Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அருகம்புல் ஜூஸ்
+7
அசுரன்
றினா
ரா.ரா3275
கரூர் கவியன்பன்
நிவாஸ்
T.N.Balasubramanian
அச்சலா
11 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
அருகம்புல் ஜூஸ்
தேவையான பொருட்கள்....
அருகம்புல் - 1 கட்டு
இஞ்சி - சிறிய துண்டு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை....
• இஞ்சியை தோல் சீவி கழுவி கொள்ளவும்.
• அருகம்புல்லை பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின் தண்ணீரைச் சேர்த்து மிக்ஸியில் போட்டு அதனுடன் இஞ்சி சேர்த்து அரைத்து சாறு எடுக்கவும். தேவைப்பட்டால், அருகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.
• இந்த ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். மாலை வேளைகளிலும் 200 மிலி அளவுக்கு பருகலாம்.
• விருப்பபட்டால் சிறிது தேன் சேர்த்துக் கொள்ளலாம்.
நன்றி: மாலைமலர்
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: அருகம்புல் ஜூஸ்
நன்றி.
இதை குடிப்பதால் அடையக்கூடிய நன்மைகளையும் தெரிவித்தால் பதிவு பயன் உள்ளதாக இருக்கும் , பதிவும் முழுமை அடைந்ததாகவும் இருக்கும், அல்லவா?
ரமணியன்.
இதை குடிப்பதால் அடையக்கூடிய நன்மைகளையும் தெரிவித்தால் பதிவு பயன் உள்ளதாக இருக்கும் , பதிவும் முழுமை அடைந்ததாகவும் இருக்கும், அல்லவா?
ரமணியன்.
Last edited by T.N.Balasubramanian on Tue Dec 04, 2012 6:49 am; edited 1 time in total (Reason for editing : vaarthaikal maatram.)
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010
Re: அருகம்புல் ஜூஸ்
ரமணி neekal சொல்லுவது correct ..!!
நிவாஸ்- புதியவர்
- பதிவுகள் : 41
இணைந்தது : 02/12/2012
Re: அருகம்புல் ஜூஸ்
நன்றி ரமணியன் அவர்களே!!T.N.Balasubramanian wrote:நன்றி.
இதை குடிப்பதால் அடையக்கூடிய நன்மைகளையும் தெரிவித்தால் பதிவு பயன் உள்ளதாக இருக்கும் , பதிவும் முழுமை அடைந்ததாகவும் இருக்கும், அல்லவா?
ரமணியன்.
சரி அப்படியே இணைக்கிறேன்..
மிக்க நன்றி...
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: அருகம்புல் ஜூஸ்
பாதி தமிழ்,மீதி ஆங்கிலம்..நிவாஸ் wrote:ரமணி neekal சொல்லுவது correct ..!!
நன்றி நிவாஸ்....
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: அருகம்புல் ஜூஸ்
அருகம்புல் மருத்துவ குணங்கள் மற்றும் பயன்கள்
தெய்வீக மூலிகையாகப் போற்றப்பட்டாலும் அருகம்புல் மருத்துவ குணங்கள் ஆச்சரியப்படும் படியானது. நவீன மருந்துகளால் தீர்க்க முடியாத குறிப்பிட்ட நோய்களைத் தீர்த்து நல்ல பலனைத் தருகிறது. இதயத்தின் பாதுகாவலனாக இருக்கிறது. பலவிதமான இதய நோய்களையும், ரத்தக் குழாய் அடைப்பையும், ரத்த ஓட்டத் தடைகளையும், ரத்தக் குழாய் பலவீனத்தையும் அருகம்புல் மூலமே தீர்த்துவிட முடியும்.
அருகம்புல் எங்கும் பயிராக்க கூடியது. நீர்நிலை ஓரங்களிலும், தோட்டக் கால்களிலும் எப்பொழுதும் கிடைக்கும். சிறுநீரக நோய்களையும், சிறுநீர்ப்பை நோய்களையும், பெண்களின் மாதவிடாயின் போது ஏற்படும் உதிரப் பெரும்பாட்டையும் அருகம்புல் நிவர்த்தி செய்கிறது. வயிற்றுப் புண்களை நிவர்த்தி செய்கிறது. குறிப்பாக டியோடினல் புண்ணை ஆற்றுவதில் நிகரற்றது. வாதபித்த கபநோய்களைத் தீர்த்து சமநிலைப்படுத்துகிறது கண்நோய்களை நீக்குகிறது. மதுமேகம், தந்திமேகம், வெள்ளை, வெட்டை நோய்களை அருகம்சாறு நிவர்த்திக்கிறது. அருகம்புல் சாறு தினசரி அருந்தி வந்தால் மேற்கண்ட நோய்கள் அனைத்துக்கும் பொதுப் பலன் கிடைக்கும். ஒரு மண்டலம் வரை தொடர்ந்து சாப்பிடலாம்.
ஒரு கைப்பிடியளவு அருகம் புல்லைச் சுத்தம் செய்து அம்மியில் அரைத்து 100 மில்லியில் கலக்கி வடிகட்டி காலையில் சாப்பிட்டு வந்தால் இரண்டு தினங்களில் நோயின் தீவிரம் குறைவதை தெரிந்து கொள்ளலாம். நோயின் தன்மைக்கு ஏற்ப 15_30 தினங்கள் சாப்பிடலாம்.
வெள்ளை, வெட்டை, மதுமேகம், தந்தி மேகம் குணமாக அருகம்புல்லை ஒரு கிலோ அளவிற்குச் சுத்தம் செய்து நன்கு அரைத்து விழுதாக்கிக் கொள்ள வேண்டும். அதை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து வடிகட்டி தெளிய வைத்து தெளிந்த நீரை மீண்டும் வடிகட்டி மூன்று பாகமாக்கி காலை, மாலை இரவு ஆகாரத்துக்கு முன் சாப்பிட வேண்டும். இவ்வாறு சில தினங்கள் சாப்பிட்டால் மேற்கண்ட நோய்கள் தீரும்.
குழந்தைகளின் கபம், சலதோஷம், நீங்க அருகம்புல்லை ஒரு கைப்பிடியளவு எடுத்து, துளசி இலைகள் 10 சேர்த்து சுடுநீரில் போட்டு மூடி இரவு வைத்திருந்து காலையில் இந்த தண்ணீரைக் குழந்தைகளுக்குக் கொடுத்தால் கபம், சீதள நோய் நிவர்த்தியாகும்.
அருகம்புல் இரண்டு கைப்பிடியளவு துளசி இலை ஒரு கைப்பிடி அளவு எடுத்து சுத்தம் செய்து இத்துடன் ஆடாதொடை இலை ஒரு கைப்பிடியளவு சேர்த்து மூன்றையும் நன்றாக மசிய அரைத்துக் கொள்ள வேண்டும். இதனை ஆடா தொடை இலையில் வைத்து மூடி ஆவியில் வேக வைத்து இதன் சாற்றைப் பிழிந்து தினம் மூன்று வேளை உணவுக்கு முன் சாப்பிட வேண்டும். குழந்தைகளுக்கு 5 வயது வரை ஒரு தேக்கரண்டியும், 10 வயதுவரை 2 தேக்கரண்டியும் 10 வயதுக்குமேல் 3 தேக்கரண்டியும் சம அளவு தேன் கலந்து குழைத்துக் கொடுத்தால் சலதோஷமும், கபநோய்களும் தீரும்.
அருகம்புல்லை வேருடன் சேகரித்துச் சுத்தம் செய்து இடித்து சாறு தயாரித்து 200 மில்லி சாற்றுக்கு இரண்டு தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டால். இதயம் பலப்படும் இதயம் தொடர்பான அனைத்து நோய்களும் நீங்கும்.
வெண்தாமரை மலர் இதழ்கள் இரண்டு பூக்களில் சேகரித்து ஒரு கைப்பிடியளவு அருகம்புல்லையும் சேர்த்துச் சிதைத்து 300 மில்லி தண்ணீரில் போட்டு 100 மில்லியாகச் சுண்டக்காய்ச்சி வடிகட்டி பாலில் கலந்து காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தநோய் சீராகும். இதயப் பிணிகள் நீங்கும். இதயம் வலிமையடையும். அருகம்புல்லை எடுத்துச் சுத்தம் செய்து 20 கிராம் அளவில் எடுத்து 100 மில்லி தண்ணீர் சேர்த்து மிக்சியில் நன்றாக அரைத்துச் சாற்றை வடிகட்டி அதிகாலை உணவுக்கு முன் சாப்பிட்டு வந்தால் இதய நோய்கள் குணமாகும். இதயம் சீராக இயங்கும். இதயம் வலிமை பெறும். இதயத்தில் சேரும் விஷத் தன்மையுடைய ரசாயனங்களை அழித்து விடும். இரத்தத்தில் தேவைக்கு அதிகம் உள்ள உப்புக்களை வெளியேற்றி இதயப்பாதுகாப்பிற்கு உதவும்.
தினசரி 100 மில்லியளவு அருகம்புல் சாற்றை 30 மில்லியளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இரத்த விருத்தி உண்டாகும். இதயத்தைப் பலப்படுத்தும். அருகம்புல் ஒரு கைப்பிடியளவும், காணாம் வாழை இலை ஒரு கைப் பிடியளவும் எடுத்து இரண்டையும் நன்றாக அரைத்து ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து ஒரு டம்ளர் பாலில் கலந்து சில தினங்கள் சாப்பிட்டு வந்தால் ஆண், பெண் இருபாலாருக்கும் ஏற்பட்ட வெள்ளை ஒழுக்கு குணமாகும்.
அருகம்புல், காணாம் வாழை இலை, அசோக மரப்பட்டைத்தூள் தலா ஒரு கைப்பிடியளவு எடுத்து அம்மியில் நன்றாக அரைத்து ஏழு நெல்லிக்காய் அளவு காலை, மாலை சாப்பிட்டு வந்தால் பெண்களின் உதிரப் போக்கும், பெரும்பாடும் நின்று விடும்.
அருகம்புல், சிறு நெருஞ்சில் வேர் சமமாக எடுத்து 125 மில்லி தண்ணீரில் சேர்த்துக் காய்ச்சி பாதியாகத் தண்ணீர் சுண்டியதும் மருந்தைப் பிழிந்து வடிகட்டி தினசரி மூன்று வேளை 60 மில்லி வீதம் சாப்பிட்டால் மூன்று தினங்களில் நீர்க் கடுப்பும், ஆசனக் கடுப்பும் நீங்கிவிடும். அருகம் புல்லை வேருடன் கொண்டு வந்து சுத்தம் செய்து அரைத்த விழுதை ஒரு மண்டலம் சாப்பிட்டால் அஸ்தி வெட்டை, மூல வெட்டை நீங்கும். நரம்புகள் பலப்படும். ரத்தத்தில் சேர்ந்துள்ள சகல விஷத் தன்மையும் நீங்கி விடும்.
அருகம் புல்லை வேருடன் பிடுங்கி வந்து சுத்தம் செய்து இதற்குச் சமம் மிளகு சேர்த்து மை போல அரைத்து இரண்டு நெல்லிக்காய் அளவு, காலை மாலை 5_10 தினங்கள் சாப்பிட்டு வந்தால் வெள்ளை வெட்டை நோய்கள் நிவர்த்தியாகும். புளியில்லாப் பத்தியம் இருக்க வேண்டும். அருகம்வேர் ஒரு கைப்பிடியளவு எடுத்து இதில் 20 மிளகு சேர்த்து நசுக்கி 200 மில்லி தண்ணீரில் காய்ச்சி கஷாயமாகத் தயாரித்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் மேகச்சூடு தணியும்.
அருகம்புல்லைக் காய வைத்து சூரணம் தயாரித்து இரண்டு சிட்டிகை சிறியவர்களுக்கும், 500 மில்லி கிராம் பெரியவர்களுக்கும் தினசரி காலை மாலை உணவுக்கு முன் தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் உடலில் எந்தப்பிணியும் வராமல் பாதுகாக்கும், நரை திரை மூப்புப் பிணிகள் தள்ளிப்போகும். அருகம்புல்லை வேருடன் பிடுங்கி வந்து சுத்தம் செய்து 100 மில்லியளவு சாறு எடுத்து 100 மில்லி பாலில் கலந்து ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும், மூலக்கடுப்பும், ரத்தம் வருதலும் நிற்கும். அருகம் வேர், மிளகு, சீரகம், அதிமதுரம், சித்தரத்தை, மாதுளம் பூ சமமாகச் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் காய்ச்சி கஷாயமாகத் தயாரித்து வடிகட்டி கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் சகல விஷத் தன்மைகளும் நீங்கி விடும். வெட்டை நோய் தீரும். மூலச்சூடு தணியும்.
மூக்கில் ரத்தம் வந்து கொண்டிருந்தால் அருகம்புல் சாறு 100 மில்லி தயாரித்து சாப்பிட்டு வந்தால் மூக்கிலிருந்து ரத்தம் வருதல் நிற்கும். அருகம்புல்லில் நீர் தெளித்து இடித்துப் பிழிந்த சாறு ஒரு லிட்டர் சேர்ந்தால் தேங்காய் எண்ணெய் 350 மில்லி சேர்த்து வைத்துக் கொண்டு, தனியாக அருகம்புல்லை அரைத்த விழுது ஒரு எலுமிச்சங்காய் அளவு இத்துடன் சேர்த்துக் காய்ச்சினால் வண்டல் மெழுகு பதம் வரும். இந்தப் பதத்தில் எடுத்து வைத்துக் கொண்டு தீப்புண்கள் மீது தடவி வந்தால் தீப்புண்கள் ஆறிவிடும். சேத்துப் புண்களுக்கும் இதைப் பயன்படுத்தலாம். எக்சீமாவுக்கு மேல் பூச்சாகப் பயன்படுத்தினால் படிப்படியாக எக்சீமா குணமாகும்.
அருகம்புல்லை தேவையான அளவு சேகரித்து இதில் பூண்டுப் பல் 5 ம், மிளகு 15ம் சேர்த்து நன்றாக அரைத்து வைத்துக் கொண்டு, நமைச்சல், சொறி, சிரங்கு, பூச்சிக் கடிகளுக்கு மேல்பூச்சாக பூசி வர வேண்டும். தினம் இரண்டு வேளை அருகம்புல் சாற்றையும் சாப்பிட்டு வர வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் 10_15 தினங்களில் நோய் நிவர்த்தியாகும். அருகம்புல்லும், புங்கம் பட்டையும் சேர்த்து அரைத்து மேல் பிரயோகமாகப் பூசி வந்தால் புண், புரைகள், படை, ஆறாத ரணங்கள் ஆறி விடும். சில நாட்கள் பயன்படுத்தினால் புண்களில் சீழ் பிடிக்காமல் ஆறிவிடும். அருகம்புல்லும், மஞ்சளும், பச்சைப் பயறும் சேர்த்து அரைத்து மேலுக்குப் பூசி, குளித்து வந்தால் தோல் நோய்கள் வராமல் பாதுகாத்து தோலின் பாதுகாவலனாகச் செயல்படும். உடலுக்கு நல்ல அழகைத் தரும். தேமல் நீங்கி விடும். தோலின் நிறம் மாறும்படியான தடிப்பு, சொறி, அலர்ஜியை நீக்கி விடும்.
