ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கை' இழந்தாலும் நம்பிக்"கை' இழக்கவில்லை! கார்த்திகை விளக்கில் ஒளிரும் வாழ்க்கை!

2 posters

Go down

கை' இழந்தாலும் நம்பிக்"கை' இழக்கவில்லை! கார்த்திகை விளக்கில் ஒளிரும் வாழ்க்கை! Empty கை' இழந்தாலும் நம்பிக்"கை' இழக்கவில்லை! கார்த்திகை விளக்கில் ஒளிரும் வாழ்க்கை!

Post by DERAR BABU Thu Nov 22, 2012 1:03 pm








விபத்தில் வலது கையை இழந்தாலும் கார்த்திகை விளக்குகள் தயாரித்து விற்பனை செய்து வாழ்க்கை நடத்தி வருகிறார் மதுரையைச் சேர்ந்த நம்பிக்கை இளைஞர் வேல்முருகன்.

கார்த்திகை என்றாலே, அனைவருக்கும் நினைவுக்கு வருவது ஒளிபரப்பும் தீபங்கள் தான். கார்த்திகை திருநாளுக்கு வீடுகள், கோயில்கள் என அனைத்து இடங்களிலும் தீபங்கள் ஏற்றி இருளை அகற்றுவது நமது பாரம்பரிய பழக்கவழக்கமாக இருந்து

வருகிறது.

இத்தகைய, ஒளி விளக்குகள் பெரும்பாலும் மண்ணால் இருப்பதையே பெரும்பாலானோர் விரும்புகின்றனர். அத்தகைய விளக்குகளை பரம்பரையாக மதுரையில் குறிப்பிட்ட சிலர் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். கால மாற்றத்தில் இவ்விளக்குகளுக்கு மக்களிடம் வரவேற்பு குறைந்ததால், பலர் இத்தொழிலை கைவிட்டு விட்டனர். ஆனாலும் பாரம்பரியத்தை காக்கும் வகையில் சில குடும்பங்கள் மண் விளக்குகளை தயாரித்து விற்று வருவதைக் காண முடிகிறது.

மதுரை நகரில் பெத்தானியபுரம் பகுதியில் குறிப்பிட்ட சிலர் பாரம்பரியமாக கார்த்திகை அகல் விளக்குகளை கண்மாய் மண்ணால் செய்து விற்று வருகின்றனர். இவர்களில் ராஜேந்திரன் என்பவரது குடும்பத்தினர், கடந்த 3 தலைமுறையாக மண்ணால் ஆன கார்த்திகை அகல் விளக்குகளைச் செய்து விற்றுவருகிறார்கள்.

ராஜேந்திரனின் மகன் வேல்முருகன் (27). பி.காம் பட்டதாரி. இவர் கோச்சடை செல்லும் வழியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். பணியின்போது கடந்த ஆண்டு, இவரது வலது கை எந்திரத்தில் சிக்கி மணிக்கட்டு வரை துண்டிக்கப்பட்டு விட்டது. ஆனாலும், அவர் தளரவில்லை. இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. மனைவி புவனேஸ்வரி. தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் கிடைக்கும் வருவாய் தாய், தந்தை, தங்கை மற்றும் மனைவி என பெரிய குடும்பத்துக்கு போதவில்லை.

ஆகவே, வலது கையை இழந்த நிலையிலும் தங்களது பாரம்பரியத் தொழிலான கார்த்திகை அகல் விளக்கு தயாரிப்பிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.

படிக்கும் காலத்திலேயே வேல்முருகன் பகுதி நேரமாக தந்தையுடன் அகல் விளக்கு தயாரிப்புக்கு உதவியாக இருந்துள்ளார். தற்போது, அந்த அனுபவம் அவருக்கு நிறையவே கை கொடுப்பதாகக் குறிப்பிடுகிறார்.

கோச்சடை கண்மாயில் மண் எடுத்து, அகல் விளக்கை தயாரித்து வந்த வேல்முருகன் தரப்பினர், கார்த்திகைக்கு மட்டும் சுமார் 50 ஆயிரம் விளக்குகள் வரை தயாரித்து விற்பதாகக் கூறுகின்றனர். கார்த்திகை தவிர, மற்ற காலங்களில் மண் உண்டியல்கள், குடிநீர் வைக்கும் மண்பானைகள் ஆகியவற்றை தயாரித்து விற்று வருகிறார். மண் விளக்குகள், மண்பாண்டங்கள் மூலம், நாளொன்றுக்கு சுமார் ரூ.150 வருவாய் கிடைத்து வருவதாகக் கூறுகிறார் வேல்முருகன்.

தற்போது வண்ண மெழுகு விளக்குகள் ஏராளமாக வந்த நிலையில், பொதுமக்கள் குறைந்த அளவிலேயே மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகளை வாங்கி வருவதாகவும், இதில் ஒரு விளக்கு 30 பைசா முதல் 50 பைசா வரை விற்கவே முடிகிறது என்றும் வேல்முருகன் வருத்தப்படுகிறார்.

காலமாற்றத்தில் மண் விளக்குகளுக்கு வரவேற்பு குறைந்த நிலையில், இதை நம்பி மட்டுமே வாழ்க்கையை நடத்துவது சிரமமாக உள்ளதாகவும், ஆகவே தனக்கு ஊனமுற்றோர் பிரிவில் ஏதாவது அரசுப் பணி கிடைத்தால் பாரம்பரியத் தொழிலையும் கைவிடாமல், குடும்பத்தையும் காப்பாற்றமுடியும் என்பதும் அவரது கோரிக்கை.

கார்த்திகை மாத இருளை விரட்டப் பயன்படும் அகல் விளக்கை தயாரிக்கும் வேல்முருகன் வாழ்க்கையில் இருள் விலக அவருக்கு அரசு உதவிகள் கிடைக்க சம்பந்தப்பட்ட துறையினர் மனது வைக்க வேண்டும். இதுபோன்ற இளைஞர்களை

ஊக்குவிப்பதன் மூலம் மனிதநேயம் காக்கப்படுவதுடன், அழியும் நிலையில் உள்ள நமது பாரம்பரியத் தொழில்களையும் காப்பாற்ற முடியும்.
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

கை' இழந்தாலும் நம்பிக்"கை' இழக்கவில்லை! கார்த்திகை விளக்கில் ஒளிரும் வாழ்க்கை! Empty Re: கை' இழந்தாலும் நம்பிக்"கை' இழக்கவில்லை! கார்த்திகை விளக்கில் ஒளிரும் வாழ்க்கை!

Post by யினியவன் Fri Nov 23, 2012 12:34 pm

நம்பிக்கை இழக்கா வேல்முருகனுக்கு பாராட்டுகள்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum