ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேன் சுவைத் துளிப்பாக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார் நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி .

+2
அசுரன்
eraeravi
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தேன் சுவைத் துளிப்பாக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார்  நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி . Empty தேன் சுவைத் துளிப்பாக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார் நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி .

Post by eraeravi Sat Dec 22, 2012 6:23 pm

தேன் சுவைத் துளிப்பாக்கள் !

நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார்

நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி .

பல்வேறு இதழ்களில் பிரசுரமான ,இணையங்களில் பதிவான துளிப்பாகளின் தொகுப்பு நூல். நேரில் சந்திக்காத , இணையத்தின் வழி தினமும் சந்திக்கும் நண்பரின் நூல்.துளிப்பாகள் அனைத்தும் சிறப்பாக உள்ளது .பதச்சோறாக சில மட்டும் உங்கள் ரசனைக்கு .

விவசாயி கஷ்டப்பட்டு விளைவித்த பூசணிக்காயை சமைத்து உண்ணாமல் மூட நம்பிக்கையின் காரணமாக வீதியில் போட்டு வீணடித்து விபத்திற்கு வழி வகுக்கும் செயலை சாடும் விதமாக உள்ள துளிப்பா .

பல்லாயிரம் பூசணிக்காய்கள்
உடல் சிதறி பலி
ஆயுத பூஜை .

மனித நேயம் கேள்வி பட்டு இருக்கிறோம் .மரநேயம் என்று புதுச் சொல் பயன் படுத்தி உள்ளார். பாராட்டுக்கள். மரநேயம் விதைத்து உள்ளார் .

மரங்களின் தாலாட்டு
மனிதனுக்கு தூய காற்று
என்னே மரநேயம் .


தமிழக மீனவர்கள் தினந்தோறும் செத்து பிழைக்கின்றனர் .அவர்களை காக்க ஒரு நாதி இல்லை. இந்த அவல நிலை என்று மாறுமோ ? என்ற வருத்தத்தில் வந்த துளிப்பா .

கண்ணீரில் வாழ்கிறான்
தண்ணீரில் பிழைக்கிறான்
தமிழக மீனவன் .


மீனவர்களின் சோகத்தை கண்டு கேட்டு படித்து பார்த்து உணர்ந்து துளிப்பா வடித்துள்ளார் .

கடலில் அழும் மீன் போல்
கரையில் அழுகிறாள்
மீனவன் மனைவி .

தமிழக மக்கள் மாறி மாறி வாக்களித்த போதும் இன்னல் மட்டும் இன்னும் தீர்ந்தபடில்லை .மின் தடை ஒழிய வில்லை .இன்று மின்சாரம் என்பது அடிப்படை தேவை .அதைக் கூட ஆள்வோர் நிறைவேற்ற வில்லையே என்ற வேதனையில் உள்ளனர் .அதனை உணர்த்தும் துளிப்பா .

ஆட்சி மாறுகிறது
காட்சி மாறவில்லை
தமிழ்நாட்டில் .

சொல் விளையாட்டு விளையாடும் ஒரு துளிப்பா .ஒரு புறம் அரசியல்வாதிகள் கோடிகள் கொள்ளையடித்து அயல் நாட்டு வங்கிகளில் வருங்கால வாரிசுகளுக்கு சேர்த்து வைக்கின்றனர். மறுபுறம் வசிக்க வீடு இன்றி தெருக்களில் வாழும் வறுமை .இந்த முரணை உணர்த்திடும் துளிப்பா .

கோடிகளில் வாழ்வதும்
கோடிகளில் வாழ்வதும்
இதியாவில் மட்டுந்தான் .

ஆள்வோர் திட்டங்கள் தீட்டிக் கொண்டே இருக்கிறார்கள் ஆனால் ஏழ்மை மட்டும் இன்னும் ஒழிந்தபாடில்லை .

வயிற்றில் வலி இல்லை
வயிற்றில் ஈரத்துணி
கண்ணீரில் ஏழை .

சில துளிப்பாக்கள் மேற்கோள் காட்டவே தயங்கும் அளவிற்கு சாட்டை அடி துளிப்பாக்கள் நூலில் உள்ளது .

துளிப்பாவின் மூலம் உழைப்பின் மேன்மையையும் உணர்த்துகின்றார் .

வாழ்க்கை முழுக்க
ஓட்டப்பந்தயம்
கடிகார முட்கள் .

விலை நிலங்கள் விரைவாக அழிந்து வருகின்றது .விவசாயிகள் தற்கொலை தினமும் நடகின்றது .இந்த அவல நிலை தொடர்ந்தால் உண்ண சோறு கிடைக்காத அவல நிலை விரைவில் வரும் என்பதை உணர்த்தும் துளிப்பா .

விலை நிலங்களில்
ஓங்கி வளர்ந்தன
மாடி வீடுகள் .

வியப்பில் ஆழ்த்தும் துளிப்பா ஒன்று .

மீசையுடன்
குழந்தை பிறந்தது
பூனைக்குட்டி .

மனசாட்சி உள்ள ஒரு நேர்மையான படைப்பாளியால் ஈழக் கொடுமை பற்றி எழுதாமல் இருக்க முடியாது .கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார் ஈழம் பற்றி எழுதி உள்ளார் .

இன வெறியால்
இடம் பெயர்கின்றன
ஈழத்துப் பறவைகள் .

நிலா பற்றி பாடாத கவிஞர் இல்லை .நிலாவைப் பாடதவர் கவிஞரே இல்லை என்பதும் உண்மை .நிலாவை வித்தியாசமாக பார்த்து உள்ளார் .

ஆழம் அதிகம்
நீந்தத் தெரியாமல்
நிலா .

நம் நாட்டில் வளர்ச்சி என்ற பெயரில் நல்ல மரங்களை வெட்டி வீழ்த்தி வீழ்ச்சிக்கு வழி வகுத்து வருகின்றனர் .வெட்டிய அளவிற்கு புதிய மரங்கள் நடுவதே இல்லை .

சாலை விரிவாக்கம்
சங்கு ஊதினர்
மரங்களுக்கு .

எள்ளல் சுவையுடன் கவிஞர்களின் சோகத்தை உணர்த்துகின்றார் .இன்று பிரபல கவிஞர்கள் கவிதை நூல் மட்டுமே புத்தக் கடைக்காரர்கள் வாங்குகின்றனர் .வாங்கி வைத்துக் கொண்டு நூல் விற்ற பின்பு பணம் தாருங்கள் என்றாலும் , நூலை வாங்க மறுக்கின்றனர்.

வில்லுப்பாட்டு கலைஞர் கொத்தமங்கலம் சுப்பு அவர்களிடம் காந்தி மகான் கதை சொல்லும்போது , அவரை சுட்டக் காட்சி வரும்போது தின்ந்தோறும் உங்களால் எப்படி அழ முடிகின்றது .என்று கேட்டபோது .அவர் .சொன்னது ."வீட்டில் விற்காமல் இருக்கும் என் நூல்கள் பற்றி நினைப்பேன் உடன் அழுகை வந்து விடும் ".என்றாராம் .அதனை நினைவிற்கு கொண்டு வந்த துளிப்பா .

கவிதை நூல் வெளியீடு
மகிழ்ச்சியில் திளைத்தன
கரையான்கள் .

காதிலில் தோல்வி அடிந்தவர்களின்மான நிலையை படம் பிடித்துக் காட்டும் துளிப்பா .

காதல் தோல்வி
அறுத்தெறிய முடியவில்லை
அவளின் நினைவுகள் .

பறவைக்கு உள்ள சுதந்திரம் கூடமனிதனுக்கு இல்லை .கடலில் ,காற்றில் தெரியாமல் படகு எல்லை தாண்டினால் சுட்டு வீழ்த்தும் கொடிய சிங்கள இலங்கை ராணுவத்தைச் சாடிடும் துளிப்பா .சிந்திக்க வைத்தது .

கடலெல்லையைத் தாண்டியும்
பறக்கும் பறவைகள்
கொல்லப்படும் மீனவன்


உள்ளத்து உணர்வை ஒளிவு மறைவு இன்றி அப்படியே பதிவு செய்துள்ளார் .ஒரு சில துளிப்பாகளில் ஆங்கிலச் சொல் வருகின்றது .வருங்காலத்தில் ஆங்கிலச் சொல் தவிர்த்து எழுதுங்கள் .தொடர்ந்து எழுத்துகள் பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .

--



eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

தேன் சுவைத் துளிப்பாக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார்  நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி . Empty Re: தேன் சுவைத் துளிப்பாக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார் நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி .

Post by அசுரன் Sat Dec 22, 2012 6:30 pm

மரநேயம் புதிய வார்த்தை.. ஆனால் அதுவும் தேவை தானே கவிஞரே!

அருமை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தேன் சுவைத் துளிப்பாக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார்  நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி . Empty Re: தேன் சுவைத் துளிப்பாக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார் நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி .

Post by eraeravi Sat Dec 22, 2012 8:30 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

தேன் சுவைத் துளிப்பாக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார்  நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி . Empty Re: தேன் சுவைத் துளிப்பாக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார் நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி .

Post by பூவன் Sat Dec 22, 2012 11:44 pm

பல்லாயிரம் பூசணிக்காய்கள்
உடல் சிதறி பலி
ஆயுத பூஜை

அருமையான வரிகள் .....

இதனால் பாதையில்
பல்லுடைந்து எத்தனை பேர் பலி .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தேன் சுவைத் துளிப்பாக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார்  நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி . Empty Re: தேன் சுவைத் துளிப்பாக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார் நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி .

Post by அசுரன் Sat Dec 22, 2012 11:57 pm

பூவன் wrote:
பல்லாயிரம் பூசணிக்காய்கள்
உடல் சிதறி பலி
ஆயுத பூஜை

அருமையான வரிகள் .....

இதனால் பாதையில்
பல்லுடைந்து எத்தனை பேர் பலி .....
இதனால் இரண்டு கால்களும் உடைந்தவரும் உண்டு.. (என்னைத்தான்)
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தேன் சுவைத் துளிப்பாக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார்  நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி . Empty Re: தேன் சுவைத் துளிப்பாக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார் நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி .

Post by பூவன் Sat Dec 22, 2012 11:59 pm

இதனால் இரண்டு கால்களும் உடைந்தவரும் உண்டு.. (என்னைத்தான்)
.

நம்பிக்கை என்ற பெயரில் நம் கை கால்களை அல்லவா உடைக்கிறார்கள்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தேன் சுவைத் துளிப்பாக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார்  நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி . Empty Re: தேன் சுவைத் துளிப்பாக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார் நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி .

Post by அசுரன் Sun Dec 23, 2012 12:03 am

பூவன் wrote:
இதனால் இரண்டு கால்களும் உடைந்தவரும் உண்டு.. (என்னைத்தான்)
.

நம்பிக்கை என்ற பெயரில் நம் கை கால்களை அல்லவா உடைக்கிறார்கள்
பையா என் கால்கள் இரண்டும் உடைந்தது.. கை நல்லவேளையாக தப்பித்தது... நம்பிக்.கை. அவர்களுக்கு நம்பி.போன எனக்கு ?? அதனால் இதில் ஒரு பாடம் இருக்கிறது. நமது நம்பிக்கை மற்றவர்களை பாதிக்கக்கூடாது. அப்படி பாதித்தால் அது குருட்டு நம்பிக்கை!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தேன் சுவைத் துளிப்பாக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார்  நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி . Empty Re: தேன் சுவைத் துளிப்பாக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார் நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி .

Post by பூவன் Sun Dec 23, 2012 12:05 am

பையா என் கால்கள் இரண்டும் உடைந்தது.. கை நல்லவேளையாக தப்பித்தது... நம்பிக்.கை. அவர்களுக்கு நம்பி.போன எனக்கு ?? அதனால் இதில் ஒரு பாடம் இருக்கிறது. நமது நம்பிக்கை மற்றவர்களை பாதிக்கக்கூடாது. அப்படி பாதித்தால் அது குருட்டு நம்பிக்கை!

நம்பிக்கை குருடாகவில்லை , நம்பி இருப்பவர்கள் குருடாகவே
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தேன் சுவைத் துளிப்பாக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார்  நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி . Empty Re: தேன் சுவைத் துளிப்பாக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார் நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி .

Post by அசுரன் Sun Dec 23, 2012 12:08 am

பூவன் wrote:
பையா என் கால்கள் இரண்டும் உடைந்தது.. கை நல்லவேளையாக தப்பித்தது... நம்பிக்.கை. அவர்களுக்கு நம்பி.போன எனக்கு ?? அதனால் இதில் ஒரு பாடம் இருக்கிறது. நமது நம்பிக்கை மற்றவர்களை பாதிக்கக்கூடாது. அப்படி பாதித்தால் அது குருட்டு நம்பிக்கை!

நம்பிக்கை குருடாகவில்லை , நம்பி இருப்பவர்கள் குருடாகவே
பூசணி உடைத்து கொல்லையில் போடாமல் தார் சாலையில் ஏன் போடுகிறார்கள்?
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தேன் சுவைத் துளிப்பாக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார்  நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி . Empty Re: தேன் சுவைத் துளிப்பாக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார் நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி .

Post by பூவன் Sun Dec 23, 2012 12:10 am

பூசணி உடைத்து கொல்லையில் போடாமல் தார் சாலையில் ஏன் போடுகிறார்கள்?

அப்போ தானே இவர்கள் திருஷ்டி கழியும் , ரோட்டில் போறவர் காலும் உடையும் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தேன் சுவைத் துளிப்பாக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார்  நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி . Empty Re: தேன் சுவைத் துளிப்பாக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார் நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி .

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» உதிர்த்த முத்துக்கள் ! (லிமரைக்கூ இயைபுத் துளிப்பாக்கள்) நூல் ஆசிரியர் : வெண்பா வேந்தர் புலவர் இராம. வேதநாயகம் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.
» கவிதைகளால் ஒரு தமிழ் விருந்து ! (இயைபுத் துளிப்பாக்கள்) நூல் ஆசிரியர் : வெண்பா வேந்தர் புலவர் இராம. வேதநாயகம் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.
» நம்மை மீட்டும் வீணை ! நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி ! நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி !
» புன்னகைச் சிறகுகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் சாந்தா வரதராசன் ! நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !
» சாரல் காலம் ! நூல் ஆசிரியர் கவிஞர் மா .முத்துப்பாண்டி ! நூல் அணிந்துரை ; கவிஞர் இரா .இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum