Latest topics
» நாவல்கள் வேண்டும்by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் பயங்கரம்: இளம்பெண் காரில் எரித்து கொலை- உடல் எலும்புக்கூடான பரிதாபம்
3 posters
Page 1 of 1
சென்னையில் பயங்கரம்: இளம்பெண் காரில் எரித்து கொலை- உடல் எலும்புக்கூடான பரிதாபம்
நீலாங்கரை அருகே பாலவாக்கத்தில் நடந்த இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பாலவாக்கத்தில் பிரபலமான செயிண்ட் ஜான் பள்ளி அருகில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றி உடனடியாக அப்பள்ளியின் காவலாளிகளானஅந்தோனி, சந்த்ரு ஆகியோர் தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக திருவான்மியூர் தீயணைப்பு நிலைய அதிகாரி வெங்கடபதி மற்றும் நீலாங்கரை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். காரில்எரிந்து கொண்டிருந்த தீயை போராடி அணைத்தனர். அதற்குள் கார் முற்றிலும் எரிந்து உறுக்குலைந்து போனது.
இதன் பிறகு போலீசார் காரின் அருகில் சென்று உள்ளே யாராவது இருக்கிறார்களா? என்று பார்த்தனர். அப்போது அவர்கள் கண்ட காட்சி கடும்அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டிரைவர் இருக்கையின் பக்கத்து சீட்டில் காரின் முன்பகுதியில் சாய்ந்த நிலையில் அடையாளம் தெரியாத அளவுக்கு எலும்புக் கூடாக பெண்ணின் உடல் ஒன்று இருந்தது.
காரில் உள்ள 4 கதவுகளில் டிரைவர் சீட்டின் அருகில் உள்ள கதவு மட்டும் திறந்திருந்தது. அதன் வழியாக அந்த உடலை மீட்பதற்கு முயற்சி செய்தனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து, பூட்டப்பட்டிருந்த மற்ற கதவுகளின் பூட்டை உடைத்து பெண்ணின் உடலை வெளியில் எடுத்தனர். அப்பெண் யார்? என்பது தெரியவில்லை. காரின் நம்பர் பிளேட்டும் தீயில் எரிந்து நாசமாகி விட்டது.
இதனால் கார் நம்பரையும் போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. தீயில் கருகி பலியான பெண்ணுக்கு 20 வயது இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். அவரை யாரோ கொலை செய்து உடலை காரில் கடத்தி வந்து பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொளுத்தியுள்ளனர். மர்ம கும்பல் ஒன்று திட்டமிட்டு இந்த கொலையை செய்துள்ளது. கொலையாளிகள் யார்? எதற்காக கொடூரமாக இளம் பெண்ணை கொலை செய்தார்கள் என்பதும் தெரியவில்லை.
இதுபற்றி, தென் சென்னை இணை கமிஷனர் திருஞானம், அடையாறு துணை கமிஷனர் சுதாகர் ஆகியோரது மேற்பார்வையில் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இக்கொலை குறித்து துப்பு துலக்குவதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இத்தனிப்படையினர் பல்வேறுகோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். முதற்கட்டமாக இந்த கார் யாருடையது என்பதை கண்டு பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். கார் நம்பர்தெரியாத நிலையில் இதில் துப்பு துலக்குவதிலும் போலீசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் கொலை செய்யப்பட்ட பெண் யார்? என்பதை கண்டு பிடிப்பதிலும் போலீசார் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
நீலாங்கரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காணாமல் போனவர்கள் பற்றி விசாரணை நடத்தப்படுகிறது. மேலும் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளுர் மாவட்டங்களிலும் நேற்று இரவு யாராவது திடீரென காணாமல் போயிருக்கிறார்களா என்பதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மர்மமான முறையில் காருக்குள் இளம் பெண் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதுடன் போலீசாரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கிடையே கிழக்கு கடற்கரை சாலை கோவளம் குன்னூர்காடு பகுதியில் பிரபல நட்சத்திர ஓட்டலுக்கு செல்லும் சாலையில் ஒரு வாலிபர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இன்று காலை பிணமாக கிடந்தார். கொலை செய்யப்பட்ட அந்த வாலிபருக்கு 25 வயது முதல்30 வயது இருக்கும். மாநிறமாக இருந்தார். லுங்கியும், வெள்ளைச் சட்டையும் அணிந்து இருந்தார். அதில் ரத்தக்கறை படிந்து இருந்தது. அந்த வாலிபரை யாரோ கொலை செய்து விட்டு பிணத்தை காரில் கொண்டு வந்து சாலையோரம் வீசியுள்ளனர்.
இது பற்றிய தகவல் கிடைத்ததும் கேளம்பாக்கம்போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மாமல்லபுரம் டி.எஸ்.பி.கணேசனும் அங்கு வந்தார். கொலை செய்யப்பட்டவாலிபர் யார்? எந்த ஊர் என்ற விவரம் தெரியவில்லை. துப்பு துலக்குவதற்காக மோப்பநாய் வரவழைக்கப்படுகிறது.
பாலவாக்கத்தில் ஒரு பெண் நேற்று இரவு காருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலைநடந்த 10 கிலோ மீட்டர் தொலைவில்தான் வாலிபரும் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.
ஒரே நாள் இரவில் 2 கொலைகளும் நடந்து உள்ளதால் ஒரே கும்பல்தான் அவர்களை கடத்தி கொலை செய்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பாலவாக்கத்தில் பிரபலமான செயிண்ட் ஜான் பள்ளி அருகில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றி உடனடியாக அப்பள்ளியின் காவலாளிகளானஅந்தோனி, சந்த்ரு ஆகியோர் தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக திருவான்மியூர் தீயணைப்பு நிலைய அதிகாரி வெங்கடபதி மற்றும் நீலாங்கரை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். காரில்எரிந்து கொண்டிருந்த தீயை போராடி அணைத்தனர். அதற்குள் கார் முற்றிலும் எரிந்து உறுக்குலைந்து போனது.
இதன் பிறகு போலீசார் காரின் அருகில் சென்று உள்ளே யாராவது இருக்கிறார்களா? என்று பார்த்தனர். அப்போது அவர்கள் கண்ட காட்சி கடும்அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டிரைவர் இருக்கையின் பக்கத்து சீட்டில் காரின் முன்பகுதியில் சாய்ந்த நிலையில் அடையாளம் தெரியாத அளவுக்கு எலும்புக் கூடாக பெண்ணின் உடல் ஒன்று இருந்தது.
காரில் உள்ள 4 கதவுகளில் டிரைவர் சீட்டின் அருகில் உள்ள கதவு மட்டும் திறந்திருந்தது. அதன் வழியாக அந்த உடலை மீட்பதற்கு முயற்சி செய்தனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து, பூட்டப்பட்டிருந்த மற்ற கதவுகளின் பூட்டை உடைத்து பெண்ணின் உடலை வெளியில் எடுத்தனர். அப்பெண் யார்? என்பது தெரியவில்லை. காரின் நம்பர் பிளேட்டும் தீயில் எரிந்து நாசமாகி விட்டது.
இதனால் கார் நம்பரையும் போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. தீயில் கருகி பலியான பெண்ணுக்கு 20 வயது இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். அவரை யாரோ கொலை செய்து உடலை காரில் கடத்தி வந்து பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொளுத்தியுள்ளனர். மர்ம கும்பல் ஒன்று திட்டமிட்டு இந்த கொலையை செய்துள்ளது. கொலையாளிகள் யார்? எதற்காக கொடூரமாக இளம் பெண்ணை கொலை செய்தார்கள் என்பதும் தெரியவில்லை.
இதுபற்றி, தென் சென்னை இணை கமிஷனர் திருஞானம், அடையாறு துணை கமிஷனர் சுதாகர் ஆகியோரது மேற்பார்வையில் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இக்கொலை குறித்து துப்பு துலக்குவதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இத்தனிப்படையினர் பல்வேறுகோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். முதற்கட்டமாக இந்த கார் யாருடையது என்பதை கண்டு பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். கார் நம்பர்தெரியாத நிலையில் இதில் துப்பு துலக்குவதிலும் போலீசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் கொலை செய்யப்பட்ட பெண் யார்? என்பதை கண்டு பிடிப்பதிலும் போலீசார் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
நீலாங்கரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காணாமல் போனவர்கள் பற்றி விசாரணை நடத்தப்படுகிறது. மேலும் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளுர் மாவட்டங்களிலும் நேற்று இரவு யாராவது திடீரென காணாமல் போயிருக்கிறார்களா என்பதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மர்மமான முறையில் காருக்குள் இளம் பெண் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதுடன் போலீசாரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கிடையே கிழக்கு கடற்கரை சாலை கோவளம் குன்னூர்காடு பகுதியில் பிரபல நட்சத்திர ஓட்டலுக்கு செல்லும் சாலையில் ஒரு வாலிபர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இன்று காலை பிணமாக கிடந்தார். கொலை செய்யப்பட்ட அந்த வாலிபருக்கு 25 வயது முதல்30 வயது இருக்கும். மாநிறமாக இருந்தார். லுங்கியும், வெள்ளைச் சட்டையும் அணிந்து இருந்தார். அதில் ரத்தக்கறை படிந்து இருந்தது. அந்த வாலிபரை யாரோ கொலை செய்து விட்டு பிணத்தை காரில் கொண்டு வந்து சாலையோரம் வீசியுள்ளனர்.
இது பற்றிய தகவல் கிடைத்ததும் கேளம்பாக்கம்போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மாமல்லபுரம் டி.எஸ்.பி.கணேசனும் அங்கு வந்தார். கொலை செய்யப்பட்டவாலிபர் யார்? எந்த ஊர் என்ற விவரம் தெரியவில்லை. துப்பு துலக்குவதற்காக மோப்பநாய் வரவழைக்கப்படுகிறது.
பாலவாக்கத்தில் ஒரு பெண் நேற்று இரவு காருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலைநடந்த 10 கிலோ மீட்டர் தொலைவில்தான் வாலிபரும் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.
ஒரே நாள் இரவில் 2 கொலைகளும் நடந்து உள்ளதால் ஒரே கும்பல்தான் அவர்களை கடத்தி கொலை செய்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: சென்னையில் பயங்கரம்: இளம்பெண் காரில் எரித்து கொலை- உடல் எலும்புக்கூடான பரிதாபம்
எங்கோ சென்று கொண்டிருக்கிறது நாடு...,
சர்வசாதரணமாக கொலை கொள்ளைகள் நடந்தேறுகிறது.
வெளியில் செல்லவே பயமாக இருக்கிறது.
பவுன்ராஜ் அண்ணே இந்த செய்தியை எங்கிருந்து எடுத்து பதிவிடீர்களோ அந்த தளத்தின் முகவரியை இணைத்தே பதிவுகளிடுங்கள்...,
சர்வசாதரணமாக கொலை கொள்ளைகள் நடந்தேறுகிறது.
வெளியில் செல்லவே பயமாக இருக்கிறது.
பவுன்ராஜ் அண்ணே இந்த செய்தியை எங்கிருந்து எடுத்து பதிவிடீர்களோ அந்த தளத்தின் முகவரியை இணைத்தே பதிவுகளிடுங்கள்...,
Re: சென்னையில் பயங்கரம்: இளம்பெண் காரில் எரித்து கொலை- உடல் எலும்புக்கூடான பரிதாபம்
கவலையான செய்தி. பாதுகாப்பு நடவடிக்கைகள் இன்னும் அதிகமாகவே தேவை
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» திண்டுக்கல் அருகே பரபரப்பு ஓடும் காரில், இளம்பெண் கற்பழித்து கொலை? 1 1/2 வயது குழந்தையுடன் பிணத்தை வீசிய பயங்கரம்
» வீடு புகுந்து தந்தை-மகன் வெட்டிக் கொலை, இளம்பெண் தற்கொலை விவகாரத்தில் பயங்கரம்
» சென்னையில் பயங்கரம் - ஓய்வு பெற்ற கப்பல் கேப்டன், மனைவி சுட்டுக் கொலை
» எய்ட்ஸ் தாக்கிய மனைவி மகள்களை காரில் வைத்து எரித்து கொன்ற என்ஜினீயர்
» தஞ்சையில் பயங்கரம்: பட்டதாரி மனைவியை எரித்து கொன்ற தொழிலாளி; நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம்
» வீடு புகுந்து தந்தை-மகன் வெட்டிக் கொலை, இளம்பெண் தற்கொலை விவகாரத்தில் பயங்கரம்
» சென்னையில் பயங்கரம் - ஓய்வு பெற்ற கப்பல் கேப்டன், மனைவி சுட்டுக் கொலை
» எய்ட்ஸ் தாக்கிய மனைவி மகள்களை காரில் வைத்து எரித்து கொன்ற என்ஜினீயர்
» தஞ்சையில் பயங்கரம்: பட்டதாரி மனைவியை எரித்து கொன்ற தொழிலாளி; நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|