ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வால்மீகிக்கு நாரதர் செய்த உபதேசம் ???

Go down

வால்மீகிக்கு நாரதர் செய்த உபதேசம் ??? Empty வால்மீகிக்கு நாரதர் செய்த உபதேசம் ???

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா Thu Dec 06, 2012 8:40 pm

வால்மீகி கொள்ளை தொழில் செய்பவர் ! கானகம் சென்று அங்கு தனித்து வரும் மனிதர்களை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பது அவரது வாடிக்கை ! அந்த பணத்தை அவரது மனைவியிடம் கொடுத்து தனது வயதான தாய்தகப்பன் மனைவி பிள்ளைகளை வளர்த்து வந்தார் ! தனது குடும்பத்தை பராமரிக்கவே இந்த தொழிலை செய்வதாக சுய நியாயத்தை தேடிக்கொள்வார் ! மிரட்டுவாரே தவிற யாரையும் கொண்றதில்லை ! தன்னைப்பார்த்து பயப்படும்படியாக உருவத்தில் பயங்கரத்தை அமைத்துக்கொள்ளுவார் ! இந்த கதை கர்ண பரம்பரையாய் பலர் சொல்ல நான் கேள்விப்பட்டிருக்கிறேன் !

ஒரு நாள் அந்த கானகம் வழியாய் நாரதர் வந்தார் !

வழக்கம் போல அவரை மறித்து வால்மீகி ``உயிர் மேல் ஆசை இருந்தால் இருப்பதை கொடுத்துவிடு ``என மிரட்டினார் !

நாரதர் `` சரி கொடுத்துவிடுகிறேன் ! ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன் என்றார் ``

ம்..ம்,,,

இந்த தொழிலால் உனக்கு பாவம் வரும் அது உன் பிறவியை பல பிறவிகளுக்கு கெடுத்துவிடாதா ?

இது என் குலத்தொழில் ! நான் என் குடும்பத்தை பராமரிக்கவே இதை செய்கிறேன் !

அப்ப்டியா ? நான் இதே இட்த்தை விட்டு நீ வராமல் நகர மாட்டேன் என சத்தியம் செய்கிறேன் ! இந்த வழிப்பறியால் வரும் பாவத்தை உன் குடும்பத்தினர் உன்னோடு பங்குபோட்டு அனுபவிக்க சம்மதீபார்களா என கேட்டு விட்டு வா !

நான் அவர்கள் மீது வைத்துள்ள பாசத்தை போல பல மடங்கு அவர்கள் என் மீது வைத்துள்ளனர் ! நான் ஒருவனே பாடுபட்டு அவர்களை தாங்குகிறேன் குடித்து கூத்தடிப்பதில்லை ! சுய நல வாதியாய் இல்லை !

சரி ! போய் கேட்டு வா !

வால்மீகி வீட்டிற்கு சென்று ஒவ்வொருவரிடமும் கேட்கிறார் !

சம்பாதிப்பது உனது கடமை ! நீ எப்படி சம்பாதிக்கிறாய் என்பதற்கு நீயே பொறுப்பு ! அதில் வருகிற பாவத்திற்கும் எங்களுக்கு சம்பந்தமில்லை என அனைவரும் சொல்லி விடுகின்றனர் !

மனம் குத்தப்பட்ட வால்மீகி நாரதரிடம் சென்று `` முனிவரே எனக்கு நல்ல வழி காட்டுங்கள் `` குடும்பத்திற்காக செய்வதால் இது பாவமில்லை என நினைத்திருந்தேன் ! அதற்கும் எங்களுக்கும் சம்மந்தமில்லை என அவர்கள் சொல்லி விட்டனர் ! இப்போது நான் செய்த பாவங்கள் எனது மனக்கண்ணில் வந்து உருத்துகிறது ! பாவங்கள் தீர்க்க வழி சொல்ல வேண்டும் ``

மண்ணுலகில் பாவங்களை தீர்க்கும் அதிகாரம் கடவுளின் பிரதினிதியாய் வருகிற குமாரனுக்கு அருளப்பட்டுள்ளது ! ராமா ராமா என்று ஜபிக்க ஜபிக்க உன் பாவங்கள் தீரும்

வால்மீகியால் ராமா ராமா என ஜபிக்க நாக்கு வரவில்லை ஏனென்றால் அவர் தெற்று வாய ! ராமா ராமா என வராததால் ``மரா மரா `` என ஜபிக்க சொன்னார் !

அப்படி நாரதரால் உணர்த்தப்பட்ட வால்மீகி தியானத்தில் அமர்ந்து மரா மரா என ஜபிக்க அது ராமா ராமா என மாறியது ! அந்த ஜபத்தில் மூழ்கி அவரை சுற்றி புற்று வளருமளவு அவர் ஜபத்தில் மூழ்கியதால் அவருக்கு ஞானம் உண்டாகி வால்மீகி மகரிஷியாய் மாறினார் ! ராமாயணம் அக்காலங்களில் கிராமிய நாடகங்களாக மட்டுமே இருந்ததை ஞானதிருஸ்ட்டியில் உணர்ந்து ராமாயண காவியம் பாடினார் !

ராம மந்திர ஜபம் என்பது கோடி பாவம் தீர்க்கும் என்பது அணுபவத்தில் பலரால் நிரூபணமான உண்மையாகும் !

இது இந்தியரின் இதயத்தில் உறைந்த உண்மை !

இந்த உண்மை உலகம் முழுமையும் ஏற்றுக்கொள்ளப்பட்ட்து ! உலகிலுள்ள பல மொழிகளிலும் இந்த ராமாயணம் கிராமிய நாடகங்களக இருந்து வந்துள்ளது ! இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை !

ஆதி மனிதர்களான லெமூரியாக்கண்ட்த்து தமிழர்களே உலகம் முழுமையும் பரந்து விரிந்தனர் !

அங்கு கடவுளின் பிரதினிதியாக யுக புருஷன் ராமன் அவதரித்து தர்மத்தையும் ஏக இறைவனுக்கு மட்டுமே வழிபாடு என்பதையும் நிலைனாட்டினார் !

கடவுளை வழிபடுவதற்கு பதில் தங்களின் மூன்னோர்களை - முதல் மனிதனை கடவுளுக்கு இணை வைத்து - குல தெய்வ வழிபாட்டை மனிதர்களின் மத்தியில் அசுரர்கள் பிரபலப்படுத்தி வந்தனர் ! அசுரர்களை உபவாசித்து அவர்களின் அபிசேகம் பெற்று அரக்கர்களாக சிலர் வல்லமை பெற்று உலகை ஆண்டனர் !

இறை அச்சம் உள்ளவர்களாய் கடவுளை தேடிய வசிஸ்ட்டர் முதலான திராவிட ஞானிகளின் தபோவனங்களை தாக்கவும் செய்தனர் ! அவர்களின் வேண்டுதலின் பயனாய் கடவுளின் பிரதினிதியாக - இறைதூதராக யுக புருஷன் பூமிக்கு வந்ததே ராம அவதாரமாகும் !

ராமன் என்றால் குமாரன் - பிரதினிதி என்பது பொருள் !

இந்த பூமியையும் படைப்பினங்கள் அனைத்தையும் கடவுள் யார் மூலம் படைத்தாரோ அவரே யுக புருஷன் ! பூமியில் அதர்மம் மிகும்போதெல்லாம் யுக புருஷன் பூமிக்கு வந்து மீண்டும் தர்மத்தை நிலைனாட்டி கடவுளோடு ஒப்புறவாக்குகிறார் ! அவர் கடவுளின் பிரதினிதி --- குமாரன் ஆனால் கடவுளல்ல !

ஆதி சமூகமான திரேதா யுக தமிழர்கள் லெமூரியாக்கண்டத்தில் வாழ்ந்தபோது பூமிக்கு வந்தவரே ராமன் !

இலங்கை ‘ ராமர் பாலம் ; சேதுக்கரை ; வாலினோக்கம் ; சபரிமலை ஆகியவற்றை நேர்கோடாக கொண்ட லெமூரியாக்கண்டத்து அயோத்தி - வட நாட்டு அயோத்தியல்ல - ராமர் அவதரித்த இடமாகும் !!

லெமூரியாக்கண்டத்து மத்தியில் உயர்ந்த மேரு மலையும் அதிலிருந்து குமரியாறு ; பஹ்ருளியாறு போன்ற வற்றாத ஜீவனதிகள் பாய்ந்த பூமி !

ராமரின் அவதார மஹிமை அறிந்த வசிஸ்ட்டர் அவர் சிறுவனாய் இருந்தபோதே அவரை அழைத்து சென்று தபோவனத்தை தாக்க வந்த அரக்கர்களை அழிக்க ஊக்குவித்தார் ! ராவணேசுரனை வதை செய்த வரை ராமரால் பல அரக்கர்கள் அழிக்கபட்டனர் !

வால்மீகி காலம் வரை ராமாயணம் செவிவழி செய்தியாகவும் கிராமிய நாடகங்களாகவும் இருந்தது இவற்றையெல்லாம் ஞான திருஸ்ட்டியுடன் உணர்ந்து வால்மீகி ராமாயணம் வடித்தார் ! அதில் ராமன் யுக புருஷனாக - சற்குருவாக ; மனிதனுக்கும் கடவுளுக்கும் பாலமாக சித்தரிக்கபட்டாரே தவிற கம்ப ராமாயணத்தில் கதானாயகனை உயர்த்திக்காட்டுகிற கவிப்புலமையால் கடவுளுக்கு இணை வைத்ததைப்போல வால்மீகி இணை வைக்கவில்லை ! ஏனென்றால் வால்மீகி மகரிஷி என்ற யோகிக்கும் கவிப்புலமையால் காவியம் பாடிய கம்பனுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது !

வால்மீகி ராமாயணத்தில் வராத பல சம்பவங்கள் கிராமிய ராமாயண நாடகங்களாக தமிழகத்தில் இன்றும் உள்ளன ! தமிழகத்தில் மட்டுமல்ல பல நாடுகளிலும் ராமாயண நாடகங்கள் உள்ளன ! உலகம் முழுமையும் அதிக மொழிகளில் உள்ள நாடகம் ராமாயணம் மட்டுமே ! இது எதனாலென்றால் ஆதிமனித சமூகமான லெமூரியாக்கண்டத்து தமிழ் சமூகமே பல நாடுகளுக்கும் பரவி ஆதி ஐந்து அடிப்படை மொழிகளாய் மறுவியது ! ஆதி ஐந்து அடிப்படை இனங்களும் தமிழ் இனத்திலிருந்து பரிணமித்ததே !

இனம்---------- மொழி

தமிழ்---------- தமிழ் முதலான தென்னிந்திய மொழிகள்

சமஸ்கிரதம்-------------- இந்தி முதலான வட இந்திய மொழிகள்

லத்தீன்---------------- ஆங்கிலம் முதலான ஐரோப்பிய மொழிகள்

ஆரியம்---------------- அரேமிய பெர்சிய யூத அரேபிய ஆப்ரிக்க

------------ -------------- --------------மொழிகள்

மங்கோலியம்---------------- சீன ஜப்பானிய மொழிகள்


லெமூரியாக்கண்டம் என்பது குமரிக்கு தெற்கே ஐந்து கண்டங்களையும் தொட்ட நிலப்பரப்பாய் இருந்ததால் மனிதர்கள் பரவி சென்று வாழ்ந்தனர் ! ஆகவே ராமாயணம் சிலசில மாற்றங்களுடன் பல நாடுகளிலும் உள்ளது !

