Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 1:20
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Today at 0:58
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 0:52
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:48
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 0:30
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 0:09
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:56
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 22:06
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:54
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:20
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:04
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 20:50
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:39
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 20:24
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 20:22
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:07
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:55
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:44
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:50
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 14:15
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 10:11
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 5:37
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 0:50
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:27
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:13
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:08
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07
நிகழ்நிலை நிர்வாகிகள்
மும்பை தீவிரவாத தாக்குதல்: மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது: இதுவரை நடந்தது
5 posters
Page 1 of 1
மும்பை தீவிரவாத தாக்குதல்: மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது: இதுவரை நடந்தது
மும்பையில் 2008ம் ஆண்டு நவம்பர் 26ந் தேதி 10 பேர் கொண்ட தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளில் கசாப் தவிர மற்ற அனைவரும் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டனர். கசாப்பை போலீசார் கைது செய்தனர். சிறை காவலில் இருந்த தீவிரவாதி அஜ்மல் கசாப்பிற்கு இன்று காலை 7.30 மணியளவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. கடந்த நவம்பர் 8ந்தேதி கசாப் மரண தண்டனை குறித்த ஆவணத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மகாராஷ்டிர அரசு கையெழுத்திட்டது. அன்றைய தினமே நவம்பர் 21ல் கசாப்பை தூக்கிலிட முடிவு செய்யப்பட்டது என மத்திய உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டே இன்று தெரிவித்துள்ளார். தூக்கில் போடப்படுவதற்கு முன் நிகழ்ந்த சம்பவங்கள் வருமாறு:
* நவ.26, 2008: மும்பைக்குள் இரவு 8 மணியளவில் 10 பேர் கொண்ட தீவிரவாதிகள் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்த தயாராகினர்.
சத்ரபதி சிவாஜி ரெயில்வே நிலையத்திற்குள் தீவிரவாதிகள் அஜ்மல் கசாப் மற்றும் தேரா இஸ்மாயில் கான் ஆகியோர் உட்புகுந்தனர். அங்கு அவர்கள் நடத்திய தாக்குதலில் 58 பேர் கொல்லப்பட்டனர்.
* பின்னர் இரவு 11 மணியளவில் கமா மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து 3 மூத்த மும்பை போலீஸ் அதிகாரிளான ஹேமந்த் கர்காரே, விஜய் சலாஸ்கர் மற்றும் அஷோக் காம்தே ஆகியோரை துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். அவர்கள் பயணம் செய்த வாகனத்தை கடத்தி சென்றனர்.
* நவ.27 2008: ஏ.கே. 47 ரக துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த கசாப் கிர்காம் சவுபட்டி பகுதியில் ஆயுதங்கள் இன்றி பதுங்கியிருந்தபோது போலீஸ் அதிகாரி துக்காராம் ஓம்பாலே என்பவர் கைது செய்து நாயர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
* நவ.29 2008: தாக்குதலில் தனது பங்கு குறித்து போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
* டிச.27 2008: மும்பையில் ஆர்தர் சாலை ஜெயிலில் கசாப்பை அடைக்க உத்தரவிடப்பட்டது. கசாப்பின் பாதுகாப்பிற்காக மட்டும் ரூ.19 கோடி அளவிற்கு அரசு செலவு செய்தது.
* ஜன.16, 2009: மும்பை சிறைச்சாலையிலேயே வழக்கு விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
* பிப்.25 2009: இந்தியாவுக்கு எதிரான தாக்குதல், கொலை மற்றும் தீவிரவாத சட்டப்படி கசாப்பிற்கு எதிராகவும் மற்றும் இருவருக்கு எதிராகவும் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
* ஜூலை 20 2009: சிறப்பு நீதிபதி தஹலியாணி முன்பு ஆஜரான கசாப் லஷ்கர் தீவிரவாத அமைப்பு அனுப்பியவர்களில் தானும் ஒருவன் என்று கோர்ட்டில் அளித்த் ஒப்புதல் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
* மே 6 2010: மும்பை சிறப்பு நீதிமன்றம் கசாப்பிற்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. குற்றம் சாட்டப்பட்ட இரு இந்திய குற்றவாளிகள் சபாவுதீன் அகமது மற்றும் பாஹீம் அன்சாரி ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். சில நாட்கள் கடந்த பின்னர் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் கசாப் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
* பிப்.21 2011: மும்பை நீதிமன்றம் கசாப்பிற்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்தது. இந்த முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ததுடன் இந்த வழக்கில் தான் முறையாக விசாரிக்கப்படவில்லை என கசாப் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
* செப்.22 2011: வழக்கு முறையாக விசாரிக்கப்படவில்லை என கசாப் கூறியதை தொடர்ந்து, உச்ச நீதிமன்றம், மூத்த வக்கீலான ராஜூ ராமச்சந்திரனை கசாப் தரப்பில் வாதாட நியமனம் செய்ததுடன் நீதிபதி அப்தப் ஆலம் தலைமையிலான பெஞ்ச் மேற்கொள்ளும் விசாரணைக்கு உதவிட கேட்டு கொள்ளப்பட்டார்.
* ஆகஸ்ட் 29 2012: சுமார் 2 1.2 மாதங்கள் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் முடிவில் கசாப்பிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
* நவ 5 2012: இதனை தொடர்ந்து ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கருணை மனு நிராகரிக்கப்பட்டதாக உள் துறை செயலாளர் ஆர்.கே. சிங் தகவல் தெரிவித்தார்.
* நவ 17 2012: தூக்கிலிடப்படுவது குறித்து கசாப்பிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் தூதரகத்திற்கும் இது பற்றி இந்திய அரசாங்கம் தகவல் தெரிவித்தது.
* நவ 19 2012: கசாப் புனேவில் உள்ள ஏர்வாதா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டு தூக்கு போடும் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டார்.
* நவ 21 2012: மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கசாப்பிற்கு எரவாதா சிறைச்சாலையில் இன்று அதிகாலை 7.30 மணியளவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மும்பை தீவிரவாத தாக்குதல்: மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது: இதுவரை நடந்தது Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மும்பை தீவிரவாத தாக்குதல்: மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது: இதுவரை நடந்தது
கசாப் தூக்கு நாட்டுக்கு கிடைத்த வெற்றி: உஜ்வல் நிகாம் பேட்டி
மும்பை: கசாபை தூக்கில் போட்டது நாட்டிற்கு கிடைத்த வெற்றி என மும்பை தாக்குதல் வழக்கில் போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உஜ்வல் நிகாம் கூறியுள்ளார். மேலும் அவர், கசாபை தூக்கில் போட்டதன் மூலம், மும்பை தாக்குதலில் பலியான பொது மக்கள், போலீசாருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளோம் என கூறினார்.
கசாபை குற்றவாளி என நிருபித்து தூக்கு தண்டனை கிடைத்ததன் மூலம், நாம் மும்பை தாக்குதலில் பாகிஸ்தான் எவ்வாறு ஈடுபட்டது என்பதை நிருபித்துள்ளோம். கசாபை தூக்கில் போட்டதன் மூலம் மும்பை தாக்குதல் போன்ற சம்பவங்களை இந்தியா சகித்து கொள்ளாது என வெளிப்படுத்தியுள்ளோம். குற்றவாளிகள் நீதி முன்னர் நிறுத்துவோம் எனவும் நிருபித்துள்ளோம் என கூறினார்.
ஆர்.ஆர். பாட்டீல், மகாராஷ்டிர உள்துறை அமைச்சர்
இது நாட்டின் மீதான பயங்கரவாத தாக்குதல். இத்தாக்குதலில் நாம் நமது வீரமிக்க அதிகாரிகளை, மக்களை இழந்துள்ளோம். கசாப்பின் தூக்கு தாக்குதலில் இறந்த மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் நாம் செய்யும் அஞ்சலி என்று தெரிவித்துள்ளார்.
ஓமர் அப்துல்லா, ஜம்மு காஷ்மீர் முதல்வர்
கசாப் விஷயத்தை மிகவும் முதிர்ச்சியாக கையாண்ட மத்திய மாநில அரசுகளுக்கு வாழ்த்துக்கள்.
நரேந்திர மோடி, குஜராத் முதல்வர்:
நம் இந்திய ஜனநாயகத்தின் கோயில் என வர்ணிக்கப்படும் பார்லிமென்ட் மீது தாக்குதல் நடத்திய அப்சல் குருவை என்ன செய்யப்போகிறார்கள்?
திக் விஜய் சிங், மூத்த காங்கிரஸ் தலைவர்:
இறுதியாக கசாப் தூக்கிலிடப்பட்டு விட்டான். இதே போல் அப்சல் குரு விஷயத்திலும் விரைவில் முடிவெடுக்க வேண்டும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மும்பை தீவிரவாத தாக்குதல்: மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது: இதுவரை நடந்தது Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மும்பை தீவிரவாத தாக்குதல்: மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது: இதுவரை நடந்தது
கசாப் தூக்கு- தாக்கரேவுக்கு அஞ்சலி: சிவசேனா
மும்பை: மும்பை தாக்குதல் குற்றவாளி அஜ்மல் கசாபை தூக்கில் போட்டது, மறைந்த சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரேவுக்கு அரசு செலுத்திய மிகப்பெரிய அஞ்சலி என அக்கட்சி கூறியுள்ளது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மும்பை தீவிரவாத தாக்குதல்: மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது: இதுவரை நடந்தது Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மும்பை தீவிரவாத தாக்குதல்: மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது: இதுவரை நடந்தது
எங்களுக்கு நீதி கிடைத்தது: மும்பை தாக்குதலில் பலியான ரயில்வே அதிகாரி மனைவி
மும்பை: மும்பை தாக்குதலில் கொல்லப்பட்ட ரயில்வே டிக்கெட் கலெக்டர் எஸ் கே சர்மா என்பவரின் மனைவி ராகினி சர்மா கூறுகையில், கசாப் தூக்கு தண்டனை கிடைத்ததற்காக ஜனாதிபதிக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தாமதமானாலும் எங்களுக்கு நீதி கிடைத்தது. கசாப் ரகசியமாக தூக்கில் போட்டது மகிழ்ச்சியளிக்கிறது. இல்லையெனில்ஒரு சிலர் தூக்கு தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பார்கள் என கூறினார்.
மும்பை தாக்குதலின் போது பொது மக்களுக்கு தாக்குதல் குறித்து தகவலை வெளியிட்டு பலரின் உயிரைகாத்த விஷ்ணு ஜெண்டே என்பவர் கூறுகையில், இது போன்ற செய்தியை கேட்பேன் என நினைக்கவில்லை. கசாபை தூக்கில் போட்டது மகிழ்ச்சியளிக்கிறது. மும்பை தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது என கூறினார்,
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மும்பை தீவிரவாத தாக்குதல்: மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது: இதுவரை நடந்தது Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மும்பை தீவிரவாத தாக்குதல்: மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது: இதுவரை நடந்தது
![மும்பை தீவிரவாத தாக்குதல்: மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது: இதுவரை நடந்தது WR_20121121113225](https://2img.net/h/img.dinamalar.com/data/uploads/WR_20121121113225.jpeg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மும்பை தீவிரவாத தாக்குதல்: மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது: இதுவரை நடந்தது Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மும்பை தீவிரவாத தாக்குதல்: மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது: இதுவரை நடந்தது
ம்ம்.. எப்படியோ போட்டுட்டாங்க
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: மும்பை தீவிரவாத தாக்குதல்: மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது: இதுவரை நடந்தது
எப்படியும் போடுவாங்க...
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: மும்பை தீவிரவாத தாக்குதல்: மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது: இதுவரை நடந்தது
அருமை தல... எல்லா விசயமும் ஒரே பதிவில்... எவ்வளவு அதிகாரிகளின் மனைவிகள் விதவை ஆகியிருப்பார்கள். மகள் மகன்கள் நிர்கதியாகியிருப்பார்கள். பொது அறிவிப்பு செய்து தூக்கில் போட்டிருந்தால் இதற்காகவே காத்திருக்கும் நிறைய அமைப்புகள் அரசியலாக்கி தூக்கி நிறுத்தியிருப்பார்கள்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: மும்பை தீவிரவாத தாக்குதல்: மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது: இதுவரை நடந்தது
தினை விதைத்தவன் திணை அறுப்பான், வினை விதைத்தவன் வனை அறுப்பான் என்று சும்மாவா சொன்னார்கள்.
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மும்பை தாக்குதல்-பாக். தீவிரவாத தலைவர் விடுதலை
» மும்பை தாக்குதல் சம்பவம்-ஹெட்லிக்கு அடுத்த தண்டனை
» இன்று - மும்பை தீவிரவாத தாக்குதலின் நான்காமாண்டு நினைவுநாள்
» இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம்
» பஹ்ரைனில் தீவிரவாத தாக்குதல்: 3 இந்தியர்கள் படுகாயம்
» மும்பை தாக்குதல் சம்பவம்-ஹெட்லிக்கு அடுத்த தண்டனை
» இன்று - மும்பை தீவிரவாத தாக்குதலின் நான்காமாண்டு நினைவுநாள்
» இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம்
» பஹ்ரைனில் தீவிரவாத தாக்குதல்: 3 இந்தியர்கள் படுகாயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|