Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
Top posting users this week
No user |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
கண்ணன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காவிரி: ஷெட்டருடன் ஜெ. நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி- வெறுங் குடத்துடன் திரும்புகிறார்!!
3 posters
Page 1 of 1
காவிரி: ஷெட்டருடன் ஜெ. நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி- வெறுங் குடத்துடன் திரும்புகிறார்!!
சென்னை: காவிரி பிரச்சனை குறித்து கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருடன் தமிழக முதல்வர் ஜெயலலிதா பெங்களூரில் இன்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
காவிரி பிரச்சனை குறித்து தமிழக மற்றும் கர்நாடக முதல்வர்கள் தங்களுக்குள் பேசித் தீர்க்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதையடுத்து கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரை சந்திக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று பிற்பகல் 1.30 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கிளம்பி 2.15 மணிக்கு பெங்களூரில் உள்ள ஹெச்.ஏ.ஏல். விமான நிலையத்தை வந்தடைந்தார்
மதியம் 3 மணிக்கு பழைய விமான நிலைய சாலையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலுக்கு வந்த ஜெயலலிதா அங்கு ஷெட்டரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, சட்ட அமைச்சர் சுரேஷ் குமார், கர்நாடக தலைமைச் செயலாளர் ரங்கநாத் ஆகியோர் ஷெட்டருடன் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். ஜெயலலிதாவுடன் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி. ராமலிங்கம், தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் ஆர். சுப்பிரமணியன், உளவுத்துறை ஐஜி அமரேஷ் பூஜாரி உள்பட 10 பேர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.
அப்போது தமிழகத்தில் மேட்டூர் அணையில் காவிரி டெல்டா பாசனத்துக்காக அடுத்த 6 நாட்களுக்கு மட்டுமே தேவையான நீர் உள்ளது. இதன் பின்னர் நீர் இல்லாவிட்டால் காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்கள் கருகிவிடும்.
இதனால் அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு 30 டிஎம்சி நீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்று ஜெயலலிதா கோரிக்கை விடுத்தார்.
ஆனால், கர்நாடகத்தின் தேவைக்கே தண்ணீர் போதாததால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று ஷெட்டர் கராராகத் தெரிவித்துவிட்டார். இரு தரப்புக்கும் இடையே ஒத்த கருத்து ஏற்படாததால் 2 மணி நேரம் நடப்பதாக இருந்த பேச்சுவார்த்தை வெறும் 55 நிமிடங்களிலேயே முடிந்துவிட்டது.
இக் கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய ஜெயலலிதா,
அடுத்த 15 நாட்களில் தமிழகத்திற்கு காவிரியில் இருந்து 30 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடக் கோரினோம். ஆனால் கர்நாடக முதல்வர் ஒரு சொட்டு தண்ணீர் கூட திறந்துவிட முடியாது என கூறிவிட்டார். அதனால் நாங்கள் மீண்டும் நாளையே உச்ச நீதிமன்றத்தை அணுகவிருக்கிறோம் என்றார்.
இதையடுத்து இன்று மாலை 5 மணிக்கு தனி விமானம் மூலம் புறப்படும் ஜெயலலிதா மாலை 6 மணிக்கு சென்னை வந்தடைகிறார்.
120 அடி கொள்ளளவு உள்ள மேட்டூர் அணையில் இன்று காலை நிலவரப்படி வெறும் 47.81 அடி நீர் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஷெட்டர் ஏற்கனவே கர்நாடக முன்னாள் முதல்வர் எதியூரப்பா கொடுக்கும் குடைச்சல் தாங்க முடியாமல் உள்ளார். எதியூரப்பா நாளை பாஜகவில் இருந்து விலகி வரும் டிசம்பர் 9ம் தேதி புதுக் கட்சி துவங்குகிறார். அவருடன் சேர்ந்து கட்சியை விட்டு விலகப் போவதாக சில எம்.எல்.ஏக்கள் மிரட்டல் விடுத்து வருகின்றனர். இப்படி கழுத்தளவு பிரச்சனைகளுடன் இருக்கும் ஷெட்டர் காவிரிப் பிரச்சனையில் மசியமாட்டார் என்று ஏற்கனவே கூறப்பட்டது போன்று தான் நடந்துள்ளது.
தமிழக கோரிக்கையை ஜெகதீஷ் ஷெட்டர் ஏற்றால் எதியூரப்பா, காங்கிரஸ், தேவ கெளடா அண்ட் கோ தன்னை கர்நாடக விரோதியாக சித்தரிக்கும் என்பதால் ஓட்டுகளுக்கு பயந்து பாஜக அரசு இந்த விஷயத்தில் தொடர்ந்து தமிழகத்துக்கு விரோதமாகவே செயல்பட்டு வருகிறது....
oneindiatamil .............
"அதுக்கு அவுங்க சரிப்படமாட்டங்க ".
காவிரி பிரச்சனை குறித்து தமிழக மற்றும் கர்நாடக முதல்வர்கள் தங்களுக்குள் பேசித் தீர்க்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதையடுத்து கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரை சந்திக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று பிற்பகல் 1.30 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கிளம்பி 2.15 மணிக்கு பெங்களூரில் உள்ள ஹெச்.ஏ.ஏல். விமான நிலையத்தை வந்தடைந்தார்
மதியம் 3 மணிக்கு பழைய விமான நிலைய சாலையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலுக்கு வந்த ஜெயலலிதா அங்கு ஷெட்டரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, சட்ட அமைச்சர் சுரேஷ் குமார், கர்நாடக தலைமைச் செயலாளர் ரங்கநாத் ஆகியோர் ஷெட்டருடன் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். ஜெயலலிதாவுடன் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி. ராமலிங்கம், தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் ஆர். சுப்பிரமணியன், உளவுத்துறை ஐஜி அமரேஷ் பூஜாரி உள்பட 10 பேர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.
அப்போது தமிழகத்தில் மேட்டூர் அணையில் காவிரி டெல்டா பாசனத்துக்காக அடுத்த 6 நாட்களுக்கு மட்டுமே தேவையான நீர் உள்ளது. இதன் பின்னர் நீர் இல்லாவிட்டால் காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்கள் கருகிவிடும்.
இதனால் அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு 30 டிஎம்சி நீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்று ஜெயலலிதா கோரிக்கை விடுத்தார்.
ஆனால், கர்நாடகத்தின் தேவைக்கே தண்ணீர் போதாததால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று ஷெட்டர் கராராகத் தெரிவித்துவிட்டார். இரு தரப்புக்கும் இடையே ஒத்த கருத்து ஏற்படாததால் 2 மணி நேரம் நடப்பதாக இருந்த பேச்சுவார்த்தை வெறும் 55 நிமிடங்களிலேயே முடிந்துவிட்டது.
இக் கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய ஜெயலலிதா,
அடுத்த 15 நாட்களில் தமிழகத்திற்கு காவிரியில் இருந்து 30 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடக் கோரினோம். ஆனால் கர்நாடக முதல்வர் ஒரு சொட்டு தண்ணீர் கூட திறந்துவிட முடியாது என கூறிவிட்டார். அதனால் நாங்கள் மீண்டும் நாளையே உச்ச நீதிமன்றத்தை அணுகவிருக்கிறோம் என்றார்.
இதையடுத்து இன்று மாலை 5 மணிக்கு தனி விமானம் மூலம் புறப்படும் ஜெயலலிதா மாலை 6 மணிக்கு சென்னை வந்தடைகிறார்.
120 அடி கொள்ளளவு உள்ள மேட்டூர் அணையில் இன்று காலை நிலவரப்படி வெறும் 47.81 அடி நீர் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஷெட்டர் ஏற்கனவே கர்நாடக முன்னாள் முதல்வர் எதியூரப்பா கொடுக்கும் குடைச்சல் தாங்க முடியாமல் உள்ளார். எதியூரப்பா நாளை பாஜகவில் இருந்து விலகி வரும் டிசம்பர் 9ம் தேதி புதுக் கட்சி துவங்குகிறார். அவருடன் சேர்ந்து கட்சியை விட்டு விலகப் போவதாக சில எம்.எல்.ஏக்கள் மிரட்டல் விடுத்து வருகின்றனர். இப்படி கழுத்தளவு பிரச்சனைகளுடன் இருக்கும் ஷெட்டர் காவிரிப் பிரச்சனையில் மசியமாட்டார் என்று ஏற்கனவே கூறப்பட்டது போன்று தான் நடந்துள்ளது.
தமிழக கோரிக்கையை ஜெகதீஷ் ஷெட்டர் ஏற்றால் எதியூரப்பா, காங்கிரஸ், தேவ கெளடா அண்ட் கோ தன்னை கர்நாடக விரோதியாக சித்தரிக்கும் என்பதால் ஓட்டுகளுக்கு பயந்து பாஜக அரசு இந்த விஷயத்தில் தொடர்ந்து தமிழகத்துக்கு விரோதமாகவே செயல்பட்டு வருகிறது....
oneindiatamil .............
"அதுக்கு அவுங்க சரிப்படமாட்டங்க ".
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: காவிரி: ஷெட்டருடன் ஜெ. நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி- வெறுங் குடத்துடன் திரும்புகிறார்!!
இது எதிர்பார்த்த ஒன்றுதான். கடவுளின் கண்டனத்திலிருந்து கன்னடன் தப்ப இயலாது!
Re: காவிரி: ஷெட்டருடன் ஜெ. நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி- வெறுங் குடத்துடன் திரும்புகிறார்!!
பேசாமல் தமிழ்நாடு-கர்நாடகா இணைத்து ஒரே மாநிலமாக மாற்றினால் தான் விடிவு பிறக்கும்.
மத்ய அரசு -மத்யஸ்தம் செய்ய விரும்பா அரசு
காவிரி நதிநீர் ஆணையம் --மதிப்பே இல்லாத ஆணையம் - அவர்கள் சொல்வதை கேட்க யாருமில்லை.
உச்ச நீதிமன்றம் என்ன பண்ணப் போகிறது?
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் ----சாவி களஞ்சியம் ஆக போகிறதா?
பயங்கரமான நிலை கண்ணில் தெரிகிறது.
ரமணியன்
மத்ய அரசு -மத்யஸ்தம் செய்ய விரும்பா அரசு
காவிரி நதிநீர் ஆணையம் --மதிப்பே இல்லாத ஆணையம் - அவர்கள் சொல்வதை கேட்க யாருமில்லை.
உச்ச நீதிமன்றம் என்ன பண்ணப் போகிறது?
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் ----சாவி களஞ்சியம் ஆக போகிறதா?
பயங்கரமான நிலை கண்ணில் தெரிகிறது.
ரமணியன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Similar topics
» ஈரானுக்கும் வெளிநாடுகளுக்கும் இடையியிலான அணுசக்தி பேச்சுவார்த்தை தோல்வி
» பேச்சுவார்த்தை தோல்வி: வங்கி ஊழியர்கள் திட்டமிட்டபடி நாளை முதல் வேலைநிறுத்தம்
» டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி: திட்டமிட்டபடி 1-ம் தேதி லாரி ஸ்டிரைக் தொடங்கும்!!
» காவிரி நீரும்.. திமுக நடத்திய உரிமைப் போரும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் விளக்கக் கடிதம்
» இந்தியா-சீனா 3ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி: நம்மைப் பின்வாங்கச் சொல்கிறது சீனா
» பேச்சுவார்த்தை தோல்வி: வங்கி ஊழியர்கள் திட்டமிட்டபடி நாளை முதல் வேலைநிறுத்தம்
» டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி: திட்டமிட்டபடி 1-ம் தேதி லாரி ஸ்டிரைக் தொடங்கும்!!
» காவிரி நீரும்.. திமுக நடத்திய உரிமைப் போரும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் விளக்கக் கடிதம்
» இந்தியா-சீனா 3ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி: நம்மைப் பின்வாங்கச் சொல்கிறது சீனா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|