இந்த ராமாயணத்தின் அடிப்படை பூமியில் மனிதர்கள் சுயபெருமை பாராட்டி தங்கள் முன்னோர்களை கடவுளுக்கு இனை வைத்து அசுரர்களின் உபதேசங்களுக்கு ஆட்பட்டு இச்சைகளின் வழி வாழ்ந்து அதர்மம் மிகும் போதெல்லாம் யுக புருஷனானவர் பூமியில் அவதரித்து மீண்டும் இறைபேரரசை நிலை நாட்டுவார் என்பதாகும் ! கடவுளின் பிரதினிதியான அவரை சற்குருவாய் ஏற்று கடவுளுக்கு மட்டும் வழிபடுபவர்களாய் மனிதர்கள் மாறவேண்டும் என்பதே !

கீதை 4:6 நான் பிறப்பற்றவனாகவும்; அழிவற்ற எனது ஆத்துமசரீரம் நித்தியஜீவனுள்ளதாகவும் இருந்தாலும் நான் அதனை தாழ்த்தி யுகங்கள் தோறும் இப்பூமியில் அவதரிக்கிறேன்! எனென்றால் நானே இப்பூமிக்கு கடவுளின் பிரதிநிதியும்; பூமியில்உள்ள அனைத்து உயிரிணங்களின் யுகபுருஷனும் ஆவேன்!!

கீதை 4:7 எப்போதெல்லாம் எப்போதெல்லாம் ஆண்மீக மதிப்பீடுகள் தொய்வடைந்து அதர்மம் தலைவிரித்தாடுகிறதோ அப்போதெல்லாம் நான் பூமிக்கு இறங்கி வருகிறேன்!!

கீதை 4:8 பக்தர்களை ரட்சிக்கவும் தீமை புரிந்து பூமியில் குழப்பம் செய்வோரை அழிக்கவும் மீண்டும் தர்மத்தை நிலைநாட்டவும் யுகங்கள்தோறும் யுகங்கள்தோறும் இப்பூமியில் அவதரிக்கிறேன் !!

யுகங்கள் தோறும் பூமிக்கு வருகிற - இதுவரை வந்த ராமன் மூவரே ! -மூவரும் ஒருவரே !


திரேதா யுகத்தில் ராமன் !

துவாபர யுகத்தில் கிருஷ்ணர் !

கலியுகத்தில் இயேசு !

கலியுகம் பிறக்க போவதைப்பற்றி பாண்டவர்களுக்கு முதல் முதலில் உபதேசித்தவர் கிருஷ்ணரே ! கலியுக முடிவில் நியாயத்தீர்ப்பு செய்து சத்திய யுகத்தை நிறுவ கல்கியாக தாம் வானத்தின் வழியாக வரப்போவதாகவும் அறிவித்தார் !

இயேசுவும் யுக முடிவில் நியாயத்தீப்பு செய்ய தாமே இரங்கி வரப்போவதாக சொல்லிவிட்டு பரமேறி சென்றார் !

யானையை தடவிய குருடர்கள் போன்ற மதவாதிகள் இருவரையும் வேறுவேறு நபர் என எடுத்துக்கொண்டு சண்டை போட்டுக்கொண்டுள்ளனர் !

யுக புருஷனானவர் கலியுகத்தில் இயேசுவாக வந்து தன் மூலமாக உண்டாகி தனக்குள் நிலைபெற்றுள்ள மனித குலத்தின் பாவங்கள் அனைத்திற்கும் பாவ பரிகாரம் செய்தார் என்பது உண்மை !

யோவான் 1:3 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.

தன்னை உணர்ந்து மனம் திருந்தி கடவுளை தேடுகிற ஆத்துமாக்கள் யாரோ அவர்களுக்கு சற்குருவான யுக புருஷன் அவர்களின் பழம்பாவங்கள் அவர்களை பிடித்து பின்னோக்கி இழுத்து இம்சை செய்யாதபடி - அல்லது ஆயிரம் தீமைகள் செய்தாலும் அடுத்தவர் குறைகளை குற்றமாக சுமத்தி மனிதனை மட்டம் தட்டுகிற அசுர ஆவிகள் முன்னேறுகிற சாதகனை குற்றப்படுத்தாத படியாக சற்குருவான யுகபுருஷன் பவப்பரிகாரம் செய்தாயிற்று !

கடவுளைத்தேடுகிற எல்லோருக்கும் இயேசுவின் பரிகாரம் பக்கபலம் அளிக்கிறது ! மதவாதிகள் மிகைப்படுத்துவது போல மதம் மாறி வெள்ளைக்காரர்கள் பெயரை வைத்துக்கொள்ள வேண்டும் ; பாடத்தெறிந்ததால் பாஸ்ட்டராகிய ஒருவருக்கு அடிமையாகி கானிக்கை கொடுத்து தண்ணீரில் மூழ்க வேண்டும் ; அப்போது மட்டுமே இயேசுவின் பாவப்பரிகாரத்தின் பலன் ஒருவருக்கு கிடைக்கும் என்பது அவசியமேயில்லை !

மனம் கடவுளை நோக்கி திரும்பினாலே போதுமானது ! இயேசுவின் பாவப்பரிகாரம் அவர்களுக்கு பக்கபலம் கொடுக்கும் ! ஒவ்வொரு மனிதனும் பதிலுக்கு பதில் அனுபவித்துதான் தீர்க்கவேண்டும் என்றால் அதற்கு பல பிறவிகள் போதாது ; அந்தளவு மனித இனம் பாவங்களுக்கு அசுர்ர்களால் வழினடத்தப்படுகிறது !

இப்போது பாரம் தூக்க வண்டிகள் உள்ளன ! பார வண்டிகள் இல்லாத காலங்களில் மனிதர்களே பாரம் சுமந்தார்கள் ! அந்த நாட்களில் வழியெங்கும் ஆங்காங்கே ``சுமைதாங்கிகல்லை`` நட்டு வைத்திருப்பார்கள் ! அறுப்பு திருவிழாவின் போது கிராமத்தினர் அதற்கு சந்தனம் வைத்து தீபம் காட்டுவார்கள் ! அந்த கல் இயேசுவுக்கு அடையாளமானது !

பாவம் அதிகம் செய்யாத ஆத்துமா ஓடியாடி சம்பாதிக்கும் ; அழும்பும் செய்யும் பிறரை அடக்கி ஒடுக்கும் !காலமும் ஓடும் ; பல பிறவிகளில் பாவம் முற்றிய ஆத்துமாக்களோ அடிஉதை படும் ! தொட்டதெல்லாம் துயறம் தரும் ! அந்த ஆத்துமாக்கள் யுகபுருஷனை குருவாக வைத்து கடவுளை தொழதொடங்கினால் போதும் அவர்களின் பாரம் குறையும் ! விடுதலை உண்டாகும் ! பாவங்கள் உணர்த்தப்பட்டு தன்னை உணர்வதால் ஞானமாக பக்குவமடையும் ! !

கலாத்தியர் 3:13 மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.

நீண்ட நாளாக வாத நோயால் படுத்தபடுக்கையாய் இருந்த ஒருவரை இயேசு குணப்படுத்திய ஒரு சம்பவம் சித்தரிக்கபடுகிறது :

மத்தேயு: 9
2. அங்கே படுக்கையிலே கிடந்த ஒரு திமிர்வாதக்காரனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.

3. அப்பொழுது, வேதபாரகரில் சிலர்: இவன் தேவதூஷணம் சொல்லுகிறான் என்று தங்கள் உள்ளத்தில் சொல்லிக்கொண்டார்கள்.

4. இயேசு அவர்கள் நினைவுகளை அறிந்து: நீங்கள் உங்கள் இருதயங்களில் பொல்லாதவைகளைச் சிந்திக்கிறதென்ன?

5. உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, எழுந்து நடவென்று சொல்வதோ எது எளிது?

6. பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்றார்.

7. உடனே அவன் எழுந்து, தன் வீட்டுக்குப்போனான்.


இங்கு குணமாக்குவது என்பது சித்தர்கள் ஆற்றல் அல்ல ! மந்திரதந்திரமுமல்ல ! பாவங்கள் மண்ணிக்கபட்டால் மட்டுமே அந்த பாவத்தால் உண்டான நோயை குணப்படுத்தமுடியும் என்பதை இயேசு வெளிப்படுத்துகிறார் ! பல நாள் தவம் செய்து சித்தர்களின் அருள் பெற்று மூலிகைகளை கண்டறிந்து சித்தராக மாறுவது என்பதாக இப்போது அறிவு ஜீவிகளின் மத்தியில் நவீன நாத்திகவாதம் கலைகட்டிக்கொண்டுள்ளது ! சித்தர்கள் ஆற்றல் என்பது தற்காலிகமானது ! நிரந்தரமானது தன்னை உணர்ந்து யுகபுருஷன் மூலமாக கடவுளிடம் பாவமண்ணிப்பு பெற்று ஞானமடைவது மட்டுமே !

மண்ணுலகிற்கு கடவுளின் பிரதினிதியானவரும் (குமாரன்) இந்த லோகம் யார் மூலமாக படைக்கபட்டு யாருக்குள் சகலமும் நின்றும் இயங்கியும் அழிந்தும் வருகிறதோ அந்த யுகபுருஷன் மூலமாகவே கடவுளிடம் பாவபரிகாரம் பெற முடியும் ! அதற்கு பிரயச்சித்தம் செய்யவே கலியுகத்தில் குமாரனாகிய ராமன் இயேசுவாக அவதரித்தார் !

யோவான் 6:40 குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ அவன், நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார்.

யோவான் 8:36 ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்,

மத்தேயு 11:27 சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது. பிதா தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனும் தவிர, வேறொருவனும் பிதாவை அறியான்.


நாரதர் வால்மீகிக்கு ``மரா மரா `` என்ற மந்திரத்தை ஜபிக்கும்படியாக உபதேசித்ததன் மறைபொருள் இதுவே ! மறைபொருளை விளங்கிக்கொள்ள முடியாதவர்கள் அதற்கு சப்பைகட்டாக ஒரு கதையை கட்டிவிட்டனர் ! வால்மீகிக்கு தெற்று வாய் ! ராமா ராமா என உச்சரிக்க வரவில்லை அதனால் மரா மரா என உச்சரிக்க சொன்னார் என்று ! மரா மரா என உச்சரிக்க முடிந்தால் ராமா ராமா என உச்சரிக்க முடியாதா என்ன ?

மறைபொருளாவது :

மரா மரா என்றால் மரத்திலே தூக்கபடுகிற ராமா மரத்திலே துக்கப்படுகிற ராமா என்பதாகும் ! மரத்திலே தூக்கபடுகிற ராமனால் மனிதர்களுக்கு பாவபரிகாரம் உண்டாகும் என்பதுவே நாரதரின் உபதேசமாகும் ! மரத்திலே தூக்கபட்ட ராமா என்ற ஜபமே கொள்ளையன் வால்மீகியை பரிசுத்தமாக்கி வால்மீகி மஹரிஷியாய் மாற்றியது !

இந்த மறைபொருள் உணர்த்தப்பட்ட்தால் அடியேனும் அதை நீண்ட நாளாக பயன்படுத்தி வருகிறேன் !

ராமர் நாமத்தினால் கடவுளே !

கிருஷ்ணர் நாமத்தினால் கடவுளே !

இயேசு நாமத்தினால் கடவுளே ! உம்மை துதிக்கிறேன் !

என வேண்டி உயிரில் ஒன்றி தியானத்தில் மூழ்கி விடுவேன் ! தியான முடிவில் ராமர் கிருஷ்ணர் இயேசு நாமத்தால் கடவுளிடம் எனது பிரார்த்தனைகளை வைத்து முடித்து கொள்வேன் !

ராம நாமமே பாவத்தை போக்கவல்லது ! அந்த ராம நாமத்தின் மூலமாக கடவுளை வேண்டுவதே மனிதர்கள் உய்வடையும் வழி !

ஏக இறைவன் நம் மனக்கண்ணை திறந்தருளுவாராக !!!
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011

http://kirubarp.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum