ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்று ராஜீவ், இன்று ராகுல்!

2 posters

Go down

ஈகரை அன்று ராஜீவ், இன்று ராகுல்!

Post by Powenraj Mon Jan 21, 2013 11:00 am

துணைத் தலைவர்களை நியமிப்பது காங்கிரஸ் கட்சியில் புதிதல்ல. ஆனால், ராகுல் காந்தி துணைத் தலைவராக்கப்பட்டிருப்பது சற்று வித்தியாசமானது. அடுத்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கான முன்னோட்டம்தான் இது என்று கொள்ளலாம்.
-
ஜெய்ப்பூரில் நடந்த அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் சுய விமர்சன விவாதத்தின் முடிவில், காங்கிரஸ் கட்சியை எதிர்நோக்கியுள்ள இரண்டு பெரிய சவால்களைக் கட்சித் தலைமை திடீரென்று உணர்ந்து,அவற்றை எதிர்கொள்வதற்கான முயற்சிகளில் இறங்கி இருக்கிறது. அந்த இரண்டு சவால்கள் என்னவெல்லாம் தெரியுமா?
-
இளைஞர்கள் மத்தியில், ஆட்சி அதிகாரத்தில் தங்களுக்குப் பங்கில்லை என்பதும், அரசும் நிர்வாகமும் மக்கள் பிரச்னைகளைப் பற்றிய கவலையே இல்லாமல் இருக்கிறது என்கிற கோபம் எழுந்திருப்பதும் முதலாவதுசவால். இதற்கு, காங்கிரஸ் தலைமை கண்டுபிடித்திருக்கும் மருந்து, 43 வயது இளைஞர் ராகுல் காந்தியைத் துணைத் தலைவராக்கி முன்னிலைப்படுத்துவதுடன், கட்சியிலும் ஆட்சியிலும் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது.
-
இரண்டாவது சவால், நகர்ப்புற, நடுத்தர வர்க்கத்தினருக்குக் காங்கிரஸ் கட்சியின் மீதும், ஆளும் அரசியல் வர்க்கத்தின் மீதும் ஏற்பட்டிருக்கும் கோபமும் வெறுப்பும். அதை உணர்ந்திருப்பதாகச் சொல்வதன் மூலம், மத்தியதர வகுப்பினரின் உணர்வுகளைப் பிரதிபலித்து அதனால் அவர்களது ஆதரவைப் பெற்று விடலாம் என்பதுதான் இரண்டாவது சவாலுக்குக் காங்கிரஸ் தலைமை கண்டுபிடித்திருக்கும் தீர்வு.
-
1984-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19-ஆம் தேதி, மும்பையில் நடந்த அகில இந்தியக் காங்கிரஸ் மாநாட்டில், இந்திரா காந்தியின் மறைவுக்குப் பின் காங்கிரஸ் தலைவராகப் பதவி ஏற்ற, ராகுல் காந்தியைவிட மூன்று வயது இளையவராகவே இருந்த அவரது தந்தை ராஜீவ் காந்தியும், இதே வசனங்களைத்தான் பேசினார். தலைமுறை மாறி இருக்கிறது. வசனம் மாறவில்லை. நிலைமையும் மாறவில்லை.
-
இளைஞர்களை அரசியலுக்கு அழைத்து வர வேண்டும் என்கிறகோஷம் சரி. ஆனால், அந்த இளைஞர்கள் அனைவரும் வம்சாவளி வாரிசுகளாக இருந்தால் எப்படி? கட்சியில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பது சரி. ஆனால், அடிப்படைத் தேர்தல் நடத்தப்படாமல், கட்சியின் கிளைகள் அனைத்துமே நியமன முறையில் செயல்படும்போது கட்சிக்கு உயிர்ப்பும், சுறுசுறுப்பும் ஏற்படுத்துவது எப்படி?
-
120 வயதான ஒரு கட்சி, மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் தங்களுக்கென்று செல்வாக்குள்ள, மக்கள் மனதில் தங்களது சேவையாலும் தியாகத்தாலும் இடம்பிடித்தஒரு தலைவரைக்கூட வளர விடாமல் இருக்கும்போது, அந்தக் கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சப்பட வேண்டும் என்றால் அது எப்படி சாத்தியம்?
-
கடந்த 2009 தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதற்கு, இந்தியாவின் நகர்ப்புறவாசிகளின் ஆதரவு அந்தக் கட்சிக்கு அதிகரித்ததுதான் காரணம். இந்தியாவில் சுமார் 200 நகர்ப்புறத் தொகுதிகளில் சரிபாதிக்கும் மேல் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். அந்த நகர்ப்புற மத்தியதர வகுப்பினருக்குக் காங்கிரஸ் செய்த கைமாறு, விலைவாசி உயர்வும், நிர்வாகக் குளறுபடியும், அவர்களை மயக்கமடையச் செய்த ஊழல்கள் மற்றும் முறைகேடுகளும்தான். பணக்காரர்கள்மீது வரி விதிப்பதற்கும், அரசின் நிர்வாகச் செலவினங்களைக் குறைப்பதற்கும் பதிலாக, அத்தியாவசியப் பொருள்களின்விலைகளை உயர்த்தியதுதான் மன்மோகன் சிங் அரசின் சாதனையாக இருந்திருக்கிறது.
-
2004 ஜூன் மாதம் ரூ. 36 ஆக இருந்த பெட்ரோல் விலை இப்போது ரூ. 67.50. டீசல் விலை ரூ. 22.74-இல் இருந்து ரூ. 47.65; எரிவாயு உருளையின் விலை ரூ. 242-இல் இருந்து ரூ. 410. ரூ. 4,960 ஆகஇருந்த ஒரு சவரன் தங்கத்தின் விலை இப்போது சுமார் ரூ. 23,000. நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரை பாதிக்கும் இவை பற்றி எல்லாம் கவலைப்படாமல், சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடுக்காகக் கவலைப்படும் அரசும் கட்சியும் எப்படி அவர்களது ஆதரவைப் பெற முடியும் என்பது ராகுல் காந்திக்குத்தான் வெளிச்சம்.
-
காங்கிரஸ் கட்சி என்பது அடிமட்டத் தொண்டர்களே இல்லாத, முறையான கட்சி அமைப்பே இல்லாத இயக்கமாக மாறிவிட்டிருக்கிறது. அதற்குத் தேவை அமைப்புரீதியான அடிப்படை மாற்றமே தவிர, தலைமை மாற்றமோ, இளைய தலைவர்களின் அதிகரித்த ஈடுபாடோ அல்ல.
-
இந்தியாவைப் பொறுத்தவரை, தேசத்தின் ஒற்றுமைக்குக் காங்கிரஸ் கட்சி பலவீனப்படுவது நல்லதல்ல. ஆபத்தும்கூட. இந்த நிலையிலும், இந்தியாவில் உள்ள குக்கிராமம்வரை பரவலாக அறியப்படும், மதிக்கப்படும் கட்சி காங்கிரஸ் மட்டுமே. காங்கிரஸ் இல்லையென்றால் தேசம் ஒரே நாடாக இருக்குமா என்பது சந்தேகம்தான்.
-
அதேநேரத்தில், வம்சாவளி முறை அரசியலும், உள்கட்சித்தேர்தல் இல்லாத நியமன முறையும் காங்கிரஸில் தொடர்வதும், ஆட்சி அதிகாரத்தில் அது பிரதிபலிப்பதும் இந்திய ஜனநாயகத்தின் மீது மக்கள் அவநம்பிக்கை அடைய முக்கியமான காரணங்கள். 120 வருடக் கட்சியின் பலவீனங்களும் குறைபாடுகளும், இந்தியாவின் ஏனைய தேசியக் கட்சிகளையும், மாநிலக் கட்சிகளையும் பாதித்திருக்கிறது. காங்கிரஸில் இந்த நிலைமை தொடருமானால், மக்களாட்சி முறைக்கே அது ஆபத்தாக அமையும்.
-
நேரு குடும்ப வாரிசு கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்பது என்பது அந்தக் குடும்பத்தின் அடிவருடிகளுக்கும், அடுத்த தேர்தலைச் சந்திக்க வேறு தலைமை இல்லாத நிலையில் கட்சித் தலைவர்களுக்கும் வேண்டுமானால் மகிழ்ச்சி அளிக்கலாம். அதனால் பயனிருக்குமா என்றால் சந்தேகம்தான்.
காங்கிரஸ் கட்சியின் இன்றைய தேவை டானிக் அல்ல, அறுவைச் சிகிச்சை. தலைமை மாற்றமல்ல, நிலைமை மாற்றம்!
-
தினமணி
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

ஈகரை Re: அன்று ராஜீவ், இன்று ராகுல்!

Post by ராஜா Mon Jan 21, 2013 11:12 am

நேரு குடும்ப வாரிசு கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்பது என்பது அந்தக் குடும்பத்தின் அடிவருடிகளுக்கும், அடுத்த தேர்தலைச் சந்திக்க வேறு தலைமை இல்லாத நிலையில் கட்சித் தலைவர்களுக்கும் வேண்டுமானால் மகிழ்ச்சி அளிக்கலாம். அதனால் பயனிருக்குமா என்றால் சந்தேகம்தான்.
சூப்பருங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Back to top

- Similar topics
»  ராஜீவ் கொலையாளிகளை விடுதலை: தமிழக அரசுக்கு ராகுல் கண்டனம்
» ராஜீவ் காந்தியின் 28வது நினைவு தினம் - சோனியா, ராகுல் அஞ்சலி
» என் தேசம் ! என் சுவாசம் ! கவிஞர் இரா .இரவி ! உலக நாடுகளின் சுரண்டல் பூமியானது உணவிலிருந்து உடை வரை அந்நியமானது இங்கிலாந்துக்காரன் மட்டும் ஆண்டான் அன்று எல்லா நாட்டுக்காரனும் ஆள்கின்றனர் இன்று வியாபாரம் என்று வந்து ஆண்டான் அன்று வியாபாரம்என்று வந்த
» போர்க்கப்பலில் ராஜீவ் காந்தி பயணம்: மோடி குற்றச்சாட்டுக்கு ராகுல் காந்தி பதில்
» அன்று மிஸ்டர் தமிழ்நாடு! இன்று?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum