Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரபஞ்ச ரகசியங்களை அறிய விஞ்ஞானிகள் நடத்திய சோதனை வெற்றி
3 posters
Page 1 of 1
பிரபஞ்ச ரகசியங்களை அறிய விஞ்ஞானிகள் நடத்திய சோதனை வெற்றி
உலகின் மிகப்பெரிய "பிக்-பேங்' (பெரிய வெடிப்பு) இயற்பியல் பரிசோதனை பிரான்ஸ் - சுவிட்சர்லாந்து எல்லையில் வெற்றிகரமாக நடந்துள்ளது.
பிரபஞ்சம் தோன்றிய போது, ஒரு மாபெரும் வெடிப்பு நடந்ததாகவும் அந்த வெடிப்பின் போது சிதறிய துகள்களால் தான் இந்த உலகமும் உயிர்களும் உருவாகின என்பது அறிவியல் கருத்து. இதை பரிசோதித்துப் பார்க்க நீண்ட காலமாக முயற்சி நடந்த போதும், விஞ்ஞானிகள், நேற்று சோதனையை வெற்றிகரமாக நடத்தினர். "கடவுளுக்கு' இணையான ஒரு சக்தி இந்த பிரபஞ்சத்தைப் படைத்தது என்றால் - அது எது என்பதையும் விளக்கம் பெற விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர். "ஹிக்ஸ் பாசன்' எனும் துகளை விஞ்ஞானிகள் "கடவுள் துகள்' என்று அழைக்கின்றனர்.
முதன்முதலில் பிரபஞ்சம் தோன்றிய போது, நடந்த பெரிய வெடிப்பின் போது (பிக்-பேங்) இந்த துகள் 25 வினாடிகள் மட்டுமே வெளிப்பட்டதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். பின் இது பிரபஞ்சத்தின் மற்ற பொருட்களுடன் இரண்டறக் கலந்து விட்டது. தற்போது மீண்டும் செயற்கையாக "பிக்-பேங்' நடத்துவதன் மூலம் அந்த "கடவுள் துகளை' கண்டறிய முடியும் என்று விஞ்ஞானிகள் காத்திருக்கின்றனர். நேற்று துவங்கிய இந்த பரிசோதனை முடிவை உடனே தெரிந்து கொள்ள முடியாது. இதற்கு இன்னும் இரண்டு, மூன்று மாதங்கள் கூட ஆகலாம். அப்போது பிரபஞ்சம் தோன்றியது குறித்து இதுவரை பதில் கிடைக்காத சந்தேகங்களுக்கும் விடை கிடைக்கும் .
கடந்த 30 ஆண்டுகளாக இதுகுறித்து ஆய்வுசெய்த விஞ்ஞானிகள், கடந்த 2003ம் ஆண்டு கட்டுமானப் பணியைத் துவங்கினர். உலகம் முழுவதிலும் இருந்து ஒன்பதாயிரம் இயற்பியல் விஞ் ஞானிகள் இதில் கலந்து கொண்டனர். இந்த சோதனைக்காக சுவிட்சர் லாந்து - பிரான்ஸ் எல்லை அருகே "லார்ஜ் ஹாட்ரான் கொலைடர்' (மிகப்பெரிய ஹாட்ரான் துகள் மோதல் கருவி) எனும் பெரிய கருவியை ஐரோப்பிய அணு ஆய்வுக் கழகத்தை(செர்ன்) சேர்ந்த விஞ்ஞானிகள் லின் இவான்ஸ் என்பவர் தலைமையில் நிர்மாணித்தனர்.
இதற்கான செலவு 900 கோடி டாலர். வட்ட வடிவமான 27 கி.மீ., நீளம் கொண்ட சுரங்கம் போன்ற பாதையுடன் கூடியது. இந்த சுரங்க வளையத்துக்குள் அணுவின் ஒரு பகுதியான புரோட்டான் கற்றைகளை பெரிய வெடிப்புக்காகச் செலுத்தினர். இந்திய நேரப்படி, மதியம் 1 மணி 5 நிமிடத்துக்கு பரிசோதனை துவங்கியது. 1 மணி 56 நிமிடங்களுக்கு சோதனை வெற்றிகரமாக நிகழ்ந்ததற்கான புள்ளிகள் "செர்ன்' மைய கம்ப்யூட்டர் திரையில் தோன்றியது. இதனால் உற்சாகம் அடைந்த விஞ்ஞானிகள், "ஷாம்ப் பெய்ன்' பாட்டில்களைத் திறந்து வெற்றியைக் கொண்டாடினர்.
தற்போது, இடமிருந்து வலமாக துகள்கள் சுரங்க வளையத்துக்குள் வினாடிக்கு 11 ஆயிரம் தடவை சென்று வரும்படி புரோட்டான் துகள் கற்றைகளை அனுப்பியுள்ளனர். அடுத்த கட்டமாக வலமிருந்து இடமாக துகள்களை அனுப்பும் போது தான், அந்த "பெரிய வெடிப்பு' நிகழும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர். அப்போது கோடிக்கணக்கில் வோல்ட் மின்சார சக்தி வெப்பம் உருவாகி, அதில் கிடைக்கும் துகள் தான் இத்தனை நாள் காத்திருக்கும் கேள்விக்குத் தகவல் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, பிரபஞ்சம் உருவான பெரிய வெடிப்புக் கோளம் ஒரு குறுகிய நேரத்துக்கு உருவாகும் என்றும் விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர்.
பிரபஞ்சத்தில் நட்சத்திரங்கள், பால்வீதி, கிரகங்கள் என நாம் அறிந்தவை வெறும் 4 சதவீதம் மட்டுமே. மீதம் உள்ளவற்றில் 73 சதவீதம் "அறியப்படாத சக்தியாகவும்' (டார்க் எனர்ஜி), 23 சதவீதம் அறியப் படாத பருப்பொருளாகவும் (டார்க் மேட்டர்) உள்ளது. இந்த ஆய்வின் முடிவில் இது போன்ற மர்மங்கள் விலகும் என்கின்றனர் விஞ்ஞானிகள். "பிக்-பேங்' நிகழ்ந்தவுடன் அடுத்த கணத்தில் என்ன நடந்தது? புரோட்டான்கள் அழிந்து "உயிர்க் குழம்பு' எவ்வாறு உருவானது? இதுபோன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடைகாண உள்ளனர்.
விஞ்ஞானிகள் எதிர்ப்பு: இந்த ஆய்வு காரணமாக உலகமே கூட அழிந்து போகலாம் என சில விஞ்ஞானிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இவ்வாறு செயற்கை மோதல்களை நிகழ்த்துவதால், 'பிளாக் ஹோல்' எனும் கருந்துகள் உருவாகி பூமி உட்பட கிரகங்கள், சூரியன் அனைத்தையும் உள்ளிழுத்துக்கொள்ளும் என்றனர். அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் இந்த ஆய்வுக்கு எதிராக வழக்குகளும் தொடரப்பட்டன. ஆனால், கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வைக் கண்டறிய நடந்த முயற்சியில் வெற்றி பெற்ற இயற்பியல் விஞ்ஞானிகள் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
பயம் வேண்டாம்: "பிக் -பேங்' பற்றிய பயம் தேவையற் றது என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்துள்ளார். இந்த செர்ன் தளத்துக்கு தானே சென்றுள்ளதாகக் கூறிய கலாம், "இந்த ஆய்வால் எந்த ஆபத்தும் ஏற்படப் போவதில்லை, மனிதர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த இது போன்ற பரிசோதனைகள் அவசியம்' என்றார்.
ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் உட்பட உலகின் முன்னணி இயற்பியல் விஞ்ஞானிகளும் இந்த ஆராய்ச்சியை ஆதரித்துள்ளனர். இந்த புரோட்டான் துகள் கதிர்கள் அதிக திறனுடன் இருக்கும் போது, அதன் மீதான கட்டுப்பாட்டை விஞ்ஞானிகள் இழப்பதால் மட்டுமே அதிகபட்ச பாதிப்பு ஏற்பட முடியும். ஆனால், அப்போதும் அந்த கருவிக் கும், சுரங்கப் பாதைக்கும், சுற்றியுள்ள பாறைகளுக்கும் மட்டுமே பாதிப்பு ஏற்படும். உலகத்துக்கு இதனால் எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்தனர். முதற்கட்ட ஆய்வுகள் நேற்று நடந் தன. இந்த ஆய்வு 2009ம் ஆண்டுவாக் கில் தான் உச்சகட்டத்தை அடையும். அப்போது தான் தேவையான தகவல் களை முழுமை யாகப் பெற முடியும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவுக்கும் பெருமை: உலகை அதிரச்செய்த இச்சோதனை நடந்த "லார்ஜ் ஹாட்ரான் கொலைடர்' (எல்.எச்.சி.,) கருவியை உருவாக்குவதில் இந்தியா சார்பிலும் தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்பட்டன. இதன் கட்டமைப்பில் இந்தூரில் உள்ள "ராஜா ராமண்ணா சென்டர் பார் அட்வான்ஸ்டு டெக்னாலஜி' பங்களித்துள்ளது. "மும்பை டாடா இன்ஸ்டிடியூட் ஆப் பன்டமென்டல் ரிசர்ச்,' "டிராம்பே பாபா அணுசக்தி ஆய்வுமையம்,' பனாரஸ் இந்து பல்கலை' போன்றவையும் இந்த ஆய்வுப்பணிகளுக்குக் குறிப்பிடத்தக்க அளவு உதவியுள்ளன. இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகளில் 200க்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இந்தியா சார்பிலும் 100 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பீதி: "பிக்-பேங்' சோதனையால் பேரழிவு ஏற்படலாம் என இந்தியாவின் சில பகுதிகளில் அச்சம் நிலவியது. மேற்குவங்கத்தில் சிலிகுரி நகரில் சூரியனை சுற்றி செயற்கை வட்டம் தெரிந்ததால் மக்கள் மத்தியில் பீதி நிலவியது. இதனால், பலரும் வீட்டுக்குள் பதுங்கிவிட்டதால், சாலைகள் வெறிச்சோடின. சூரிய ஒளி பனிப்படலத்தின் இடையே ஊடுருவுவதால் தான் இத்தகைய வட்டம் உருவானதாக கோல்கட்டாவில் உள்ள பிர்லா கோளரங்கத்தின் இயக்குனர் துவாரி தெரிவித்தார். "இது வழக்கமான நிகழ்வே, இது குறித்து அச்சமடைய அவசியமில்லை' என்றார். ஒரிசாவில் உள்ள புவனேஸ்வரில் உள்ள மக்கள் "பிக்-பேங்' நிகழ்வை ஒட்டி கோவில்களுக்குச் சென்று வழிபட்டனர். "இந்த சோதனையால் பூமிக்கு ஆபத்து ஏற்படுமா என தொடர்ந்து விசாரித்ததாக' கோளரங்க இயக்குனர் சுபந்து பட்நாயக் தெரிவித்தார்.
நன்றி : 6 th sense
பிரபஞ்சம் தோன்றிய போது, ஒரு மாபெரும் வெடிப்பு நடந்ததாகவும் அந்த வெடிப்பின் போது சிதறிய துகள்களால் தான் இந்த உலகமும் உயிர்களும் உருவாகின என்பது அறிவியல் கருத்து. இதை பரிசோதித்துப் பார்க்க நீண்ட காலமாக முயற்சி நடந்த போதும், விஞ்ஞானிகள், நேற்று சோதனையை வெற்றிகரமாக நடத்தினர். "கடவுளுக்கு' இணையான ஒரு சக்தி இந்த பிரபஞ்சத்தைப் படைத்தது என்றால் - அது எது என்பதையும் விளக்கம் பெற விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர். "ஹிக்ஸ் பாசன்' எனும் துகளை விஞ்ஞானிகள் "கடவுள் துகள்' என்று அழைக்கின்றனர்.
முதன்முதலில் பிரபஞ்சம் தோன்றிய போது, நடந்த பெரிய வெடிப்பின் போது (பிக்-பேங்) இந்த துகள் 25 வினாடிகள் மட்டுமே வெளிப்பட்டதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். பின் இது பிரபஞ்சத்தின் மற்ற பொருட்களுடன் இரண்டறக் கலந்து விட்டது. தற்போது மீண்டும் செயற்கையாக "பிக்-பேங்' நடத்துவதன் மூலம் அந்த "கடவுள் துகளை' கண்டறிய முடியும் என்று விஞ்ஞானிகள் காத்திருக்கின்றனர். நேற்று துவங்கிய இந்த பரிசோதனை முடிவை உடனே தெரிந்து கொள்ள முடியாது. இதற்கு இன்னும் இரண்டு, மூன்று மாதங்கள் கூட ஆகலாம். அப்போது பிரபஞ்சம் தோன்றியது குறித்து இதுவரை பதில் கிடைக்காத சந்தேகங்களுக்கும் விடை கிடைக்கும் .
கடந்த 30 ஆண்டுகளாக இதுகுறித்து ஆய்வுசெய்த விஞ்ஞானிகள், கடந்த 2003ம் ஆண்டு கட்டுமானப் பணியைத் துவங்கினர். உலகம் முழுவதிலும் இருந்து ஒன்பதாயிரம் இயற்பியல் விஞ் ஞானிகள் இதில் கலந்து கொண்டனர். இந்த சோதனைக்காக சுவிட்சர் லாந்து - பிரான்ஸ் எல்லை அருகே "லார்ஜ் ஹாட்ரான் கொலைடர்' (மிகப்பெரிய ஹாட்ரான் துகள் மோதல் கருவி) எனும் பெரிய கருவியை ஐரோப்பிய அணு ஆய்வுக் கழகத்தை(செர்ன்) சேர்ந்த விஞ்ஞானிகள் லின் இவான்ஸ் என்பவர் தலைமையில் நிர்மாணித்தனர்.
இதற்கான செலவு 900 கோடி டாலர். வட்ட வடிவமான 27 கி.மீ., நீளம் கொண்ட சுரங்கம் போன்ற பாதையுடன் கூடியது. இந்த சுரங்க வளையத்துக்குள் அணுவின் ஒரு பகுதியான புரோட்டான் கற்றைகளை பெரிய வெடிப்புக்காகச் செலுத்தினர். இந்திய நேரப்படி, மதியம் 1 மணி 5 நிமிடத்துக்கு பரிசோதனை துவங்கியது. 1 மணி 56 நிமிடங்களுக்கு சோதனை வெற்றிகரமாக நிகழ்ந்ததற்கான புள்ளிகள் "செர்ன்' மைய கம்ப்யூட்டர் திரையில் தோன்றியது. இதனால் உற்சாகம் அடைந்த விஞ்ஞானிகள், "ஷாம்ப் பெய்ன்' பாட்டில்களைத் திறந்து வெற்றியைக் கொண்டாடினர்.
தற்போது, இடமிருந்து வலமாக துகள்கள் சுரங்க வளையத்துக்குள் வினாடிக்கு 11 ஆயிரம் தடவை சென்று வரும்படி புரோட்டான் துகள் கற்றைகளை அனுப்பியுள்ளனர். அடுத்த கட்டமாக வலமிருந்து இடமாக துகள்களை அனுப்பும் போது தான், அந்த "பெரிய வெடிப்பு' நிகழும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர். அப்போது கோடிக்கணக்கில் வோல்ட் மின்சார சக்தி வெப்பம் உருவாகி, அதில் கிடைக்கும் துகள் தான் இத்தனை நாள் காத்திருக்கும் கேள்விக்குத் தகவல் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, பிரபஞ்சம் உருவான பெரிய வெடிப்புக் கோளம் ஒரு குறுகிய நேரத்துக்கு உருவாகும் என்றும் விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர்.
பிரபஞ்சத்தில் நட்சத்திரங்கள், பால்வீதி, கிரகங்கள் என நாம் அறிந்தவை வெறும் 4 சதவீதம் மட்டுமே. மீதம் உள்ளவற்றில் 73 சதவீதம் "அறியப்படாத சக்தியாகவும்' (டார்க் எனர்ஜி), 23 சதவீதம் அறியப் படாத பருப்பொருளாகவும் (டார்க் மேட்டர்) உள்ளது. இந்த ஆய்வின் முடிவில் இது போன்ற மர்மங்கள் விலகும் என்கின்றனர் விஞ்ஞானிகள். "பிக்-பேங்' நிகழ்ந்தவுடன் அடுத்த கணத்தில் என்ன நடந்தது? புரோட்டான்கள் அழிந்து "உயிர்க் குழம்பு' எவ்வாறு உருவானது? இதுபோன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடைகாண உள்ளனர்.
விஞ்ஞானிகள் எதிர்ப்பு: இந்த ஆய்வு காரணமாக உலகமே கூட அழிந்து போகலாம் என சில விஞ்ஞானிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இவ்வாறு செயற்கை மோதல்களை நிகழ்த்துவதால், 'பிளாக் ஹோல்' எனும் கருந்துகள் உருவாகி பூமி உட்பட கிரகங்கள், சூரியன் அனைத்தையும் உள்ளிழுத்துக்கொள்ளும் என்றனர். அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் இந்த ஆய்வுக்கு எதிராக வழக்குகளும் தொடரப்பட்டன. ஆனால், கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வைக் கண்டறிய நடந்த முயற்சியில் வெற்றி பெற்ற இயற்பியல் விஞ்ஞானிகள் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
பயம் வேண்டாம்: "பிக் -பேங்' பற்றிய பயம் தேவையற் றது என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்துள்ளார். இந்த செர்ன் தளத்துக்கு தானே சென்றுள்ளதாகக் கூறிய கலாம், "இந்த ஆய்வால் எந்த ஆபத்தும் ஏற்படப் போவதில்லை, மனிதர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த இது போன்ற பரிசோதனைகள் அவசியம்' என்றார்.
ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் உட்பட உலகின் முன்னணி இயற்பியல் விஞ்ஞானிகளும் இந்த ஆராய்ச்சியை ஆதரித்துள்ளனர். இந்த புரோட்டான் துகள் கதிர்கள் அதிக திறனுடன் இருக்கும் போது, அதன் மீதான கட்டுப்பாட்டை விஞ்ஞானிகள் இழப்பதால் மட்டுமே அதிகபட்ச பாதிப்பு ஏற்பட முடியும். ஆனால், அப்போதும் அந்த கருவிக் கும், சுரங்கப் பாதைக்கும், சுற்றியுள்ள பாறைகளுக்கும் மட்டுமே பாதிப்பு ஏற்படும். உலகத்துக்கு இதனால் எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்தனர். முதற்கட்ட ஆய்வுகள் நேற்று நடந் தன. இந்த ஆய்வு 2009ம் ஆண்டுவாக் கில் தான் உச்சகட்டத்தை அடையும். அப்போது தான் தேவையான தகவல் களை முழுமை யாகப் பெற முடியும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவுக்கும் பெருமை: உலகை அதிரச்செய்த இச்சோதனை நடந்த "லார்ஜ் ஹாட்ரான் கொலைடர்' (எல்.எச்.சி.,) கருவியை உருவாக்குவதில் இந்தியா சார்பிலும் தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்பட்டன. இதன் கட்டமைப்பில் இந்தூரில் உள்ள "ராஜா ராமண்ணா சென்டர் பார் அட்வான்ஸ்டு டெக்னாலஜி' பங்களித்துள்ளது. "மும்பை டாடா இன்ஸ்டிடியூட் ஆப் பன்டமென்டல் ரிசர்ச்,' "டிராம்பே பாபா அணுசக்தி ஆய்வுமையம்,' பனாரஸ் இந்து பல்கலை' போன்றவையும் இந்த ஆய்வுப்பணிகளுக்குக் குறிப்பிடத்தக்க அளவு உதவியுள்ளன. இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகளில் 200க்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இந்தியா சார்பிலும் 100 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பீதி: "பிக்-பேங்' சோதனையால் பேரழிவு ஏற்படலாம் என இந்தியாவின் சில பகுதிகளில் அச்சம் நிலவியது. மேற்குவங்கத்தில் சிலிகுரி நகரில் சூரியனை சுற்றி செயற்கை வட்டம் தெரிந்ததால் மக்கள் மத்தியில் பீதி நிலவியது. இதனால், பலரும் வீட்டுக்குள் பதுங்கிவிட்டதால், சாலைகள் வெறிச்சோடின. சூரிய ஒளி பனிப்படலத்தின் இடையே ஊடுருவுவதால் தான் இத்தகைய வட்டம் உருவானதாக கோல்கட்டாவில் உள்ள பிர்லா கோளரங்கத்தின் இயக்குனர் துவாரி தெரிவித்தார். "இது வழக்கமான நிகழ்வே, இது குறித்து அச்சமடைய அவசியமில்லை' என்றார். ஒரிசாவில் உள்ள புவனேஸ்வரில் உள்ள மக்கள் "பிக்-பேங்' நிகழ்வை ஒட்டி கோவில்களுக்குச் சென்று வழிபட்டனர். "இந்த சோதனையால் பூமிக்கு ஆபத்து ஏற்படுமா என தொடர்ந்து விசாரித்ததாக' கோளரங்க இயக்குனர் சுபந்து பட்நாயக் தெரிவித்தார்.
நன்றி : 6 th sense
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
![பிரபஞ்ச ரகசியங்களை அறிய விஞ்ஞானிகள் நடத்திய சோதனை வெற்றி Knight](https://2img.net/h/www.webdeveloper.com/animations/bnifiles//knight.gif)
முத்துராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
Re: பிரபஞ்ச ரகசியங்களை அறிய விஞ்ஞானிகள் நடத்திய சோதனை வெற்றி
நன்மையடைய விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள்.
இது அழிவுக்கு வழிவகுக்காமல் இருந்தால் சரி.
இது அழிவுக்கு வழிவகுக்காமல் இருந்தால் சரி.
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: பிரபஞ்ச ரகசியங்களை அறிய விஞ்ஞானிகள் நடத்திய சோதனை வெற்றி
முதற்கட்ட ஆய்வுகள் நேற்று நடந் தன. இந்த ஆய்வு 2009ம் ஆண்டுவாக் கில் தான் உச்சகட்டத்தை அடையும். அப்போது தான் தேவையான தகவல் களை முழுமை யாகப் பெற முடியும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.[quote]
இந்நிகழ்வினைப்பற்றி அனைவரும் அறிந்ததே.இங்கு குறிப்பிட்டுள்ள திகதி படி இக்கட்டுரை சில வருடங்களுக்கு முன்பே வந்ததா நண்பரே ?
இந்நிகழ்வினைப்பற்றி அனைவரும் அறிந்ததே.இங்கு குறிப்பிட்டுள்ள திகதி படி இக்கட்டுரை சில வருடங்களுக்கு முன்பே வந்ததா நண்பரே ?
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» "பிரபஞ்ச' ரகசியத்தை அறிய விஞ்ஞானிகள் ஆர்வம்
» இந்தியா 1998ல் நடத்திய அணுகுண்டு சோதனை முழு வெற்றி பெறவில்லை
» இந்தியா பொக்ரானில் அணு சோதனை நடத்திய நாள்: மே 11- 1998
» நோயை அறிய தோல் சோதனை
» போலீஸ்காரர் வேடம் அணிந்து வாகன சோதனை நடத்திய கொள்ளை கும்பல்
» இந்தியா 1998ல் நடத்திய அணுகுண்டு சோதனை முழு வெற்றி பெறவில்லை
» இந்தியா பொக்ரானில் அணு சோதனை நடத்திய நாள்: மே 11- 1998
» நோயை அறிய தோல் சோதனை
» போலீஸ்காரர் வேடம் அணிந்து வாகன சோதனை நடத்திய கொள்ளை கும்பல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|