Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
மோடி - வெற்றிகள் ஏன்?
4 posters
Page 1 of 1
மோடி - வெற்றிகள் ஏன்?
இந்தியாவில் அதிகம் எதிர்க்கப்படுகிற, அதே நேரம் எதிர்பார்க்கப்படுகிற மனிதராக மோடி. மோடி தொடர் வெற்றி எதனால். அதிகம் எதிர்க்கப்படுவது எதனால். மதரீதியாக, அரசியல் ரீதியாக என்று இரண்டையும் பார்ப்போம். மோடி மீதான மத வன்முறை குற்றச்சாட்டுகளுக்கு வயது எட்டு. ஏன் இன்னும் தண்டிக்கப்படவில்லை, தண்டிக்கப்பட முடியவில்லை.
:-
தம் கட்சி மற்றும் கூட்டணிகட்சிக்காரர்களின் முறைகேடுகளையே சகிக்க மாட்டாது, சுரேஷ் கல்மாடி, ஆ.ராசா, கனிமொழி என்று அனைவரையும் தூக்கி உள்ளே போடும் நேர்மை பெற்ற காங்கிரஸ் கட்சி - தம் எதிரியை, ஒரு மத வெறியரை - சாட்டப்பட்டுள்ள குற்றம் உண்மையானால், தண்டிக்க ஏன்காலம் தாழ்த்த வேண்டும். ஆயிரக்கணக்கான சீக்கியர் படுகொலையிலேயே சில காங்கிரஸார் தண்டிக்கப்பட்டபோது, மோடி எம்மாத்திரம்.
:-
காங்கிரஸிடம் எப்போது ஒருநல்ல (கெட்ட) பழக்கம் உண்டு. இந்திராகாந்தி காலத்திலிருந்தே அந்த பழக்கம் உண்டு. நாட்டில், கட்சி பல நெருக்குதல்களை சந்திக்க நேர்ந்தால் - எல்லையில் பதட்டம், பாகிஸ்தான் ராணுவம் குவிப்பு என்று பிரச்சனையை திசை திருப்பும். 90களுக்கு அவர்கள் மீதான பார்வை பயங்கரவாதம் பக்கம் திரும்பியது. பிரச்சனைகளை திசை திருப்ப விரும்பினால்"தீவிரவாதத்தால் அச்சுறுத்தல்" என்று புலிகளை பிரதானமாக குற்றம் சொல்லும் போக்கு முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்தது.
:-
குஜராத் வன்செயலுக்கு பிறகு மோடியை வைத்து - இதே வழக்கத்தை பின்பற்ற துவங்கிவிட்டனர். 2004ல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததில் இருந்து - எல்லா தேர்தல் காலங்களிலும் குஜராத் வன்செயல் குறித்து பேசுவதை காங் வழக்கப்படுத்தி வந்தது. முதல் முறையாக இந்த தேர்தலில் தான் காங் - குஜராத் வன்செயலை பற்றி பேசவில்லை. ஏன். ஒரு குற்றச்சாட்டு பலவீனப்படுகிறது என்றால் - அதற்கு இரண்டு காரணங்கள்இருக்கலாம்.
:-
முதல் காரணம் - அது பொய்யாக இருக்கலாம் அல்லது உண்மையாக இருந்தும் கூட, சுட்டிகாட்டப்படும் விதத்தில் பலவீனம் இருக்கலாம். ஆனால் மோடி விஷயத்தில் - எல்லா பக்கம்இருந்தும் மிக சரியாகவே கல்லெறியப்பட்டது. அவர் அதிலிருந்து அதிகாரத்தை பயன்படுத்தி அல்ல - சட்ட ரீதியாக தான் வெளியே வருகிறார். சமீபத்திய தேர்தலில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதானும் பல முஸ்லீம்கள் மோடியோடு ஒரே மேடையில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்கள். இது எப்படி நிகழ்ந்தது.
:-
மோடி மத வன்செயல்களுக்கு காரணகர்த்தா என்றால் காங்கிரஸ் தான் வழக்கை துரிதப்படுத்தி தண்டனையை பெற்று தர வேண்டும். மத வன்செயலை வைத்து அரசியல் செய்யக்கூடாது. அது மத வன்செயலை விட பயங்கர ஆபத்தானது. அதை தான் இன்று பலர் தங்கள் சுயநலத்துக்காக செய்து கொண்டிருக்கின்றனர். காங்கிரஸின் இத்தகைய போக்கே - மோடியின் வெற்றிக்கு வலு சேர்க்கிறது. அரசியல் ரீதியாக கிடைத்த வெற்றியை பார்ப்போம்.
:-
குஜராத் குறித்த நல்ல செய்திகளை வெளியிடுவதில் கூட - உண்மைக்கும், பொய்க்கும் இடையே மிக பெரிய போர். வென்றது உண்மையா... பொய்யா... ஊடகங்கள் செய்தது என்ன? குஜராத் வளர்ச்சி பற்றி பேசும்போதெல்லாம் அது பொய் என்கிற ரீதியில் தான்எதிர்தரப்புகள் பேசின."பணம் கொடுத்து தேர்தல் வெற்றிகளை பெற்ற தமிழகத்தை பற்றி பேசாதவர்களுக்கு - குஜராத்தில், ஊடகங்கள் தேர்தல் செய்திகளை வெளியிடுவதற்கு பணம் பெற்றது அசிங்கமாய் போயின". இது தான் ஜனநாயகத்தை காக்கிறவர்களின் இரட்டை பார்வை. இரட்டை குவளைக்கு நிகரான அசிங்கம்.
:-
"குஜராத்தை விட பீகார் பல மடங்கு வளர்ச்சி அடைந்து விட்டது" என்கிற உண்மையை பேராசிரியர் சுப.வீ தான் கண்டு பிடித்து சொன்னார். மேலும் பீகாரின் வளர்ச்சி குறித்து எழுதப்போவதாக சொன்னார். சொல்லி ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. இன்னும் பீகார் வளர்ச்சி குறித்து எழுதவில்லை. தினசரி அசுர வேகத்தில் பீகார் வளர்ச்சி அடைந்தால் பாவம் அவரால் எப்படி எழுத முடியும். குஜராத் வளர்ச்சி அடைந்து விட்டதை ஊடகங்கள் தான் ஊதிபெருக்குகின்றன என்கின்றனஎதிர்தரப்பு ஊடகங்கள். விடுதலை இவ்வாறு எழுதுகிறது. "அதுல் சூட் என்பவர் இந்து நாளேட்டில் எழுதி உள்ளாராம். (இப்போது மட்டும் பார்ப்பன இந்து சொன்னால் சரியாக இருக்குமாம்) குஜராத் முன்னேற்றம் கவலை அளிப்பதாக உள்ளது என்று.
:-
ஒன்றல்ல பல விடயங்களில் அதி வேக முன்னேற்றத்தைக் காண்பிக்க வேண்டும் என்ற திட்டத்தில் அந்த மாநிலம் மக்களின் கல்வி சமூக சம நிலை, சுகாதாரம், நிரந்தர வாழ்வாதாரம், நீதி அமைதி போன்றவை புறந்தள்ளப்பட்டுள்ளன என்று அவர் கூறுகிறார். பளபளக்கும் மேல் பூச்சுக்கு அடியில் புற்று நோய் உள்ளனவோ என்றுதோன்றுகிறது. குஜராத்போன்றே நல்ல முன்னேற்றத்தை காண்பிக்கும் மாநிலங்கள் மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் அரியானா. ஆனால் இந்த மாநிலங்களின் முன்னேற்றங்கள் ஊடகங்களுக்கு முன்னேற்றமாகத் தெரியவில்லை. ஊடகங்களின் ஒரே குறிக்கோள் மோடியை தூக்கிப் பிடிப்பதுதான்."
:-
மேலும் சொல்கிறார்கள் - பா.ஜ வருவதற்கு முன்பே காங்கிரஸ் உபயத்தில் குஜராத் மிக பெரிய வளர்ச்சி அடைந்துவிட்டது. அதனால் இதில் பா.ஜ பங்கு எதுவுமில்லை. மேலும் குஜராத்திகள் வணிகர்கள் - இயல்பாக மிக கடுமையான உழைப்பாளிகள்" என்று கதைக்கிறார்கள். ஒரு மனிதனை இல்லாதொழிக்க என்ன வேண்டுமானாலும் பேசுவோம் என்பதை நிருபிக்கிறார்கள்.இது வளர்ச்சி அடையும் எல்லா மாநிலத்திற்கும் பொருந்தும் இல்லையா?
:-
தமிழகம் திராவிட கட்சிகளால் வளரவில்லை, அதற்கு முன்பிருந்த காங்கிரஸால் என்று சொன்னால் அதை சரியென்று ஏற்கும் மனப்பக்குவம் இருக்கிறதா எதிர்தரப்புக்கு. மற்ற மாநிலத்தவர்கள் சோம்பேறிகளா, உழைக்க அஞ்சுபவர்களா? குஜராத்தில் தலித்களின் நிலை மோசமாக உள்ளதாக எழுதுகிறார்கள். தாழ்த்தப்பட்ட இனத்தை சார்ந்த மாயாவதி முதல்வராக இருந்த உ.பியை விட தலித் மக்களின் நிலை மேம்பட்டே இருக்கிறது என்பதே குஜராத்தின் உண்மை நிலை.
மோடி மோசமானவராக இருக்கலாம். ஆனால் அவரை குற்றம் சாட்டுபவர்கள் - அதை விட மோசமானவர்களாகவே இருக்கிறார்கள். இந்த வெற்றிக்கு அகமகிழ்ந்து டெல்லி அரசியல் பக்கம் மோடி தம் பார்வையை திருப்பினால் - அது மோடிக்கு மட்டுமல்ல பா.ஜ.,வுக்கும் அழிவு தான்.
ஓசை தளம்
:-
தம் கட்சி மற்றும் கூட்டணிகட்சிக்காரர்களின் முறைகேடுகளையே சகிக்க மாட்டாது, சுரேஷ் கல்மாடி, ஆ.ராசா, கனிமொழி என்று அனைவரையும் தூக்கி உள்ளே போடும் நேர்மை பெற்ற காங்கிரஸ் கட்சி - தம் எதிரியை, ஒரு மத வெறியரை - சாட்டப்பட்டுள்ள குற்றம் உண்மையானால், தண்டிக்க ஏன்காலம் தாழ்த்த வேண்டும். ஆயிரக்கணக்கான சீக்கியர் படுகொலையிலேயே சில காங்கிரஸார் தண்டிக்கப்பட்டபோது, மோடி எம்மாத்திரம்.
:-
காங்கிரஸிடம் எப்போது ஒருநல்ல (கெட்ட) பழக்கம் உண்டு. இந்திராகாந்தி காலத்திலிருந்தே அந்த பழக்கம் உண்டு. நாட்டில், கட்சி பல நெருக்குதல்களை சந்திக்க நேர்ந்தால் - எல்லையில் பதட்டம், பாகிஸ்தான் ராணுவம் குவிப்பு என்று பிரச்சனையை திசை திருப்பும். 90களுக்கு அவர்கள் மீதான பார்வை பயங்கரவாதம் பக்கம் திரும்பியது. பிரச்சனைகளை திசை திருப்ப விரும்பினால்"தீவிரவாதத்தால் அச்சுறுத்தல்" என்று புலிகளை பிரதானமாக குற்றம் சொல்லும் போக்கு முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்தது.
:-
குஜராத் வன்செயலுக்கு பிறகு மோடியை வைத்து - இதே வழக்கத்தை பின்பற்ற துவங்கிவிட்டனர். 2004ல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததில் இருந்து - எல்லா தேர்தல் காலங்களிலும் குஜராத் வன்செயல் குறித்து பேசுவதை காங் வழக்கப்படுத்தி வந்தது. முதல் முறையாக இந்த தேர்தலில் தான் காங் - குஜராத் வன்செயலை பற்றி பேசவில்லை. ஏன். ஒரு குற்றச்சாட்டு பலவீனப்படுகிறது என்றால் - அதற்கு இரண்டு காரணங்கள்இருக்கலாம்.
:-
முதல் காரணம் - அது பொய்யாக இருக்கலாம் அல்லது உண்மையாக இருந்தும் கூட, சுட்டிகாட்டப்படும் விதத்தில் பலவீனம் இருக்கலாம். ஆனால் மோடி விஷயத்தில் - எல்லா பக்கம்இருந்தும் மிக சரியாகவே கல்லெறியப்பட்டது. அவர் அதிலிருந்து அதிகாரத்தை பயன்படுத்தி அல்ல - சட்ட ரீதியாக தான் வெளியே வருகிறார். சமீபத்திய தேர்தலில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதானும் பல முஸ்லீம்கள் மோடியோடு ஒரே மேடையில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்கள். இது எப்படி நிகழ்ந்தது.
:-
மோடி மத வன்செயல்களுக்கு காரணகர்த்தா என்றால் காங்கிரஸ் தான் வழக்கை துரிதப்படுத்தி தண்டனையை பெற்று தர வேண்டும். மத வன்செயலை வைத்து அரசியல் செய்யக்கூடாது. அது மத வன்செயலை விட பயங்கர ஆபத்தானது. அதை தான் இன்று பலர் தங்கள் சுயநலத்துக்காக செய்து கொண்டிருக்கின்றனர். காங்கிரஸின் இத்தகைய போக்கே - மோடியின் வெற்றிக்கு வலு சேர்க்கிறது. அரசியல் ரீதியாக கிடைத்த வெற்றியை பார்ப்போம்.
:-
குஜராத் குறித்த நல்ல செய்திகளை வெளியிடுவதில் கூட - உண்மைக்கும், பொய்க்கும் இடையே மிக பெரிய போர். வென்றது உண்மையா... பொய்யா... ஊடகங்கள் செய்தது என்ன? குஜராத் வளர்ச்சி பற்றி பேசும்போதெல்லாம் அது பொய் என்கிற ரீதியில் தான்எதிர்தரப்புகள் பேசின."பணம் கொடுத்து தேர்தல் வெற்றிகளை பெற்ற தமிழகத்தை பற்றி பேசாதவர்களுக்கு - குஜராத்தில், ஊடகங்கள் தேர்தல் செய்திகளை வெளியிடுவதற்கு பணம் பெற்றது அசிங்கமாய் போயின". இது தான் ஜனநாயகத்தை காக்கிறவர்களின் இரட்டை பார்வை. இரட்டை குவளைக்கு நிகரான அசிங்கம்.
:-
"குஜராத்தை விட பீகார் பல மடங்கு வளர்ச்சி அடைந்து விட்டது" என்கிற உண்மையை பேராசிரியர் சுப.வீ தான் கண்டு பிடித்து சொன்னார். மேலும் பீகாரின் வளர்ச்சி குறித்து எழுதப்போவதாக சொன்னார். சொல்லி ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. இன்னும் பீகார் வளர்ச்சி குறித்து எழுதவில்லை. தினசரி அசுர வேகத்தில் பீகார் வளர்ச்சி அடைந்தால் பாவம் அவரால் எப்படி எழுத முடியும். குஜராத் வளர்ச்சி அடைந்து விட்டதை ஊடகங்கள் தான் ஊதிபெருக்குகின்றன என்கின்றனஎதிர்தரப்பு ஊடகங்கள். விடுதலை இவ்வாறு எழுதுகிறது. "அதுல் சூட் என்பவர் இந்து நாளேட்டில் எழுதி உள்ளாராம். (இப்போது மட்டும் பார்ப்பன இந்து சொன்னால் சரியாக இருக்குமாம்) குஜராத் முன்னேற்றம் கவலை அளிப்பதாக உள்ளது என்று.
:-
ஒன்றல்ல பல விடயங்களில் அதி வேக முன்னேற்றத்தைக் காண்பிக்க வேண்டும் என்ற திட்டத்தில் அந்த மாநிலம் மக்களின் கல்வி சமூக சம நிலை, சுகாதாரம், நிரந்தர வாழ்வாதாரம், நீதி அமைதி போன்றவை புறந்தள்ளப்பட்டுள்ளன என்று அவர் கூறுகிறார். பளபளக்கும் மேல் பூச்சுக்கு அடியில் புற்று நோய் உள்ளனவோ என்றுதோன்றுகிறது. குஜராத்போன்றே நல்ல முன்னேற்றத்தை காண்பிக்கும் மாநிலங்கள் மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் அரியானா. ஆனால் இந்த மாநிலங்களின் முன்னேற்றங்கள் ஊடகங்களுக்கு முன்னேற்றமாகத் தெரியவில்லை. ஊடகங்களின் ஒரே குறிக்கோள் மோடியை தூக்கிப் பிடிப்பதுதான்."
:-
மேலும் சொல்கிறார்கள் - பா.ஜ வருவதற்கு முன்பே காங்கிரஸ் உபயத்தில் குஜராத் மிக பெரிய வளர்ச்சி அடைந்துவிட்டது. அதனால் இதில் பா.ஜ பங்கு எதுவுமில்லை. மேலும் குஜராத்திகள் வணிகர்கள் - இயல்பாக மிக கடுமையான உழைப்பாளிகள்" என்று கதைக்கிறார்கள். ஒரு மனிதனை இல்லாதொழிக்க என்ன வேண்டுமானாலும் பேசுவோம் என்பதை நிருபிக்கிறார்கள்.இது வளர்ச்சி அடையும் எல்லா மாநிலத்திற்கும் பொருந்தும் இல்லையா?
:-
தமிழகம் திராவிட கட்சிகளால் வளரவில்லை, அதற்கு முன்பிருந்த காங்கிரஸால் என்று சொன்னால் அதை சரியென்று ஏற்கும் மனப்பக்குவம் இருக்கிறதா எதிர்தரப்புக்கு. மற்ற மாநிலத்தவர்கள் சோம்பேறிகளா, உழைக்க அஞ்சுபவர்களா? குஜராத்தில் தலித்களின் நிலை மோசமாக உள்ளதாக எழுதுகிறார்கள். தாழ்த்தப்பட்ட இனத்தை சார்ந்த மாயாவதி முதல்வராக இருந்த உ.பியை விட தலித் மக்களின் நிலை மேம்பட்டே இருக்கிறது என்பதே குஜராத்தின் உண்மை நிலை.
மோடி மோசமானவராக இருக்கலாம். ஆனால் அவரை குற்றம் சாட்டுபவர்கள் - அதை விட மோசமானவர்களாகவே இருக்கிறார்கள். இந்த வெற்றிக்கு அகமகிழ்ந்து டெல்லி அரசியல் பக்கம் மோடி தம் பார்வையை திருப்பினால் - அது மோடிக்கு மட்டுமல்ல பா.ஜ.,வுக்கும் அழிவு தான்.
ஓசை தளம்
Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: மோடி - வெற்றிகள் ஏன்?
Powenraj wrote: இந்த வெற்றிக்கு அகமகிழ்ந்து டெல்லி அரசியல் பக்கம் மோடி தம் பார்வையை திருப்பினால் - அது மோடிக்கு மட்டுமல்ல பா.ஜ.,வுக்கும் அழிவு தான்.
மாநிலதலைமை வேறு தேசிய தலைமை வேறு குஜராத்தில் மோடி ஜெயிக்கலாம் ஆனால் பிரதமராக இன்னும் மோடி தயாராகவில்லை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: மோடி - வெற்றிகள் ஏன்?
குஜராத்தில் உள்ள அரசியல் வாதிகள், மற்ற மதத்தினரை விட வேறு மாநிலங்களில் உள்ள அரசியல் வாதிகள், மற்ற மதத்தினர் தான் மோடி சரி இல்லை என்று விமர்சனம் செய்கிறார்கள்.. குஜராத் தேர்தலுக்கு 1,2 வாரங்களுக்கு முன் facebook பார்த்தால் தெரிந்திருக்கும்.. இப்போது facebook யில் மோடியை காணவில்லை இப்போது கிடைத்த வெற்றி அனைவரின் வாயையும் மூட வைத்து விட்டது..
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: மோடி - வெற்றிகள் ஏன்?
மோடி குஜராத்தோட பவர் ஸ்டாருன்னு சொல்லுங்க
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: மோடி - வெற்றிகள் ஏன்?
ஏமன் பவர் ஸ்டார் சொன்னா சரியா இருக்கும்balakarthik wrote:மோடி குஜராத்தோட பவர் ஸ்டாருன்னு சொல்லுங்க
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: மோடி - வெற்றிகள் ஏன்?
அது எமன் இல்ல நண்பா ஓமன் அனாவசியமா கன்ட்ரிய மாத்தாத அப்புறம் ரெண்டு நாட்டுக்குள்ளேயும் சண்டை வந்துடும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மோடி அரசு 8 ஆண்டுகள்: பிரதமர் மோடி இந்தியாவை பாதுகாப்பான நாடாக மாற்றியது எப்படி?
» வெற்றிகள் நிச்சயம் (வெற்றியாளன், தோல்வியாளன் - வேறுபாடு )
» எந்த விளையாட்டுக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே !
» 2011- தமிழ் சினிமாவின் சூப்பர் வெற்றிகள்... மங்காத்தாவுக்கு முதலிடம்!
» மோடி அரசு 8 ஆண்டுகள்: நேரு, இந்திராவை விட பெரிய அளவில் உயந்துவிட்ட மோடி
» வெற்றிகள் நிச்சயம் (வெற்றியாளன், தோல்வியாளன் - வேறுபாடு )
» எந்த விளையாட்டுக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே !
» 2011- தமிழ் சினிமாவின் சூப்பர் வெற்றிகள்... மங்காத்தாவுக்கு முதலிடம்!
» மோடி அரசு 8 ஆண்டுகள்: நேரு, இந்திராவை விட பெரிய அளவில் உயந்துவிட்ட மோடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|