Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்by Anthony raj Today at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாப்பிள்ளைகளுக்கு மரண தண்டனை
Page 1 of 1
மாப்பிள்ளைகளுக்கு மரண தண்டனை
மாப்பிள்ளைகளுக்கு மரண தண்டனை
அக்பர் தனது மகளை ஓர் அரசக்குமாரனுக்கு திருமணம் செய்து வைத்தார். அன்புடன் குடும்பம் நடத்தி வந்த அவர்களின் வாழ்வில் ஏதோ ஒரு காரணத்திற்காக சண்டையும் சச்சரவும் ஏற்பட்டுவிட்டது. இதனால் மன அமைதி இழந்த அக்பரின் மகள் தன் தந்தையிடம் வந்து கண்ணீர் விட்டு கதறி அழுதாள். பாசத்துடன் வளர்த்த மகளின் கண்ணீரைக் கண்டதும் அக்பருக்கு தன் மாப்பிள்ளையின் மீது கடுங்கோபம் ஏற்பட்டது. அதனால் படைவீரர்களை அனுப்பி மருமகனைக் கைது செய்து டில்லி சிறையில் அடைத்தார். அத்துடன் அவரது கோபம் தணியாமல் எல்லா வீட்டிலுள்ள மாப்பிள்ளைகளையும் கைது செய்துவர ஆணையிட்டார். பீர்பாலை உடனே வரவழைத்தார் அக்பர்.
''சக்ரவர்த்திப் பெருமானே, தாங்கள் உடனே என்னை அழைத்ததன் காரணம் என்ன?'' என்று வினவினார் பீர்பால். ''பீர்பால் அவர்களே, நாளைக் காலை சூரிய உதயத்தில் எனது மாப்பிள்ளையை தூக்கிலேற்றி மரண தண்டனை விதிக்க வேண்டும். அதே சமயம் நமது நகரத்திலுள்ள ஒவ்வொரு வீட்டின் மாப்பிள்ளைகளையும் தூக்கிலிட வேண்டும். இனி நமது நாட்டில் மாப்பிள்ளைகளே இல்லை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்''என்றார் அக்பர்.
மன்னரின் அதிசய ஆணையைக் கேட்டு பீர்பால் அதிர்ச்சியடைந்தார். உத்தரவைக் கேட்ட மக்களும் பீதியடைந்தனர். பீதியடைந்த மக்களைப் பார்த்து,''இதற்காகப் பயப்பட வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன். ''அரசரும் அவ்வளவு கொடுமனம் படைத்தவரல்ல'' என்று சமாதானம் கூறி அனுப்பி வைத்தார் பீர்பால்.
சூரிய உதயத்திற்கு முன்னர் அரண்மனைக்குச் சென்ற பீர்பால்,''சக்ரவர்த்திப் பெருமானே! தாங்கள் கூறியபடியே தூக்கு மரங்கள் தயாராகிவிட்டது. தாங்கள் வந்து பார்வையிட்டப் பின்னர் உடனடியாக எல்லா மாப்பிள்ளைகளுக்கும் தூக்குத் தண்டனையை நிறைவேற்றி விடலாம்'' என்றார் பீர்பால்.பீர்பாலின் சொற்படி தூக்கு மரங்களைப் பார்வையிட்டார். அச்சமயம் அந்தத் தூக்கு மரங்களுக்கு இடையில் ஒரு தூக்கு மரம் தங்கத்தாலும் மற்றொரு தூக்கு மரம் வெள்ளியினாலும் காணப்பட்டது. ''இந்த இரு தூக்கு மரங்கள் மட்டும் ஏன் வித்தியாசமாக உள்ளது. காரணம் என்ன?'' என்று வினவினார் அக்பர்.
சிறிதும் பதட்டப்படாமல் அமைதியாக,''மன்னர் பெருமானே! அங்கே தங்கத்தினால் உருவாக்கப்பட்ட தூக்குமரம் தங்களுக்காகவும், வெள்ளியினால் உருவாக்கப்பட்ட தூக்குமரம் எனக்காகவும் என்றார் பீர்பால். பீர்பாலின் எதிர்பாராத பதிலலைக் கேட்டதும் அக்பருக்கு வியப்பாக இருந்தது.
''நமக்கு எதற்காகத் தூக்கு மரங்கள்?''என்றார் அக்பர்.
''மன்னர் பெருமானே! தாங்களும் ஒரு வீட்டின் மாப்பிள்ளைதானே! அதே போன்று நானும் ஒரு வீட்டின் மாப்பிள்ளைதானே! ஆகவே சட்டப்படி தண்டனை நம்முடைய இருவருக்கும் சேர்த்துதானே!'' என்றார் பீர்பால். கோபத்துடன் இருந்த அக்பர் தன்னை மறந்து வாய்விட்டுச் சிரித்தார்.
''மேன்மைமிகு சக்ரவர்த்தி பெருமானே! தங்களுடைய மாப்பிள்ளை தவறு செய்தமைக்காக நாட்டிலுள்ள மாப்பிள்ளைகள் எல்லோரையும் தண்டிப்பது என்ன நியாயம்? தங்களுடைய மாப்பிள்ளை செய்த தவறை திருத்தி நல்வழி படுத்த வேண்டுமேயன்றி மரண தண்டனை அளிக்கலாமா? தங்களைத் திருத்துவதற்கு எந்த அருகதையும் எனக்கு இல்லை. ஆனால் இந்தச் செய்கையினால் தங்களுக்கு இழுக்கு வராமல் தடுப்பது எனது கடமையல்லவா? தயவு செய்து மாப்பிள்ளைகளின் மரண தண்டனையை உடனடியாக ரத்து செய்ய வேண்டுகிறேன்'' என்றார் பீர்பால். தவறு செய்து அவப்பெயர் எடுப்பதிலிருந்து தன்னைத் தடுத்த பீர்பாலை அக்பர் பெரிதும் பாராட்டினார்.
நாடாலும் வேந்தராக இருந்தாலும் நாட்டு மக்கள் நான்கு விதமாகத்தான் பேசுவார்கள்
மாமன்னர் அக்பர் தன் நாட்டின் நடப்பு நிலை எப்படி இருக்கிறது என்று தனது ஒற்றர்களின் மூலம் அறிந்து கொள்வது வழக்கம். இருப்பினும் ஒருநாள் தன் நாட்டு மக்கள் தம்மைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை தாமே நேரில் அறிந்து கொள்ள ஆவல் ஏற்பட்டது. மன்னர் தன் எண்ணத்தை பீர்பால் அவர்களிடம் கூறினார். ''மக்களின் மனநிலையை அறிந்து கொள்வது மன்னரின் கடமையாகும். ஆதலின் நேரில் போய் சந்திப்போம்'' என்றார் பீர்பால்.
''நீங்கள் சொல்வது போல் நேரில் சென்று சந்தித்தால் மக்கள் உண்மையை கூற தயங்குவார்கள் அல்லவா?'' என்றார் மன்னர்.
''மன்னர் பெருமானே! நேரில் போகலாம் என்று சொன்னது மாறுவேடத்தில். அப்படி சென்றால் யாருக்கும் அடையாளம் தெரியாது. மக்களும் மனம் திறந்து உண்மையைக் கூறுவார்கள்'' என்றார் பீர்பால். பீர்பால் கூறியபடியே சாதாரண விவசாயிகள் போன்று மாறுவேடத்தில் நாட்டைச் சுற்றிப் பார்க்கச் சென்றனர். வெகுதூரம் சென்றதும் ஒரு ஒற்றையடிப் பாதைக் குறுக்கிட்டது. அந்தப் பாதை அடர்ந்த காட்டுப் பகுதிக்குச் செல்லும் வழியாகும். வெகு தூரம் வந்தமையால் மன்னருக்கு களைப்பு ஏற்பட்டது.
அதனால் பீர்பாலிடம் ''இங்கு சற்று ஓய்வெடுத்துவிட்டு செல்லலாம்'' என்றார் அக்பர். பீர்பாலும், ''அப்படியே செய்வோம்'' என்று கூறி ஒரு பெரிய மரத்தின் நிழலில் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.
அச்சமயம் காட்டிற்குச் செல்லும் ஒற்றையடிப் பாதையின் வழியாக விறகுகளை நன்கு கட்டி தலையில் சுமந்து கொண்டு ஒருவர் வந்து கொண்டிருந்தார். அவர்கள் அருகில் அவர் வந்ததும், பீர்பால் அவர்கள், ''அய்யா வயதானவரே! இந்த கடுமையான வெயிலில் விறகை சுமந்து செல்வது சிரமமாக இல்லையா? ஆகையினால் இங்கு சற்று ஓய்வெடுத்து விட்டு செல்லுங்கள் என்றார்.
அந்த முதியவருக்கு இவர்கள் யார் என்பது தெரியாமையினால் ''எனது தலையிலுள்ள விறகு சுமையை கீழே இறக்கிவிட்டு ஓய்வெடுப்பது நல்லதுதான். ஆனால் இப்போது கீழே இறக்கும் சுமையை பின்னர் யார் தலையில் தூக்கி வைப்பது'' என்றார்.
''முதியவரே கவலைப்பட வேண்டாம் நீங்கள் போகும் வரையில் நாங்கள் இங்கு தான் இருப்போம். நாங்களே உங்கள் சுமையை தூக்கி தலையில் வைக்கிறோம்'' என்று கூறியப்படி பீர்பால் அந்த முதியவரின் தலையிலுள்ள விறகு சுமையை கீழே இறக்கி வைத்தார். மூவரும் மரத்தினடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சமயம் பீர்பால் அவர்கள் மன்னரின் காதில் இரகசியமாக ஏதோ கூறினார். மன்னரும் சரி என்று தலையாட்டினார்.
பீர்பால் அவர்கள் அந்த முடியவரைப் பார்த்து, ''அய்யா, தங்களுக்கு இன்று நடந்த விஷயம் தெரியுமா?'' என கேட்டார். ''என்ன நடந்தது?'' என்று கேட்டார் முதியவர்.
''நமது மன்னர் இன்று இயற்கை எய்தி விட்டார்'' என்றார் பீர்பால். இதனைக் கேட்ட முதியவர் அதிர்ச்சி அடைந்தவராக, ''நமது மன்னர் இயற்கை எய்திவிட்டாரா? இது எப்படி நிகழ்ந்தது? எவராவது சூழ்ச்சி செய்து விட்டார்களா? இது உண்மையா?'' என்று மிகப் பதட்டத்துடன் கேட்டார்.
''மன்னர் இயற்கை எய்திவிட்டார் என்றதும் ஏன் இவ்வளவு பதட்டம் அடைகின்றீர்?'' என்றார் பீர்பால். ''பதட்டப்படாமல் என்ன செய்ய? நமது மன்னர் நாட்டிற்கு பல நன்மைகள் செய்துள்ளார். இன்று நமது நாடு செழிப்புடன் விளங்குவதற்குக் காரணம் நமது மன்னரின் நிர்வாகத் திறமை. அது மட்டுமின்றி சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை நலமுடன் வாழ பல சலுகைகள் வழங்கிய நல்லிதயம் படைத்தவர். அவருக்கா இந்நிலை. இவரைப் போன்று நம்நாட்டிற்கு எந்த மன்னரும் வாய்க்க முடியாது'' என்று கவலையுடன் கூறினார் முதியவர்.
''இவ்வளவு கூறுகின்ற நீங்கள் காட்டில் விறகு வெட்டி விற்றுத்தானே வாழ்கின்றீர்கள். இருப்பினும் தங்களுக்கு மன்னர்மீது இவ்வளவு நல்லெண்ணம் கொண்டுள்ளீர்கள் என்பது ஆச்சர்யம்தான்'' என்றார் பீர்பால்.
''காட்டில் விறகு வெட்டி விற்பதனால் என் குடும்பத்திற்கு எந்தவித கஷ்டமும் இல்லை. நல்ல வருமானமும் கிடைக்கிறது. எனது குடும்பம் கஷ்டத்தில் வாழ்ந்தால் தானே மன்னரை குறை கூற முடியும்?'' என்றார் முதியவர். முதியவர் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு விடைப் பெற்றார். பீர்பால் அந்த விறகு சுமையை மீண்டும் அந்த முதியவரின் தலையில் ஏற்றிவிட்டு அவர்களும் புறப்பட்டுச் சென்றனர்.
''மன்னர் பெருமானே! இந்த மாறுவேட பயணத்தினால் அந்த விறகு வெட்டியான முதியவர் மனதில் நீங்கள் ஆழப் பதிந்துள்ளீர்கள் என்பது அறிய முடிகிறது. இதனை கேட்ட எனக்கும் மனமகிழ்வை அளிக்கின்றது'' என்றார் பீர்பால்.
அரசரும் - பீர்பாலும் பேசியபடி நகர வீதியை அடைந்தனர். நடந்து வந்த களைப்பால் மன்னருக்குத் தாகம் எடுத்தது. ''பீர்பால் அவர்களே! தாகத்திற்கு ஏதாவது அருந்திவிட்டு செல்லலாம்'' என்றார் அக்பர். அப்படியே செய்யலாம் என்று பீர்பால் கூறிக் கொண்டிருக்கும்போதே வீதியில் ''மோரு....மோரு....'' என்று கூவியப்படி ஒரு பெண் தலையில் மோர் பானையுடன் வந்துக் கொண்டிருந்தாள்.
அந்த மோர்காரப் பெண்ணைப் பார்த்து பீர்பால், ''மோர்காரப் பெண்ணே! எங்கள் இருவருக்கும் இரண்டு குவளை மோர் கொடு'' என்று கூறி மோருக்கானப் பணத்தைக் கொடுத்தார். அரசரும் - பீர்பாலும் மோரைக் குடித்தனர். பீர்பால் மோர்காரப் பெண்ணைப் பார்த்து என்ன இவ்வளவு சாதாரணமாக இருக்கிறாய்? நம் மரியாதைக்குரிய மன்னர் இன்று இயற்கை எய்திவிட்டார் என்கிற செய்தி உனக்குத் தெரியாதா? என்று கேட்டார்.
அதற்கு மோர்க்காரப் பெண், ''மன்னர் இருந்தால் என்ன? மறைந்தால் என்ன? மன்னராகப் பிறந்தாலும் இயற்கையை வெல்ல முடியாது. நல்ல வேளை செய்தியை இப்போது சொன்னீர்கள். மன்னரின் மறைவைப் பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருவார்கள். அங்கு சென்றால் எனக்கு நல்ல வியாபாரம் ஆகும். மேலும் ஒரு மோர் குடம் விற்றுவிடும்'' என்று கூறிவிட்டு அங்கிருந்து வேகமாகச் சென்றுவிட்டாள்.
''பீர்பால் அவர்களே! நாம் சந்தித்த இருவரும் இருவிதமான எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளனரே இதற்கு என்ன காரணம்?'' என்றார் அக்பர்.
''மன்னர் பெருமானே! விறகு வெட்டி பழுத்த முதியவர். மன்னரான தங்களின் மீது பெரும் மதிப்பை வைத்துள்ளார். அதனால் இயற்கை எய்திவிட்டார் என்ற செய்தியைக் கேட்டதும் அதிர்ச்சியினால் மிகவும் வேதனையடைந்தார்.
''மோர் விற்ற பெண்ணிடம் கொஞ்சம் கூட நாட்டுப்பற்று கிடையாது. சுயநலமிக்கவள். சிந்தனை முழுவதும் மோர் அதிகமாக விற்றால் நல்ல பணம் கிடைக்கும் என்பதாக இருந்தது. அவனது எண்ணப்படி பார்த்தால் அவள் கூறியதிலும் தப்பில்லை'' என்றார் பீர்பால்.
''அப்படியானால் யார் மீது தவறு?'' என்று வினவினார் அக்பர்.
''மன்னர் பெருமானே! தவறு நம்மீது தான். ஏனெனில் நாட்டின் நலன் கருத் பல நல்ல செயல்களைச் செய்யும்போது மக்களில் சிலர் போற்றுவதும், சிலர் தூற்றுவதும் நடைமுறையான விஷயம்தான். நாட்டில் எது நடந்தாலும் மன உறுதியுடன் தாங்கி மக்களின் நன்மைக்காக நாடாளும் மன்னராக இருக்க வேண்டுமே தவிர, இப்படியெல்லாம் பேசுகிறார்கள் என்று சிந்திக்கக்கூடாது. வீரத்துடனும் விவேகத்துடனும் நாட்டை ஆள்வதினால் தான் பிறர் நாட்டவரும் தங்களைப் போற்றுகின்றனர்'' என்றார் பீர்பால்.
பீர்பால் கூறியதைக் கேட்ட அக்பர், ''நாடாளும் மாமன்னராக இருந்தாலும் மக்கள் நான்கு விதமாகத்தான் பேசுவார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது'' என்றார் மன்னர் அக்பர்.
நன்றி:http://www.kalvithulir.com
அக்பர் தனது மகளை ஓர் அரசக்குமாரனுக்கு திருமணம் செய்து வைத்தார். அன்புடன் குடும்பம் நடத்தி வந்த அவர்களின் வாழ்வில் ஏதோ ஒரு காரணத்திற்காக சண்டையும் சச்சரவும் ஏற்பட்டுவிட்டது. இதனால் மன அமைதி இழந்த அக்பரின் மகள் தன் தந்தையிடம் வந்து கண்ணீர் விட்டு கதறி அழுதாள். பாசத்துடன் வளர்த்த மகளின் கண்ணீரைக் கண்டதும் அக்பருக்கு தன் மாப்பிள்ளையின் மீது கடுங்கோபம் ஏற்பட்டது. அதனால் படைவீரர்களை அனுப்பி மருமகனைக் கைது செய்து டில்லி சிறையில் அடைத்தார். அத்துடன் அவரது கோபம் தணியாமல் எல்லா வீட்டிலுள்ள மாப்பிள்ளைகளையும் கைது செய்துவர ஆணையிட்டார். பீர்பாலை உடனே வரவழைத்தார் அக்பர்.
''சக்ரவர்த்திப் பெருமானே, தாங்கள் உடனே என்னை அழைத்ததன் காரணம் என்ன?'' என்று வினவினார் பீர்பால். ''பீர்பால் அவர்களே, நாளைக் காலை சூரிய உதயத்தில் எனது மாப்பிள்ளையை தூக்கிலேற்றி மரண தண்டனை விதிக்க வேண்டும். அதே சமயம் நமது நகரத்திலுள்ள ஒவ்வொரு வீட்டின் மாப்பிள்ளைகளையும் தூக்கிலிட வேண்டும். இனி நமது நாட்டில் மாப்பிள்ளைகளே இல்லை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்''என்றார் அக்பர்.
மன்னரின் அதிசய ஆணையைக் கேட்டு பீர்பால் அதிர்ச்சியடைந்தார். உத்தரவைக் கேட்ட மக்களும் பீதியடைந்தனர். பீதியடைந்த மக்களைப் பார்த்து,''இதற்காகப் பயப்பட வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன். ''அரசரும் அவ்வளவு கொடுமனம் படைத்தவரல்ல'' என்று சமாதானம் கூறி அனுப்பி வைத்தார் பீர்பால்.
சூரிய உதயத்திற்கு முன்னர் அரண்மனைக்குச் சென்ற பீர்பால்,''சக்ரவர்த்திப் பெருமானே! தாங்கள் கூறியபடியே தூக்கு மரங்கள் தயாராகிவிட்டது. தாங்கள் வந்து பார்வையிட்டப் பின்னர் உடனடியாக எல்லா மாப்பிள்ளைகளுக்கும் தூக்குத் தண்டனையை நிறைவேற்றி விடலாம்'' என்றார் பீர்பால்.பீர்பாலின் சொற்படி தூக்கு மரங்களைப் பார்வையிட்டார். அச்சமயம் அந்தத் தூக்கு மரங்களுக்கு இடையில் ஒரு தூக்கு மரம் தங்கத்தாலும் மற்றொரு தூக்கு மரம் வெள்ளியினாலும் காணப்பட்டது. ''இந்த இரு தூக்கு மரங்கள் மட்டும் ஏன் வித்தியாசமாக உள்ளது. காரணம் என்ன?'' என்று வினவினார் அக்பர்.
சிறிதும் பதட்டப்படாமல் அமைதியாக,''மன்னர் பெருமானே! அங்கே தங்கத்தினால் உருவாக்கப்பட்ட தூக்குமரம் தங்களுக்காகவும், வெள்ளியினால் உருவாக்கப்பட்ட தூக்குமரம் எனக்காகவும் என்றார் பீர்பால். பீர்பாலின் எதிர்பாராத பதிலலைக் கேட்டதும் அக்பருக்கு வியப்பாக இருந்தது.
''நமக்கு எதற்காகத் தூக்கு மரங்கள்?''என்றார் அக்பர்.
