ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வயதானவர்களின் செல்லப்பிள்ளை எட்வின்!

Go down

வயதானவர்களின் செல்லப்பிள்ளை எட்வின்! Empty வயதானவர்களின் செல்லப்பிள்ளை எட்வின்!

Post by Powenraj Sun Dec 30, 2012 11:49 am

சிவகாசி - நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் உழைப்பாளர்கள் நிறைந்த ஊர். இந்த தேசத்தின் இன்னொரு பக்கம் கொஞ்சம் சோகமானது. சோகத்திற்கு காரணம், பராமரிக்க ஆள் இல்லாமல் சிரமப்படும் வயதானவர்கள். பென்ஷன், சேமிப்பு, வீடு, பிள்ளைகள்,பேரக்குழந்தைகள் என, எதற்கும் பஞ்சமில்லை. ஆனால், அன்பாய் பார்க்க, பேச, கவனித்துக் கொள்ளத்தான் யாருக்கும் நேரமில்லை.
:-
"எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தர்றேன், ஆனா, உங்கள வீட்ல வச்சு பார்த்துக்க முடியாது. ப்ளீஸ் தனியா இருந்துக்குங்க. முதியோர் இல்லத்திலும் சேரக் கூடாது; குடும்ப மானம் போயிரும். ஆகவே, எப்படியாவது சமாளிச்சுக்குங்க...' என்று,நேருக்கு நேராக சொல்லி விட்ட பிள்ளைகளால், தனித்தும், தவித்தும் போனவர்கள் இங்கே நிறைய பேர்.
:-
இவை அனைத்தையும் பொறுத்துக் கொண்டனர். ஆனால், இந்த வயதில் பசியைத் தான் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நேர நேரத்திற்கு சமைக்க முடியாத தங்களுக்கு, யாராவது சாப்பாடு தர மாட்டார்களா என்று ஏங்கிப் போனார்கள். இவர்களின் ஏக்கத்தை போக்க வந்தவர்தான் எட்வின் சாலமன் ராஜ்.
:-
சென்னையில் பெரிய உத்தியோகத்தில் கை நிறைய சம்பளம் வாங்கிக்கொண்டு இருந்தவர், ஒருமுறை முடியாமல் போன தன் தாய்க்கு, உணவு தரச்சொல்லிபலரை கேட்டபோது, அவர்களில்பலரும் பல காரணங்களை சொல்லி உணவு தரத் தயங்கினர்.
:-
மனிதர்களின் சுய ரூபம் அறிந்து அதிர்ச்சியானவர், அந்த கணமே, தான் பார்த்து வந்த வேலையை தூக்கி எறிந்து விட்டு, சிவகாசிக்கு மனைவி ரோஸ்லின் மற்றும் பிள்ளைகளுடன் வந்து விட்டார். இங்கே, தன் தாயைப் போலவே, நிறைய வயதானவர்கள் பணம் இருந்தும், நேர நேரத்திற்கு நல்ல உணவு கிடைக்காமல் சிரமப்படுவதைபார்த்து, அவர்களுக்கும் உணவு வழங்க முடிவெடுத்தார்.
:-
நண்பர்கள், உறவினர்கள் உதவியுடன், "ரெகோபத்' என்றுஒரு அறக்கட்டளை துவங்கி, அதன் மூலம், சிவகாசியின் மூலை முடுக்கில் உள்ள தனிமையில் வாழும் வயதானவர்களுக்கு, மூன்று வேளை உணவு வழங்கி வருகிறார். அறுபது வயதிற்கு மேலானவர்களுக்கு, என்ன மாதிரியான உணவு வழங்கலாம் என்று மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டு, அதன்படி காலையில் இட்லி, ராகி, சேமியாபுட்டு, மதியம் காய்கறிகள் நிறைந்த சாப்பாடு, இரவு சப்பாத்தி, தோசை, பால் சாதம் என்று, எளிதில் ஜீரணிக்கக்கூடிய, சத்தான உணவை வழங்கி வருகிறார். விருப்பம் உள்ளவர்களுக்கு, வாரத்தில் இரண்டு முறை அசைவமும் உண்டு.
:-
காலை ஏழு மணி, மதியம் ஒரு மணி, இரவு ஏழு மணி என்று சரியான நேரத்தில், "ஹாட் பாக்சில்' வைத்து சுவையான உணவை சுடச்சுட கொடுத்து வருகிறார். வருடத்தில், 365 நாளும் எவ்வளவு புயல், மழை அடித்தாலும், இந்த பணியை விடாமல், பல வருடங்களாக செய்து வருகிறார். "இது கடவுளின் காரியம், ஆகவே, உணவு வழங்க எப்போதும் காலதாமதம் செய்ய மாட்டேன்...' என்கிறார். இடைப்பட்ட நேரத்தில், இவரே காய்கறி வாங்கச் செல்கிறார். கிலோ ஐம்பது ரூபாய்க்கு விற்றாலும், பொன்னி அரிசியில்தான் சாதம். இவரது மனைவி ரோஸ்லியின் தலைமையில் தான் உணவு தயாராகிறது.
:-
இப்படி கொடுக்கப்படும் உணவிற்கு கட்டணம் உண்டு, ஆனால், பணம் தருகின்றனர் என்பதற்காக, எல்லாருக்கும் சாப்பாடு கொடுத்து விடுவது இல்லை. உண்மையிலேயே அவர்களை கவனிக்க ஆள் இல்லையா, அவர்களால் சமைக்க இயலாதா என்பதை எல்லாம் விசாரித்த பின்னரே உணவு வழங்குகிறார்.
:-
அவ்வப்போது இவர்களிடம் நேரில் நிறைய மனம் விட்டு பேசி, அவர்களது பிரச்னைகளைதீர்த்து வைக்கவும் வழி காண்கிறார். அந்த வகையில், இன்று சிவகாசியில் உள்ள பலவயதானவர்களின் செல்லப்பிள்ளை இந்த எட்வின்தான். வருடத்தில் ஒரு முறை இவர்களை ஒருங்கிணைத்து, அவர்களுக்கு இடையே பல நிகழ்ச்சிகளை நடத்தி, பாராட்டி, பரிசு வழங்கியும் மகிழ்விக்கிறார். அதன் மூலம், தானும் மகிழ்கிறார்.
எட்வினுடன் பேசி அவரது புனிதமான பணியை பாராட்ட தோன்றுகிறவர்களுக்கு, தொடர்பு எண்:9442324424.
:-

எல். முருகராஜ்
நன்றி தினமலர்-வாரமலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum