Latest topics
» அலங்கார முகமூடிகள்!by Anthony raj Today at 4:23 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:18 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கைபேசியில் கத்தும் பெண்கள் - ஓர் அலசல்
+2
காதல் ராஜா
சிவா
6 posters
Page 1 of 1
கைபேசியில் கத்தும் பெண்கள் - ஓர் அலசல்
![கைபேசியில் கத்தும் பெண்கள் - ஓர் அலசல் Cellph10](https://i.servimg.com/u/f42/13/02/10/42/cellph10.jpg)
கைபேசியின் அழைப்பு சத்தத்தை கேட்ட உடனே சில பெண்கள் எரிச்சலடைந்துவிடுகிறார்கள். பின்பு போனை ‘ஆன்’ செய்த உடன் கத்தத் தொடங்கிவிடுகிறார்கள். இடம், பொருள், ஏவல் பார்க்காமல் கத்துவது பலரையும் முகம் சுளிக்கவைத்துவிடுகிறது. இந்த கூத்து, செல்போன் வந்த பின்புதான் தொடங்கியிருக்கிறது.
கன்னாபின்னாவென்று தேவையற்ற நேரத்தில் பேசுவது, வைக்கவிடாமல் தொடர்ந்து பேசுவது, சாலை விதிகளைக் கூடமதிக்காமல் பேசிக்கொண்டே கடப்பது, வாகனம் ஓட்டும் போது பேசுவது, வாய்க்கு வந்தபடி பேசுவது இதெல்லாம் இப்போது வெளிப்படையாகத் தெரிகிறது. இன்றைய இளைய தலைமுறையினரை வெகுவாக கவர்ந்த நவீன சாதனங்களில் கைபேசி முதலிடம் வசிக்கிறது. நவீன வசதிகள் நமக்காக கிடைக்கும்போது அதை நல்ல விதத்தில் பயன்படுத்திக் கொள்ள நமக்குத் தெரிய வேண்டும். அதை நல்ல நண்பனாக பயன்படுத்துகிறோமா, ரவுடியாக பயன்படுத்துகிறோமா என்பது நமது மூளை சார்ந்த விஷயம்.
ஸ்ருதி நல்ல பெண்தான், அவள் கைக்கு செல்போன் வரும்வரை! அது வந்த பின்பு, அவள் செயல்பாடே மாறியது. அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்த பின்பும் அலுவலக தொடர்புடைய அழைப்புகள் வந்தவண்ணம் இருக்கும். இவளும் முதலில் பொறுமையாகத்தான் பேசிக்கொண்டிருந்தாள். இப்போதெல்லாம் டென்ஷன் தலைக்கேறி அடிக்கடி கத்துகிறாள். செல்போன் அழைப்பு வந்தாலே அவள் மனநிலை மாறிவிடுகிறது. எரிச்சல் அடைகிறாள். முதலில், ‘மறு முனையில் இருப்பவர்கள் நிலைமை தெரியாமல் பேசுகிறோமே’ என்ற குற்றஉணர்வு அவளுக்கு கொஞ்சம் இருந்தது. பின்பு அந்த குற்றஉணர்வு மறைந்து அதுவே அவளது இயல்பாகிவிட்டது. கத்துவதை தவறென்று அவளும் உணரவில்லை. அவளது குடும்பத்தாரும் அதை மாற்றியமைக்க முயற்சிக்கவில்லை. விளைவு, ஒருநாள் தன் மேலதிகாரி என்று தெரியாமல் காட்டுக்கத்தல் கத்திவிட்டாள். அநாகரீகமான அவளுடைய செய்கையை பார்த்து அதிர்ந்து போனார் அதிகாரி. பிறகென்ன அவள் அந்த வேலையை விடவேண்டியதாயிற்று.
எதை சிந்தினாலும் பொறுக்கி எடுத்துவிடமுடியும். ஆனால் பேசுவதை திரும்பி எடுக்க முடிவதில்லை. செல்போனில் பேசுவது பதிவாகிவிடவும் செய்கிறது. யாரிடம் பேசுகிறோம், என்ன பேசுகிறோம் என்பதை உணர்ந்து பேச வேண்டும். நாம் வெளிப்படுத்தும் வார்த்தைகள் நம்மை வளப்படுத்த வேண்டும். கைபேசி என்பது ஒரு இணைப்புச் சாதனம். அதன் மேல் நம் கோபத்தை காட்டக் கூடாது. யாராக இருந்தாலும் பணிவுடன் பேசுவதில் தவறொன்றுமில்லை. கைபேசியை வைத்துக் கொண்டு சுற்றியிருக்கும் உலகத்தையே மறந்து கூச்சல் போடுவது மோசமான விளைவுகளைத்தான் ஏற்படுத்தும்.
வனஜா என்ற பெண்மணி கணவரிடம் சண்டை போட்டுக்கொண்டு கையில் பெட்டியோடு அம்மா வீட்டுக்கு புறப்பட்டு விட்டாள். பாதிவழியில் அவளுடைய கைபேசி கிணுகிணுத்தது, எடுத்து பேசினாள். அவளை சமாதானப்படுத்தி கணவர் திரும்ப அழைத்தார். அந்தப் பெண்மணியோ அவர்மீது தொடர் குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே சத்தமாகப் பேசினாள். ‘உங்களுடைய நடவடிக்கை சரியில்லை. இனி உங்களோடு என்னால வாழ முடியாது’ என்றாள். பேசும்போது உணர்ச்சி வசப்பட்டு உண்மையை ஆத்திரத்தோடு கொட்டிவிட்டாள். ‘உங்களுக்கு என் தந்தை சீர் வரிசையாக தந்த ஐம்பது பவுன் நகையையும் நான் எடுத்து வந்துவிட்டேன். இது என் அப்பா சம்பாதித்தது. இதை அவரிடமே திருப்பிக் கொடுத்து விட்டு அங்கேயே இருந்துவிடப் போகிறேன் என்றாள்.
யாருக்கும் சந்தேகம் வராத அளவுக்கு சாதாரண சூட்கேசில் இருந்த ஐம்பது பவுன் நகையை அவள் செல்போன் பேச்சு காட்டிக்கொடுத்துவிட்டது. ஆட்டோ ஏறினாள். பின்பு பஸ் ஏறினாள். போகிற போக்கில் பின் தொடர்ந்த சிலர் திட்டமிட்டு அந்த சூட்கேசை பறித்துவிட்டு சென்றனர். இப்போது நகையும் இல்லை. கணவரும் இல்லை. தந்தையோடு கண்ணீரில் காலம் தள்ளுகிறாள். முன்பு லேண்ட்லைன் போன் வீட்டில் இருந்தது. பேசும் விஷயங்கள் மறைவாக, ரகசியமாக இருந்தது. இப்போது செல்போன் வந்து, நடுத்தெருவைக்கூட பேசும் இடமாக மாற்றிவிட்டது.
நம்முடைய வசதிக்காக உருவாக்கப்பட்ட ஒரு நவீன சாதனத்தை இப்படிநமக்கே குழிபறிக்கும் அளவுக்கு விட்டது யார், நாம்தான்! முக்கியமாக இன்றைய இளைய தலைமுறையினருக்கு கைபேசியை எப்படி பயன்படுத்துவது என்று கற்றுத் தர வேண்டியதிருக்கிறது. அவர்களைப் பற்றிய முக்கியமான தகவல்கள், போகுமிடம் எல்லாம் கைபேசி மூலம் மற்றவருக்கு சுலபமாக தெரியப்படுத்திவிடுகிறார்கள். ஒருவர் கைபேசியில் அரைமணி நேரம் பேசிக்கொண்டிருப்பதை உற்றுக் கேட்டால் போதும் அவர்களைப் பற்றிய முழுத் தகவலும் மற்றவருக்கு தெரிந்துவிடும்.
கைபேசியில் பேசும்போது பலருக்கு எதிர்முனையில் இருப்பவர் மட்டும் தான் நினைவில் இருக்கிறார்கள். சுற்றியிருக்கும் சூழல் மறந்துவிடுகிறது. கைபேசியில் பேசுவது ஒரு கலை. அந்த கலையை பயன்படுத்தி பேசி, பலர் நல்ல பெயர் வாங்கிக்கொண்டு, உறவுகளை நன்றாக பராமரிக்கிறார்கள். உங்கள் அருகில்கூட அப்படி ஒருவர் இருப்பார். அவரிடமிருந்து அந்த நல்ல கலையை கற்றுக்கொண்டு நீங்களும் பயன்படுத்துங்கள். சில நேரங்களில் தவறான அழைப்பு வந்து நம்மை தொல்லைப்படுத்தும். பொறுமையாக அதை நிராகரிக்கலாம். நாம் தவறாக யாருக்காவது போன் செய்து விட்டால், மன்னிப்பு கோரலாம். கைபேசியை நமக்கு துணையாக வைத்துக் கொள்ள வேண்டும். வினையாக மாற்றிக் கொள்ளக்கூடாது.
தினத்தந்தி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கைபேசியில் கத்தும் பெண்கள் - ஓர் அலசல் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கைபேசியில் கத்தும் பெண்கள் - ஓர் அலசல்
நல்ல பதிவு சிவா..
இங்கு வாகனம் ஓட்டுகையில் அலைபேசி பயன்படுத்த வேண்டாம் என்பதை நூதனமான முறையில் விளம்பரப்படுத்திய பெங்களூரு போக்குவரத்துக் காவல் துறையை நினைக்கிறேன்..
சிந்திக்க வைத்த விளம்பரம் இது..
![கைபேசியில் கத்தும் பெண்கள் - ஓர் அலசல் Donttalkwhilehedrives](https://2img.net/h/i1179.photobucket.com/albums/x389/kaathalraja/Creativity/Donttalkwhilehedrives.jpg)
இங்கு வாகனம் ஓட்டுகையில் அலைபேசி பயன்படுத்த வேண்டாம் என்பதை நூதனமான முறையில் விளம்பரப்படுத்திய பெங்களூரு போக்குவரத்துக் காவல் துறையை நினைக்கிறேன்..
சிந்திக்க வைத்த விளம்பரம் இது..
![கைபேசியில் கத்தும் பெண்கள் - ஓர் அலசல் Donttalkwhilehedrives](https://2img.net/h/i1179.photobucket.com/albums/x389/kaathalraja/Creativity/Donttalkwhilehedrives.jpg)
Re: கைபேசியில் கத்தும் பெண்கள் - ஓர் அலசல்
படம் தெரியவில்லை ராஜா!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கைபேசியில் கத்தும் பெண்கள் - ஓர் அலசல் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கைபேசியில் கத்தும் பெண்கள் - ஓர் அலசல்
நன்றி ராஜா!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கைபேசியில் கத்தும் பெண்கள் - ஓர் அலசல் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 20/09/2011
Re: கைபேசியில் கத்தும் பெண்கள் - ஓர் அலசல்
பூவன் wrote:படம் அருமை காதல் ராஜா
மிக்க நன்றி நண்பர் பூவன்..
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Re: கைபேசியில் கத்தும் பெண்கள் - ஓர் அலசல்
கால் போகும் தூரம் கால் போட வேண்டாம்.
கால் = leg
கால் = phone call
கால் = leg
கால் = phone call
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கைபேசியில் கத்தும் பெண்கள் - ஓர் அலசல் 425716_444270338969161_1637635055_n](https://2img.net/h/sphotos-d.ak.fbcdn.net/hphotos-ak-ash4/425716_444270338969161_1637635055_n.jpg)
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Re: கைபேசியில் கத்தும் பெண்கள் - ஓர் அலசல்
அறிவியல் வளர்ச்சி அழிவை தருகிறது. தவறான பயன்பாடே இதற்கு காரணம்
அருமையான கட்டுரை
அருமையான கட்டுரை
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 19/03/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தேர்வில் மதிப்பெண் எடுப்பதில் பெண்கள் முதலிடம் வகிப்பதேன் - அலசல்
» கத்தும் குயிலோசை...
» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று!
» கைபேசியில் 3Gp திரைபடங்கள்
» ஈகரை கைபேசியில்
» கத்தும் குயிலோசை...
» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று!
» கைபேசியில் 3Gp திரைபடங்கள்
» ஈகரை கைபேசியில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|