ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:47 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 4:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 4:36 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 4:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்திரனுக்கு பட்டா போடு ! கற்பனை நகைச்சுவை

2 posters

Go down

சந்திரனுக்கு பட்டா போடு ! கற்பனை நகைச்சுவை Empty சந்திரனுக்கு பட்டா போடு ! கற்பனை நகைச்சுவை

Post by செரின் Mon Oct 12, 2009 1:26 pm

கற்பனை: உத்தமபுத்திரன்.


:::சந்திரமண்டலத்தில் தண்ணீர் கண்டுபிடித்த்தை கேள்விப்பட்ட நம் அரசியல்வாதிகள் அதிரடியாக களத்தில் இறங்குகின்றனர்:::

(அறிவாலயத்தில்)

கலைஞர் : ஸ்டாலின்... உடனடியா சந்திரன்ல நம்ம கட்சி பொதுக்குழுவை கூட்டுங்க. அப்படியே என் தலைமையில கவியரங்கத்துக்கும் ஏற்பாடு செய்ங்க....

ஸ்டாலின் : போன வாரம் தானேப்பா காஞ்சியில விழா நடத்தினோம்.. அதுக்குள்ள என்ன விசேஷம்?

கலைஞர் : அது போன வாரம்.. நான் சொல்லுரது இந்த வாரம். கவிதையும் ரெடியா இருக்கு... படிக்கிறேன் கேளு...

சந்திரனே.. சந்திரனே..
தண்ணீர் தந்த மந்திரனே – அங்கே
வள்ளுவன் வந்து வாய் கொப்பளித்தானோ !
முல்லைவேந்தன் முகம் கழுவினானோ ! – அல்லது அண்ணா
உன்னை கண்ணா பிண்ணா என்று திட்டியதால் வந்த கண்ணீரோ !

எப்படியிருக்கு?

ஸ்டாலின் : நல்லா தான் இருக்கு... ஆனா அதை விட முக்கியமான வேலை நெறைய இருக்கு.. என்ன விடுங்க..

கலைஞர் : வேலை வெட்டி இல்லாம இருக்கேன்னு சொல்லாம சொல்ற... அப்படித்தானே.. ம்ம்ம்... நானும் ஒரு முக்கியமான வேலை பார்க்கனும்... வர்ரேன்... !

ஸ்டாலின் : (பயத்துடன்) முக்கியமான வேலையா... தீவிரவாதிகள் சென்னையில குண்டு வைக்க போராங்களா... இல்ல ஆட்சி அம்பேல் ஆகப் போகுதா..? என்ன்னு சொல்லுங்க...

கலைஞர் : அதைவிட ரொம்ப முக்கியம்...

ஸ்டாலின் : ரொம்ப டென்ஷன் பன்றிங்க.. ப்லீஸ்... சொல்லுங்க..

கலைஞர் : எடுத்தவரைக்கம் ”எந்திரன்” படத்தை போட்டுக் காட்டுறேன் வாங்கன்னு ரஜினி கூப்பிட்டார்.. அங்கப்போறேன்..!

(என்றதும் ஸ்டாலின் தலையில் கைவைத்தபடி அமர்கிறார்)

(கொடநாடு எஸ்டேட்டில்)

ஜெயலலிதா : (கோபமுடன் ஜெயகுமாரிடம்) இங்க யாரும் வரக்கூடாதுன்னு சொன்னனே... எதுக்கு வந்தீங்க.... சரி சரி சொல்லுங்க...

ஜெயகுமார் : சந்திரன்ல தண்ணி கண்டுப்பிடிச்சது எங்க ஆட்சியிலதான்... அதனால சந்திர மண்டலம் எனக்கே சொந்தம்னு கலைஞர் சொல்றாரும்மா...

ஜெயலலிதா : (அதிர்ச்சியுடன்) அப்படியா விடக்கூடாது... சந்திரன்னா.. அது நம்ம எஸ்.எஸ்.சந்திரன் பேர்லதான் இருக்குன்னு அந்த மைனாரிட்டி தி.மு.க ஆட்சிக்கு புரியும் படி சொல்லிடுவோம். சீக்கிரமா சந்திர மண்டலத்துக்கு பட்டா பாண்டு பத்திரம் ரெடி பண்ணுங்க...

ஓ. பன்னீர்செல்வம் : அழகிரி சண்டைக்கு வந்தார்னா...?

ஜெயலலிதா : வந்தா என்ன? எங்க ஆட்சியிலத்தான் சந்திர மண்டலத்தையே கண்டுபிடிச்சோம்னு புரோட்டாவை புரட்டி போடு.. அதமட்டுமில்லாம... வெங்காயத்தை உறிச்சா கண்ணுல தண்ணி வரும்னு ஆராய்ச்சி பண்ணி சொன்னதே நாங்கதான்னு சொல்லுவோம்.

ஜெயகுமார் : அம்மா .. உங்க புத்தி கத்தியைவிட ஷார்ப்புமா..

ஜெயலலிதா : அப்படியே பண்ணீர் தலைமையில தண்ணீர் போராட்டம் பண்ணுங்க !

சசிகலா : எல்லாம் சரி.. ஆனா எனக்கு ஒரு சின்ன ஆசை.. இந்த எஸ்டேட் போரடிக்குது. சந்திரன்ல ஒரு எஸ்டேட் கட்டி ரெஸ்ட் எடுக்க போலாமா..?

(என்றதும் பன்னீரும் ஜெயகுமாரும் “டக்” கென்று மறைந்த போகிறார்கள்)

(சாலிகிராமம் விஜயகாந்த் வீடு)

சுதீஸ் : மாமா....மாமா...மாமா....தண்ணி...

விஜயகாந்த் : (தூக்க கலக்கத்தில்) எடுத்துக்க .. எடுத்துக்க... ஆனா கண்ட்ரோலா குடி....

சுதீஸ் : ஐயோ ... அதில்ல மாமா...சந்திரன்ல தண்ணி இருக்காம்...

விஜயகாந்த் : காய்ச்சினதா... காய்ச்சாததா...?
(திடீரென்று எழுந்து உட்கார்ந்து பல்லை கடித்துக்கொண்டு கையை ஆட்டி சினிமா வசனம் போல்) ஏய் பாகிஸ்தான்காரா... ஒரு சொட்டு தண்ணி கூட இந்த கேப்டன் விட்டு கொடுக்க மாட்டான். மீரனா மரத்துல கட்டி வைச்சு தோலை உறிச்சுப்புடுவான்டா... ம்ம்ம்.... போகமாட்டே... (என்று விரலை துப்பாக்கி போல காட்டி.. டிஷ்யும்.. டிஷ்யும்.. என்று சவுண்ட் கொடுக்க.. பிரேமலதா ஓடி வருகிறார்)

பிரேமலதா : (கவலையடன்) ஜயோ என்னாச்சிங்க.... படம் எதுவும் இல்லாம போனதால இப்படித்தான் திடீர்னு எழுந்திருச்சி பாக்கிஸ்தானுக்கு எதிரா அறிக்கை விட ஆரம்பிச்சிடுரார்...

விஜயகாந்த் : (புரியாமல் விழுத்தபடி) ஆமா இப்ப நான் எங்கே இருக்கேன்.. சுதீஸ் நீ எப்ப வந்த... பண்ருட்டி எங்க..?

சுதீஸ் : பண்ருட்டி கடலுர் மாவட்டத்துல இருக்கு...

விஜயகாந்த் : இந்த நக்கல்தானே வேணாங்கிறது..

சுதீஸ் : சரி... அதை விடுங்க மாமா – சந்திர மண்டலத்துல தண்ணி இருக்காம் என்ன பண்ணலாம்..

விஜயகாந்த் : தமிழ்நாட்டுல தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க எங்களால் மட்டும் தான் முடியும்.. அதாவது சந்திரன்ல ஓட்டை போட்டு பைப்பை சொருகி நேரா உங்க வீட்டு அண்டா குண்டா சட்டி பானையிலயே விழுற மாதரி செய்வோம்.. ஆனா எப்படினு வெளியில சொல்ல மாட்டோம்...ஏன்னா அப்புரம் கலைஞர் அதை காப்பி அடிச்சி பம்பும் கையுமா நிப்பாரு..

பிரேமலதா : ஐயோ ராசா.... கண்டிப்பா அடுத்த முதல்வர் நீங்கதான்... எவ்வளவு சாதுர்யம் உங்களுக்கு..

விஜயகாந்த் : அப்புறம்.. பிரேமா.. மேக்கப் போட்டு ரொம்ப நாளாச்சி... கன்னமெல்லாம் அரிக்குது.. கையேல்லாம் நடுங்குது...

பிரேமலதா : அதுக்கு என்ன இப்போ..?

விஜயகாந்த் : என்ன வெச்சி ஒரு படம் எடேன்... ”சந்திரமண்டலத்துல தண்ணிராஜா” டைட்டில் நல்லாயிருக்கா...?

(”வர்ர நாலு வோட்டுக்கும் வேட்டு வைக்க ரெடியாயிட்டாருடா ...” என்று கூறியபடியே இருவரும் தலைதெறிக்க ஓடி மறைகின்றனர்)
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

சந்திரனுக்கு பட்டா போடு ! கற்பனை நகைச்சுவை Empty Re: சந்திரனுக்கு பட்டா போடு ! கற்பனை நகைச்சுவை

Post by சதீஷ்குமார் Mon Oct 12, 2009 2:50 pm

ஜெயலலிதா : (அதிர்ச்சியுடன்) அப்படியா விடக்கூடாது... சந்திரன்னா.. அது நம்ம எஸ்.எஸ்.சந்திரன் பேர்லதான் இருக்குன்னு அந்த மைனாரிட்டி தி.மு.க ஆட்சிக்கு புரியும் படி சொல்லிடுவோம்.
விஜயகாந்த் : தமிழ்நாட்டுல தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க எங்களால் மட்டும் தான் முடியும்.. அதாவது சந்திரன்ல ஓட்டை போட்டு பைப்பை சொருகி நேரா உங்க வீட்டு அண்டா குண்டா சட்டி பானையிலயே விழுற மாதரி செய்வோம்.. ஆனா எப்படினு வெளியில சொல்ல மாட்டோம்...ஏன்னா அப்புரம் கலைஞர் அதை காப்பி அடிச்சி பம்பும் கையுமா நிப்பாரு..

பிரேமலதா : ஐயோ ராசா.... கண்டிப்பா அடுத்த முதல்வர் நீங்கதான்... எவ்வளவு சாதுர்யம் உங்களுக்கு..

விஜயகாந்த் : அப்புறம்.. பிரேமா.. மேக்கப் போட்டு ரொம்ப நாளாச்சி... கன்னமெல்லாம் அரிக்குது.. கையேல்லாம் நடுங்குது...

பிரேமலதா : அதுக்கு என்ன இப்போ..?

விஜயகாந்த் : என்ன வெச்சி ஒரு படம் எடேன்... ”சந்திரமண்டலத்துல தண்ணிராஜா” டைட்டில் நல்லாயிருக்கா...?

சந்திரனுக்கு பட்டா போடு ! கற்பனை நகைச்சுவை 705463 சந்திரனுக்கு பட்டா போடு ! கற்பனை நகைச்சுவை 677196 சந்திரனுக்கு பட்டா போடு ! கற்பனை நகைச்சுவை 677196 சந்திரனுக்கு பட்டா போடு ! கற்பனை நகைச்சுவை 677196 சந்திரனுக்கு பட்டா போடு ! கற்பனை நகைச்சுவை 705463
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum