Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்by heezulia Today at 12:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இனிஷியலை தமிழில் எழுதுங்கள்...
+4
யினியவன்
கரூர் கவியன்பன்
பாலாஜி
சாமி
8 posters
Page 1 of 1
இனிஷியலை தமிழில் எழுதுங்கள்...
சிலுவையில் அறையப்பட்டபோது இயேசு கிறிஸ்து கூறினார், ""பிதாவே, இவர்களை மன்னியும், தாங்கள் செய்வது இன்னதென்று அறியாமல் இருக்கிறார்கள்'' என்று. தமிழ்நாட்டுத் தமிழர்களையும் இப்படித்தான் சொல்ல வேண்டும்.
தனது பெயரை ஒரு மொழியிலும் தனது தந்தையாரின் பெயருடைய முதல் எழுத்தை - அதாவது இனிஷியலை - மற்றொரு மொழியிலும் எழுதும் விசித்திரத்தைத் தமிழர்கள்தான் அரங்கேற்றி வருகிறார்கள்.
உலகின் எந்தப் பகுதியிலும் எந்த இனத்திலும் எந்த மொழியிலும் இப்படியொரு வேடிக்கை கிடையாது.
முருகன் மகன் குமரன் என்று எழுதும்போது மு. குமரன் என்றுதானே எழுத வேண்டும், எம். குமரன் என்றே எழுதிவருகிறோம். இதை ஒரு குறையாகக்கூட நாம் இதுவரை கருதவில்லை.
ஆங்கிலத்தில் பெயர் எழுதும்போது இனிஷியலை தமிழில் எழுதுவோமா? அப்படி எழுதச்சொன்னாலே அபத்தம் என்றுதானே கூறுவோம்? அதைத் தமிழில் மட்டும் எந்தவித மனக்கூச்சமும் இல்லாமல் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறோமே சரியா?
சுமார் 400 வருஷங்களுக்கு முன்னால் ஆங்கிலம் தமிழ்நாட்டுக்கு வந்தது. வியாபாரத்துக்காக வந்த கிழக்கிந்தியக் கம்பெனியார் நம்முடைய இளிச்சவாயத்தனத்தைக் கண்டு இங்கேயே தங்கி, நாட்டையும் வளைத்து நம்மையும் வளைத்துப் போட்டார்கள். அவர்களின் அதிகார எல்லை விரிய விரிய ஆங்கிலம் பாதாளம்வரை பாய்ந்தது.
பெரும்பாலும் கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் உள்ள பள்ளிக்கூடங்களில் மாற்றல் சான்றிதழ் (டி.சி.) வழங்கும்போது நமது பெயரைத் தமிழில் எழுதி ஆங்கிலத்தில் இனிஷியல் போடுகிறார்கள். இந்தத் தவறை நமக்குச் சொல்லிக் கொடுப்பவர்களே நம்முடைய ஆசிரியர்கள்தான்!
ஒரு வகுப்பில் இரண்டு பேர் "கண்ணன்' என்ற பெயரில் இருந்தால், தம்புசாமி மகனை டி. கண்ணன் என்றும் இரத்தினசாமி மகனை ஆர். கண்ணன் என்றும் அழைக்கிறார்கள். த. கண்ணன், இரா. கண்ணன் என்று அழைப்பதில்லை.
அவர்கள் நிர்வாக வசதிக்காக ஆராயாமல் செய்த தவறு மீண்டும் மீண்டும் செய்யப்பட்டு அதுதான் சரி என்பதைப்போல ஆகிவிட்டது.
இந்தத் தவறு அதிகம் இடம்பெறும் இடம் நாம் அச்சிடும் திருமணப் பத்திரிகைகளில்தான். உங்களுக்குச் சந்தேகம் இருந்தால் உங்கள் வீட்டில் இருக்கும் ஏதாவதொரு திருமண அழைப்பிதழை எடுத்துப் பாருங்கள், உண்மை புரியும்.
அடுத்து இந்தத் தவறை அதிகம் முன்னெடுத்துச் சென்றது திரைப்படத்துறையினர்தான். அவர்களையே தமிழர்கள் இந்த விஷயத்திலும் முன்மாதிரியாகக் கொண்டு பின்பற்றத் தொடங்கிவிட்டார்கள். 1940-களில் இருந்தே தொடங்குகிறது திரைப்படத்துறையினரின் இருமொழிப் பெயர் மோகம். அது தவிர்க்க முடியாத விஷயமாகவே இன்றுவரை தொடர்கிறது.
இந்தத் தவறைக் களைய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காத்திராமல் நாமே இயக்கம் தொடங்க வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்கள், கல்விக்கூடங்கள் இதில் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும். இதுவரை எழுதிய பழக்கத்தை அனைவரும் கைவிட வேண்டும். நல்லதொரு மாற்றத்துக்கு நாம் காரணியாக இருப்போம்.
(நன்றி - தினமணி - தோழன் மபா)
தனது பெயரை ஒரு மொழியிலும் தனது தந்தையாரின் பெயருடைய முதல் எழுத்தை - அதாவது இனிஷியலை - மற்றொரு மொழியிலும் எழுதும் விசித்திரத்தைத் தமிழர்கள்தான் அரங்கேற்றி வருகிறார்கள்.
உலகின் எந்தப் பகுதியிலும் எந்த இனத்திலும் எந்த மொழியிலும் இப்படியொரு வேடிக்கை கிடையாது.
முருகன் மகன் குமரன் என்று எழுதும்போது மு. குமரன் என்றுதானே எழுத வேண்டும், எம். குமரன் என்றே எழுதிவருகிறோம். இதை ஒரு குறையாகக்கூட நாம் இதுவரை கருதவில்லை.
ஆங்கிலத்தில் பெயர் எழுதும்போது இனிஷியலை தமிழில் எழுதுவோமா? அப்படி எழுதச்சொன்னாலே அபத்தம் என்றுதானே கூறுவோம்? அதைத் தமிழில் மட்டும் எந்தவித மனக்கூச்சமும் இல்லாமல் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறோமே சரியா?
சுமார் 400 வருஷங்களுக்கு முன்னால் ஆங்கிலம் தமிழ்நாட்டுக்கு வந்தது. வியாபாரத்துக்காக வந்த கிழக்கிந்தியக் கம்பெனியார் நம்முடைய இளிச்சவாயத்தனத்தைக் கண்டு இங்கேயே தங்கி, நாட்டையும் வளைத்து நம்மையும் வளைத்துப் போட்டார்கள். அவர்களின் அதிகார எல்லை விரிய விரிய ஆங்கிலம் பாதாளம்வரை பாய்ந்தது.
பெரும்பாலும் கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் உள்ள பள்ளிக்கூடங்களில் மாற்றல் சான்றிதழ் (டி.சி.) வழங்கும்போது நமது பெயரைத் தமிழில் எழுதி ஆங்கிலத்தில் இனிஷியல் போடுகிறார்கள். இந்தத் தவறை நமக்குச் சொல்லிக் கொடுப்பவர்களே நம்முடைய ஆசிரியர்கள்தான்!
ஒரு வகுப்பில் இரண்டு பேர் "கண்ணன்' என்ற பெயரில் இருந்தால், தம்புசாமி மகனை டி. கண்ணன் என்றும் இரத்தினசாமி மகனை ஆர். கண்ணன் என்றும் அழைக்கிறார்கள். த. கண்ணன், இரா. கண்ணன் என்று அழைப்பதில்லை.
அவர்கள் நிர்வாக வசதிக்காக ஆராயாமல் செய்த தவறு மீண்டும் மீண்டும் செய்யப்பட்டு அதுதான் சரி என்பதைப்போல ஆகிவிட்டது.
இந்தத் தவறு அதிகம் இடம்பெறும் இடம் நாம் அச்சிடும் திருமணப் பத்திரிகைகளில்தான். உங்களுக்குச் சந்தேகம் இருந்தால் உங்கள் வீட்டில் இருக்கும் ஏதாவதொரு திருமண அழைப்பிதழை எடுத்துப் பாருங்கள், உண்மை புரியும்.
அடுத்து இந்தத் தவறை அதிகம் முன்னெடுத்துச் சென்றது திரைப்படத்துறையினர்தான். அவர்களையே தமிழர்கள் இந்த விஷயத்திலும் முன்மாதிரியாகக் கொண்டு பின்பற்றத் தொடங்கிவிட்டார்கள். 1940-களில் இருந்தே தொடங்குகிறது திரைப்படத்துறையினரின் இருமொழிப் பெயர் மோகம். அது தவிர்க்க முடியாத விஷயமாகவே இன்றுவரை தொடர்கிறது.
இந்தத் தவறைக் களைய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காத்திராமல் நாமே இயக்கம் தொடங்க வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்கள், கல்விக்கூடங்கள் இதில் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும். இதுவரை எழுதிய பழக்கத்தை அனைவரும் கைவிட வேண்டும். நல்லதொரு மாற்றத்துக்கு நாம் காரணியாக இருப்போம்.
(நன்றி - தினமணி - தோழன் மபா)
Re: இனிஷியலை தமிழில் எழுதுங்கள்...
பகிர்வுக்கு நன்றி ...
நான் தமிழில் பெயர் எழுதும் போது தமிழில்தான் இனிஷியலை எழுதுவேன்
நான் தமிழில் பெயர் எழுதும் போது தமிழில்தான் இனிஷியலை எழுதுவேன்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: இனிஷியலை தமிழில் எழுதுங்கள்...
அவசியம் தேவையான பதிவு.இனியாவது திருந்துவார்களா இவ்வாறான தமிழர்கள் ?
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: இனிஷியலை தமிழில் எழுதுங்கள்...
நல்ல பதிவு சாமி.
இதுவரை யோசித்ததே இல்லை இதைப்பற்றி.
தமிழிலில் எழுதுவது குறைவு என்றாலும் நான் எழுதிய வரை இந்த தவறை செய்ததில்லை.
இதுவரை யோசித்ததே இல்லை இதைப்பற்றி.
தமிழிலில் எழுதுவது குறைவு என்றாலும் நான் எழுதிய வரை இந்த தவறை செய்ததில்லை.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இனிஷியலை தமிழில் எழுதுங்கள்...
என் பயர் மாணிக்கம் என் தந்தையின் பெயர் நடேசன்.
எனவே நான் எப்பொழுதும் மாணிக்கம் நடேசன் என்றுதான் எழுதுகிறேன்.
இப்படியும் எழுதலாமே.
எனவே நான் எப்பொழுதும் மாணிக்கம் நடேசன் என்றுதான் எழுதுகிறேன்.
இப்படியும் எழுதலாமே.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: இனிஷியலை தமிழில் எழுதுங்கள்...
அய்யாவை மீண்டும் இங்கே பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி. பூரண நலம் பெற்று வந்திருக்கிறீர்கள் என நம்புகிறேன்.மாணிக்கம் நடேசன் wrote:என் பயர் மாணிக்கம் என் தந்தையின் பெயர் நடேசன்.
எனவே நான் எப்பொழுதும் மாணிக்கம் நடேசன் என்றுதான் எழுதுகிறேன்.
இப்படியும் எழுதலாமே.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இனிஷியலை தமிழில் எழுதுங்கள்...
நல்ல தமிழ் பதிவு .... மாற்றிகொள்வோம் . மற்றவர்களுக்கும் சொல்வோம் .........
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Similar topics
» cartoon network சேனல் தமிழில் இல்லை அதை தமிழில் மாற்றம் செய்ய என்ன செய்யவேண்டும்?
» ஒரு பக்கக் கதைகள் எழுதுங்கள்
» புகைபடங்களை பார்த்து ஒப்பிட்டு எழுதுங்கள்..!!!
» படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........
» நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள்
» ஒரு பக்கக் கதைகள் எழுதுங்கள்
» புகைபடங்களை பார்த்து ஒப்பிட்டு எழுதுங்கள்..!!!
» படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........
» நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|