ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சப்பாத்தி... சப்பாத்தி!

3 posters

Go down

ஈகரை சப்பாத்தி... சப்பாத்தி!

Post by Muthumohamed Wed Jan 09, 2013 1:13 am

அறிவழகனும் தமிழரசனும் அண்டைவீட்டுக்காரர்கள். ஒருநாள் இருவரும் வெளியூருக்குச் செல்ல வேண்டியிருந்தது. அறிவழகனின் மனைவி அவனுக்கு நான்கு சப்பாத்தி சுட்டுத் தந்தார். தமிழரசனின் மனைவி இரண்டு சப்பாத்தி சுட்டு கொடுத்தார். இருவரும் சிறிது தூரம் நடந்தனர். வழியில் மற்றொரு பயணியும் இவர்களுடன் சேர்ந்து கொண்டார். மூவரும் பேசிக் கொண்டே செல்லலாயினர்.

அப்போது அவர்கள் சிறிது ஓய்வு எடுக்க எண்ணினர். வழியில் ஒரு கிணறு இருந்தது. பசியும் தாகமும் எடுத்தது. சாப்பிட்டுவிட்டு செல்லலாமே என எண்ணியவர்கள் அங்கேயே ஓரிடத்தில் அமர்ந்தனர்.

அறிவழகனும் தமிழரசனும் தாங்கள் கொண்டு வந்த சப்பாத்திகளை எடுத்தனர். அறிவழகன் அனைத்து சப்பாத்திகளையும் பாதி பாதியாக ஆக்கிவைத்தான். மொத்தம் பன்னிரண்டு துண்டுகள். மூவரும் சப்பாத்தி துண்டுகளைச் சாப்பிட்டனர். தண்ணீர் அருந்தினர். இறைவனுக்கு நன்றி செலுத்தினர். மூன்றாமவன் பன்னிரண்டு ரூபாயை எடுத்து அறிவழகனிடம் கொடுத்துவிட்டு வேறுவழியில் சென்றுவிட்டான்.

இவர்கள் இருவரும் தமது வழியில் பயணத்தைத் தொடர்ந்தனர். வழியில் தமிழரசன் அறிவழகனிடம் ""அறிவு! பன்னிரண்டு ரூபாயில் எனக்கும் கொடு. என் சப்பாத்தி கூடதானே அதில் இருந்தது...'' என்றான். இதைக் கேட்ட அறிவழகன் ஒரு ரூபாயை தமிழரசனுக்குக் கொடுத்தான்.

"ஓஹோ! எனக்கு ஒரே ரூபாய். உனக்கு மட்டும் அவ்வளவுமா? எனக்கு இன்னும் கொடு... ' அறிவழகன் தர மறுத்துவிட்டான்.

இருவரும் சண்டையிட்டவாறே ஒரு நகரில் நுழைந்தனர். அங்குதான் நம் அறிவாளி இளம் பெண் வசிக்கிறாள். அந்த நகரத்தின் நீதிபதியிடம் வழக்கு சென்றது. அந்த நேரத்தில் ஏதோ வேலையாக நீதிபதியும் அறிவாளி இளம் பெண்ணை அழைத்திருந்தார். அவள் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தாள். வழக்கு ஆரம்பமானதும் நீதிபதி அறிவான இளம் பெண்ணிடம், "" மகளே! இந்த வழக்கை நீயே தீர்த்து வை..'' என்றார்.

இதைக் கேட்ட இளம் பெண் இருவரின் வாதத்தையும் கேட்டறிந்தாள். பின் தமிழரசனிடம், ""நீ இந்த ஒரு ரூபாயை வைத்துக்கொண்டால் உனக்கு லாபம்தான். நியாயமாக, தீர்ப்பு சொல்லிவிட்டால் உனக்கு நஷ்டமாகிவிடும்...'' என்றாள்.

தமிழரசன், ""நஷ்டம் எப்படி? 6 சப்பாத்தி 12 துண்டுகள். ஒவ்வொரு துண்டும் ஒருரூபாய். என் 2 ரொட்டிக்கு 4 துண்டுகள். அறிவு எட்டு ரூபாய் வைத்துக் கொண்டு 4 ரூபாய் எனக்குத் தரட்டும்..'' என்று சொன்னான்.

அங்கு கூடியிருந்தவர்கள் ""ஆமாம்... தமிழரசன் சரியாதானே சொல்றான்...'' என்றனர்.

""உம்...'' என்ற அறிவாளிப் பெண், ""நீங்கள் இருவரும் அந்தப் பணத்தை மேசை மீது வையுங்கள்...''

அறிவழகன் பதினோரு ரூபாயும் தமிழரசன் ஒரு ரூபாயும் வைத்தனர்.

இப்போது அறிவாளி இளம் பெண் தமிழரசனிடம் கூறினாள்:

""12 சப்பாத்தி துண்டுகளை 3 பேர் சாப்பிட்டீங்க. ஆளுக்கு 4 துண்டுகள். அதாவது 4 துண்டுகளை நீயும் சாப்பிட்டாய். இதனுடைய அர்த்தம், நீ உன்னுடைய 2 ரொட்டியைத்தான் சாப்பிட்டே.... அதாவது அந்த மூன்றாம் நபர் அறிவழகனோட சப்பாத்தியைத்தான் சாப்பிட்டிருக்கார். உன் சப்பாத்தியிலிருந்து அவர் எதுவுமே சாப்பிடலை. அதனால உனக்கு ஒரு ரூபாயும் இல்லை...'' எனக் கூறியதுடன், 12 ரூபாயையும் எடுத்து அறிவழகனுக்குக் கொடுத்துவிட்டாள்.

வழக்கு முடிந்தது. தமிழரசன் முகத்தைத் தொங்கவிட்டவனாய் வருத்தத்துடன் சென்றான். அங்கு கூடியிருந்தவர்கள் கூறினர்.

"சரியான தீர்ப்பு!' எங்களுக்கு இது தோணலையே!'

சிறுவர் மணி



சப்பாத்தி... சப்பாத்தி! Mசப்பாத்தி... சப்பாத்தி! Uசப்பாத்தி... சப்பாத்தி! Tசப்பாத்தி... சப்பாத்தி! Hசப்பாத்தி... சப்பாத்தி! Uசப்பாத்தி... சப்பாத்தி! Mசப்பாத்தி... சப்பாத்தி! Oசப்பாத்தி... சப்பாத்தி! Hசப்பாத்தி... சப்பாத்தி! Aசப்பாத்தி... சப்பாத்தி! Mசப்பாத்தி... சப்பாத்தி! Eசப்பாத்தி... சப்பாத்தி! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: சப்பாத்தி... சப்பாத்தி!

Post by யினியவன் Wed Jan 09, 2013 1:24 am

அழகி தீர்த்து வைத்த சப்பாத்தி கதை அழகு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: சப்பாத்தி... சப்பாத்தி!

Post by பாலாஜி Wed Jan 09, 2013 11:54 am

நல்ல கதை , நல்ல பகிர்வு சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஈகரை Re: சப்பாத்தி... சப்பாத்தி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum