ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்: மாட்டுப்பொங்கல் ஸ்பெஷல்

5 posters

Go down

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்: மாட்டுப்பொங்கல் ஸ்பெஷல் Empty உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்: மாட்டுப்பொங்கல் ஸ்பெஷல்

Post by Powenraj Tue Jan 15, 2013 11:06 am

மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம் ஏன்? விலங்கு இனங்களில் மனித வாழ்வோடு நெருங்கிய தொடர்பு கொண்டது பசு. காலையில் எழுந்ததும் பால் வாங்குவது நமது அன்றாடப் பணி. வேறெந்த மிருகத்திற்கும் இல்லாத தனித்தன்மை பசுவுக்குண்டு.தாய்மையை வெளிப்படுத்தும்விதமாக பசு மட்டுமே "மா' எனகத்தும். "மா' என்பது அம்மாவின் சுருக்கமே. மனிதராகப் பிறந்த அனைவருக்கும் தாய் ஒருத்தி இருப்பாள். அவள் கூட சிறுவயதில் மட்டுமே பால் கொடுத்து அன்பு காட்டுகிறாள். ஆனால், மனிதனின் வாழ்நாளெல்லாம் பசு பால் கொடுத்து உதவுகிறது. வாழும் காலத்தில் மட்டுமல்ல! மனிதன் இறந்த பின்னும், இரண்டாம் நாள் சடங்கில் பாலூற்றி வழிபடுவர். நம் தாயாக விளங்கும் பசுவை"கோமாதா' என வணங்குகிறோம். இதே போல, காளை வயலை உழுது, நாம் சாப்பிடுவதற்கு வித்திடுகிறது. உழைப்பின் சின்னமான அதை, சிவன் தனது வாகனமாகக் கொண்டுள்ளார். தன் மனைவி பார்வதியுடன் காளையில் அமர்ந்தே அடியார்களுக்கு?"ரிஷபாரூடராக' காட்சி தருகிறார். பசுவுக்கும், காளைக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாக மாட்டுப் பொங்கலைக் கொண்டாடுகிறோம். உழவுக்கும் தொழிலுக்கும் மரியாதை செய்யும் விதமாக பசுக்களை நீராட்டி கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி அழகுபடுத்தி, தெய்வமாக வழிபாடு செய்கிறோம்.
:-
பார்த்தாலே புண்ணியம் :
எந்த வேலையாக வெளியில் கிளம்பும் போதும், பசுவைக்காண்பது சுப சகுனம். அதுவும் கன்றோடு சேர்ந்த பசுவைப் பார்ப்பது மிகவும் சிறப்பு. பசுவின் உடலில் சகல தெய்வங்களும் குடிகொண்டிருப்பதாக ஐதீகம். தெய்வங்களின் வரிசையைக் கேளுங்கள்.
:-
முகத்தின் மத்தி- சிவன்வலக்கண்- சூரியன்
இடக்கண்- சந்திரன்
வலது மூக்கு- முருகன்
இடதுமூக்கு- விநாயகர்
தலை உச்சி- பிரம்மா
முன்கால் மேல்புறம்- சரஸ்வதி, விஷ்ணு
முன் வலக்கால்- பைரவர்
முன் இடக்கால்- ஆஞ்சநேயர்
பின்னங்கால்கள்- முனிவர்கள்
பிருஷ்டபாகம் (@மல் பின்புறம்)- கங்கை
பிருஷ்டபாகம் கீழ் - லட்சுமி
முதுகு- லட்சுமி குபேரர்
வயிறு- பூமாதேவி
வால்- நாகராஜர்
குளம்படி- புனித மலைகள்
பால்மடி- அமுதக்கடல்.
:-
நடமாடும் கோயிலாகத் திகழும் பசுவை மூன்று முறைவலம் வந்து சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினால், புனித தீர்த்தத்தில் நீராடிய புண்ணியம் கிடைக்கும்.
:-
சொல்லிக்கிட்ட சுற்றுங்க!:
பசுவின் உடம்பில் முப்பத்து முக்கோடி தேவர்களும், சகல தேவதைகளும் குடியிருப்பதாக ஐதீகம். தெய்வம் அனைத்தையும் ஒருநேரத்தில் வணங்கிய புண்ணியம் பசு வழிபாட்டால் உண்டாகும். வழிபாட்டின் போது புல், அகத்திக்கீரை, வாழைப்பழம் பசுவுக்குக் கொடுப்பது நல்லது. பசு உண்ணும் போது மூன்று முறை வலம் வந்து, ஸ்லோகம் அல்லது அதன் பொருள் சொல்லி வழிபட வேண்டும். இதனால் முன் ஜென்ம பாவம், கிரகதோஷம் நீங்கி வாழ்வில் நன்மை பெருகும்.
:-
ஸெளரபேய்ய: ஸர்வஹிதா:
பவித்ரா: புணய ராஸய:!
ப்ரதிக்ருண்ணம் த்விமம் க்ராஸம்
காவஸ்த்ரை லோக்ய மாதர:!!
:-
பொருள்: ""காமதேனுவின் வம்சத்தைச் சேர்ந்தவளே! எல்லோருக்கும் நன்மை செய்பவளே! தூய்மை மிக்கவளே!புண்ணியம் மிகுந்தவளே! மூவுலகிற்கும் தாயாக விளங்குபவளே! பசுத்தாயே! இந்த புல்லை ஏற்றுக் கொண்டு அருள்புரிவாயாக'' என்று சொல்லி புல்லை உண்ணக் கொடுக்கவேண்டும். அதன்பின் பசுவை வலமாகச் சுற்றிக்கொண்டே,
""கவாமங்கேஷு திஷ்டந்தி
புவனானி சதுர்தஸ!
யஸ்மாத்தஸ்மாச்சிவம் மே ஸ்யாத்
இஹலோகே பரத்ர ச!!
என்ற ஸ்லோகம் சொல்ல வேண்டும்.
:-
பொருள்: பதினான்கு உலகங்களையும் உடலில் தாங்கியிருக்கும் பசுவே! நீயே இந்த பூலோகத்திலும், மேலுலகத்திலும் என்னைக் காத்து மங்களத்தை அருள்செய்ய வேண்டும்.
:-
ரோமம் தான் கணக்கு:
தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து ஐந்து பசுக்கள் வந்தன. அவை நந்தா,பத்திரை, சுரபி, சுசீலை, சுமனை என்பவை. இவை பொன், கருப்பு, வெள்ளை, புகைநிறம், சிவப்பு நிறம் கொண்டவை. பாற்கடலில் தோன்றிய இவை ஐந்தும், கோலோகத்தில் கிருஷ்ணருடன்வீற்றிருந்து அருள் செய்வதாக ஐதீகம். வைகுண்டத்தின் பக்கத்தில்கோலோகம் இருக்கிறது. பசு தானம் செய்தவர்கள் இப்பிறவி முடிந்த பின், கோலோகத்தில் வாழும் பேறு பெறுவர். தானம் அளித்த பசுவின் உடலில் எத்தனை ரோமம் இருக்கிறதோ, அத்தனை ஆண்டுகள் இங்கு இருக்கும் பாக்கியம் உண்டாகும்.
:-
'இப்படி' திட்டும் முன் யோசிப்பீர்களா?
குணங்களில் சாத்வீகம், ராஜஸம், தாமசம் என மூன்று வகை உண்டு. சாத்வீகம் என்பது அமைதி, கருணை, ஒழுக்கம் மிக்க தன்மையைக் குறிக்கும். கோபம், ஆவேசம்,வேகம் மிக்கது ராஜஸம். சோம்பல்,குழப்பம், மந்த குணத்தை தாமசம் என்பர். உண்ணும் உணவே இந்த மூன்று குணங்களையும் நமக்குத் தருகிறது.பசும்பால் சாத்வீக உணவு. பாலை மட்டும் உணவாக உண்டு வாழ்ந்த சாதுக்கள் பலர் இருந்திருக்கின்றனர். பசுவின் ரத்தமே பாலாக மாறுவதால் அதனை அசைவம் என சிலர் எண்ணுவர். ஆனால், உணவு சாஸ்திரம் பாலை சைவமாகவே குறிப்பிடுகிறது.பசும்பாலில் இருந்து கிடைக்கும் வெண்ணெயை விரும்பி உண்டதால் கிருஷ்ணர்"நவநீதகிருஷ்ணர்' எனப்பட்டார். "நவநீதம்' என்றால் "வெண்ணெய்'. இனிமேல் யாரையும் " போடா வெண்ணெய்' என திட்டும் முன் யோசிப்பீர்கள் தானே!
:-
நீண்ட காலம் வாழலாம்:
"ஆவினுக்கு அருங்கலம் அரன்அஞ்சாடுதல்' என்று அப்பர் தேவாரத்தில் பாடியுள்ளார்."ஆ' என்றால் "பசு';"அஞ்சாடுதல்' என்பதற்கு"பஞ்ச கவ்யத்தால் அபிஷேகம்செய்தல்'. பசுவிடமிருந்து கிடைக்கும் பால், தயிர், நெய், கோமியம் (பசுவின் சிறுநீர்), கோமயம்(சாணம்) ஆகிய ஐந்தும் சேர்ந்த கலவையே பஞ்சகவ்யம். இதனால்சிவனுக்கு அபிஷேகம் செய்வதே பசுக்குலத்திற்குப் பெருமை என்கிறார் அப்பர். பசுவின் கொம்பை"கோசிருங்கம்' என்பர். கொம்புக்குள் இந்த கலவையை ஊற்றி, அபிஷேகம் செய்வது இன்னும் புண்ணியச் செயல். பஞ்சகவ்யம் தவிர, பசும்பால், தயிர், நெய் ஆகியவற்றாலும் அபிஷேகம் செய்வது வழக்கம். சிவனுக்கு பால் அபிஷேகம் செய்பவர் நீண்ட காலம் வாழ்வர் என காரண ஆகமம்கூறுகிறது.
:-
தினமலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்: மாட்டுப்பொங்கல் ஸ்பெஷல் Empty Re: உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்: மாட்டுப்பொங்கல் ஸ்பெஷல்

Post by ராஜா Tue Jan 15, 2013 11:10 am

பகிர்வுக்கு நன்றி powenraj
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்: மாட்டுப்பொங்கல் ஸ்பெஷல் Empty Re: உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்: மாட்டுப்பொங்கல் ஸ்பெஷல்

Post by யினியவன் Tue Jan 15, 2013 12:07 pm

நல்ல பகிர்வு - வந்தனை செய்வோம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்: மாட்டுப்பொங்கல் ஸ்பெஷல் Empty Re: உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்: மாட்டுப்பொங்கல் ஸ்பெஷல்

Post by Ahanya Tue Jan 15, 2013 12:39 pm

மிகவும் நல்ல பகிர்வு அண்ணா...... பாடகன்


உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்: மாட்டுப்பொங்கல் ஸ்பெஷல் Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்: மாட்டுப்பொங்கல் ஸ்பெஷல் Empty Re: உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்: மாட்டுப்பொங்கல் ஸ்பெஷல்

Post by balakarthik Tue Jan 15, 2013 12:41 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்: மாட்டுப்பொங்கல் ஸ்பெஷல் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்: மாட்டுப்பொங்கல் ஸ்பெஷல் Empty Re: உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்: மாட்டுப்பொங்கல் ஸ்பெஷல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum