ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வண்ணங்களில் சில எண்ணங்கள்

5 posters

Go down

வண்ணங்களில் சில எண்ணங்கள் Empty வண்ணங்களில் சில எண்ணங்கள்

Post by மீனு Tue Oct 13, 2009 3:13 am

கருப்பு: கண்டனம். ஜ்யோவராம் சுந்தர் மீது நடந்த வன்முறைக்கு. இங்கே நான் வன்முறை எனக் குறிப்பிடுவது அவர் மூக்கில் விழுந்த குத்தை அல்ல. அந்தக் குத்து விடுமுன் அழைக்கப்பட்டு நம்பிக்கையோடு திரும்பினாரே, அந்த நம்பிக்கையை ரோசா வசந்த் சிதைத்ததுதான் மிகப் பெரிய வன்முறை. ‘எனக்கு உங்களுடைய ஒரு கருத்தில் உடன்பாடில்லை ஜ்யோவ். வாருங்கள் சண்டையிடலாம்’ என்றே அழைத்திருக்கலாம். எழுத்திற்காக மூக்கில் அடிவாங்க நேருமென்றால் எழுத்தாளர்கள் எல்லாருமே ப்ளாஸ்திரி சுற்றப்பட்ட மூக்கோடுதான் இருக்க வேண்டிவரும். ‘உன் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் அந்தக் கருத்தைச் சொல்ல உனக்கிருக்கும் உரிமைக்காக என் உயிரையும் கொடுக்கத் தயார்’ என்ற வால்ட்டேரை வணங்குகிறேன்.

சிகப்பு: வன்முறை. மீண்டும் போன பாராவின் டாபிக்கே வருகிறது. வேண்டாம். சிகப்பு - ரத்தம். ம்ஹூம். மறுபடி அங்கேயே போகிறது விஷயம்.
ம்ம்ம்ம்....

உறவினர் ஒருவரின் சிகிட்சை காரணமாக மருத்துவமனை செல்ல நேர்ந்தது. அப்போது அவசர சிகிட்சைப் பிரிவுக்கு ஸ்ட்ரக்சரில் கொண்டு வரப்பட்டார் ஒரு இளைஞர். தலைமுழுக்க வறுமையின் நிறம் சூழந்திருந்தது. பைக் விபத்து. எப்போதுமே ஹெல்மெட் போடுவாராம். அன்றும் போட்டிருந்தாராம். ‘அப்புறம் எப்படி?’ என விசாரிக்கையில், ஹெல்மெட்டின் பட்டியை (STRAP) போட மாட்டாராம். எதிரில் வந்த காரால் எகிறி அடிக்கப்பட்டதில் பத்தடி உய்ரத்தில் பறந்தபோது ஹெல்மெட் கழன்று எங்கோ விழுந்திருக்கிறது. எத்தனையோ நண்பர்களுக்கு இதை நான் சொல்லியிருக்கிறேன். அன்றைக்கு, அதுவும் அத்தனை ரத்தத்தோடு அந்த இளைஞனைப் பார்த்த பிறகு இதனைக் கேள்விப்பட்டதும் அவனது அஜாக்கிரதைக்காக மனதுக்குள் அவனைத் திட்டினேன். Get well soon buddy!

பச்சை: பசுமை. மரங்கள். இயற்கையின் காதலன் நான். எங்கே மரம் வெட்டப்பட்டாலும் என் மனம் அழும். எங்கள் அலுவலக வளாகத்திற்குள்ளேயே ஒரு மரம் வெட்டப்பட்டது. வேறு எந்த வழியுமில்லாமல் போனது. அன்றைக்கு முழுதுமே ஏதோ கொலையாளி போல என்னை நானே உணர்ந்தேன். பிராயச்சித்தமாக குறைந்தது ஐந்து மரங்களையாவது நட எண்ணம். நிச்சயம் செய்வேன்.

நீலம்: அன்பு. என் இப்போதைய அன்பை ஆதிமூலகிருஷ்ணனுக்கு அளிக்கிறேன். வேலை, குடும்பம், வலையுலகம் என்பதையும் மீறி சென்னைவாசிகளை வதைக்கும் ஒரு விஷயம் பிரயாணம். அவர்களின் ஒரு நாளின் இருபத்தைந்து சதவிகித நேரத்தை பிரயாணம் எடுத்துக் கொள்கிறது. அந்த விஷயத்தில் ஆதியின் சிரமத்தை நானும் அறிவேன். அதையெல்லாம் மீறி நேரமொதுக்கி என்னை வரைந்து பரிசளித்த அவருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. தவிரவும், ஒருவன் தன்னைத்தானே கண்ணாடியில் பார்த்துக் கொள்ள எவ்வளவும் சலிக்க மாட்டான். தன்னைத் தவிர, தன்னை அதிக நேரம் பார்த்துக் கொண்டிருப்பது தான் நேசிக்கும் ஒருவராகத்தான் இருக்க முடியும். அவரது பதிவின் பின்னூட்டத்தில் குறிப்பிட்டதைப் போல அந்தப் படத்தை வரையும் வரை அவர் என்னைப் பார்த்துக் கொண்டே இருந்திருக்கிறார் என்பதைவிடவும் என்னை நெகிழ்ச்சியுறச் செய்வது எதுவுமில்லை. ஆதி... உங்கள் திறமைக்கும், அன்பிற்கும்..... I LOVE YOU DA!

மஞ்சள்: எச்சரிக்கை. நாட்டை செல்ஃபோன் வியாதி மிகத் தீவிரமாக பற்றிக் கொண்டு வருகிறது. ஒரு ஃபோன் என்பதைத் தாண்டி, இரண்டு ஃபோன்கள் என்பது சர்வசாதாரணமாகி விட்டது. (அதில் ஒன்று டபுள் சிம் ஃபோன்!) பொது இடத்தில் புகைக்கத் தடை இருப்பதுபோல (இருக்கிறதுதானே?) செல்ஃபோன் பேசவும் தடைவிதிக்கலாம். விதிக்கும் காலம் வரலாம். அத்தனை உரக்கக் காதலிக்கிறார்கள் ஃபோனில். அத்தனை உரக்கச் சிரிக்கிறார்கள். அத்தனை உரக்க உரையாடுகிறார்கள். அத்தனை உரக்கக் கட்டளையிடுகிறார்கள். அவர்களின் காதலியின் முத்தம் என் கன்னத்தில் விழுகிறது. அவர்களின் வெட்கம் என்னைப் பற்றிக் கொள்கிறது. மருத்துவமனையில் சிலரின் வேதனை முகங்களுக்கு நடுவே, அவர்களின் சிரிப்பொலி எனக்கு எரிச்சலைத் தருகிறது. அவர்கள் வீட்டு சாம்பாரில் என்ன காயென்று எனக்குத் தெரிகிறது. அவர்களின் கோவம் என்னை நடுங்கச் செய்கிறது. அவர்களின் கட்டளை என்னையும் செலுத்துகிறது. அவர்களுக்கு நடுவே, அலைபேசியை மௌனித்து வைத்திருக்கும் நான் அந்நியனாகிறேன். என்னிடம் அலைபேசி இல்லையென்று அவர்கள் நினைப்பார்களோ, அப்படி இருப்பது கௌரவக்குறைவோ எனும் பேதமை எண்ணம் என்னைச் செலுத்த, வெறுமனே எடுத்துப் பேசுகிறேன். கத்துகிறேன். சிரிக்கிறேன். தொலைக்காட்சியை இடியட் பாக்ஸ் என்கிறீர்கள். அதன் அப்பனுக்கு அப்பனை பாக்கெட்டிலேயே வைத்துக் கொண்டு திரிகிறோம். உபயோகிக்கும் முறை தவறி. உடனடியாக எல்லாரும் அலைபேசி சாத்தானிடம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். Be Alert!

வெண்மை: அமைதி. ஒன்றுமே எழுதாமல் அமைதியாகவே இருக்கிறேன். விட்டால், எதையும் பேசாமல் ரொம்பவும் அமைதியாக இருப்பதால் அமைதிக்கான நோபல் பரிசை எனக்கும்கூட கொடுத்துவிடுவார்கள் என்பதால் இதை எழுதுகிறேன். வெண்மை சமாதானத்திற்கும் அடையாளமாகச் சொல்வார்கள். பதிவுலகின் சண்டைகளும், பொறாமைகளும், சமாதானமடைய என்னை நானே வேண்டிக் கொள்கிறேன். அதை நோக்கி அனைவரும் செயல்படலாம். ஆதிமூலகிருஷ்ணன் ஒன்றை ஆரம்பித்தது போல, எல்லாரும் பகைமைகளை, வேதனைகளை மறக்கச் செய்ய ஏதாவது எழுதி, நம்மை படிக்க மட்டுமே வரும் இணைய வாசகர்களை ஆற்றுப்படுத்தலாம். Let’s Make it Happen!


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

வண்ணங்களில் சில எண்ணங்கள் Empty Re: வண்ணங்களில் சில எண்ணங்கள்

Post by தாமு Tue Oct 13, 2009 6:31 am

நல்ல விளக்கம் மீனு... வண்ணங்களில் சில எண்ணங்கள் Icon_lol வண்ணங்களில் சில எண்ணங்கள் 677196 வண்ணங்களில் சில எண்ணங்கள் 677196 வண்ணங்களில் சில எண்ணங்கள் 677196 வண்ணங்களில் சில எண்ணங்கள் Icon_lol

எனக்கு பச்சை, நீலம், ரோஸ் ரொம்ப பிடிக்கும்... வண்ணங்களில் சில எண்ணங்கள் Icon_lol

என் மனைவிக்கும் பச்சை ரொம்ப பிடிக்கும்.... வண்ணங்களில் சில எண்ணங்கள் Icon_lol

அதிகமா பச்சை கலர் புடவை எடுப்பா..... வண்ணங்களில் சில எண்ணங்கள் 154550

வண்ணங்களில் சில எண்ணங்கள் 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

வண்ணங்களில் சில எண்ணங்கள் Empty Re: வண்ணங்களில் சில எண்ணங்கள்

Post by mdkhan Tue Oct 13, 2009 10:42 am

நன்றி மீனு

இந்த பதிவை பார்த்த பிறகுதான் வண்ணங்கள் என்பது வெறும் நிறம் அல்ல அது வாழ்வில் ஒரு அங்கம் என்பதுபோல உணர்வு ஏற்படுகிறது.

எத்தனை வண்ணங்கள் இருந்தாலும் கருப்பு கண்டனத்துக்கு உரியது, சிகப்பு எச்சரிக்கைக்கு உரியது, பச்சை பசுமைக்கு உரியது, வெண்மை அமைதிக்கு உரியது என்று எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று.

ஆனால் இவையையே தலையங்களாக்கி இன்றைய அவங்களையும், அச்சுருத்தல்களையும், அன்பையும், அமைதியையும் விளங்க வைத்த பதிவு இது.


வண்ணங்களில் சில எண்ணங்கள் Eegaraitkmkhan
வண்ணங்களில் சில எண்ணங்கள் Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

வண்ணங்களில் சில எண்ணங்கள் Empty Re: வண்ணங்களில் சில எண்ணங்கள்

Post by மீனு Tue Oct 13, 2009 12:40 pm

நன்றிகள் தாமு..நன்றிகள் கான்.. வண்ணங்களில் சில எண்ணங்கள் 678642 வண்ணங்களில் சில எண்ணங்கள் 154550


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

வண்ணங்களில் சில எண்ணங்கள் Empty Re: வண்ணங்களில் சில எண்ணங்கள்

Post by செரின் Tue Oct 13, 2009 12:42 pm

என்ன மீனு கலர் கலரா கனவு கானுறிங்களா???
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

வண்ணங்களில் சில எண்ணங்கள் Empty Re: வண்ணங்களில் சில எண்ணங்கள்

Post by மீனு Tue Oct 13, 2009 12:44 pm

செரின் wrote:என்ன மீனு கலர் கலரா கனவு கானுறிங்களா???

ஆமா ஷெரின்..கண்ணை மூடினால் இப்படிதான் கனவா கொட்டுது ஷெரின்..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

வண்ணங்களில் சில எண்ணங்கள் Empty Re: வண்ணங்களில் சில எண்ணங்கள்

Post by செரின் Tue Oct 13, 2009 12:46 pm

மீனு wrote:
செரின் wrote:என்ன மீனு கலர் கலரா கனவு கானுறிங்களா???

ஆமா ஷெரின்..கண்ணை மூடினால் இப்படிதான் கனவா கொட்டுது ஷெரின்..


பரவாயில்லை மீனு கனவு கானுற வயசில தானே கணவு காணமுடியும்
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

வண்ணங்களில் சில எண்ணங்கள் Empty Re: வண்ணங்களில் சில எண்ணங்கள்

Post by tamilparks Tue Oct 13, 2009 2:48 pm

நல்ல இருக்குது உங்கள் விளக்கங்கள்
tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009

http://tamilparks.50webs.com

Back to top Go down

வண்ணங்களில் சில எண்ணங்கள் Empty Re: வண்ணங்களில் சில எண்ணங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum