ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூந்தல் பராமரிப்பு

Go down

கூந்தல் பராமரிப்பு Empty கூந்தல் பராமரிப்பு

Post by தாமு Fri Oct 16, 2009 7:40 am

பொடுகை விரட்ட

பலசரக்குக் கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும்

. உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும்.
அதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும்.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கூந்தல் பராமரிப்பு Empty Re: கூந்தல் பராமரிப்பு

Post by தாமு Fri Oct 16, 2009 7:42 am

கரு கரு கூந்தலுக்கு

கூந்தல் என்பது ஒருவகை இறந்த பொருள். அதனால்தான் முடியை வெட்டும்போது நமக்கு வலி தெரிவதில்லை. கூந்தல் கெராட்டின் என்ற பொருளால் ஆனது. கூந்தல் வளர்ச்சிக்கு தாதுச் சத்துக்கள் மிக முக்கியம். இரும்புச் சத்து, துத்தநாகம், பாஸ்பரஸ், போரான், கால்சியம், தாமிரம் உட்பட நிறைய சத்துக்கள் தேவை. இவற்றில் ஏதேனும் ஒன்று குறைந்தாலும் கூந்தல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

கூந்தலுக்கும் அதன் மேல் பூச்சில் நாம் உபயோகிக்கும் பொருட்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. கூந்தலின் ஆரோக்கியம் என்பது உள்ளே உட்கொள்ளும் உணவுகளையே பொறுத்தது. ஐ ஷேடோ தடவினால் பார்வைத் திறன் அதிகரிக்கும் என்ற மாதிரிதான் எண்ணெய் தடவினால் கூந்தல் வளரும் என்பதும்.

ஆனாலும் கூந்தலுக்கு எண்ணெய் தடவுகிறோம். அது மண்டையின் ஆரோக்கியத்துக்காக. செடிகள் வளர எப்படித் தரையை உரம் போட்டு, உழுது வைக்கிறோமோ அதே மாதிரிதான் கூந்தல் வளர மண்டையோட்டுப் பகுதியை எண்ணெய் தடவி ஈரப்பதத்துடன் வைத்திருக்க வேண்டியதும் அவசியமாகிறது.

கூந்தலுக்கு தினசரி எண்ணெய் தடவவேண்டும் என்று அவசியமில்லை. மூன்று நாட்களுக்கு ஒரு முறை தடவினால் கூடப் போதும். அதையும் ஒரே ஒரு தினம் வைத்திருந்துவிட்டு அடுத்த நாள் அலசிவிடலாம்.
தினசரி 50 முதல் 80 முடிகள் வரை உதிர்வது சகஜமான விஷயம்தான். 80 முதல் 100, அதற்கு மேல் முடிகள் உதிரும்போது, அதை ஆரோக்கியமின்மையின் அறிகுறியாக எடுத்துக்கொள்ளலாம்.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கூந்தல் பராமரிப்பு Empty Re: கூந்தல் பராமரிப்பு

Post by தாமு Fri Oct 16, 2009 7:45 am

தலையாய' பிரச்சினைக்கு அழகான தீர்வுகள்

பல பெண்களுக்கு முடி உதிர்வது பெரும் பிரச்சினையாகவே இருக்கிறது. தலைமுடியை சரிவர பராமரிக்காததால் இப்படி முடி கொட்டுகிறது என்று பொதுவான காரணம் கூறப்பட்டாலும், ஊட்டச்சத்து குறைவு, அடிக்கடி ஷாம்புகளை மாற்றிக்கொள்வது, கூந்தலை பின்னாமல் விரித்துப் போடுவதால் ஏற்படும் சிக்கல், அதிக உஷ்ணம் ஆகியவையும் முடி உதிர்வதற்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன.

இந்த பிரச்சினையில் இருந்து விடுபட வேண்டும் என்று ஆசைப்படும் பெண்ணா நீங்கள்? உங்களுக்காக சில டிப்ஸ்:

* தலையில் உண்டாகும் அதிக சூடு காரணமாக முடி உதிர்ந்தால், வாரத்தில் ஒரு நாள் மருதாணி இலையை அரைத்து தலையில் தேய்த்து குளிக்கலாம். மருதாணி உங்களுக்கு பிடிக்காது என்றால், அதற்கு பதிலாக வெந்தயக்கீரையை பயன்படுத்தலாம். அல்லது வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து அரைத்து, தலையில் தேய்த்தும் குளிக்கலாம். வெந்தயத்துடன் கடலை பருப்பையும் சேர்த்து அரைத்து பூசி குளிப்பது நல்ல பலன் தரும்.

* வாரத்திற்கு இரண்டு முறையாவது எண்ணெய் தேய்த்து குளித்திடுங்கள். இப்படிச் செய்வதால் உடல் உஷ்ணம் குறைவதோடு தலையில் அழுக்கு சேர்வதும் கட்டுப்படும். முடியும் உதிராது.

* தலைக்கு குளித்த பின் ஈரம் காயும் முன்பே சீப்பால் சீவுவதாலும் அதிக அளவில் கூந்தல் உதிரும். அதனால், அதை தவிர்த்து விடுவது நல்லது.

* செம்பருத்தி பூ இதழ்களை வெயிலில் நன்கு காய வைத்து, அவற்றை பொடி செய்து, தேங்காய் எண்ணெயில் போட்டு, அந்த எண்ணெயை தலையில் தடவி வந்தாலும் முடி கொட்டாது.

* தலையில் அதிகமாக சிக்கல் சேர்ந்துவிட்டால் பெரிய பற்கள் உள்ள சீப்பை பயன்படுத்தி சிக்கலை எடுக்க வேண்டும். சிறிய பற்கள் கொண்ட சீப்பை அப்போது பயன்படுத்தினால் முடி உதிரத்தான் செய்யும்.

* ஊட்டச்சத்து குறைவு காரணமாக முடி உதிர்ந்தால், அத்தகையவர்கள் பழங்கள், காய்கறிகள், கீரைகள் மற்றும் பருப்பு வகைகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

* கசகசாவை பாலில் ஊற வைத்து அரைத்து, பாசிப்பருப்பு மாவை அதில் கலந்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தாலும் முடி உதிர்வதை தடுக்கலாம்.

* முட்டையின் வெள்ளைக்கருவை தனியாக எடுத்து தலையில் தேய்த்து சுமார் 10 நிமிடங்கள் ஊறவிட்டு, பின் சீயக்காய் தேய்த்து குளித்தாலும் கூந்தல் உதிர்வது குறையும்.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கூந்தல் பராமரிப்பு Empty Re: கூந்தல் பராமரிப்பு

Post by தாமு Fri Oct 16, 2009 7:47 am

மூலிகை ஆலோசனைகள்:

நல்லெண்ணெய் மற்றும் நெல்லிக்காய் சாறு இரண்டையும் சம அளவு எடுத்துக் கலந்து காய்ச்சி, வடிகட்டித் தேய்த்துக் குளித்து வந்தால் இளநரை மறைந்து கூந்தல் கருகருவென வளரும்.

புழுவெட்டு சில சமயம் தலை முழுவதையும் வழுக்கையாக்கிவிடும். இதற்குக் கடுகெண்ணெயைத் தடவிக் குளித்து வந்தால் குணம் தெரியும்.

அரை கப் தேங்காய்ப் பாலில் ஒரு எலுமிச்சம்பழச் சாறு கலந்து அதை மயிர்க்கால்களில் தடவி மசாஜ் செய்து பதினைந்து நிமிடங்கள் கழித்து அலசி வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

முட்டையின் மஞ்சள் கருவைத் தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் முடி வளர்ச்சி நீங்கும்.

நீலகிரித் தைலத்தை சூடு செய்து தலையில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து வெந்நீரில் நனைத்துப் பிழிந்த டவலால் தலையைக் கட்டிக்கொண்டு சிறிது நேரம் கழித்து அலசவும். இப்படிச் செய்து வந்தால் பொடுகு நீங்கிக் கூந்தல் சுத்தமாகும்.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கூந்தல் பராமரிப்பு Empty Re: கூந்தல் பராமரிப்பு

Post by தாமு Fri Oct 16, 2009 7:51 am

பொதுவான ஆலோசனைகள்

வாரம் இரு முறை ரொம்பவும் மிதமான ஷாம்பூ போட்டுக் கூந்தலை அலச வேண்டும். பிறகு கண்டிஷனர் உபயோகிக்க வேண்டும். கண்டிஷனர் கூந்தலை சுற்றுப்புற மாசுகளின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும்.

வாரம் இரு முறையாவது கூந்தலுக்கு எண்ணெய் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

மற்றவர்கள் உபயோகிக்கும் டவல், சீப்பு மற்றும் கூந்தல் அழகு சாதனங்கள் எதையும் உபயோகிக்காதீர்கள். உங்களுக்கென தனியே ஒரு செட் வைத்துக்கொள்ளுங்கள்.

தலைமுடி ஈரமாக இருக்கும்போது எக்காரணம் கொண்டும் வாராதீர்கள்.

தலைமுடியைச் சிலர் நாறு மாதிரி ஈரமின்றிக் காய வைப்பார்கள். அது தவறு. ஈரம் சொட்டும் வரைக் காய வைத்தால் போதும். பிறகு அது தானாக, இயற்கையாகவே உலரட்டும்.

பெரிய, அகலமான பற்கள் கொண்ட சீப்பால் முடியை வாரவும்.

கூந்தலைச் சிக்கு எடுக்கும்போது எப்போதும் கீழிருந்துதான் மேல் நோக்கி எடுக்க வேண்டும்.

தலைமுடியில் ஒரே இடத்தில் நீண்ட நேரம் டைட்டான ஹேர் பேண்டுகள், கிளிப்புகள், போன்றவற்றை அணிந்திருப்பதைத் தவிர்க்கவேண்டும்.

ஒவ்வொரு முடியும் நான்காண்டுகள் இருக்கும். மாதத்திற்கு அரை அங்குலம் அளவிற்குத்தான் முடி வளரும்.

கூந்தல் நுனிகள் வெடித்திருந்தால் அவற்றை உடனே ட்ரிம் செய்துவிடுவதுதான் நல்லது.

கூந்தலை சுருளாக்கும், நிறம் மாற்றும் கெமிக்கல் பொருட்களைக் கூடிய வரை தவிர்ப்பது நல்லது.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கூந்தல் பராமரிப்பு Empty Re: கூந்தல் பராமரிப்பு

Post by தாமு Fri Oct 16, 2009 7:55 am

கேசப் பராமரிப்பு


காற்று, உப்புத் தண்ணீர், வியர்வை, மழை, வெயில் போன்றவை முடி வளர்ச்சிக்கு எதிரிகள். வெயில் காலத்தில் சருமத்தைப் பராமரிக்க எடுத்துக் கொள்ளும் அக்கறையில் சிறிதளவைக் கூட கூந்தலைக் காக்க நாம் எடுப்பதில்லை.

சருமத்தை மாதிரியே கூந்தலுக்கும் சூரியனின் புற ஊதாக் கதிர்களின் பாதிப்பிலிருந்து பாதுகாப்பு அவசியம்.


வெயிலில் போகும் போது தலை முழுவதும் மூடும் படியான துணியால் கட்டிக் கொண்டு செல்வது நல்லது. வெயில் நாட்களில் கூந்தலுக்கு எண்ணெய் தடவாமல் விட வேண்டாம்.

வாரத்திற்கு மூன்று முறைகளாவது எண்ணெய் தடவலாம்.

ஒருநாள் விட்டு ஒரு நாள் தலைக்குக் குளிக்கலாம். வாரம் இரு முறை எண்ணெய்க் குளியல் எடுக்கலாம்.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கூந்தல் பராமரிப்பு Empty Re: கூந்தல் பராமரிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum