ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெற்ற பிள்ளையா? தத்துப் பிள்ளையா?

Go down

பெற்ற பிள்ளையா? தத்துப் பிள்ளையா? Empty பெற்ற பிள்ளையா? தத்துப் பிள்ளையா?

Post by மீனு Mon Oct 12, 2009 6:36 pm

போன வாரத்தில் ஒரு காலை நாளிதழில் வந்த கலங்கடிக்கும் செய்தி இது. தூத்துக்குடி அருகில் அரசு மருத்துவ மனையில் ஒரு ஆட்டோ ஓட்டுனரின் மனைவிக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளை அவர் மனைவியும் அவரின் தாயும் கழுத்தைத் திருகி கொன்றிருக்கிறார்கள்.



குறைப் பிரசவமானாலும் கிட்டத்தட்ட 2 கிலோ எடையுடன் இன்குபேட்டரில் இருந்த குழந்தைகளை பாலூட்ட அனுமதித்த போது முதலில் ப்ளேடால் அறுத்துக் கொல்ல முயன்று பிறகு இப்படிக் கொன்றார்களாம். காரணம் அவர்கள் பெண் குழந்தைகள்.

கருவிலிருக்கும் குழந்தை பெண் எனத் தெரிந்தால் கருக்கலைப்புச் செய்வதால் குழந்தைகளின் பால் குறித்த தகவல் சொல்லப் படக்கூடாது என்ற சட்டம் சரியாக இருக்கலாம். பிறந்த பிறகு இப்படிக் கொடூரமாக கொல்லத் துணிவார்களேயானால் அந்தச் சட்டம் எதிராகவல்லவா இருக்கிறது?

தாய் சேய் நலத்துறை கருவுற்ற/பிரசவித்த பெண்களின் ஆரோக்கியம் குறித்து கவலைப் படுகிறதேயல்லாமல் இந்த மாதிரி பெற்றும் வளர்க்கத் தயாரில்லாத பெற்றோர்களிடமிருந்து குழந்தையைக் காக்க ஏதும் அமைப்பிருக்கிறதா தெரியவில்லை.


மேலை நாடுகளில் தந்தையின் குடிப்பழக்கம் அல்லது தாயின் இயலாமையினால் குழந்தை வளர்ப்பில் குறைபாடுகள் இருப்பின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட பாதுகாவலர்கள் குழந்தையை உரிய முறையில், சகல வசதிகளுடனும் வளர்க்கும் பொறுப்பை ஏற்றுப் பாதுகாக்கும் வசதி இருக்கிறது. ஆனால் இங்கு அதற்கான எந்த வழிகாட்டலும் அமைப்பும் இல்லாத நிலையில் இத்தகைய அறைகுறை சட்டங்களால் குழந்தைகளுக்கு என்ன பாதுகாப்பு?

அரசு காப்பகங்கள், மற்றும் தனியார் காப்பகங்களில் கொடுத்து விட்டால், வருமானம் இருக்கிற பெற்றோர் இதற்கான கட்டணத்தைச் செலுத்த சட்டம் வேண்டும். அதற்கும் வழியற்றவர்களுக்கு அரசே மானியம் வழங்கலாம். இந்தக் குழந்தைகளை சட்டப்படி தத்தெடுத்துக் கொள்ள வழியிருப்பதால், அந்தக் குழந்தைகள் தத்து எடுக்கப்படும் வரையிலான காலத்துக்கு கட்டணமோ மானியமோ தேவைப்படும்.

த‌த்தெடுப்ப‌து குறித்தும் இர‌ண்டு வார‌ங்க‌ளுக்கு முன்னால் ப‌த்திரிகையில் ஒரு செய்தி வ‌ந்த‌து. மும்பையைச் சேர்ந்த‌ ஒரு ந‌டிக‌ர் த‌ம்ப‌திக‌ளுக்கு ஒரு பெண் குழ‌ந்தை இருப்ப‌தால் அவ‌ர்க‌ள் த‌த்தெடுத்த‌ இர‌ண்டாவ‌து குழ‌ந்தை ச‌ட்ட‌ பூர்வ‌மான‌து என்ற‌றிவிக்க‌க் கோரி மும்பை உய‌ர்நீதி ம‌ன்ற‌த்தில் தொடுத்த‌ வ‌ழ‌க்கில் அவ‌ர்க‌ளுக்குச் சாத‌க‌மாக‌ தீர்ப்பு என்ப‌து.

ஒரு ந‌டிக‌ருக்கு இன்னொரு பெண் குழ‌ந்தை த‌த்தெடுத்து வ‌ள‌ர்ப்ப‌தில் என்ன‌ பெரிய‌ ச‌ட்ட‌ச் சிக்க‌ல் இருக்கிற‌து என்று தேடிய‌ போது விழி பிதுங்கிப் போனது. இந்து த‌த்தெடுப்பு ம‌ற்றும் ப‌ரிபால‌ன‌ச் ச‌ட்ட‌ம் 1956 (மொழி பெய‌ர்ப்பு ச‌ரியா தெரிய‌வில்லை) பார்த்த‌ போது அதிர்ந்து போனேன்.


அர‌த‌ப் ப‌ழ‌ச்சான‌ இந்த‌ச் ச‌ட்ட‌ம் சொல்வ‌து என்ன‌?

விதி 11 (1) ஆண் குழ‌ந்தையை தத்தெடுக்க விரும்பினால் அந்தத் தந்தைக்கோ தாய்கோ மகனோ, பேரனோ, கொள்ளுப் பேரனோ சட்டபூர்வமான இரத்த உறவிலோ அல்லது தத்தெடுத்ததன் மூலமோ இருக்கக் கூடாது.

விதி 11(2)பெண் குழந்தையானால் அந்தத் தந்தைக்கோ தாய்க்கோ இன்னொரு பெண் அல்லது மகனுக்கு பெண் இரத்த உறவிலோ அல்லது தத்து மூலமாகவோ இருக்கக் கூடாது.

இந்த இரண்டாவது விதியை எதிர்த்துத்தான் வெற்றி. கலாச்சார மாறுதல், இன்ன பிற காரணங்களால் சட்ட பூர்வமற்ற குழந்தைப் பேறு, மற்றும் பெண் சிசுக் கொலை என்று இவ்வளவு நடந்தும் 52 ஆண்டுகளாக ஒரு சட்டம் நடைமுறைகேற்ப எந்த மாறுதலும் மேற்கொள்ளவில்லை என்பது பெரிய அதிர்ச்சி.

இப்பொழுது கூட இது ஒரு தனிமனிதனின் வெற்றியே தவிர சட்டத் திருத்தத்திற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப் படுமா என்பது கேள்விக் குறியே. பெரிய பணக்காரர்களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல.



தெருவோர வாசிகளில் நான் கண்கூடாகக் கண்டிருக்கிறேன். தாயிழந்த ஒரு பிள்ளை அழுது கொண்டிருக்க, அதன் தந்தை குடித்துவிட்டு மயங்கி கிடக்க, ஒரு தாய், தோ அழுவுது பாரு, அதக் கூட்டியா. அவங்கப்பன் எப்போ தெளிஞ்சி அதுக்கு நாஷ்டா குடுக்குறது என்று தண்ணி சோற்றை ஊட்டி விட்டார். அவர்களுக்கும் இது பிரச்சனையில்லை. அவன் விட்டு ஓடினால் கூட யாரோ வளர்த்து விடுவார்கள்.

சமுதாயச் சாக்கடையில் சாதி, கௌரவம் இன்ன பிற எழவுக்கு வாழ்வைத் தொலைத்த நடுத்தர வர்க்கம் மான் கறி வைத்தியனுக்கு கொட்டிக் கொடுக்குமே தவிர இப்படிக் குழந்தைகளை தத்தெடுக்க முன்வருவதே பெரிய விடயம்.



இதில் இவ்வளவு சட்டச் சிக்கல் இருந்தால் எப்படி? இனிமேலாவது குழந்தை நலனுக்கு முக்கியத்துவம் தந்து அரசு தானே முன் வந்து ஊக்குவிக்காவிடில் இத்தகைய சமூக அவலங்கள் நடந்துகொண்டுதான் இருக்கும்


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum