Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இப்போதைக்கு இது முடிவதாக இல்லை என உணர்த்தியிருக்கிறார் ராமதாஸ்
2 posters
Page 1 of 1
இப்போதைக்கு இது முடிவதாக இல்லை என உணர்த்தியிருக்கிறார் ராமதாஸ்
அனைத்து சமூதாய பாதுகாப்பு பேரவை எனும் அமைப்பை 'அனைத்து சமுதாய பேரியக்கம்' என மாற்றி அடுத்த ஆட்டத்தை துவங்கி விட்டார் ராமதாஸ்.
சென்னை, மதுரை, கோவை, திருச்சி என மண்டல அளவில் நடத்த திட்டமிடப்பட்ட இந்த அமைப்பின் கூட்டம், தற்போது மண்டல அளவை தாண்டி மாவட்ட அளவில் நடக்க, தமிழகம் முழுவதும் சாதித் தீ பரவத் துவங்கியுள்ளது.
கரூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் என அடுத்தடுத்து மேற்கு மண்டல மாவட்டங்களில் கூட்டங்களை நடத்தி முடித்துள்ளார் ராமதாஸ். திருப்பூரில் நடந்த கூட்டத்தில் கொ.மு.க. மாநில தலைவர் பெஸ்ட் ராமசாமியும் பங்கேற்றார். நாமக்கல், ஈரோடு, திருப்பூர் என கூட்டம் நடந்த இடங்களில் எல்லாம் ராமதாஸ் வருகையை கண்டித்து போராட்டங்கள் வெடித்தன. போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம், தலித் விடுதலை கட்சி, ஆதித்தமிழர் பேரவை என பல்வேறு அமைப்பினைச் சேர்ந்த 100 கணக்கானோர் கைதாகினர்.
திருப்பூரில் நடந்த கூட்டத்தில் பிள்ளைமார் கூட்டமைப்பு சார்பில் பேசிய முருகேசன், ''நான் பிள்ளைமார் சமுதாயத்தைச் சேர்ந்தவன். எனது ஊர் மதுரை அருகே உள்ள உத்தப்புரம் கிராமம். உத்தப்புரத்தில் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்களை அனுமதிப்பதில்லை என்பதை கூறி, போராட்டம் நடத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அவர்களை தூண்டிவிட்டது. அவர்களின் திட்டம் எல்லாம் எங்கள் சமூக பெண்களை கலப்பு திருமணம் செய்ய வேண்டும் என்பது தான். ஊரை விட்டு காலி செய்து 8 நாட்கள் மலையில் தங்கியிருந்தோம். எங்களுக்கு தேவர் சமூகத்தினர் பாதுகாப்பாக இருந்தனர். இன்று வரை அங்கு கலப்பு திருமணம் நடக்கவில்லை. நாங்கள் ஒற்றுமையாக இருந்து அதனை தடுத்தோம். உத்தப்புரம் போல தமிழகம் முழுவதும் நாம் ஒற்றுமையுடன் இருந்து கலப்பு திருமணத்தை தடுக்க வேண்டும்,'' என பேசி அதிர்ச்சி கொடுத்தார்.
கொங்கு இளைஞர் பேரவை நிர்வாகி பொன்.சுப்பிரமணியன், ''தாழ்த்தப்பட்டவர்களுக்காக பேசுபவர்கள் எல்லாம், நாங்கள் தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண்களை திருமணம் செய்துள்ளோம் என்கின்றனர். தலித்தாக இருந்தாலும் உயர்ந்த இடத்தில் இருப்பவர்களுடன் தான் அவர்கள் திருமணம் செய்கின்றனர். சேரியில் இருக்கும் பெண்ணை கட்ட அவர்கள் தயாரா அல்லது பெண் கொடுக்கத்தான் அவர்கள் தயாரா?. நமது சமுதாயம் அழிந்து போய் விடும் ஆபத்து உள்ளது.
திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் கொங்கு இளைஞர் பேரவையில் 100க்கணக்கான இளைஞர்கள் பரவி இருக்கிறோம். இரு மாவட்டங்களில் எந்த பி.சி.ஆர். வழக்கிலும் தண்டனை பெறப்படவில்லை என்ற நிலையை கொங்குக்கு ஏற்படுத்தி வைத்துள்ளோம். எங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்,'' என்றார் ஆவேசமாக.
கூட்டத்தில் பேசிய அகில இந்திய பார்வார்டு பிளாக் திருப்பூர் மாவட்ட செயலாளர் கர்ணன் ''தமிழ்நாட்டில் சமீபகாலமாக சில சாதிகள் வெறி பிடித்து ஆடுகிறது. அவர்களுக்கு பி.சி.ஆர். சட்டம் துணையாக இருக்கிறது. இதில் கட்டாயம் திருத்தம் செய்ய வேண்டும் அல்லது நீக்க வேண்டும். தர்மபுரியில் உண்மையில் நடந்தது என்ன?. அவர்கள் வீட்டுக்கு அவர்களே தீ வைத்துக் கொண்டார்கள். வீடு மட்டும் தானே எரிந்தது வேறு என்ன நடந்தது?. தேவர் ஜெயந்தி விழாவில் 10 பேர்களை பெட்ரோல் குண்டு வீசி எரித்து கொன்று விட்டார்கள். இதையெல்லாம் அடக்க வேண்டும் என்றால் அனைத்து சமூகத்தினர் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்,'' என குண்டு போட்டார்.
பார்வார்டு பிளாக் பொதுச் செயலாளர் தேவன், ''உத்தப்புரத்தில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு நடமாடவே கூடாது எனும் அளவில் தலித்துகள் நம்மை கொடுமைப்படுத்தியுள்ளனர். பி.சி.ஆர். சட்டத்தை வைத்துக் கொண்டு, நம் பெண்களை கேலி செய்கிறார்கள். 19 சதவீதம் இருக்கிறவன் சொல்வதை கேட்டு எங்களை அரசு மிரட்டுவதை அனுமதிக்கலாமா?,'' என்றார்.
கூட்டத்தில் பேசிய தேவர் இன ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் அரசகுமார், ''தேவர் நாட்டில் கூலி வாங்கியவன் வெட்டும் கொடுமைகளை இளைஞர்கள் சந்தித்து வருகின்றனர். அக்டோபர் 30ம் தேதி தேவர் ஜெயந்தியின் போது, கோழைக்கூட்டம் ஒளிந்து நின்று கொன்றதற்கு, இறைவன் கொடுத்த பரிசு தான், தர்மபுரியில் கலவரத்தை ஏற்படுத்தி, ராமதாசை மதுரைக்கு கொண்டு வந்து நிறுத்தியது.
தமிழகத்தில் ஒரு அற்புதம் நடக்கிறது. கடந்த மாதம் 2 ஆம் தேதி சென்னையில் துவங்கி அனைத்து சமுதாய கூட்டம் நடத்தப்பட்டு வருவதற்கு பின்னர், வன்கொடுமை வழக்குகள் குறைந்து கொண்டிருக்கிறது. வன்கொடுமை வழக்கை பதிவு செய்ய காவல்துறை அஞ்சுகிறது. படிக்கும், வேலைக்கு செல்லும் பெண்கள் பாதுகாப்பாக போகின்றனர். எங்கு பிரச்னை நடந்தாலும், அடித்து உதைத்து விடுவார்கள், கொன்று குவித்து விடுவார்கள் என்ற அச்சம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு உருவாகியுள்ளது. அவர்கள் ஓடி ஒளிந்து கொண்டனர். அந்த துணிச்சலை உருவாக்கியவர் ராமதாஸ். பொதுவுடமை கட்சியை வளர்க்க விடாதீர்கள். அவர்களுக்கு நன்கொடை கொடுக்காதீர்கள். நம் காசை வாங்கி, நம்மை பற்றியே மைக் போட்டு பேசுகிறான். உத்தப்பபுரத்துக்கும், பிருந்தா காரத்துக்கும் என்ன சம்பந்தம்?. தர்மபுரிக்கும், மாயாவதிக்கும் என்ன சம்பந்தம்?. ஆர்ப்பாட்டம் வெற்றி பெறத்தான் அமைதியாக இருக்கிறோம்,'' என பேசி அமர்ந்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய கொ.மு.க. மாநிலத் தலைவர் பெஸ்ட் ராமசாமி, ''2009ம் ஆண்டு கருமத்தம்பட்டியில் நடந்த மாநாட்டில் பி.சி.ஆர். சட்டத்தை திருத்த தீர்மானம் நிறைவேற்றினோம். இதுவரை நாம் தனித்தனியாக செய்து கொண்டிருந்தோம். இன்று தான் அனைத்து சமுதாயம் ஒன்றிணைந்து செய்கிறோம்.
தாழ்த்தப்பட்டவர்களிடம் நாம் எங்காவது தகராறுக்கு சென்றிருக்கிறோமா? அவர்கள் தான் தகராறு செய்கிறார்கள். வேண்டுமென்றே அவர்கள் தான் சாதி கலவரத்தை ஏற்படுத்துகிறார்கள். காவல்துறை நடவடிக்கை எடுக்க தவறினால், காவல்துறை வேலையை நாங்கள் செய்வோம்,'' என்றார்.
இறுதியாக பேசிய பாமக தலைவர் ராமதாஸ், ''வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் காதல் திருமணங்களால் நடந்த கொடுமைகளுக்கு எலல்லாம் முற்றுப்புள்ளி வைக்க இங்கே கூடியிருக்கிறோம். போலீஸ் கைகள் கட்டப்பட்டுள்ளது. இந்த பிரச்னையில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு வாய்ப்பில்லத போது நமக்கு நாம் தான் பாதுகாப்பை தேடிக் கொள்ள வேண்டும். ஒரு கட்சியை வளர்க்க வேண்டும் என்பதற்காக ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடுவேன் என்ற தோற்றத்தில் சிலர் சாதி பிரச்னைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வேலை வந்து விட்டது. 81 சதவீத மக்களை பாதிக்கிற, பகைத்துக் கொள்கிற செயலை அவர்கள் செய்யக்கூடாது. இது மானப்பிரச்னை. நம் பெண்களை நாம் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில், 32 மாவட்டங்களிலும் அனைத்து சமுதாய பேரியக்கம் துவங்கப்பட வேண்டும். மாவட்டம் தோறும் அலுவலகம் துவங்க வேண்டும். அனைத்து சமுதாயமும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். நான் என்றும் விடாமல் கொண்டு செல்வேன். இன்னும் 19 மாவட்டங்களில் கூட்டம் நடக்க உள்ளத. பி.சி.ஆர் சட்டத்தை திருத்த டெல்லி வரை சென்று போராடுவோம்,'' என் பேசி முடித்தார்.
இப்போதைக்கு இது முடிவதாக இல்லை என உணர்த்தியிருக்கிறார் ராமதாஸ். இன்னும் என்னவெல்லாம் நடக்க இருக்கிறதோ?.
- ஜெ.ரவி
விகடன்
சென்னை, மதுரை, கோவை, திருச்சி என மண்டல அளவில் நடத்த திட்டமிடப்பட்ட இந்த அமைப்பின் கூட்டம், தற்போது மண்டல அளவை தாண்டி மாவட்ட அளவில் நடக்க, தமிழகம் முழுவதும் சாதித் தீ பரவத் துவங்கியுள்ளது.
கரூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் என அடுத்தடுத்து மேற்கு மண்டல மாவட்டங்களில் கூட்டங்களை நடத்தி முடித்துள்ளார் ராமதாஸ். திருப்பூரில் நடந்த கூட்டத்தில் கொ.மு.க. மாநில தலைவர் பெஸ்ட் ராமசாமியும் பங்கேற்றார். நாமக்கல், ஈரோடு, திருப்பூர் என கூட்டம் நடந்த இடங்களில் எல்லாம் ராமதாஸ் வருகையை கண்டித்து போராட்டங்கள் வெடித்தன. போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம், தலித் விடுதலை கட்சி, ஆதித்தமிழர் பேரவை என பல்வேறு அமைப்பினைச் சேர்ந்த 100 கணக்கானோர் கைதாகினர்.
திருப்பூரில் நடந்த கூட்டத்தில் பிள்ளைமார் கூட்டமைப்பு சார்பில் பேசிய முருகேசன், ''நான் பிள்ளைமார் சமுதாயத்தைச் சேர்ந்தவன். எனது ஊர் மதுரை அருகே உள்ள உத்தப்புரம் கிராமம். உத்தப்புரத்தில் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்களை அனுமதிப்பதில்லை என்பதை கூறி, போராட்டம் நடத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அவர்களை தூண்டிவிட்டது. அவர்களின் திட்டம் எல்லாம் எங்கள் சமூக பெண்களை கலப்பு திருமணம் செய்ய வேண்டும் என்பது தான். ஊரை விட்டு காலி செய்து 8 நாட்கள் மலையில் தங்கியிருந்தோம். எங்களுக்கு தேவர் சமூகத்தினர் பாதுகாப்பாக இருந்தனர். இன்று வரை அங்கு கலப்பு திருமணம் நடக்கவில்லை. நாங்கள் ஒற்றுமையாக இருந்து அதனை தடுத்தோம். உத்தப்புரம் போல தமிழகம் முழுவதும் நாம் ஒற்றுமையுடன் இருந்து கலப்பு திருமணத்தை தடுக்க வேண்டும்,'' என பேசி அதிர்ச்சி கொடுத்தார்.
கொங்கு இளைஞர் பேரவை நிர்வாகி பொன்.சுப்பிரமணியன், ''தாழ்த்தப்பட்டவர்களுக்காக பேசுபவர்கள் எல்லாம், நாங்கள் தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண்களை திருமணம் செய்துள்ளோம் என்கின்றனர். தலித்தாக இருந்தாலும் உயர்ந்த இடத்தில் இருப்பவர்களுடன் தான் அவர்கள் திருமணம் செய்கின்றனர். சேரியில் இருக்கும் பெண்ணை கட்ட அவர்கள் தயாரா அல்லது பெண் கொடுக்கத்தான் அவர்கள் தயாரா?. நமது சமுதாயம் அழிந்து போய் விடும் ஆபத்து உள்ளது.
திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் கொங்கு இளைஞர் பேரவையில் 100க்கணக்கான இளைஞர்கள் பரவி இருக்கிறோம். இரு மாவட்டங்களில் எந்த பி.சி.ஆர். வழக்கிலும் தண்டனை பெறப்படவில்லை என்ற நிலையை கொங்குக்கு ஏற்படுத்தி வைத்துள்ளோம். எங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்,'' என்றார் ஆவேசமாக.
கூட்டத்தில் பேசிய அகில இந்திய பார்வார்டு பிளாக் திருப்பூர் மாவட்ட செயலாளர் கர்ணன் ''தமிழ்நாட்டில் சமீபகாலமாக சில சாதிகள் வெறி பிடித்து ஆடுகிறது. அவர்களுக்கு பி.சி.ஆர். சட்டம் துணையாக இருக்கிறது. இதில் கட்டாயம் திருத்தம் செய்ய வேண்டும் அல்லது நீக்க வேண்டும். தர்மபுரியில் உண்மையில் நடந்தது என்ன?. அவர்கள் வீட்டுக்கு அவர்களே தீ வைத்துக் கொண்டார்கள். வீடு மட்டும் தானே எரிந்தது வேறு என்ன நடந்தது?. தேவர் ஜெயந்தி விழாவில் 10 பேர்களை பெட்ரோல் குண்டு வீசி எரித்து கொன்று விட்டார்கள். இதையெல்லாம் அடக்க வேண்டும் என்றால் அனைத்து சமூகத்தினர் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்,'' என குண்டு போட்டார்.
பார்வார்டு பிளாக் பொதுச் செயலாளர் தேவன், ''உத்தப்புரத்தில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு நடமாடவே கூடாது எனும் அளவில் தலித்துகள் நம்மை கொடுமைப்படுத்தியுள்ளனர். பி.சி.ஆர். சட்டத்தை வைத்துக் கொண்டு, நம் பெண்களை கேலி செய்கிறார்கள். 19 சதவீதம் இருக்கிறவன் சொல்வதை கேட்டு எங்களை அரசு மிரட்டுவதை அனுமதிக்கலாமா?,'' என்றார்.
கூட்டத்தில் பேசிய தேவர் இன ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் அரசகுமார், ''தேவர் நாட்டில் கூலி வாங்கியவன் வெட்டும் கொடுமைகளை இளைஞர்கள் சந்தித்து வருகின்றனர். அக்டோபர் 30ம் தேதி தேவர் ஜெயந்தியின் போது, கோழைக்கூட்டம் ஒளிந்து நின்று கொன்றதற்கு, இறைவன் கொடுத்த பரிசு தான், தர்மபுரியில் கலவரத்தை ஏற்படுத்தி, ராமதாசை மதுரைக்கு கொண்டு வந்து நிறுத்தியது.
தமிழகத்தில் ஒரு அற்புதம் நடக்கிறது. கடந்த மாதம் 2 ஆம் தேதி சென்னையில் துவங்கி அனைத்து சமுதாய கூட்டம் நடத்தப்பட்டு வருவதற்கு பின்னர், வன்கொடுமை வழக்குகள் குறைந்து கொண்டிருக்கிறது. வன்கொடுமை வழக்கை பதிவு செய்ய காவல்துறை அஞ்சுகிறது. படிக்கும், வேலைக்கு செல்லும் பெண்கள் பாதுகாப்பாக போகின்றனர். எங்கு பிரச்னை நடந்தாலும், அடித்து உதைத்து விடுவார்கள், கொன்று குவித்து விடுவார்கள் என்ற அச்சம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு உருவாகியுள்ளது. அவர்கள் ஓடி ஒளிந்து கொண்டனர். அந்த துணிச்சலை உருவாக்கியவர் ராமதாஸ். பொதுவுடமை கட்சியை வளர்க்க விடாதீர்கள். அவர்களுக்கு நன்கொடை கொடுக்காதீர்கள். நம் காசை வாங்கி, நம்மை பற்றியே மைக் போட்டு பேசுகிறான். உத்தப்பபுரத்துக்கும், பிருந்தா காரத்துக்கும் என்ன சம்பந்தம்?. தர்மபுரிக்கும், மாயாவதிக்கும் என்ன சம்பந்தம்?. ஆர்ப்பாட்டம் வெற்றி பெறத்தான் அமைதியாக இருக்கிறோம்,'' என பேசி அமர்ந்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய கொ.மு.க. மாநிலத் தலைவர் பெஸ்ட் ராமசாமி, ''2009ம் ஆண்டு கருமத்தம்பட்டியில் நடந்த மாநாட்டில் பி.சி.ஆர். சட்டத்தை திருத்த தீர்மானம் நிறைவேற்றினோம். இதுவரை நாம் தனித்தனியாக செய்து கொண்டிருந்தோம். இன்று தான் அனைத்து சமுதாயம் ஒன்றிணைந்து செய்கிறோம்.
தாழ்த்தப்பட்டவர்களிடம் நாம் எங்காவது தகராறுக்கு சென்றிருக்கிறோமா? அவர்கள் தான் தகராறு செய்கிறார்கள். வேண்டுமென்றே அவர்கள் தான் சாதி கலவரத்தை ஏற்படுத்துகிறார்கள். காவல்துறை நடவடிக்கை எடுக்க தவறினால், காவல்துறை வேலையை நாங்கள் செய்வோம்,'' என்றார்.
இறுதியாக பேசிய பாமக தலைவர் ராமதாஸ், ''வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் காதல் திருமணங்களால் நடந்த கொடுமைகளுக்கு எலல்லாம் முற்றுப்புள்ளி வைக்க இங்கே கூடியிருக்கிறோம். போலீஸ் கைகள் கட்டப்பட்டுள்ளது. இந்த பிரச்னையில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு வாய்ப்பில்லத போது நமக்கு நாம் தான் பாதுகாப்பை தேடிக் கொள்ள வேண்டும். ஒரு கட்சியை வளர்க்க வேண்டும் என்பதற்காக ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடுவேன் என்ற தோற்றத்தில் சிலர் சாதி பிரச்னைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வேலை வந்து விட்டது. 81 சதவீத மக்களை பாதிக்கிற, பகைத்துக் கொள்கிற செயலை அவர்கள் செய்யக்கூடாது. இது மானப்பிரச்னை. நம் பெண்களை நாம் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில், 32 மாவட்டங்களிலும் அனைத்து சமுதாய பேரியக்கம் துவங்கப்பட வேண்டும். மாவட்டம் தோறும் அலுவலகம் துவங்க வேண்டும். அனைத்து சமுதாயமும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். நான் என்றும் விடாமல் கொண்டு செல்வேன். இன்னும் 19 மாவட்டங்களில் கூட்டம் நடக்க உள்ளத. பி.சி.ஆர் சட்டத்தை திருத்த டெல்லி வரை சென்று போராடுவோம்,'' என் பேசி முடித்தார்.
இப்போதைக்கு இது முடிவதாக இல்லை என உணர்த்தியிருக்கிறார் ராமதாஸ். இன்னும் என்னவெல்லாம் நடக்க இருக்கிறதோ?.
- ஜெ.ரவி
விகடன்
Last edited by கரூர் கவியன்பன் on Thu Jan 24, 2013 12:12 pm; edited 1 time in total (Reason for editing : edit)
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: இப்போதைக்கு இது முடிவதாக இல்லை என உணர்த்தியிருக்கிறார் ராமதாஸ்
விஷயம் ரொம்ப தீவிரமாக சென்று கொண்டிருக்கிறது போல தெரிகிறது.
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இப்போதைக்கு அரசியல் இல்லை : விஜய்
» அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; எதிரியும் இல்லை : ராமதாஸ்
» அதிகாரம் இல்லை என்ற ஜெயலலிதாவின் பேச்சு வேதனை தருகிறது- டாக்டர் ராமதாஸ்
» நயன்தாராவிற்கு இப்போதைக்கு 'நோ கல்யாணம்'!
» இப்போதைக்கு அரசியலுக்கு வரமாட்டேன்: உதயநிதி ஸ்டாலின்
» அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; எதிரியும் இல்லை : ராமதாஸ்
» அதிகாரம் இல்லை என்ற ஜெயலலிதாவின் பேச்சு வேதனை தருகிறது- டாக்டர் ராமதாஸ்
» நயன்தாராவிற்கு இப்போதைக்கு 'நோ கல்யாணம்'!
» இப்போதைக்கு அரசியலுக்கு வரமாட்டேன்: உதயநிதி ஸ்டாலின்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|