''மன்னர் பெருமானே! தாங்களும் ஒரு வீட்டின் மாப்பிள்ளைதானே! அதே போன்று நானும் ஒரு வீட்டின் மாப்பிள்ளைதானே! ஆகவே சட்டப்படி தண்டனை நம்முடைய இருவருக்கும் சேர்த்துதானே!'' என்றார் பீர்பால். கோபத்துடன் இருந்த அக்பர் தன்னை மறந்து வாய்விட்டுச் சிரித்தார்.
''மேன்மைமிகு சக்ரவர்த்தி பெருமானே! தங்களுடைய மாப்பிள்ளை தவறு செய்தமைக்காக நாட்டிலுள்ள மாப்பிள்ளைகள் எல்லோரையும் தண்டிப்பது என்ன நியாயம்? தங்களுடைய மாப்பிள்ளை செய்த தவறை திருத்தி நல்வழி படுத்த வேண்டுமேயன்றி மரண தண்டனை அளிக்கலாமா? தங்களைத் திருத்துவதற்கு எந்த அருகதையும் எனக்கு இல்லை. ஆனால் இந்தச் செய்கையினால் தங்களுக்கு இழுக்கு வராமல் தடுப்பது எனது கடமையல்லவா? தயவு செய்து மாப்பிள்ளைகளின் மரண தண்டனையை உடனடியாக ரத்து செய்ய வேண்டுகிறேன்'' என்றார் பீர்பால். தவறு செய்து அவப்பெயர் எடுப்பதிலிருந்து தன்னைத் தடுத்த பீர்பாலை அக்பர் பெரிதும் பாராட்டினார்.
நாடாலும் வேந்தராக இருந்தாலும் நாட்டு மக்கள் நான்கு விதமாகத்தான் பேசுவார்கள்
மாமன்னர் அக்பர் தன் நாட்டின் நடப்பு நிலை எப்படி இருக்கிறது என்று தனது ஒற்றர்களின் மூலம் அறிந்து கொள்வது வழக்கம். இருப்பினும் ஒருநாள் தன் நாட்டு மக்கள் தம்மைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை தாமே நேரில் அறிந்து கொள்ள ஆவல் ஏற்பட்டது. மன்னர் தன் எண்ணத்தை பீர்பால் அவர்களிடம் கூறினார். ''மக்களின் மனநிலையை அறிந்து கொள்வது மன்னரின் கடமையாகும். ஆதலின் நேரில் போய் சந்திப்போம்'' என்றார் பீர்பால்.
''நீங்கள் சொல்வது போல் நேரில் சென்று சந்தித்தால் மக்கள் உண்மையை கூற தயங்குவார்கள் அல்லவா?'' என்றார் மன்னர்.
''மன்னர் பெருமானே! நேரில் போகலாம் என்று சொன்னது மாறுவேடத்தில். அப்படி சென்றால் யாருக்கும் அடையாளம் தெரியாது. மக்களும் மனம் திறந்து உண்மையைக் கூறுவார்கள்'' என்றார் பீர்பால். பீர்பால் கூறியபடியே சாதாரண விவசாயிகள் போன்று மாறுவேடத்தில் நாட்டைச் சுற்றிப் பார்க்கச் சென்றனர். வெகுதூரம் சென்றதும் ஒரு ஒற்றையடிப் பாதைக் குறுக்கிட்டது. அந்தப் பாதை அடர்ந்த காட்டுப் பகுதிக்குச் செல்லும் வழியாகும். வெகு தூரம் வந்தமையால் மன்னருக்கு களைப்பு ஏற்பட்டது.
அதனால் பீர்பாலிடம் ''இங்கு சற்று ஓய்வெடுத்துவிட்டு செல்லலாம்'' என்றார் அக்பர். பீர்பாலும், ''அப்படியே செய்வோம்'' என்று கூறி ஒரு பெரிய மரத்தின் நிழலில் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.
அச்சமயம் காட்டிற்குச் செல்லும் ஒற்றையடிப் பாதையின் வழியாக விறகுகளை நன்கு கட்டி தலையில் சுமந்து கொண்டு ஒருவர் வந்து கொண்டிருந்தார். அவர்கள் அருகில் அவர் வந்ததும், பீர்பால் அவர்கள், ''அய்யா வயதானவரே! இந்த கடுமையான வெயிலில் விறகை சுமந்து செல்வது சிரமமாக இல்லையா? ஆகையினால் இங்கு சற்று ஓய்வெடுத்து விட்டு செல்லுங்கள் என்றார்.
அந்த முதியவருக்கு இவர்கள் யார் என்பது தெரியாமையினால் ''எனது தலையிலுள்ள விறகு சுமையை கீழே இறக்கிவிட்டு ஓய்வெடுப்பது நல்லதுதான். ஆனால் இப்போது கீழே இறக்கும் சுமையை பின்னர் யார் தலையில் தூக்கி வைப்பது'' என்றார்.
''முதியவரே கவலைப்பட வேண்டாம் நீங்கள் போகும் வரையில் நாங்கள் இங்கு தான் இருப்போம். நாங்களே உங்கள் சுமையை தூக்கி தலையில் வைக்கிறோம்'' என்று கூறியப்படி பீர்பால் அந்த முதியவரின் தலையிலுள்ள விறகு சுமையை கீழே இறக்கி வைத்தார். மூவரும் மரத்தினடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சமயம் பீர்பால் அவர்கள் மன்னரின் காதில் இரகசியமாக ஏதோ கூறினார். மன்னரும் சரி என்று தலையாட்டினார்.
பீர்பால் அவர்கள் அந்த முடியவரைப் பார்த்து, ''அய்யா, தங்களுக்கு இன்று நடந்த விஷயம் தெரியுமா?'' என கேட்டார். ''என்ன நடந்தது?'' என்று கேட்டார் முதியவர்.
''நமது மன்னர் இன்று இயற்கை எய்தி விட்டார்'' என்றார் பீர்பால். இதனைக் கேட்ட முதியவர் அதிர்ச்சி அடைந்தவராக, ''நமது மன்னர் இயற்கை எய்திவிட்டாரா? இது எப்படி நிகழ்ந்தது? எவராவது சூழ்ச்சி செய்து விட்டார்களா? இது உண்மையா?'' என்று மிகப் பதட்டத்துடன் கேட்டார்.
''மன்னர் இயற்கை எய்திவிட்டார் என்றதும் ஏன் இவ்வளவு பதட்டம் அடைகின்றீர்?'' என்றார் பீர்பால். ''பதட்டப்படாமல் என்ன செய்ய? நமது மன்னர் நாட்டிற்கு பல நன்மைகள் செய்துள்ளார். இன்று நமது நாடு செழிப்புடன் விளங்குவதற்குக் காரணம் நமது மன்னரின் நிர்வாகத் திறமை. அது மட்டுமின்றி சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை நலமுடன் வாழ பல சலுகைகள் வழங்கிய நல்லிதயம் படைத்தவர். அவருக்கா இந்நிலை. இவரைப் போன்று நம்நாட்டிற்கு எந்த மன்னரும் வாய்க்க முடியாது'' என்று கவலையுடன் கூறினார் முதியவர்.
''இவ்வளவு கூறுகின்ற நீங்கள் காட்டில் விறகு வெட்டி விற்றுத்தானே வாழ்கின்றீர்கள். இருப்பினும் தங்களுக்கு மன்னர்மீது இவ்வளவு நல்லெண்ணம் கொண்டுள்ளீர்கள் என்பது ஆச்சர்யம்தான்'' என்றார் பீர்பால்.
''காட்டில் விறகு வெட்டி விற்பதனால் என் குடும்பத்திற்கு எந்தவித கஷ்டமும் இல்லை. நல்ல வருமானமும் கிடைக்கிறது. எனது குடும்பம் கஷ்டத்தில் வாழ்ந்தால் தானே மன்னரை குறை கூற முடியும்?'' என்றார் முதியவர். முதியவர் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு விடைப் பெற்றார். பீர்பால் அந்த விறகு சுமையை மீண்டும் அந்த முதியவரின் தலையில் ஏற்றிவிட்டு அவர்களும் புறப்பட்டுச் சென்றனர்.
''மன்னர் பெருமானே! இந்த மாறுவேட பயணத்தினால் அந்த விறகு வெட்டியான முதியவர் மனதில் நீங்கள் ஆழப் பதிந்துள்ளீர்கள் என்பது அறிய முடிகிறது. இதனை கேட்ட எனக்கும் மனமகிழ்வை அளிக்கின்றது'' என்றார் பீர்பால்.
அரசரும் - பீர்பாலும் பேசியபடி நகர வீதியை அடைந்தனர். நடந்து வந்த களைப்பால் மன்னருக்குத் தாகம் எடுத்தது. ''பீர்பால் அவர்களே! தாகத்திற்கு ஏதாவது அருந்திவிட்டு செல்லலாம்'' என்றார் அக்பர். அப்படியே செய்யலாம் என்று பீர்பால் கூறிக் கொண்டிருக்கும்போதே வீதியில் ''மோரு....மோரு....'' என்று கூவியப்படி ஒரு பெண் தலையில் மோர் பானையுடன் வந்துக் கொண்டிருந்தாள்.
அந்த மோர்காரப் பெண்ணைப் பார்த்து பீர்பால், ''மோர்காரப் பெண்ணே! எங்கள் இருவருக்கும் இரண்டு குவளை மோர் கொடு'' என்று கூறி மோருக்கானப் பணத்தைக் கொடுத்தார். அரசரும் - பீர்பாலும் மோரைக் குடித்தனர். பீர்பால் மோர்காரப் பெண்ணைப் பார்த்து என்ன இவ்வளவு சாதாரணமாக இருக்கிறாய்? நம் மரியாதைக்குரிய மன்னர் இன்று இயற்கை எய்திவிட்டார் என்கிற செய்தி உனக்குத் தெரியாதா? என்று கேட்டார்.
அதற்கு மோர்க்காரப் பெண், ''மன்னர் இருந்தால் என்ன? மறைந்தால் என்ன? மன்னராகப் பிறந்தாலும் இயற்கையை வெல்ல முடியாது. நல்ல வேளை செய்தியை இப்போது சொன்னீர்கள். மன்னரின் மறைவைப் பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருவார்கள். அங்கு சென்றால் எனக்கு நல்ல வியாபாரம் ஆகும். மேலும் ஒரு மோர் குடம் விற்றுவிடும்'' என்று கூறிவிட்டு அங்கிருந்து வேகமாகச் சென்றுவிட்டாள்.
''பீர்பால் அவர்களே! நாம் சந்தித்த இருவரும் இருவிதமான எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளனரே இதற்கு என்ன காரணம்?'' என்றார் அக்பர்.
''மன்னர் பெருமானே! விறகு வெட்டி பழுத்த முதியவர். மன்னரான தங்களின் மீது பெரும் மதிப்பை வைத்துள்ளார். அதனால் இயற்கை எய்திவிட்டார் என்ற செய்தியைக் கேட்டதும் அதிர்ச்சியினால் மிகவும் வேதனையடைந்தார்.
''மோர் விற்ற பெண்ணிடம் கொஞ்சம் கூட நாட்டுப்பற்று கிடையாது. சுயநலமிக்கவள். சிந்தனை முழுவதும் மோர் அதிகமாக விற்றால் நல்ல பணம் கிடைக்கும் என்பதாக இருந்தது. அவனது எண்ணப்படி பார்த்தால் அவள் கூறியதிலும் தப்பில்லை'' என்றார் பீர்பால்.
''அப்படியானால் யார் மீது தவறு?'' என்று வினவினார் அக்பர்.
''மன்னர் பெருமானே! தவறு நம்மீது தான். ஏனெனில் நாட்டின் நலன் கருத் பல நல்ல செயல்களைச் செய்யும்போது மக்களில் சிலர் போற்றுவதும், சிலர் தூற்றுவதும் நடைமுறையான விஷயம்தான். நாட்டில் எது நடந்தாலும் மன உறுதியுடன் தாங்கி மக்களின் நன்மைக்காக நாடாளும் மன்னராக இருக்க வேண்டுமே தவிர, இப்படியெல்லாம் பேசுகிறார்கள் என்று சிந்திக்கக்கூடாது. வீரத்துடனும் விவேகத்துடனும் நாட்டை ஆள்வதினால் தான் பிறர் நாட்டவரும் தங்களைப் போற்றுகின்றனர்'' என்றார் பீர்பால்.
பீர்பால் கூறியதைக் கேட்ட அக்பர், ''நாடாளும் மாமன்னராக இருந்தாலும் மக்கள் நான்கு விதமாகத்தான் பேசுவார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது'' என்றார் மன்னர் அக்பர்.
நன்றி:http://www.kalvithulir.com
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|