிக்காவின் சியரோ லியோன், மற்றும் எல் ஷல்வடோர் போன்ற லத்தீனமெரிக்க நாடுகளிலும் பணியாற்றியிருக்கின்றார்.
அடிப்படையில் ஷெரீன் சேவியர் ஒரு [Chemistry] இரசாயனவியல் பட்டதாரி ஆவார். தமிழ்நாட்டின் திருச்சியிலுள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இரசாயனவியலில் பட்டம்பெற்ற இவர், பின்னர் கனடிய பல்கலைக்கழமான [Concordia University] கொன்கொரிடா பல்கலைக்கழகத்தில் தனது [M.Sc] முதுமானி கல்வியை பூர்த்தி செய்திருக்கின்றார். அத்துடன் மனித உரிமைகள் மற்றும் மனிதநேய சட்டங்கள் தொடர்பில் பிறிதொரு [LLM] முதுமானிப்பட்டத்தை [Columbia University, New York] கொலம்பிய பல்கலைக்கழகத்திலும் பூர்த்தி செய்திருக்கின்றார்.
ஷெரீன் சேவியர் தனது, கடந்த 25 ஆண்டுகால மனிதநேய பயணத்தின் போது பல்வேறு பதவி நிலைகளை வகித்திருக்கின்றார். குறிப்பாக, [[Head of Delegation - Canadian Red Cross Society - CRCS - New Delhi, India]] கனடிய செஞ்சிலுவை சங்கத்தின் இந்தியாவிற்கான பிரதான இயக்குனர், [CRCS Humanitarian Values Program – Canada] கனடிய மனிதநேய விழுமியங்களுக்கான திட்டத்தின் தேசிய இணைப்பாளர், அமெரிக்காவின் கலிபோர்ணியாவை தளமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட [Fourth World Vision - FWV, California] நான்காவது உலக தரிசனம் திட்டத்தின் பணிப்பாளர் – என பல்வேறு பதவிகளை ஷெரின் வகித்திருக்கின்றார்.
மேலும், ஆசிய பெண்கள் வலையமைப்பின் ஆலோசகராகவும் செயற்பட்டிருக்கும் ஷெரீன், பால்நிலை சமத்துவம், மனித உரிமை மற்றும் சமூகவியல் போன்ற துறைகள் தொடர்பில், சுயாதீன ஆய்வாளராகவும் செயற்பட்டு வருகின்றார்.
இவ்வாறான பன்முக ஆளுமையைக் கொண்டவரான ஷெரீன், 2007ம் ஆண்டிலிருந்து, அவரது தகப்பனாரால் உருவாக்கப்பட்ட நிறுவனமான, ‘மனித உரிமைகள் இல்ல’த்தின் செயற்பாடுகளை பொறுப்பேற்றுக் கொண்டார். தனது அனுபவம், ஆற்றல் மற்றும் அவரது உலகளாவிய தொடர்புகள் அனைத்தும், இலங்கையின் வடக்கு கிழக்கில் பூர்வீகமாக வாழ்ந்துவரும் தமிழ் மக்களைச் சென்றடைய வேண்டுமெனும் ஒரே நோக்குடன் செயலாற்றி வருகின்றார்.
குறிப்பாக யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது அவர் எடுத்துக்கொண்ட ஒரு முயற்சி இங்கு விதந்துரைக்கத்தக்கதாகும். தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவர வேண்டுமென்னும் நோக்கில், அவர் பல்வேறு முயற்சிகளை எடுத்திருந்தார். இது அவர் தமிழ் மக்களின் உரிமைசார் அரசியலில் எத்தகைய ஈடுபாட்டைக் கொண்டிருக்கின்றார் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். அந்த வகையில் தமிழ் மக்களின் நலன் மற்றும் உரிமைசார்ந்து செயற்பட்டுவரும், திருமதி ஷெரின் சேவியருக்கு இவ்வுயர் கௌரவம் கிடைத்திருப்பதானது, ஒட்டுமொத்த இலங்கை வாழ் தமிழ் மக்களுக்குமான பெருமையாகும்.
யாழ்ப்பாணத்தின் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகக் கொண்டவரான ஷெரின் சேவியருக்கான மேற்படி விருது, இலங்கைக்கான பிரெஞ் தூதுவர் கிறிஸ்டைன் ரொபிசோன் அவர்களால் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.
உலகின் பல பாகங்களிலும் இயங்கிவரும் முன்னனி மனிதர்களை கௌரவிக்கும் வகையில், பிரெஞ் அரசாங்கம் 1957ம் ஆண்டிலிருந்து இவ்விருதை வழங்கிவருகின்றது. தற்போது அவ்வாறான முன்னணி மனிதர்களில் ஷெரீன் சேவியரும் ஒருவராகியிருக்கின்றார். தமிழர் என்னும் இனத்துவ அடையாளத்தின் ஊடாக நோக்குவதாயின், செவாலியர் கௌரவத்தை பெறும் இரண்டாவது தமிழரென்னும் பெருமை ஷெரினைச் சார்கிறது.
இவ்வுயர் விருது, 1995ம் ஆண்டு தமிழ் நாட்டைச் சேர்ந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு வழங்கப்பட்டிருந்தது. சிவாஜியின் கலைத்துறை பங்களிப்பிற்காகவே, அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் ஷெரீன் சேவியர், தனது மனித உரிமைசார் பணிகளுக்காக இவ்வுயர் விருதை பெற்றிருக்கின்றார்.
ஷெரீன் சேவியர் – கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆற்றிவரும், மனித உரிமைசார் கொள்கைகள் தொடர்பான சமூக அபிவிருத்தி விவகாரங்கள், பெறுபேற்று அடிப்படையிலான முகாமைத்துவம், சமூக ஆய்வுகள் மற்றும் உயிர்வாழ் உதவிகள் போன்ற பல்துறைசார் பணிகளுக்கான அனைத்துலக அங்கீகாரமாகவே, இவ்வுயர் விருதை பெற்றிருக்கின்றார்.
தற்போது, இலங்கையின் முன்னணி மற்றும் நீண்ட வரலாற்றைக் கொண்டதுமான [HHR] மனித உரிமைகள் இல்லத்தின் நிறைவேற்று பணிப்பாளராக செயற்பட்டுவரும் திருமதி ஷெரின் சேவியர், யாழ்ப்பாணத்தின் பிரபல சட்டத்தரணியான இன்னாசிமுத்து பிரான்சிஸ் சேவியரின் புதல்வியாவார்.
சிறு வயதிலிருந்தே மனித உரிமைசார் பணிகளில் ஈடுபட்டுவரும், ஷெரீன் உலகின் பல நாடுகளில் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டிருப்பவர். அமெரிக்கா, இந்தியா, கனடா போன்ற நாடுகளில் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டிருக்கும் ஷெரீன், மேலும் ஆபிரிக்காவின் சியரோ லியோன், மற்றும் எல் ஷல்வடோர் போன்ற லத்தீனமெரிக்க நாடுகளிலும் பணியாற்றியிருக்கின்றார்.
அடிப்படையில் ஷெரீன் சேவியர் ஒரு [Chemistry] இரசாயனவியல் பட்டதாரி ஆவார். தமிழ்நாட்டின் திருச்சியிலுள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இரசாயனவியலில் பட்டம்பெற்ற இவர், பின்னர் கனடிய பல்கலைக்கழமான [Concordia University] கொன்கொரிடா பல்கலைக்கழகத்தில் தனது [M.Sc] முதுமானி கல்வியை பூர்த்தி செய்திருக்கின்றார். அத்துடன் மனித உரிமைகள் மற்றும் மனிதநேய சட்டங்கள் தொடர்பில் பிறிதொரு [LLM] முதுமானிப்பட்டத்தை [Columbia University, New York] கொலம்பிய பல்கலைக்கழகத்திலும் பூர்த்தி செய்திருக்கின்றார்.
ஷெரீன் சேவியர் தனது, கடந்த 25 ஆண்டுகால மனிதநேய பயணத்தின் போது பல்வேறு பதவி நிலைகளை வகித்திருக்கின்றார். குறிப்பாக, [[Head of Delegation - Canadian Red Cross Society - CRCS - New Delhi, India]] கனடிய செஞ்சிலுவை சங்கத்தின் இந்தியாவிற்கான பிரதான இயக்குனர், [CRCS Humanitarian Values Program – Canada] கனடிய மனிதநேய விழுமியங்களுக்கான திட்டத்தின் தேசிய இணைப்பாளர், அமெரிக்காவின் கலிபோர்ணியாவை தளமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட [Fourth World Vision - FWV, California] நான்காவது உலக தரிசனம் திட்டத்தின் பணிப்பாளர் – என பல்வேறு பதவிகளை ஷெரின் வகித்திருக்கின்றார்.
மேலும், ஆசிய பெண்கள் வலையமைப்பின் ஆலோசகராகவும் செயற்பட்டிருக்கும் ஷெரீன், பால்நிலை சமத்துவம், மனித உரிமை மற்றும் சமூகவியல் போன்ற துறைகள் தொடர்பில், சுயாதீன ஆய்வாளராகவும் செயற்பட்டு வருகின்றார்.
இவ்வாறான பன்முக ஆளுமையைக் கொண்டவரான ஷெரீன், 2007ம் ஆண்டிலிருந்து, அவரது தகப்பனாரால் உருவாக்கப்பட்ட நிறுவனமான, ‘மனித உரிமைகள் இல்ல’த்தின் செயற்பாடுகளை பொறுப்பேற்றுக் கொண்டார். தனது அனுபவம், ஆற்றல் மற்றும் அவரது உலகளாவிய தொடர்புகள் அனைத்தும், இலங்கையின் வடக்கு கிழக்கில் பூர்வீகமாக வாழ்ந்துவரும் தமிழ் மக்களைச் சென்றடைய வேண்டுமெனும் ஒரே நோக்குடன் செயலாற்றி வருகின்றார்.
குறிப்பாக யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது அவர் எடுத்துக்கொண்ட ஒரு முயற்சி இங்கு விதந்துரைக்கத்தக்கதாகும். தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவர வேண்டுமென்னும் நோக்கில், அவர் பல்வேறு முயற்சிகளை எடுத்திருந்தார். இது அவர் தமிழ் மக்களின் உரிமைசார் அரசியலில் எத்தகைய ஈடுபாட்டைக் கொண்டிருக்கின்றார் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். அந்த வகையில் தமிழ் மக்களின் நலன் மற்றும் உரிமைசார்ந்து செயற்பட்டுவரும், திருமதி ஷெரின் சேவியருக்கு இவ்வுயர் கௌரவம் கிடைத்திருப்பதானது, ஒட்டுமொத்த இலங்கை வாழ் தமிழ் மக்களுக்குமான பெருமையாகும்.
Guna Tamil- இளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
Re: பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்!
வாழ்த்துக்கள் திருமதி ஷெரின் சேவியர்
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்!
ஈழ தமிழர்களை பெருமிதம் செய்துள்ளார் ஷெரீன் சேவியர். வாழ்த்துகள்
jeju- பண்பாளர்
- பதிவுகள் : 199
இணைந்தது : 24/01/2013
Re: பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்!
வாழ்த்துக்கள்
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்...
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
www.pakeecreation.blogspot.com
Re: பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்!
வாழ்த்துக்கள்.....தமிழர்கள் எங்கிருந்தாலும் சாதிப்பார்கள்.....
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Th_animated_cat_with_rose](http://www.achondroplasia.co.uk/pictures/th_animated_cat_with_rose.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அருணா சாய்ராமுக்கு செவாலியர் விருது!
» இஸ்ரோ முன்னாள் தலைவர் கிரண் குமாருக்கு செவாலியர் விருது: பிரான்ஸ் அரசு கெளரவம்
» இரவு முதல் இன்று காலை வரை 178 ஈழத்தமிழர் பலி
» 'முதல் பரிசுதான் முதல் தொடக்கம்'- பாலஸ்ரீ விருது வென்ற மாணவனின் அசத்தல் பேட்டி!
» தசாவதாரத்திற்கு முதல் விருது
» இஸ்ரோ முன்னாள் தலைவர் கிரண் குமாருக்கு செவாலியர் விருது: பிரான்ஸ் அரசு கெளரவம்
» இரவு முதல் இன்று காலை வரை 178 ஈழத்தமிழர் பலி
» 'முதல் பரிசுதான் முதல் தொடக்கம்'- பாலஸ்ரீ விருது வென்ற மாணவனின் அசத்தல் பேட்டி!
» தசாவதாரத்திற்கு முதல் விருது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|