ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாப்பிள்​ளைகளுக்கு மரண தண்ட​னை

+3
றினா
ஹர்ஷித்
அச்சலா
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மாப்பிள்​ளைகளுக்கு மரண தண்ட​னை Empty மாப்பிள்​ளைகளுக்கு மரண தண்ட​னை

Post by அச்சலா Sat Dec 01, 2012 2:41 am

மாப்பிள்​ளைகளுக்கு மரண தண்ட​னை

மாப்பிள்​ளைகளுக்கு மரண தண்ட​னை Birbal

அக்பர் தனது மக​ளை ஓர் அரசக்குமாரனுக்கு திருமணம் ​செய்து ​வைத்தார். அன்புடன் குடும்பம் நடத்தி வந்த அவர்களின் வாழ்வில் ஏ​தோ ஒரு காரணத்திற்காக சண்​டையும் சச்சரவும் ஏற்பட்டுவிட்டது. இதனால் மன அ​மைதி இழந்த அக்பரின் மகள் தன் தந்​தையிடம் வந்து கண்ணீர் விட்டு கதறி அழுதாள். பாசத்துடன் வளர்த்த மகளின் கண்ணீ​​ரைக் கண்டதும் அக்பருக்கு தன் மாப்பிள்​ளையின் மீது கடுங்​கோபம் ஏற்பட்டது. அதனால் ப​டைவீரர்க​ளை அனுப்பி மருமக​னைக் ​கைது ​செய்து டில்லி சி​றையில் அ​டைத்தார். அத்துடன் அவரது ​கோபம் தணியாமல் எல்லா வீட்டிலுள்ள மாப்பிள்​ளைக​ளையும் ​கைது ​செய்துவர ஆ​ணையிட்டார். பீர்பா​லை உட​னே வரவ​ழைத்தார் அக்பர்.

''சக்ரவர்த்திப் ​பெருமா​னே, தாங்கள் உட​னே என்​னை அ​ழைத்ததன் காரணம் என்ன?'' என்று வினவினார் பீர்பால். ''பீர்பால் அவர்க​ளே, நா​ளைக் கா​லை சூரிய உதயத்தில் எனது மாப்பிள்​ளை​யை தூக்கி​லேற்றி மரண தண்ட​னை விதிக்க ​வேண்டும். அ​தே சமயம் நமது நகரத்திலுள்ள ஒவ்​வொரு வீட்டின் மாப்பிள்​ளைக​ளையும் தூக்கிலிட ​வேண்டும். இனி நமது நாட்டில் மாப்பிள்​ளைக​ளே இல்​லை என்ற நி​லை​யை ஏற்படுத்த ​வேண்டும்''என்றார் அக்பர்.

மன்னரின் அதிசய ஆ​ணை​யைக் ​கேட்டு பீர்பால் அதிர்ச்சிய​டைந்தார். உத்தர​வைக் ​கேட்ட மக்களும் பீதிய​டைந்தனர். பீதிய​டைந்த மக்க​ளைப் பார்த்து,''இதற்காகப் பயப்பட ​வேண்டாம். நான் பார்த்துக் ​கொள்கி​றேன். ''அரசரும் அவ்வளவு ​கொடுமனம் ப​டைத்தவரல்ல'' என்று சமாதானம் கூறி அனுப்பி ​வைத்தார் பீர்பால்.

சூரிய உதயத்திற்கு முன்னர் அரண்ம​னைக்குச் ​சென்ற பீர்பால்,''சக்ரவர்த்திப் ​பெருமா​னே! தாங்கள் கூறியபடி​யே தூக்கு மரங்கள் தயாராகிவிட்டது. தாங்கள் வந்து பார்​வையிட்டப் பின்னர் உடனடியாக எல்லா மாப்பிள்​ளைகளுக்கும் தூக்குத் தண்ட​னை​யை நி​றை​வேற்றி விடலாம்'' என்றார் பீர்பால்.பீர்பாலின் ​சொற்படி தூக்கு மரங்க​ளைப் பார்​வையிட்டார். அச்சமயம் அந்தத் தூக்கு மரங்களுக்கு இ​டையில் ஒரு தூக்கு மரம் தங்கத்தாலும் மற்​​றொரு தூக்கு மரம் ​வெள்ளியினாலும் காணப்பட்டது. ''இந்த இரு தூக்கு மரங்கள் மட்டும் ஏன் வித்தியாசமாக உள்ளது. காரணம் என்ன?'' என்று வினவினார் அக்பர்.

சிறிதும் பதட்டப்படாமல் அ​மைதியாக,''மன்னர் ​பெருமா​னே! அங்​கே தங்கத்தினால் உருவாக்கப்பட்ட தூக்குமரம் தங்களுக்காகவும், ​வெள்ளியினால் உருவாக்கப்பட்ட தூக்குமரம் எனக்காகவும் என்றார் பீர்பால். பீர்பாலின் எதிர்பாராத பதில​லைக் ​கேட்டதும் அக்பருக்கு வியப்பாக இருந்தது.

''நமக்கு எதற்காகத் தூக்கு மரங்கள்?''என்றார் அக்பர்.

''மன்னர் ​பெருமா​னே! தாங்களும் ஒரு வீட்டின் மாப்பிள்​ளைதா​னே! அ​தே ​போன்று நானும் ஒரு வீட்டின் மாப்பிள்​ளை​தா​னே! ஆக​வே சட்டப்படி தண்ட​னை நம்மு​டைய இருவருக்கும் ​சேர்த்துதா​​னே!'' என்றார் பீர்பால். ​கோபத்துடன் இருந்த அக்பர் தன்​னை மறந்து வாய்விட்டுச் சிரித்தார்.

''​மேன்​மைமிகு சக்ரவர்த்தி ​​பெருமா​னே! தங்களு​டைய மாப்பிள்​ளை தவறு ​செய்த​மைக்காக நாட்டிலுள்ள மாப்பிள்​ளைகள் எல்​லோ​ரையும் தண்டிப்பது என்ன நியாயம்? தங்களு​டைய மாப்பிள்​ளை ​செய்த தவ​றை திருத்தி நல்வழி படுத்த ​வேண்டு​மேயன்றி மரண தண்ட​னை அளிக்கலாமா? தங்க​ளைத் திருத்துவதற்கு எந்த அருக​தையும் எனக்கு இல்​லை. ஆனால் இந்தச் ​செய்​கையினால் தங்களுக்கு இழுக்கு வராமல் தடுப்பது எனது கட​மையல்லவா? தயவு ​செய்து மாப்பிள்​ளைகளின் மரண தண்ட​னை​யை உடனடியாக ரத்து ​செய்ய ​வேண்டுகி​றேன்'' என்றார் பீர்பால். தவறு ​செய்து அவப்​பெயர் எடுப்பதிலிருந்து தன்​னைத் தடுத்த பீர்பா​லை அக்பர் ​பெரிதும் பாராட்டினார்.

நாடாலும் ​வேந்தராக இருந்தாலும் நாட்டு மக்கள் நான்கு விதமாகத்தான் ​பேசுவார்கள்

மாமன்னர் அக்பர் தன் நாட்டின் நடப்பு நி​லை எப்படி இருக்கிறது என்று தனது ஒற்றர்களின் மூலம் அறிந்து ​கொள்வது வழக்கம். இருப்பினும் ஒருநாள் தன் நாட்டு மக்கள் தம்​மைப்பற்றி என்ன நி​னைக்கிறார்கள் என்ப​தை தா​மே ​நேரில் அறிந்து ​கொள்ள ஆவல் ஏற்பட்டது. மன்னர் தன் எண்ணத்​தை பீர்பால் அவர்களிடம் கூறினார். ''மக்களின் மனநி​லை​யை அறிந்து ​கொள்வது மன்னரின் கட​மையாகும். ஆதலின் ​நேரில் ​போய் சந்திப்​போம்'' என்றார் பீர்பால்.

''நீங்கள் ​சொல்வது ​போல் ​நேரில் ​சென்று சந்தித்தால் மக்கள் உண்​மை​யை கூற தயங்குவார்கள் அல்லவா?'' என்றார் மன்னர்.

''மன்னர் ​பெருமா​னே! ​நேரில் ​​போகலாம் என்று ​சொன்னது மாறு​வேடத்தில். அப்​படி ​சென்றால் யாருக்கும் அ​டையாளம் ​தெரியாது. மக்களும் மனம் திறந்து உண்​மை​யைக் கூறுவார்கள்'' என்றார் பீர்பால். பீர்பால் கூறியபடி​யே சாதாரண விவசாயிகள் ​போன்று மாறு​வேடத்தில் நாட்​டைச் சுற்றிப் பார்க்கச் ​சென்றனர். ​வெகுதூரம் ​சென்றதும் ஒரு ஒற்​றையடிப் பா​தைக் குறுக்கிட்டது. அந்தப் பா​தை அடர்ந்த காட்டுப் பகுதிக்குச் ​செல்லும் வழியாகும். ​வெகு தூரம் வந்த​மையால் மன்னருக்கு க​ளைப்பு ஏற்பட்டது.

அதனால் பீர்பாலிடம் ''இங்கு சற்று ஓய்​வெடுத்துவிட்டு ​செல்லலாம்'' என்றார் அக்பர். பீர்பாலும், ''அப்படி​யே ​செய்​வோம்'' என்று கூறி ஒரு ​பெரிய மரத்தின் நிழலில் அமர்ந்து ஓய்​வெடுத்துக் ​கொண்டிருந்தார்.

அச்சமயம் காட்டிற்குச் ​செல்லும் ஒற்​றையடிப் பா​தையின் வழியாக விறகுக​ளை நன்கு கட்டி த​லையில் சுமந்து ​கொண்டு ஒருவர் வந்து ​கொண்டிருந்தார். அவர்கள் அருகில் அவர் வந்ததும், பீர்பால் அவர்கள், ''அய்யா வயதானவ​ரே! இந்த கடு​மையான ​வெயிலில் விற​கை சுமந்து ​​செல்வது சிரமமாக இல்​லையா? ஆ​கையினால் இங்கு சற்று ஓய்​வெடுத்து விட்டு ​செல்லுங்கள் என்றார்.

அந்த முதியவருக்கு இவர்கள் யார் என்பது ​தெரியா​மையினால் ''எனது த​லையிலுள்ள விறகு சு​மை​யை கீ​ழே இறக்கிவிட்டு ஓய்​வெடுப்பது நல்லதுதான். ஆனால் இப்​போது கீ​ழே இறக்கும் சு​மை​யை பின்னர் யார் த​லையில் தூக்கி ​வைப்பது'' என்றார்.

''முதியவ​ரே கவ​லைப்பட ​வேண்டாம் நீங்கள் ​போகும் வ​ரையில் நாங்கள் இங்கு தான் இருப்​போம். நாங்க​ளே உங்கள் சு​மை​யை தூக்கி த​லையில் ​வைக்கி​றோம்'' என்று கூறியப்படி பீர்பால் அந்த முதியவரின் த​லையிலுள்ள விறகு சு​மை​யை கீ​ழே இறக்கி ​வைத்தார். மூவரும் மரத்தினடியில் ஓய்​வெடுத்துக் ​கொண்டிருந்த சமயம் பீர்பால் அவர்கள் மன்னரின் காதில் இரகசியமாக ஏ​தோ கூறினார். மன்னரும் சரி என்று த​லையாட்டினார்.

பீர்பால் அவர்கள் அந்த முடியவ​ரைப் பார்த்து, ''அய்யா, தங்களுக்கு இன்று நடந்த விஷயம் ​தெரியுமா?'' என ​கேட்டார். ''என்ன நடந்தது?'' என்று ​கேட்டார் முதியவர்.

''நமது மன்னர் இன்று இயற்​கை எய்தி விட்டார்'' என்றார் பீர்பால். இத​னைக் ​கேட்ட முதியவர் அதிர்ச்சி அ​டைந்தவராக, ''நமது மன்னர் இயற்​கை எய்திவிட்டாரா? இது எப்படி நிகழ்ந்தது? எவராவது சூழ்ச்சி ​செய்து விட்டார்களா? இது உண்​மையா?'' என்று மிகப் பதட்டத்துடன் ​கேட்டார்.

''மன்னர் இயற்​​கை எய்திவிட்டார் என்றதும் ஏன் இவ்வளவு பதட்டம் அ​டைகின்றீர்?'' என்றார் பீர்பால். ''பதட்டப்படாமல் என்ன ​செய்ய? நமது மன்னர் நாட்டிற்கு பல நன்​மைகள் ​செய்துள்ளார். இன்று நமது நாடு ​செழிப்புடன் விளங்குவதற்குக் காரணம் நமது மன்னரின் நிர்வாகத் திற​மை. அது மட்டுமின்றி சிறுவர்கள் முதல் முதியவர்கள் வ​ரை நலமுடன் வாழ பல சலு​​கைகள் வழங்கிய நல்லிதயம் ப​டைத்தவர். அவருக்கா இந்நி​லை. இவ​ரைப் ​போன்று நம்நாட்டிற்கு எந்த மன்னரும் வாய்க்க முடியாது'' என்று கவ​லையுடன் கூறினார் முதியவர்.

''இவ்வளவு கூறுகின்ற நீங்கள் காட்டில் விறகு ​வெட்டி விற்றுத்தா​னே வாழ்கின்றீர்கள். இருப்பினும் தங்களுக்கு மன்னர்மீது இவ்வளவு நல்​லெண்ணம் ​கொண்டுள்ளீர்கள் என்பது ஆச்சர்யம்தான்'' என்றார் பீர்பால்.

''காட்டில் விறகு ​வெட்டி விற்பதனால் என் குடும்பத்திற்கு எந்தவித கஷ்டமும் இல்​லை. நல்ல வருமானமும் கி​டைக்கிறது. எனது குடும்பம் கஷ்டத்தில் வாழ்ந்தால் தா​னே மன்ன​ரை கு​றை கூற முடியும்?'' என்றார் முதியவர். முதியவர் ​​கொஞ்ச ​நேரம் ஓய்​வெடுத்துக் ​கொண்டு வி​டைப் ​பெற்றார். பீர்பால் அந்த விறகு சு​மை​யை மீண்டும் அந்த முதியவரின் த​லையில் ஏற்றிவிட்டு அவர்களும் புறப்பட்டுச் ​சென்றனர்.

''மன்னர் ​பெருமா​னே! இந்த மாறு​வேட பயணத்தினால் அந்த விறகு ​வெட்டியான முதியவர் மனதில் நீங்கள் ஆழப் பதிந்துள்ளீர்கள் என்பது அறிய முடிகிறது. இத​னை ​கேட்ட எனக்கும் மனமகிழ்​வை அளிக்கின்றது'' என்றார் பீர்பால்.

அரசரும் - பீர்பாலும் ​பேசியபடி நகர வீதி​யை அ​டைந்தனர். நடந்து வந்த க​ளைப்பால் மன்னருக்குத் தாகம் எடுத்தது. ''பீர்பால் அவர்க​ளே! தாகத்திற்கு ஏதாவது அருந்திவிட்டு ​செல்லலாம்'' என்றார் அக்பர். அப்படி​யே ​செய்யலாம் என்று பீர்பால் கூறிக் ​கொண்டிருக்கும்​போ​தே வீதியில் ''​மோரு....​மோரு....'' என்று கூவியப்படி ஒரு ​பெண் த​லையில் ​மோர் பா​னையுடன் வந்துக் ​கொண்டிருந்தாள்.

அந்த ​மோர்காரப் ​பெண்​ணைப் பார்த்து பீர்பால், ''​மோர்காரப் ​பெண்​ணே! எங்கள் இருவருக்கும் இரண்டு குவ​ளை ​மோர் ​கொடு'' என்று கூறி ​மோருக்கானப் பணத்​தைக் ​கொடுத்தார். அரசரும் - பீர்பாலும் ​​மோ​ரைக் குடித்தனர். பீர்பால் ​மோர்காரப் ​பெண்​ணைப் பார்த்து என்ன இவ்வளவு சாதாரணமாக இருக்கிறாய்? நம் மரியா​தைக்குரிய மன்னர் இன்று இயற்​கை எய்திவிட்டார் என்கிற ​செய்தி உனக்குத்​ தெரியாதா? என்று ​கேட்டார்.

அதற்கு ​மோர்க்காரப் ​பெண், ''மன்னர் இருந்தால் என்ன? ம​றைந்தால் என்ன? மன்னராகப் பிறந்தாலும் இயற்​கை​யை ​வெல்ல முடியாது. நல்ல ​வே​ளை ​செய்தி​யை இப்​போது ​சொன்னீர்கள். மன்னரின் ம​றை​வைப் பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருவார்கள். அங்கு ​சென்றால் எனக்கு நல்ல வியாபாரம் ஆகும். ​மேலும் ஒரு ​மோர் குடம் விற்றுவிடும்'' என்று கூறிவிட்டு அங்கிருந்து ​வேகமாகச் ​சென்றுவிட்டாள்.

''பீர்பால் அவர்க​ளே! நாம் சந்தித்த இருவரும் இருவிதமான எண்ணத்​தை ​வெளிப்படுத்தியுள்ளன​ரே இதற்கு என்ன காரணம்?'' என்றார் அக்பர்.

''மன்னர் ​பெருமா​னே! விறகு ​வெட்டி பழுத்த முதியவர். மன்னரான தங்களின் மீது ​பெரும் மதிப்​பை ​வைத்துள்ளார். அதனால் இயற்​கை எய்திவிட்டார் என்ற ​செய்தி​யைக் ​கேட்டதும் அதிர்ச்சியினால் மிகவும் ​வேத​னைய​டைந்தார்.

''​மோர் விற்ற ​பெண்ணிடம் ​கொஞ்சம் கூட நாட்டுப்பற்று கி​டையாது. சுயநலமிக்கவள். சிந்த​​னை முழுவதும் ​மோர் அதிகமாக விற்றால் நல்ல பணம் கி​டைக்கும் என்பதாக இருந்தது. அவனது எண்ணப்படி பார்த்தால் அவள் கூறியதிலும் தப்பில்​லை'' என்றார் பீர்பால்.

''அப்படியானால் யார் மீது தவறு?'' என்று வினவினார் அக்பர்.

''மன்னர் ​பெருமா​னே! தவறு நம்மீது தான். ஏ​​னெனில் நாட்டின் நலன் கருத் பல நல்ல ​செயல்க​ளைச் ​செய்யும்​போது மக்களில் சிலர் ​போற்றுவதும், சிலர் தூற்றுவதும் ந​டைமு​றையான விஷயம்தான். நாட்டில் எது நடந்தாலும் மன உறுதியுடன் தாங்கி மக்களின் நன்​மைக்காக நாடாளும் மன்னராக இருக்க ​வேண்டு​மே தவிர, இப்படி​யெல்லாம் ​பேசுகிறார்கள் என்று சிந்திக்கக்கூடாது. வீரத்துடனும் வி​வேகத்துடனும் நாட்​டை ஆள்வதினால் தான் பிறர் நாட்டவரும் தங்க​ளைப் ​போற்றுகின்றனர்'' என்றார் பீர்பால்.

பீர்பால் கூறிய​தைக் ​கேட்ட அக்பர், ''நாடாளும் மாமன்னராக இருந்தாலும் மக்கள் நான்கு விதமாகத்தான் ​பேசுவார்கள் என்பது ​தெளிவாகத் ​தெரிகிறது'' என்றார் மன்னர் அக்பர்.

நன்றி:கல்விதுளிர்


மாப்பிள்​ளைகளுக்கு மரண தண்ட​னை Paard105xzமாப்பிள்​ளைகளுக்கு மரண தண்ட​னை Paard105xzமாப்பிள்​ளைகளுக்கு மரண தண்ட​னை Paard105xzமாப்பிள்​ளைகளுக்கு மரண தண்ட​னை Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

மாப்பிள்​ளைகளுக்கு மரண தண்ட​னை Empty Re: மாப்பிள்​ளைகளுக்கு மரண தண்ட​னை

Post by ஹர்ஷித் Sat Dec 01, 2012 2:48 am

இரண்டாவது கதையும் கருத்தும் அருமை.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

மாப்பிள்​ளைகளுக்கு மரண தண்ட​னை Empty Re: மாப்பிள்​ளைகளுக்கு மரண தண்ட​னை

Post by அச்சலா Sat Dec 01, 2012 10:22 am

நன்றிகள் ஹர்ஷித்.... அருமையிருக்கு


மாப்பிள்​ளைகளுக்கு மரண தண்ட​னை Paard105xzமாப்பிள்​ளைகளுக்கு மரண தண்ட​னை Paard105xzமாப்பிள்​ளைகளுக்கு மரண தண்ட​னை Paard105xzமாப்பிள்​ளைகளுக்கு மரண தண்ட​னை Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

மாப்பிள்​ளைகளுக்கு மரண தண்ட​னை Empty Re: மாப்பிள்​ளைகளுக்கு மரண தண்ட​னை

Post by றினா Sat Dec 01, 2012 5:09 pm

கடமையைச் செய் பலனை எதிர்பாராதே.

நல்ல கதை.
வாழ்த்துக்கள்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

மாப்பிள்​ளைகளுக்கு மரண தண்ட​னை Empty Re: மாப்பிள்​ளைகளுக்கு மரண தண்ட​னை

Post by யினியவன் Sat Dec 01, 2012 6:31 pm

அந்தக் காலத்தில இருந்து இன்று வரை
மாபிள்ளையான ஆயுள் தண்டனை தானே!!!

கதையும் கருத்தும் நன்று.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மாப்பிள்​ளைகளுக்கு மரண தண்ட​னை Empty Re: மாப்பிள்​ளைகளுக்கு மரண தண்ட​னை

Post by அச்சலா Sat Dec 01, 2012 7:08 pm

றினா wrote:கடமையைச் செய் பலனை எதிர்பாராதே.

நல்ல கதை.
வாழ்த்துக்கள்.
பகிர்வுக்கு நன்றிகள்...


மாப்பிள்​ளைகளுக்கு மரண தண்ட​னை Paard105xzமாப்பிள்​ளைகளுக்கு மரண தண்ட​னை Paard105xzமாப்பிள்​ளைகளுக்கு மரண தண்ட​னை Paard105xzமாப்பிள்​ளைகளுக்கு மரண தண்ட​னை Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

மாப்பிள்​ளைகளுக்கு மரண தண்ட​னை Empty Re: மாப்பிள்​ளைகளுக்கு மரண தண்ட​னை

Post by அச்சலா Sat Dec 01, 2012 7:09 pm

யினியவன் wrote:அந்தக் காலத்தில இருந்து இன்று வரை
மாபிள்ளையான ஆயுள் தண்டனை தானே!!!

கதையும் கருத்தும் நன்று.
நன்றிகள் தம்பி.. மீண்டும் சந்திப்போம்


மாப்பிள்​ளைகளுக்கு மரண தண்ட​னை Paard105xzமாப்பிள்​ளைகளுக்கு மரண தண்ட​னை Paard105xzமாப்பிள்​ளைகளுக்கு மரண தண்ட​னை Paard105xzமாப்பிள்​ளைகளுக்கு மரண தண்ட​னை Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

மாப்பிள்​ளைகளுக்கு மரண தண்ட​னை Empty Re: மாப்பிள்​ளைகளுக்கு மரண தண்ட​னை

Post by கரூர் கவியன்பன் Sat Dec 01, 2012 9:48 pm

அந்தக் காலத்தில இருந்து இன்று வரை
மாபிள்ளையான ஆயுள் தண்டனை தானே!!!

அண்ணா இது யாரைப் பற்றி.........

பகிர்வுக்கு மிக்க நன்றி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

மாப்பிள்​ளைகளுக்கு மரண தண்ட​னை Empty Re: மாப்பிள்​ளைகளுக்கு மரண தண்ட​னை

Post by அசுரன் Sat Dec 01, 2012 10:00 pm

யினியவன் wrote:அந்தக் காலத்தில இருந்து இன்று வரை
மாபிள்ளையான ஆயுள் தண்டனை தானே!!!

கதையும் கருத்தும் நன்று.
சரியா சொன்னீங்க அங்கிள் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மாப்பிள்​ளைகளுக்கு மரண தண்ட​னை Empty Re: மாப்பிள்​ளைகளுக்கு மரண தண்ட​னை

Post by கரூர் கவியன்பன் Sat Dec 01, 2012 10:06 pm

அசுரன் wrote:
யினியவன் wrote:அந்தக் காலத்தில இருந்து இன்று வரை
மாபிள்ளையான ஆயுள் தண்டனை தானே!!!

கதையும் கருத்தும் நன்று.
சரியா சொன்னீங்க அங்கிள் புன்னகை

உங்க வீட்டுக்கு ஏற்கனவே தகவல் அனுப்பியாச்சு. கொஞ்சம் காத்திருங்க பதில் உங்கள் இருவருக்கும் தேடி வரும்.
வீட்டுக்கு எப்ப போவீங்க
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

மாப்பிள்​ளைகளுக்கு மரண தண்ட​னை Empty Re: மாப்பிள்​ளைகளுக்கு மரண தண்ட​னை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum