ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:55 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 5:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:50 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Today at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Today at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Today at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Today at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Today at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Today at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Today at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Today at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Today at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Today at 1:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:05 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:55 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:57 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Yesterday at 2:49 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» தலைக்கு பேன் பார்க்க சொல்றா…!
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» பூப்பறிக்க…(ஒரு பக்க கதை)
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» கல்யாணம்-ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» வரதட்சணை-ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» உடம்புக்கு என்ன?
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» தோசை கிடையாது!
by ayyasamy ram Yesterday at 1:11 pm

» இதுதான் பக்தியோகம்…
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:57 am

Top posting users this week
ayyasamy ram
மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_c10மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_m10மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_c10 
heezulia
மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_c10மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_m10மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலர்களைக் கண்டு அழுத கவிஞன்!

3 posters

Go down

மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Empty மலர்களைக் கண்டு அழுத கவிஞன்!

Post by சிவா Wed Nov 21, 2012 4:04 pm


ஆங்கிலக் கவிஞர் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் ஒரு மலைச்சாரல் பக்கமாக நடந்து கொண்டிருந்தார். ஓரிடத்தில் வெடிப்புற்ற பாறையின் இடுக்கில் ஒரு மலர்ச்செடி வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தது.

கவிஞர் அதைக் கண்டதும்,""சாட்டர்டன்...நீ இங்கேயா இருக்கிறாய்?'' என்று கேட்டு கண்களில் நீர் ததும்ப அந்த மலர்ச்செடியை பார்த்துக் கொண்டே இருந்தாராம்.

யார் அந்த சாட்டர்டன்?

14 வயது இளம் கவிஞராக இருந்து, பல புரட்சிகரமான தத்துவக் கவிதைகளை எழுதியவன்தான் சாட்டர்டன். அவன் அந்த இளம் வயதில் அநாதையாக வறுமையின் கொடுமையில் நின்று தவித்தவன்.

ரொட்டித் துண்டுக்காக சிறு சிறு கவிதைகளை எழுதி ஒரு ரொட்டிக் கடைக்காரனிடம் கொடுத்து, ""பசிக்கிறது ஏதாவது கொடுங்கள் அய்யா...'' என்று கைநீட்டி நிற்பான். குழந்தைபோல் நிற்கும் அவனிடம் இரக்கம் கொண்டு ரொட்டிக் கடைக்காரன் துண்டு ரொட்டிகளைக் கொடுப்பான்.

பசிக்கும் வயிற்றிற்கும் அது போதுமா போதாது. என்ன செய்வான்?

பக்கத்திலிருந்த சாக்கடைக் கால்வாயின் பயங்கர நெடியை நுகர்ந்து, அதனால் ஏற்படும் மயக்கத்தில் அப்படியே தூங்கிவிடுவான்!

ஒருநாள் ஒரு கவிதையை எழுதி அதில் தன் பெயரை எழுதாமல் அப்போது புகழ்பெற்றிருந்த பெருங்கவிஞர் தாமஸ் கிரேயின் பெயரை எழுதி ஒரு பத்திரிகைக்காரரிடம் கொடுத்து,

""ஐயா இதை தாமஸ் கிரே கொடுக்கச் சொன்னார். அவர் வரமுடியவில்லையாம். எனக்கு ஏதாவது காசு கொடுங்கள்'' என்று வேண்டினான்.

அப்போதெல்லாம் கவிஞர் தாமஸ் கிரேயின் கவிதைகளை பத்திரிகைகளில் போடுவதே ஒரு பெருமை. ஏராளமானப் பத்திரிகைகள் விற்பனையாகும். பத்திரிகையாளர் அந்தப் பாடலைக் கண்டதும் மிக மகிழ்ச்சியோடு வாங்கிக்கொண்டு, ""சிறுவனே இந்தா'' என்று சில காசுகளைக் கொடுத்தார். சாட்டர்டன் மிகவும் ஆவலோடு காசுகளைப் பெற்றுக்கொண்டு வழக்கமான ரொட்டிக் கடைக்காரனிடம் சென்று ரொட்டியை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு வழக்கமாகப் படுத்துக்கொள்ளும் சாக்கடைக் கால்வாயின் வெடிப்பில் முகம் வைத்து அந்த நெடியை நுகர்ந்தவனாய்த் தூங்கிவிட்டான்.

பத்திரிகையில் தன் பெயரில் ஒரு பாடலைக் கண்ட தாமஸ் கிரே வியப்படைந்தார். பத்திரிகையாளரிடம் அது பற்றிக் கேட்டார்.

""ஒரு சிறுவன் தாங்கள் கொடுத்தனுப்பியதாகச் சொல்லித்தான் இந்தக் கவிதையை என்னிடம் கொடுத்தான்'' என்றார் பத்திரிகையாளர்.

கவிதையோ மிக அற்புதமாக இருந்தது. தன்னிலும் ஒரு சிறந்த கவிஞனே அதை எழுதி இருக்க முடியும் என்றெண்ணி-

""இந்தக் கவிதைகளை எழுதிய அந்தப் பெரும் கவிஞனை நான் உடனே பார்க்க வேண்டும்'' என்றார் தாமஸ் கிரே.

விசாரித்ததில் ரொட்டிக் கடைக்காரனுக்குத்தான் அந்தச் சிறுவனை தெரியும் என்றார்கள்.

ரொட்டிக் கடைக்காரரைக் கண்டு அவரிடம் கேட்டபோது, ""அதோ அந்த சாக்கடை வெடிப்புக்குப் பக்கம் தூங்கிக் கொண்டிருப்பான்'' என்றார்.

அங்கே சென்று தாமஸ் கிரே படுத்திருக்கும் சாட்டர்டனை எழுப்பினார். அவன் எழுந்திருக்கவில்லை. சில மணி நேரங்களுக்கு முன்புதான் அவன் இறந்திருந்தான்.

இதைப்படித்த வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் அழகிய மலர்களைக் காணுகின்ற போதெல்லாம் சாட்டர்டன் நினைவு வந்து, ஒரு குழந்தையைப் போல கண்ணீர்விட்டு தேம்பித் தேம்பி அழுவாராம்!


மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Empty Re: மலர்களைக் கண்டு அழுத கவிஞன்!

Post by ராஜா Wed Nov 21, 2012 4:14 pm

அங்கே சென்று தாமஸ் கிரே படுத்திருக்கும் சாட்டர்டனை எழுப்பினார். அவன் எழுந்திருக்கவில்லை. சில மணி நேரங்களுக்கு முன்புதான் அவன் இறந்திருந்தான்.

இதைப்படித்த வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் அழகிய மலர்களைக் காணுகின்ற போதெல்லாம் சாட்டர்டன் நினைவு வந்து, ஒரு குழந்தையைப் போல கண்ணீர்விட்டு தேம்பித் தேம்பி அழுவாராம்!
அழுகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Empty Re: மலர்களைக் கண்டு அழுத கவிஞன்!

Post by அச்சலா Wed Nov 21, 2012 4:17 pm

அழுது கண்கள் சிவந்து விட்டன. கூடாது


மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Paard105xzமலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Paard105xzமலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Paard105xzமலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Empty Re: மலர்களைக் கண்டு அழுத கவிஞன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum