Latest topics
» வலைவீச்சு- ரசித்தவைby ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
''இன்னும் எத்தனை பேரை கொல்லப் போறீங்க?'' - ஜூ.வி
3 posters
Page 1 of 1
''இன்னும் எத்தனை பேரை கொல்லப் போறீங்க?'' - ஜூ.வி
''இன்னும் எத்தனை பேரை கொல்லப் போறீங்க?'' |
|
''இது அரசு சார்பாகச் செல்லும் குழுவல்ல... தி.மு.க. கூட்டணியின் சார்பாக சென் றிருக்கும் குழு. அக்கறையிருந்தால் எதிர்க்கட்சி எம்.பி-க்களும் செல்லலாம்!'' என்ற விளக்கங்களுக்கு இடையே ஐந்து நாள் பயணமாக இலங்கையில் இருக்கிறார்கள் நம்மூர் எம்.பி-க்கள்! 'வருவது யார் சார் பாக இருந்தாலும் சரி... வேதனைகளைக் கொட்டித் தீர்ப்போம்' என்று முகாம்களில் முடக்கப்பட்டிருக்கும் மூன்று லட்சம் தமிழர்கள் இவர்களுக்காகவேஆவலோடு காத்திருந்தார்கள். இலங்கையின் தமிழ் எம்.பி-க்களும் சிங்கள அரசின் திட்டமிட்ட இனவெறித் தாண்டவங் களைப் பட்டியலிடக் காத்திருந்தார்கள். திங்கள் கிழமையன்று மாலை இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை சந்திக்க இந்த எம்.பி-க்கள் குழு நேரமும் குறித்துவிட்ட நிலையில்... கோபாவேசத்தில் பொங்கத் தொடங்கிவிட்டார்கள் ஈழத் தமிழர்கள். கொழும்பில் இருக்கும் தமிழ் உணர்வாளர்கள், ''முகாம்களில் வதைபடும் தமிழ் மக்களின் வேதனைகளை அறியத்தான் தமிழக எம்.பி-க்கள் இங்கே வருகிறார்கள் என நினைத்தோம்,ஈழ விவகாரத்தில் அக்கறை கொண்ட கனிமொழியும், திருமாவளவனும் அந்தக் குழுவில் இருந்ததால், மத்திய அரசின் பார்வைக்கு மக்கள்
இலங்கையின் தமிழ் எம்.பி-க்களை ஒன்றரை மணி நேரம் சந்தித்துப் பேசிய தமிழக குழு, முகாம்களில் தமிழ் மக்களுக்கு எதிராக நடக்கும் அனைத்து விதமான கொடுமை களையும் குறித்துக் கொண்டது. முகாம்களில் இருக்கும் இளைஞர்கள் சித்ரவதை செய்யப் பட்டும், இளம்பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டும் கொல்லப்படுகிற விஷயங்களைக் கேட்ட தமிழக எம்.பி-க்கள் ஒரு கட்டத்தில் கண்கலங்கினார்கள். ஆனால், 'அப்படியெல்லாம் நடக்கிறதா?' என பெயரளவுக்குக்கூட முகாம் மக்களிடம் ஆறுதலாக அவர்கள் விசாரிக்கவில்லை. சித்ரவதை நிகழ்த்தப்படும் முகாம்களை நேரடி ஆய்வு செய்வதற்கு பதிலாக, சிங்கள அரசு சுட்டிக் காட்டிய முகாம்களுக்கே அந்த குழு சென்றது. அங்கிருந்த மக்களிடம்கூட பெரிதாக ஏதும் விசாரிக்கவில்லை. வவுனியாவில் உள்ள எட்டு முகாம்களுக்குச் சென்ற எம்.பி-க்கள் குழு, 'சிங்கள அரசு எங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடும் விதிக்கவில்லை. பூரண சுதந்திரத்தோடு நாங்கள் சுற்றிப் பார்த்தோம்' என மீடியாக்களிடம் முழங்கியது. தண்ணீரைக்கூட அளந்து கொடுக்கும் சிங்கள அரசின் சித்ரவதைகள் பற்றி எலும்பும் தோலுமாகச் சிதைந்து கிடக்கும் எங்கள் மக்களைக் கண்ணால் காணும்போதே தெரியும். அப்படியிருந்தும் சிங்கள அரசால் பயிற்று விக்கப்பட்ட சிலர் ஒப்பித்த விஷயங்களை மட்டுமே கேட்டு, தமிழக எம்.பி-க்கள் ஏமாறலாமா? இதோடு கிழக்கு மாகாணத்தின் முதல்வரான பிள்ளையான், இலங்கை மந்திரியான டக்ளஸ் தேவானந்தா போன்றோரையும் சந்திக்க வைத்த சிங்கள அரசு, தமிழக எம்.பி-க்களிடத்தில்தவறான தகவல்களை அவர்கள் மூலம் பரப்பியுள்ளது.இதையெல்லாம் பார்க்கும்போது தமிழகக் குழுவால் எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை என்பது எங்களுக்கு விளங்கிவிட்டது!'' என்று வேதனையைக் கொட்டித் தீர்த்தனர் இந்ததமிழ்உணர்வாளர்கள். இதற்கிடையில் யாழ் பல்கலைக்கழகத்துக்குச் சென்ற தமிழக எம்.பி-க்கள் குழுவை, அங்கிருந்த மாணவர்கள் சூழ்ந்து கொண்டு ஆவேசப்பட்டிருக்கிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ் பத்திரிகையாளர்கள் சிலர், ''ஆறுமுகம் தொண்டமானுடன் யாழ்ப்பாணம் கோட்டையில் ஹெலி காப்டரில் வந்திறங்கியது எம்.பி-க்கள் குழு. தந்தை செல்வாவின் சிலைக்கு மாலை அணிவித்த அவர்கள், யாழ் பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்துப் பேசினார்கள். 'போர் நடந்த நேரத்திலெல்லாம் வேடிக்கை பார்த்து விட்டு இப்போது ஏன் வந்தீர்கள்?' என ஒரு மாணவன் கண்ணீரோடு கேள்வி எழுப்ப, அடுத்த கணமே மற்ற மாணவர்களும் ஆவேசப்பட ஆரம்பித்து விட்டார்கள். 'இந்தியாதான் போரை நடத்தியது. அதனைத் தமிழகம் தட்டிக் கேட்கவில்லை' என கோஷங்கள் கிளம்ப... சில மாணவர்கள் தி.மு.க-வின் இரண்டு முக்கிய எம்.பி-க்களை முற்றுகையிட்டு, 'ராஜீவ் காந்தி கொலையை மனதில் வைத்து இன்னும் எத்தனை ஆயிரம் தமிழ் உயிர்கள் பறிபோகக் காரணமாக இருக்கப் போகிறீர்கள்?' என கோபத்துடன் கேள்வி எழுப்பினார்கள். கனிமொழி, 'உங்களின் உணர்வுகளை அவசியம் மத்திய அரசுக்குத் தெரியப் படுத்துகிறேன்' என்றார். இதற்கிடையில், 'உங்களிடம் எதையும் வெளிப்படையாகச் சொல்ல முடியாத நிலையில் நாங்கள் இருக்கிறோம். எங்கள் மக்களின் நிலையை இந்தக் கடிதத்தில் சொல்லி இருக்கிறோம். இதை இந்திய பிரதமரிடம் எப்படியாவது சேர்த்து விடுங்கள்' எனச் சொல்லி அகதி முகாம்களின் நிலையை அவசரகதியில் எழுதி யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தைச் சேர்ந்தவர்கள், தமிழக குழுவிடம் கடிதம் ஒன்றைக் கொடுத் தார்கள். அதில், 'முகாம்களில் தவிக்கும் ஈழத்தமிழ் மக்களை தயவுசெய்து நேரில் போய்ப் பாருங்கள். அவர்களின் நிஜமான வலியை உணருங்கள். அலைந்து திரியும் எம்மக்களுக்கு வாழ்வுரிமை பெற்றுக் கொடுங்கள்' என உருக்கமாக வேண்டி இருந்தார்கள். இதற்கெல்லாம் தமிழக எம்.பி-க்கள் எந்தள வுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் போகிறார்கள் என்று அவர்கள் இந்தியா திரும்பியதும் பார்க்கத்தானே போகிறோம்!'' என்றார்கள் பத்திரிகையாளர்கள். தமிழக எம்.பி-க்கள் குழுவின் நடவடிக்கைகள் குறித்து இலங்கை தமிழ் எம்.பி-க்கள் சிலரிடம் பேசினோம். ''தமிழக குழுவுக்கு போகிற இடமெங்கும் எதிர்ப்பு நிலவியது. ஈழப் போருக்கு பிரதான காரண மாக காங்கிரஸையும் தி.மு.க-வையும்தான் எங்கள் மக்கள் நினைக்கிறார்கள். அவர்களின் கோபம் இன்னும் ஆறவில்லை. வவுனியா முகாமுக்கு தமிழக எம்.பி-க்கள் சென்றபோது, அங்கிருந்த மக்கள் பலரும் பேசவே தயங்கினார்கள். ஒரு சிலர் மட்டும், 'சீக்கிரமே மழை சீஸன் வரப் போகிறது. அதற்குள் எங்களை இங்கிருந்து சொந்த இடத்துக்கு அனுப்பி வையுங்கள். இல்லையேல் மழையே எங்களின் உயிரைக் குடித்துவிடும்!' எனக் கெஞ்சினார்கள். முகாமில் இருந்த குழந்தைகளின் நிலையைக் கண்டு எம்.பி-க்கள் கண் கலங்கிப் போனார்கள். ஒரு எம்.பி. அடக்க முடியாமல் கதறி அழுதார். உலக நாடுகளின் உதவிகளை இழந்து தவிக்கும் இலங்கை அரசோ, தமிழக எம்.பி-க்கள் கொடுக்கும் அறிக்கை மூலமாகத் தங்களின் கறையைத் துடைத்து வீசிவிட முடியும் என நம்புகிறது. பொறுத்திருந்து பார்ப்போம், என்ன நடக்குமென்று!'' என்றார்கள். 10 பேர் குழுவில் இடம்பெற்ற ஒரு எம்.பி-யிடம் பேசினோம். ''எக்காரணம் கொண்டும், தனிப்பட்ட முறையில் மீடியாக்களிடம் பேசக் கூடாது என எங்களுக்கு வலியுறுத்திச் சொல்லப்பட்டிருக்கிறது. அதையும் மீறிச் சொல்வதானால், முகாம்களில் அடைபட்டிருக்கும் தமிழர்களின் நிலையைக் கண்டு நெஞ்சே கலங்கிப் போனது. போதுமான உணவோ, மருத்துவ வசதியோ இல்லாமல் அங்கே தவிக்கிற மக்களின் நிலையைக் கண்டிப்பாக தமிழக முதல்வரிடம் எடுத்து வைப்போம்!'' என்றார் அவர். மூன்றுநாள் பயணம்தான் முடிந்திருக்கிறது. அடுத்த இரண்டு நாட் களில் ஏதும் அற்புதம் நடக்குமா என்று காத்திருப்போம்! | ||
|
Re: ''இன்னும் எத்தனை பேரை கொல்லப் போறீங்க?'' - ஜூ.வி
இவர்கள் சொத்துக் கொடுத்தாலே போதும் இலங்கை தமிழர்களின் தற்போது நிலைமாற சொய்வார்களா...?
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: ''இன்னும் எத்தனை பேரை கொல்லப் போறீங்க?'' - ஜூ.வி
Tamilzhan wrote:இவர்கள் சொத்துக் கொடுத்தாலே போதும் இலங்கை தமிழர்களின் தற்போது நிலைமாற சொய்வார்களா...?
Similar topics
» இன்னும் எத்தனை நாடகங்கள்?
» இன்னும் எத்தனை பேரோ....
» இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு
» இன்னும் எத்தனை பேரோ....
» இன்னும் எத்தனை கொடூர கொலைகள்...?
» இன்னும் எத்தனை பேரோ....
» இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு
» இன்னும் எத்தனை பேரோ....
» இன்னும் எத்தனை கொடூர கொலைகள்...?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|