அருகம்புல்லின் சாறு ஒரு லிட்டர் தயாரித்து 300 மில்லி தேங்காய் எண்ணெயில் கலந்து இதில் 20 கிராம் அதிமதுரப்பொடியை சேர்த்துக் காய்ச்சி தைல பதத்தில் எடுத்து வடிகட்டி வைத்துக் கொண்டு தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் பொட்டு, பொடுகு, சுண்டுகள் நீங்கி விடும் சொறி சிரங்கு அரிப்புகள் மறைந்து விடும். அருகம்புல் வேரை ஒரு கைப்பிடியளவு எடுத்து சுத்தம் செய்து அரைத்த விழுதைத் தினசரி சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும்.
அருகம்புல் சாற்றை தினசரி 100 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் புத்தி மந்தம் விலகும். அறிவு துலங்கும். புத்தி தெளிவடைந்து பிரகாசம் அடையச் செய்வதில் தன்னிகரற்ற மூலிகையாகும்.
நன்றி:தளம்
தெய்வீக மூலிகையாகப் போற்றப்பட்டாலும் அருகம்புல் மருத்துவ குணங்கள் ஆச்சரியப்படும் படியானது. நவீன மருந்துகளால் தீர்க்க முடியாத குறிப்பிட்ட நோய்களைத் தீர்த்து நல்ல பலனைத் தருகிறது. இதயத்தின் பாதுகாவலனாக இருக்கிறது. பலவிதமான இதய நோய்களையும், ரத்தக் குழாய் அடைப்பையும், ரத்த ஓட்டத் தடைகளையும், ரத்தக் குழாய் பலவீனத்தையும் அருகம்புல் மூலமே தீர்த்துவிட முடியும்.
அருகம்புல் எங்கும் பயிராக்க கூடியது. நீர்நிலை ஓரங்களிலும், தோட்டக் கால்களிலும் எப்பொழுதும் கிடைக்கும். சிறுநீரக நோய்களையும், சிறுநீர்ப்பை நோய்களையும், பெண்களின் மாதவிடாயின் போது ஏற்படும் உதிரப் பெரும்பாட்டையும் அருகம்புல் நிவர்த்தி செய்கிறது. வயிற்றுப் புண்களை நிவர்த்தி செய்கிறது. குறிப்பாக டியோடினல் புண்ணை ஆற்றுவதில் நிகரற்றது. வாதபித்த கபநோய்களைத் தீர்த்து சமநிலைப்படுத்துகிறது கண்நோய்களை நீக்குகிறது. மதுமேகம், தந்திமேகம், வெள்ளை, வெட்டை நோய்களை அருகம்சாறு நிவர்த்திக்கிறது. அருகம்புல் சாறு தினசரி அருந்தி வந்தால் மேற்கண்ட நோய்கள் அனைத்துக்கும் பொதுப் பலன் கிடைக்கும். ஒரு மண்டலம் வரை தொடர்ந்து சாப்பிடலாம்.
ஒரு கைப்பிடியளவு அருகம் புல்லைச் சுத்தம் செய்து அம்மியில் அரைத்து 100 மில்லியில் கலக்கி வடிகட்டி காலையில் சாப்பிட்டு வந்தால் இரண்டு தினங்களில் நோயின் தீவிரம் குறைவதை தெரிந்து கொள்ளலாம். நோயின் தன்மைக்கு ஏற்ப 15_30 தினங்கள் சாப்பிடலாம்.
வெள்ளை, வெட்டை, மதுமேகம், தந்தி மேகம் குணமாக அருகம்புல்லை ஒரு கிலோ அளவிற்குச் சுத்தம் செய்து நன்கு அரைத்து விழுதாக்கிக் கொள்ள வேண்டும். அதை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து வடிகட்டி தெளிய வைத்து தெளிந்த நீரை மீண்டும் வடிகட்டி மூன்று பாகமாக்கி காலை, மாலை இரவு ஆகாரத்துக்கு முன் சாப்பிட வேண்டும். இவ்வாறு சில தினங்கள் சாப்பிட்டால் மேற்கண்ட நோய்கள் தீரும்.
குழந்தைகளின் கபம், சலதோஷம், நீங்க அருகம்புல்லை ஒரு கைப்பிடியளவு எடுத்து, துளசி இலைகள் 10 சேர்த்து சுடுநீரில் போட்டு மூடி இரவு வைத்திருந்து காலையில் இந்த தண்ணீரைக் குழந்தைகளுக்குக் கொடுத்தால் கபம், சீதள நோய் நிவர்த்தியாகும்.
அருகம்புல் இரண்டு கைப்பிடியளவு துளசி இலை ஒரு கைப்பிடி அளவு எடுத்து சுத்தம் செய்து இத்துடன் ஆடாதொடை இலை ஒரு கைப்பிடியளவு சேர்த்து மூன்றையும் நன்றாக மசிய அரைத்துக் கொள்ள வேண்டும். இதனை ஆடா தொடை இலையில் வைத்து மூடி ஆவியில் வேக வைத்து இதன் சாற்றைப் பிழிந்து தினம் மூன்று வேளை உணவுக்கு முன் சாப்பிட வேண்டும். குழந்தைகளுக்கு 5 வயது வரை ஒரு தேக்கரண்டியும், 10 வயதுவரை 2 தேக்கரண்டியும் 10 வயதுக்குமேல் 3 தேக்கரண்டியும் சம அளவு தேன் கலந்து குழைத்துக் கொடுத்தால் சலதோஷமும், கபநோய்களும் தீரும்.
அருகம்புல்லை வேருடன் சேகரித்துச் சுத்தம் செய்து இடித்து சாறு தயாரித்து 200 மில்லி சாற்றுக்கு இரண்டு தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டால். இதயம் பலப்படும் இதயம் தொடர்பான அனைத்து நோய்களும் நீங்கும்.
வெண்தாமரை மலர் இதழ்கள் இரண்டு பூக்களில் சேகரித்து ஒரு கைப்பிடியளவு அருகம்புல்லையும் சேர்த்துச் சிதைத்து 300 மில்லி தண்ணீரில் போட்டு 100 மில்லியாகச் சுண்டக்காய்ச்சி வடிகட்டி பாலில் கலந்து காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தநோய் சீராகும். இதயப் பிணிகள் நீங்கும். இதயம் வலிமையடையும். அருகம்புல்லை எடுத்துச் சுத்தம் செய்து 20 கிராம் அளவில் எடுத்து 100 மில்லி தண்ணீர் சேர்த்து மிக்சியில் நன்றாக அரைத்துச் சாற்றை வடிகட்டி அதிகாலை உணவுக்கு முன் சாப்பிட்டு வந்தால் இதய நோய்கள் குணமாகும். இதயம் சீராக இயங்கும். இதயம் வலிமை பெறும். இதயத்தில் சேரும் விஷத் தன்மையுடைய ரசாயனங்களை அழித்து விடும். இரத்தத்தில் தேவைக்கு அதிகம் உள்ள உப்புக்களை வெளியேற்றி இதயப்பாதுகாப்பிற்கு உதவும்.
தினசரி 100 மில்லியளவு அருகம்புல் சாற்றை 30 மில்லியளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இரத்த விருத்தி உண்டாகும். இதயத்தைப் பலப்படுத்தும். அருகம்புல் ஒரு கைப்பிடியளவும், காணாம் வாழை இலை ஒரு கைப் பிடியளவும் எடுத்து இரண்டையும் நன்றாக அரைத்து ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து ஒரு டம்ளர் பாலில் கலந்து சில தினங்கள் சாப்பிட்டு வந்தால் ஆண், பெண் இருபாலாருக்கும் ஏற்பட்ட வெள்ளை ஒழுக்கு குணமாகும்.
அருகம்புல், காணாம் வாழை இலை, அசோக மரப்பட்டைத்தூள் தலா ஒரு கைப்பிடியளவு எடுத்து அம்மியில் நன்றாக அரைத்து ஏழு நெல்லிக்காய் அளவு காலை, மாலை சாப்பிட்டு வந்தால் பெண்களின் உதிரப் போக்கும், பெரும்பாடும் நின்று விடும்.
அருகம்புல், சிறு நெருஞ்சில் வேர் சமமாக எடுத்து 125 மில்லி தண்ணீரில் சேர்த்துக் காய்ச்சி பாதியாகத் தண்ணீர் சுண்டியதும் மருந்தைப் பிழிந்து வடிகட்டி தினசரி மூன்று வேளை 60 மில்லி வீதம் சாப்பிட்டால் மூன்று தினங்களில் நீர்க் கடுப்பும், ஆசனக் கடுப்பும் நீங்கிவிடும். அருகம் புல்லை வேருடன் கொண்டு வந்து சுத்தம் செய்து அரைத்த விழுதை ஒரு மண்டலம் சாப்பிட்டால் அஸ்தி வெட்டை, மூல வெட்டை நீங்கும். நரம்புகள் பலப்படும். ரத்தத்தில் சேர்ந்துள்ள சகல விஷத் தன்மையும் நீங்கி விடும்.
அருகம் புல்லை வேருடன் பிடுங்கி வந்து சுத்தம் செய்து இதற்குச் சமம் மிளகு சேர்த்து மை போல அரைத்து இரண்டு நெல்லிக்காய் அளவு, காலை மாலை 5_10 தினங்கள் சாப்பிட்டு வந்தால் வெள்ளை வெட்டை நோய்கள் நிவர்த்தியாகும். புளியில்லாப் பத்தியம் இருக்க வேண்டும். அருகம்வேர் ஒரு கைப்பிடியளவு எடுத்து இதில் 20 மிளகு சேர்த்து நசுக்கி 200 மில்லி தண்ணீரில் காய்ச்சி கஷாயமாகத் தயாரித்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் மேகச்சூடு தணியும்.
அருகம்புல்லைக் காய வைத்து சூரணம் தயாரித்து இரண்டு சிட்டிகை சிறியவர்களுக்கும், 500 மில்லி கிராம் பெரியவர்களுக்கும் தினசரி காலை மாலை உணவுக்கு முன் தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் உடலில் எந்தப்பிணியும் வராமல் பாதுகாக்கும், நரை திரை மூப்புப் பிணிகள் தள்ளிப்போகும். அருகம்புல்லை வேருடன் பிடுங்கி வந்து சுத்தம் செய்து 100 மில்லியளவு சாறு எடுத்து 100 மில்லி பாலில் கலந்து ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும், மூலக்கடுப்பும், ரத்தம் வருதலும் நிற்கும். அருகம் வேர், மிளகு, சீரகம், அதிமதுரம், சித்தரத்தை, மாதுளம் பூ சமமாகச் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் காய்ச்சி கஷாயமாகத் தயாரித்து வடிகட்டி கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் சகல விஷத் தன்மைகளும் நீங்கி விடும். வெட்டை நோய் தீரும். மூலச்சூடு தணியும்.
மூக்கில் ரத்தம் வந்து கொண்டிருந்தால் அருகம்புல் சாறு 100 மில்லி தயாரித்து சாப்பிட்டு வந்தால் மூக்கிலிருந்து ரத்தம் வருதல் நிற்கும். அருகம்புல்லில் நீர் தெளித்து இடித்துப் பிழிந்த சாறு ஒரு லிட்டர் சேர்ந்தால் தேங்காய் எண்ணெய் 350 மில்லி சேர்த்து வைத்துக் கொண்டு, தனியாக அருகம்புல்லை அரைத்த விழுது ஒரு எலுமிச்சங்காய் அளவு இத்துடன் சேர்த்துக் காய்ச்சினால் வண்டல் மெழுகு பதம் வரும். இந்தப் பதத்தில் எடுத்து வைத்துக் கொண்டு தீப்புண்கள் மீது தடவி வந்தால் தீப்புண்கள் ஆறிவிடும். சேத்துப் புண்களுக்கும் இதைப் பயன்படுத்தலாம். எக்சீமாவுக்கு மேல் பூச்சாகப் பயன்படுத்தினால் படிப்படியாக எக்சீமா குணமாகும்.
அருகம்புல்லை தேவையான அளவு சேகரித்து இதில் பூண்டுப் பல் 5 ம், மிளகு 15ம் சேர்த்து நன்றாக அரைத்து வைத்துக் கொண்டு, நமைச்சல், சொறி, சிரங்கு, பூச்சிக் கடிகளுக்கு மேல்பூச்சாக பூசி வர வேண்டும். தினம் இரண்டு வேளை அருகம்புல் சாற்றையும் சாப்பிட்டு வர வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் 10_15 தினங்களில் நோய் நிவர்த்தியாகும். அருகம்புல்லும், புங்கம் பட்டையும் சேர்த்து அரைத்து மேல் பிரயோகமாகப் பூசி வந்தால் புண், புரைகள், படை, ஆறாத ரணங்கள் ஆறி விடும். சில நாட்கள் பயன்படுத்தினால் புண்களில் சீழ் பிடிக்காமல் ஆறிவிடும். அருகம்புல்லும், மஞ்சளும், பச்சைப் பயறும் சேர்த்து அரைத்து மேலுக்குப் பூசி, குளித்து வந்தால் தோல் நோய்கள் வராமல் பாதுகாத்து தோலின் பாதுகாவலனாகச் செயல்படும். உடலுக்கு நல்ல அழகைத் தரும். தேமல் நீங்கி விடும். தோலின் நிறம் மாறும்படியான தடிப்பு, சொறி, அலர்ஜியை நீக்கி விடும்.
அருகம்புல்லின் சாறு ஒரு லிட்டர் தயாரித்து 300 மில்லி தேங்காய் எண்ணெயில் கலந்து இதில் 20 கிராம் அதிமதுரப்பொடியை சேர்த்துக் காய்ச்சி தைல பதத்தில் எடுத்து வடிகட்டி வைத்துக் கொண்டு தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் பொட்டு, பொடுகு, சுண்டுகள் நீங்கி விடும் சொறி சிரங்கு அரிப்புகள் மறைந்து விடும். அருகம்புல் வேரை ஒரு கைப்பிடியளவு எடுத்து சுத்தம் செய்து அரைத்த விழுதைத் தினசரி சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும்.
அருகம்புல் சாற்றை தினசரி 100 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் புத்தி மந்தம் விலகும். அறிவு துலங்கும். புத்தி தெளிவடைந்து பிரகாசம் அடையச் செய்வதில் தன்னிகரற்ற மூலிகையாகும்.
நன்றி:தளம்
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: அருகம்புல் ஜூஸ்
அடேங்கப்பா...அருகம்புல்லில் இத்துனை ஆச்சரயங்களா?!...
பதிவு-பகிர்வுக்கு நன்றி அச்சலா...
பதிவு-பகிர்வுக்கு நன்றி அச்சலா...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: அருகம்புல் ஜூஸ்
ஆஹா. பதிவு ன்னா இப்படிதான் முழுமையாக இருக்கணம்
ரமணியன்
ரமணியன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» புதினா, சீரக ஜூஸ்-வெயில் காலத்திற்க்கு ஜூஸ்
» மூலிகைகளின் அற்புதங்கள்
» அருகம்புல்
» அருகம்புல்
» அருகம்புல்
» மூலிகைகளின் அற்புதங்கள்
» அருகம்புல்
» அருகம்புல்
» அருகம்புல்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|