Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டுby heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணவனின் பார்வையில்
2 posters
Page 1 of 1
கணவனின் பார்வையில்
கல்லூரிக் காலத்தில்
குடும்பம் பற்றி பல கனவுகள்
குறிப்பாக மனைவி
புடவை உடுத்தி
பொட்டு வைத்து
பின்னல் இட்டு
பூ முடிந்து
கூட்டுக் குடும்பதில்
அமைதி அடக்கத்துடன்
அனைவரையும் கவர்ந்தாள்
கனவில் அவள்
பேசியதெயில்லை
பேசியிருந்தால்
பித்தம் அன்றே தெளிந்திருக்கும்
கனவு கல்யாணம் வரை தொடர்ந்தது
உள்ளுர் ஜோதிடரின் தயவால் மணநாளும் வந்தது
விடுப்பெடுத்து விமானம் ஏறி
ஊர் கூட்டி உறவுகள் சூள
அவள் கரம் பற்றி கணவனானேன்
மணமேடையில் அவள் தலை தாழ்த்தி நின்றது
அடக்கத்தாலோ அச்சத்தாலோ அல்ல
அணிந்திருந்த மாலை நகைகளின் பாரத்தால்
என்பது போக போக புரிந்தது
வீட்டில்
தாய் தந்தை அவளிடம் பரிவு காட்ட
அவளும் அவர்களிடம் பாசத்தை கொட்ட
இல்லற இன்பத்தை
இதயம் முழுக்க அனுபவித்தேன்
வீட்டின் சிரிப்பொலிக்கு
வினை விருந்துருவில் வந்தது
வீட்டிற்கு புதிதாக வந்த ஓட்டை கைப்பற்ற
விருந்திற்கு அழைத்தனர் உறவினர்கள்
விருந்தறையில் நான் மட்டும் விற்றிருக்க
சமையலறையில்
என் குடும்ப சரித்திரத்தை
சத்தமில்லாமல் அவளிடம் வாசிக்க
அதில் என்
காதில் விழும்படி சொல்லப்பட்ட
கடைசி வரி
இவன் மட்டும் நல்லவன்
வீட்டில் அதுவரை
பூத்துக்குலுங்கிய
அவளின் புன்சிரிப்பு
விருந்திற்கு பின்
புன்னகையாய் சுறுங்கியது
விடுப்பு முடிந்து விமானநிலையத்தில்
வழியனுப்ப வந்த
அவள் வீட்டினர்கள்
அனுசரித்து நடக்கும் அறிவுரையை
அவளிடம் கூறாமல் என்னிடம் கூற
அதிர்சியோடு அவளுடன்
அமெரிக்கா திரும்பினேன்
முதல் நாள் மாலை
தனிமையின் கொடுமை இனியில்லை என
தனியாத ஆர்வத்துடன்
தாமதிக்காமல் வேலை முடித்து
பூக்களோடு வீடு திரும்ப
அண்டை நாட்டு
அரசன் கைப்பற்றிய
அரண்மனை போல் வீடு
சூரையாடப்பட்டிருந்தது
படித்த புத்தகங்கள்
பழைய பாடல்கள்
படுக்கை விரிப்புக்கள்
பாதுகைகள்
பாத்திரங்கள்
பாதி துணிமணிகள்
பார்வைக்கு தென்படவில்லை
அவளை தவிர நான் ரசித்த எதையும்
அவள் ரசிக்கவில்லை என்பது
விளங்கியது
புதியன வாங்க புறப்பட்டோம்
அந்த அநியாயத்திற்கு
ஆங்கிலத்தில் Shopping என்று பெயர்
கடுங்குளிரிலும் கார் ஓட்டி
கடைகள் பல ஏறி இறங்கி
கதவை நான் திறந்து பிடிக்க
அவள்
கால்களால் கடை அளந்து
கண்களால் பொருள் அளக்க
நான்
கடிவாளம் கட்டிய குதிரையாய் அவள் பின் நடந்து
கால்கடுக்க காத்திருந்து
கடுங்கோபதைக் கட்டுப்படுத்தி
காலம் கடத்த
கடைசியில் கண்டதையும் காட்டி
கட்டாயம் வேண்டுமென அவள் கூற
காரணமே தெரியாமல் அனைத்தையும்
கணிப்பொறியில் கணக்கிட்டு
கடன் அட்டையில் வாங்கி
கார் நோக்கி நடந்த
என் கை முழுக்க குடும்ப பாரம்
இதுவே வாடிக்கையாக
அதலபாதாள்த்தில் இருந்த
அமெரிக்க பொருளாதாரம்
அவ்வாண்டே மீண்டது
வீட்டில்
சீதனமாய் கொண்டு வந்த
சமையல் புத்தகத்தை
அவள் புரட்டிய போதெல்லாம்
நான் சோதனைக் கூட எலியானேன்
கடுகினும் சிறிய பொட்டை
கவனிக்க தவறினாலும்
காதல் இல்லை
பாசம் இல்லை
போன்ற பழிச்சொற்களுக்கு ஆளானேன்
அதுவரை
உலக செய்திகளை மட்டுமே
உற்று கவனித்து வந்த நான்
அன்று முதல்
உடைந்த நகம்
உதிர்ந்த முடி
காதணியின் கற்கள்
காலணியின் அழகு
இவற்றையெல்லாம்
உண்ணிப்பாய் கவனித்து
உடனுக்குடன் தெரிவித்தேன்
அவளை பற்றிய விசயங்களில்
என்னோடு கலந்து பேசி
அவளே முடிவு செய்தாள்
என்னை பற்றிய விசயங்களில்
முடிவு முன்பே எடுக்கப்பட்டு
என்னிடம் அறிவிக்கப்பட்டன
குடும்பம் பற்றி பல கனவுகள்
குறிப்பாக மனைவி
புடவை உடுத்தி
பொட்டு வைத்து
பின்னல் இட்டு
பூ முடிந்து
கூட்டுக் குடும்பதில்
அமைதி அடக்கத்துடன்
அனைவரையும் கவர்ந்தாள்
கனவில் அவள்
பேசியதெயில்லை
பேசியிருந்தால்
பித்தம் அன்றே தெளிந்திருக்கும்
கனவு கல்யாணம் வரை தொடர்ந்தது
உள்ளுர் ஜோதிடரின் தயவால் மணநாளும் வந்தது
விடுப்பெடுத்து விமானம் ஏறி
ஊர் கூட்டி உறவுகள் சூள
அவள் கரம் பற்றி கணவனானேன்
மணமேடையில் அவள் தலை தாழ்த்தி நின்றது
அடக்கத்தாலோ அச்சத்தாலோ அல்ல
அணிந்திருந்த மாலை நகைகளின் பாரத்தால்
என்பது போக போக புரிந்தது
வீட்டில்
தாய் தந்தை அவளிடம் பரிவு காட்ட
அவளும் அவர்களிடம் பாசத்தை கொட்ட
இல்லற இன்பத்தை
இதயம் முழுக்க அனுபவித்தேன்
வீட்டின் சிரிப்பொலிக்கு
வினை விருந்துருவில் வந்தது
வீட்டிற்கு புதிதாக வந்த ஓட்டை கைப்பற்ற
விருந்திற்கு அழைத்தனர் உறவினர்கள்
விருந்தறையில் நான் மட்டும் விற்றிருக்க
சமையலறையில்
என் குடும்ப சரித்திரத்தை
சத்தமில்லாமல் அவளிடம் வாசிக்க
அதில் என்
காதில் விழும்படி சொல்லப்பட்ட
கடைசி வரி
இவன் மட்டும் நல்லவன்
வீட்டில் அதுவரை
பூத்துக்குலுங்கிய
அவளின் புன்சிரிப்பு
விருந்திற்கு பின்
புன்னகையாய் சுறுங்கியது
விடுப்பு முடிந்து விமானநிலையத்தில்
வழியனுப்ப வந்த
அவள் வீட்டினர்கள்
அனுசரித்து நடக்கும் அறிவுரையை
அவளிடம் கூறாமல் என்னிடம் கூற
அதிர்சியோடு அவளுடன்
அமெரிக்கா திரும்பினேன்
முதல் நாள் மாலை
தனிமையின் கொடுமை இனியில்லை என
தனியாத ஆர்வத்துடன்
தாமதிக்காமல் வேலை முடித்து
பூக்களோடு வீடு திரும்ப
அண்டை நாட்டு
அரசன் கைப்பற்றிய
அரண்மனை போல் வீடு
சூரையாடப்பட்டிருந்தது
படித்த புத்தகங்கள்
பழைய பாடல்கள்
படுக்கை விரிப்புக்கள்
பாதுகைகள்
பாத்திரங்கள்
பாதி துணிமணிகள்
பார்வைக்கு தென்படவில்லை
அவளை தவிர நான் ரசித்த எதையும்
அவள் ரசிக்கவில்லை என்பது
விளங்கியது
புதியன வாங்க புறப்பட்டோம்
அந்த அநியாயத்திற்கு
ஆங்கிலத்தில் Shopping என்று பெயர்
கடுங்குளிரிலும் கார் ஓட்டி
கடைகள் பல ஏறி இறங்கி
கதவை நான் திறந்து பிடிக்க
அவள்
கால்களால் கடை அளந்து
கண்களால் பொருள் அளக்க
நான்
கடிவாளம் கட்டிய குதிரையாய் அவள் பின் நடந்து
கால்கடுக்க காத்திருந்து
கடுங்கோபதைக் கட்டுப்படுத்தி
காலம் கடத்த
கடைசியில் கண்டதையும் காட்டி
கட்டாயம் வேண்டுமென அவள் கூற
காரணமே தெரியாமல் அனைத்தையும்
கணிப்பொறியில் கணக்கிட்டு
கடன் அட்டையில் வாங்கி
கார் நோக்கி நடந்த
என் கை முழுக்க குடும்ப பாரம்
இதுவே வாடிக்கையாக
அதலபாதாள்த்தில் இருந்த
அமெரிக்க பொருளாதாரம்
அவ்வாண்டே மீண்டது
வீட்டில்
சீதனமாய் கொண்டு வந்த
சமையல் புத்தகத்தை
அவள் புரட்டிய போதெல்லாம்
நான் சோதனைக் கூட எலியானேன்
கடுகினும் சிறிய பொட்டை
கவனிக்க தவறினாலும்
காதல் இல்லை
பாசம் இல்லை
போன்ற பழிச்சொற்களுக்கு ஆளானேன்
அதுவரை
உலக செய்திகளை மட்டுமே
உற்று கவனித்து வந்த நான்
அன்று முதல்
உடைந்த நகம்
உதிர்ந்த முடி
காதணியின் கற்கள்
காலணியின் அழகு
இவற்றையெல்லாம்
உண்ணிப்பாய் கவனித்து
உடனுக்குடன் தெரிவித்தேன்
அவளை பற்றிய விசயங்களில்
என்னோடு கலந்து பேசி
அவளே முடிவு செய்தாள்
என்னை பற்றிய விசயங்களில்
முடிவு முன்பே எடுக்கப்பட்டு
என்னிடம் அறிவிக்கப்பட்டன
Re: கணவனின் பார்வையில்
இடைவிடாது பேசி
இடை இடையே கேள்விகளால்
என் கவனத்தை அவள் சோதிக்க
பதில் தவறானால்
பாடத்தை பாதியிலேயே நிறுத்தி
அவள் பாரா முகம் காட்ட
பள்ளியிலே ஆசிரியை
பாடத்தை நிருத்தினால்
ஆனந்தம் அடைந்த நான்
பள்ளியறையிலோ
அதிர்ச்சியில் உறைந்தேன்
என் ஐம்புலன்களையும் கூராக்கி
அக்கால குருகுல சீடனைப்போல்
பாடத்தைத் தொடர மண்றாடினேன்
குற்றங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டன
குறைகள் அனைத்தும் மறக்கப்பட்டன
பிழைகள் அனைத்தும் ரசிக்கப்பட்டன
மோகம் முப்பது நாள்
ஆசை அறுபது நாள்
தொண்ணூறு நாட்கள் கழித்து
திருமணத்திற்கு பின்
முதல் முறையாக
மூளை தன் இருப்பை உணர்த்தி
நான்
எத்தனை முறை ஏமாளியானேன்
என்ற எண்ணிக்கையை எடுத்துரைக்க
எதிர்க்க தயாரானேன் நான்
துரும்பெல்லாம் தூணாக
வீடு போர்க்களமானது
அதுவரை கணவனாக மட்டுமே இருந்த நான்
ஒட்டு மொத்த ஆண் இனத்தின்
பிரதிநிதியாக ஆக்கப்பட்டு
ஆண் இனம் இழைத்த
அனைத்து கொடுமைகளின் பழியும்
என் மீது சுமத்தப்பட
சளைக்காமல் நானும் அதை சமாளிக்க
சற்றும் எதிர்பாரா நேரத்தில்
ஓர் அழிவு ஆயுதம் என்னை தாக்கியது
மூளையை செயல் இழக்க செய்து
பேசும் ஆற்றலை தடுத்து
பயங்கர எரிச்சலை எற்படுத்திய
அந்த ரசாயன ஆயுதத்திற்கு
கண்ணீர் என்று பெயர்
அறிது அறிது மானிடராய் பிறப்பதறிது
அதனினும் அறிது ஆசை இல்லாத பெண்
அதனினும் அறிது அழத் தெரியாத பெண்
அழுகைக்கு பின்
படுக்கை அறையின்
பக்கத்து அறை அவளின்
தற்காலிக தாய் வீடானது
அமைதி முயற்சிக்கு நடந்த
அனைத்துச் சுற்று பேச்சு வார்தைகளும்
தோல்வியில் முடிந்தது
சண்டையை முடிக்க
சரணடைவதைத் தவிர
வேறு வழியெதுமில்லை என
என் பாழாய் போன மனம் பரிதவிக்க
சரி என்ற
ஈறேழுத்து மந்திரத்தை நான்
இடை விடாது உச்சரிக்க
இல்லத்தில் அமைதி திரும்பி
குடும்பம் ஒரு கோவிலானது
நான் ஒரு கோமாளியானேன்
பழைய நண்பர்களை
புதிய கோணத்தில் பார்க்க வைத்தாள்
நண்பனின் மனைவியை இவளுக்கு
பிடித்திருந்தால் மட்டுமே
நட்பு நீடித்தது
ஆசைப்பட்ட அனைத்தும்
வேண்டும்மென அடம் பிடித்தாள்
வேண்டியது கிடைக்காவிட்டால்
வேலை நிறுத்தம்
மனைவி ஒரு மந்திரி
என்பதற்கு என்ன பொருள்
லஞ்சம் இல்லாமல் வேலை
நடக்காது என்று பொருள்
செலவை சமாளிக்க
நான் வீட்டுக் கணக்கை கையில் எடுக்க
அவளோ
நான் வீட்டுக்கு அனுப்பும் கணக்கை கையில் எடுத்தாள்
இனி
சம்பள உயர்வைத் தவிர
வேறு வழியில்லை என
சண்டையிட்டு நான் பெற்ற
சம்பள உயர்வை
தான் வந்த வேளை என்றாள்
மாதங்கள் பல உருண்டன
மணவாழ்வின் அடுத்த கட்டம்
மனைவி கருவுற்றாள்
மகிழ்ச்சி மசக்கை வரை நீடித்தது
அவள் படும் அவஸ்தைகள்
ஆண்களுக்கு இல்லை
படைப்பின் பிழைக்கு
நான் பலியானேன்
இன்னல்களை இடைவிடாது கூறி
இடுப்பு வலிக்கு
இப்பொதே பயந்தாள்
இனி வீட்டு வேலை
இருவருக்கு போது என்றாள்
இட்ட வேலைகளை தட்டாமல் செய்து முடிக்க
என் இடுப்பு அன்றே வலி கண்டது
பிரசவத்திற்கு அத்தை வர
பிழைத்தேன் நான்
தாயும் மகளுமே ஆனாலும்
ஒரே வீட்டில்
இரண்டு பெண்கள்
இணக்கமாக வாழ்ந்தால்
அது எட்டாவது உலக அதிசயமாகத்தான்
இருக்க முடியும்
நான் தின்று செரித்த
என் தாய் மண்னை மகனுக்கு
அடையாளம் காட்டும் ஆவலில்
தாயகம் சென்றோம்
யார் வீட்டில் எத்தனை நாள்
என்னும் விடையில்லா கேள்விக்கு
மாமியார் மருமகளுக்கு இடையிலான
பனிப்போர் பதிலானது
பெயரில் தான் பனி
நிஜத்தில் வெப்பம் என்னை தாக்கியாது
பனிப்போர் பார்வைப் போராகி
பின் சொற்போராய் முடிந்தது
இறந்தகால பண்பாட்டை தாய் கூற
எதிர்கால் பெண்னுரிமையை இவள் பேச
இருவருக்கு இடையில் சிக்கிய என்
நிகழ்கால நிம்மதி நாசமானது
விடுப்பு முடிந்து திரும்பியதும்
விரைந்து பச்சை அட்டைக்கு வின்ண்ப்பித்தேன்
நண்பர்களின் கேள்விக்கு
யாதும் ஊரே யாவரும் கேளிர்
என தமிழை துணைக்கழைத்தேன்
சிக்கல்கள் இருந்தும்
சிந்தையில் அவளே
சிம்மாசனம் இட்டு
வீற்றிருக்க காரணம்
வேதாளம் இல்லா
விக்கிரமன் வீண்
-வாசுதேவன்
http://www.missouritamilsangam.org
இடை இடையே கேள்விகளால்
என் கவனத்தை அவள் சோதிக்க
பதில் தவறானால்
பாடத்தை பாதியிலேயே நிறுத்தி
அவள் பாரா முகம் காட்ட
பள்ளியிலே ஆசிரியை
பாடத்தை நிருத்தினால்
ஆனந்தம் அடைந்த நான்
பள்ளியறையிலோ
அதிர்ச்சியில் உறைந்தேன்
என் ஐம்புலன்களையும் கூராக்கி
அக்கால குருகுல சீடனைப்போல்
பாடத்தைத் தொடர மண்றாடினேன்
குற்றங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டன
குறைகள் அனைத்தும் மறக்கப்பட்டன
பிழைகள் அனைத்தும் ரசிக்கப்பட்டன
மோகம் முப்பது நாள்
ஆசை அறுபது நாள்
தொண்ணூறு நாட்கள் கழித்து
திருமணத்திற்கு பின்
முதல் முறையாக
மூளை தன் இருப்பை உணர்த்தி
நான்
எத்தனை முறை ஏமாளியானேன்
என்ற எண்ணிக்கையை எடுத்துரைக்க
எதிர்க்க தயாரானேன் நான்
துரும்பெல்லாம் தூணாக
வீடு போர்க்களமானது
அதுவரை கணவனாக மட்டுமே இருந்த நான்
ஒட்டு மொத்த ஆண் இனத்தின்
பிரதிநிதியாக ஆக்கப்பட்டு
ஆண் இனம் இழைத்த
அனைத்து கொடுமைகளின் பழியும்
என் மீது சுமத்தப்பட
சளைக்காமல் நானும் அதை சமாளிக்க
சற்றும் எதிர்பாரா நேரத்தில்
ஓர் அழிவு ஆயுதம் என்னை தாக்கியது
மூளையை செயல் இழக்க செய்து
பேசும் ஆற்றலை தடுத்து
பயங்கர எரிச்சலை எற்படுத்திய
அந்த ரசாயன ஆயுதத்திற்கு
கண்ணீர் என்று பெயர்
அறிது அறிது மானிடராய் பிறப்பதறிது
அதனினும் அறிது ஆசை இல்லாத பெண்
அதனினும் அறிது அழத் தெரியாத பெண்
அழுகைக்கு பின்
படுக்கை அறையின்
பக்கத்து அறை அவளின்
தற்காலிக தாய் வீடானது
அமைதி முயற்சிக்கு நடந்த
அனைத்துச் சுற்று பேச்சு வார்தைகளும்
தோல்வியில் முடிந்தது
சண்டையை முடிக்க
சரணடைவதைத் தவிர
வேறு வழியெதுமில்லை என
என் பாழாய் போன மனம் பரிதவிக்க
சரி என்ற
ஈறேழுத்து மந்திரத்தை நான்
இடை விடாது உச்சரிக்க
இல்லத்தில் அமைதி திரும்பி
குடும்பம் ஒரு கோவிலானது
நான் ஒரு கோமாளியானேன்
பழைய நண்பர்களை
புதிய கோணத்தில் பார்க்க வைத்தாள்
நண்பனின் மனைவியை இவளுக்கு
பிடித்திருந்தால் மட்டுமே
நட்பு நீடித்தது
ஆசைப்பட்ட அனைத்தும்
வேண்டும்மென அடம் பிடித்தாள்
வேண்டியது கிடைக்காவிட்டால்
வேலை நிறுத்தம்
மனைவி ஒரு மந்திரி
என்பதற்கு என்ன பொருள்
லஞ்சம் இல்லாமல் வேலை
நடக்காது என்று பொருள்
செலவை சமாளிக்க
நான் வீட்டுக் கணக்கை கையில் எடுக்க
அவளோ
நான் வீட்டுக்கு அனுப்பும் கணக்கை கையில் எடுத்தாள்
இனி
சம்பள உயர்வைத் தவிர
வேறு வழியில்லை என
சண்டையிட்டு நான் பெற்ற
சம்பள உயர்வை
தான் வந்த வேளை என்றாள்
மாதங்கள் பல உருண்டன
மணவாழ்வின் அடுத்த கட்டம்
மனைவி கருவுற்றாள்
மகிழ்ச்சி மசக்கை வரை நீடித்தது
அவள் படும் அவஸ்தைகள்
ஆண்களுக்கு இல்லை
படைப்பின் பிழைக்கு
நான் பலியானேன்
இன்னல்களை இடைவிடாது கூறி
இடுப்பு வலிக்கு
இப்பொதே பயந்தாள்
இனி வீட்டு வேலை
இருவருக்கு போது என்றாள்
இட்ட வேலைகளை தட்டாமல் செய்து முடிக்க
என் இடுப்பு அன்றே வலி கண்டது
பிரசவத்திற்கு அத்தை வர
பிழைத்தேன் நான்
தாயும் மகளுமே ஆனாலும்
ஒரே வீட்டில்
இரண்டு பெண்கள்
இணக்கமாக வாழ்ந்தால்
அது எட்டாவது உலக அதிசயமாகத்தான்
இருக்க முடியும்
நான் தின்று செரித்த
என் தாய் மண்னை மகனுக்கு
அடையாளம் காட்டும் ஆவலில்
தாயகம் சென்றோம்
யார் வீட்டில் எத்தனை நாள்
என்னும் விடையில்லா கேள்விக்கு
மாமியார் மருமகளுக்கு இடையிலான
பனிப்போர் பதிலானது
பெயரில் தான் பனி
நிஜத்தில் வெப்பம் என்னை தாக்கியாது
பனிப்போர் பார்வைப் போராகி
பின் சொற்போராய் முடிந்தது
இறந்தகால பண்பாட்டை தாய் கூற
எதிர்கால் பெண்னுரிமையை இவள் பேச
இருவருக்கு இடையில் சிக்கிய என்
நிகழ்கால நிம்மதி நாசமானது
விடுப்பு முடிந்து திரும்பியதும்
விரைந்து பச்சை அட்டைக்கு வின்ண்ப்பித்தேன்
நண்பர்களின் கேள்விக்கு
யாதும் ஊரே யாவரும் கேளிர்
என தமிழை துணைக்கழைத்தேன்
சிக்கல்கள் இருந்தும்
சிந்தையில் அவளே
சிம்மாசனம் இட்டு
வீற்றிருக்க காரணம்
வேதாளம் இல்லா
விக்கிரமன் வீண்
-வாசுதேவன்
http://www.missouritamilsangam.org
Re: கணவனின் பார்வையில்
வாழ்க்கையின் அர்த்தம் கவிதையில் .நன்றி தலை நீங்கள் ரசித்த கவிதை அருமை .....
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» புது மனைவி - கணவனின் பார்வையில்
» ஒரு கணவனின் புலம்பல்…..
» கணவனின் கடைசி ஆசை!!
» கணவனின் வெற்றியில்
» கணவனின் கடமைகள்
» ஒரு கணவனின் புலம்பல்…..
» கணவனின் கடைசி ஆசை!!
» கணவனின் வெற்றியில்
» கணவனின் கடமைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|