Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
விடுதலைப்புலி தளபதி சுட்டுக்கொலை: வைகோ கண்டனம்
5 posters
Page 1 of 1
விடுதலைப்புலி தளபதி சுட்டுக்கொலை: வைகோ கண்டனம்
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நவம்பர் 8-ந்தேதி இரவு தமிழ் ஈழ மக்களுக்கு மேலும் ஓர் துன்ப இரவாக ஆகிவிட்டது. ஆம், தமிழ்ஈழ விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளுள் ஒருவரும், பிரான்ஸ் நாட்டின் தமிழர் ஒருங்கிணைப்பு குழு பொறுப்பாளருமான கேணல் பரிதி என்ற நடராஜா மதீந்திரன், பாரீஸ் நகரத்தில் தமிழர் ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்தை விட்டு வெளியே வந்தபோது 8-ந்தேதி இரவில் கொலைகார நயவஞ்சகர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி என் இதயத்தில் ஈட்டியாக பாய்ந்தது.
நான் உயிராக நேசித்த விடுதலைப்புலிகளின் தளகர்த்தர்களுள் பரிதியும் ஒருவர் ஆவார். 1989-ம் ஆண்டு தொடக்கத்தில் வன்னிக் காடுகளில் இடைவிடாத இந்திய- சிங்கள ராணுவத் தாக்குதல்களுக்கு நடுவே வான்வெளிக் குண்டு வீச்சுக்கும், பீரங்கி தாக்குதல்களுக்கும் ஊடே நான் எனது உயிரினும் மேலாக போற்றுகின்ற மாவீரர் திலகம் பிரபாகரன் அவர்களோடு இருந்த என் வாழ்வின் பொன்னான அந்த நாட்களில் நடைபெற்ற நிகழ்வுகளை எல்லாம் கடந்த ஆண்டு மே 30-ந்தேதி பாரீஸ் நகரத்தில் நூற்றுக்கணக்கான ஈழத் தமிழர்களை, நான் சந்திக்க ஏற்பாடு செய்து தந்த நிகழ்ச்சியின்போது உணர்ச்சி பூர்வமாக நினைவு கூர்ந்ததை எண்ணும்போது மனம் பாறையாக கனக்கிறது.
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸெல்சில், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற கட்டிடத்தில் கடந்த ஆண்டு ஜுன் 1-ந்தேதி நடைபெற்ற ஈழத்தமிழர் கருத்து அரங்கத்தில் பங்கு ஏற்கச் சென்ற நான், மே 30-ந்தேதி பாரீஸ் நகரத்துக்கு சென்றேன். அங்குதான் ஈழத்தமிழர்களை நான் சந்திக்க சகோதரர் பரிதி ஏற்பாடு செய்து இருந்தார். இரவு 7 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை அந்த சந்திப்பு நடந்தது. பரிதியின் துணைவியாரையும், மகனையும், மகளையும் கண்டு உரையாடினேன்.
ஈழத்தில் நான் தலைவரோடு தங்கியிருந்தபோது வன்னிக் காட்டின் வேறொரு பகுதியில் பரிதி செயல்பட்டார். 1990-ம் ஆண்டு யுத்தத்தில் காயமுற்று கால் நடக்க முடியாத நிலையில் சென்னைக்கு வந்து சிகிச்சை பெற்றார். பின்னர் பிரான்ஸ் நாட்டின் புலிகளின் பொறுப்பாளர் ஆக்கப்பட்டார்.
பிரான்சு நாட்டில் விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டபின் பரிதி கைது செய்யப்பட்டு நீண்ட நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இயக்கத்தின் பல முயற்சிகளால் அவர் விடுதலை ஆனார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை இனவாத அரசின் உளவுத்துறையின் பின்னணியில் கொடி யோரால், ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகாயமுற்று உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று மீண்டார்.
இவ்வாண்டு மாவீரர் நாள் நிகழ்ச்சிகளை முனைப்பாக ஏற்பாடு செய்துவந்த நிலையில் கேணல் பரிதி நிராயுதபாணியாக அலுவலக்தை விட்டு வெளியே வந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். இலங்கை அரசின் புலனாய்வுத் துறையினரின் நயவஞ்சகமாக கொடுஞ்செயலால் ஒரு வீரச் சகோதரனை தமிழ் ஈழம் இழந்துவிட்டது.
பரிதியின் துணைவியாரையும், அவரது பிள்ளைகளையும் எண்ணுகையில் தாங்க முடியாத துக்கம் மேலிடுகிறது. அந்த வீரத் திருமகனுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது கண்ணீர் அஞ்சலியையும், வீரவணக்கத்தையும் சமர்ப்பிக்கிறேன்.
தலைமைக்கும், இயக்கத்துக்கும் தமிழ்ஈழ விடுதலை லட்சியத்திற்கும், தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மாவீரன் பரிதி, எந்தக் குறிக்கோளுக்காக இறுதி மூச்சு அடங்கும் வரை போராடினாரோ, அந்த சுதந்திரத் தமிழ்ஈழ லட்சியத்தை வென்றெடுக்க துயர் சூழ்ந்த இந்த நேரத்தில் சபதம் ஏற்போம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாலைமலர்
நவம்பர் 8-ந்தேதி இரவு தமிழ் ஈழ மக்களுக்கு மேலும் ஓர் துன்ப இரவாக ஆகிவிட்டது. ஆம், தமிழ்ஈழ விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளுள் ஒருவரும், பிரான்ஸ் நாட்டின் தமிழர் ஒருங்கிணைப்பு குழு பொறுப்பாளருமான கேணல் பரிதி என்ற நடராஜா மதீந்திரன், பாரீஸ் நகரத்தில் தமிழர் ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்தை விட்டு வெளியே வந்தபோது 8-ந்தேதி இரவில் கொலைகார நயவஞ்சகர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி என் இதயத்தில் ஈட்டியாக பாய்ந்தது.
நான் உயிராக நேசித்த விடுதலைப்புலிகளின் தளகர்த்தர்களுள் பரிதியும் ஒருவர் ஆவார். 1989-ம் ஆண்டு தொடக்கத்தில் வன்னிக் காடுகளில் இடைவிடாத இந்திய- சிங்கள ராணுவத் தாக்குதல்களுக்கு நடுவே வான்வெளிக் குண்டு வீச்சுக்கும், பீரங்கி தாக்குதல்களுக்கும் ஊடே நான் எனது உயிரினும் மேலாக போற்றுகின்ற மாவீரர் திலகம் பிரபாகரன் அவர்களோடு இருந்த என் வாழ்வின் பொன்னான அந்த நாட்களில் நடைபெற்ற நிகழ்வுகளை எல்லாம் கடந்த ஆண்டு மே 30-ந்தேதி பாரீஸ் நகரத்தில் நூற்றுக்கணக்கான ஈழத் தமிழர்களை, நான் சந்திக்க ஏற்பாடு செய்து தந்த நிகழ்ச்சியின்போது உணர்ச்சி பூர்வமாக நினைவு கூர்ந்ததை எண்ணும்போது மனம் பாறையாக கனக்கிறது.
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸெல்சில், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற கட்டிடத்தில் கடந்த ஆண்டு ஜுன் 1-ந்தேதி நடைபெற்ற ஈழத்தமிழர் கருத்து அரங்கத்தில் பங்கு ஏற்கச் சென்ற நான், மே 30-ந்தேதி பாரீஸ் நகரத்துக்கு சென்றேன். அங்குதான் ஈழத்தமிழர்களை நான் சந்திக்க சகோதரர் பரிதி ஏற்பாடு செய்து இருந்தார். இரவு 7 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை அந்த சந்திப்பு நடந்தது. பரிதியின் துணைவியாரையும், மகனையும், மகளையும் கண்டு உரையாடினேன்.
ஈழத்தில் நான் தலைவரோடு தங்கியிருந்தபோது வன்னிக் காட்டின் வேறொரு பகுதியில் பரிதி செயல்பட்டார். 1990-ம் ஆண்டு யுத்தத்தில் காயமுற்று கால் நடக்க முடியாத நிலையில் சென்னைக்கு வந்து சிகிச்சை பெற்றார். பின்னர் பிரான்ஸ் நாட்டின் புலிகளின் பொறுப்பாளர் ஆக்கப்பட்டார்.
பிரான்சு நாட்டில் விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டபின் பரிதி கைது செய்யப்பட்டு நீண்ட நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இயக்கத்தின் பல முயற்சிகளால் அவர் விடுதலை ஆனார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை இனவாத அரசின் உளவுத்துறையின் பின்னணியில் கொடி யோரால், ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகாயமுற்று உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று மீண்டார்.
இவ்வாண்டு மாவீரர் நாள் நிகழ்ச்சிகளை முனைப்பாக ஏற்பாடு செய்துவந்த நிலையில் கேணல் பரிதி நிராயுதபாணியாக அலுவலக்தை விட்டு வெளியே வந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். இலங்கை அரசின் புலனாய்வுத் துறையினரின் நயவஞ்சகமாக கொடுஞ்செயலால் ஒரு வீரச் சகோதரனை தமிழ் ஈழம் இழந்துவிட்டது.
பரிதியின் துணைவியாரையும், அவரது பிள்ளைகளையும் எண்ணுகையில் தாங்க முடியாத துக்கம் மேலிடுகிறது. அந்த வீரத் திருமகனுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது கண்ணீர் அஞ்சலியையும், வீரவணக்கத்தையும் சமர்ப்பிக்கிறேன்.
தலைமைக்கும், இயக்கத்துக்கும் தமிழ்ஈழ விடுதலை லட்சியத்திற்கும், தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மாவீரன் பரிதி, எந்தக் குறிக்கோளுக்காக இறுதி மூச்சு அடங்கும் வரை போராடினாரோ, அந்த சுதந்திரத் தமிழ்ஈழ லட்சியத்தை வென்றெடுக்க துயர் சூழ்ந்த இந்த நேரத்தில் சபதம் ஏற்போம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாலைமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: விடுதலைப்புலி தளபதி சுட்டுக்கொலை: வைகோ கண்டனம்
அவரது ஆத்மா சாந்தி அடைய தமிழ் ஈழம் ஒன்று மட்டுமே.
அந்நிலை விரைவில் அடைய வேண்டும்
அந்நிலை விரைவில் அடைய வேண்டும்
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
விடுதலைப்புலி தளபதி சுட்டுக்கொலை: வைகோ கண்டனம்
இழப்புக்கள் எமக்கு புதியதல்ல, எவ்வளவோ இழந்துவிட்டோம்,
ஆனால் இந்த இழப்புக்களால் எமக்கு ஏற்பட்ட மன வைராக்கியம் சுதந்திரம் அடையும் வரை தீராது.
ஆனால் இந்த இழப்புக்களால் எமக்கு ஏற்பட்ட மன வைராக்கியம் சுதந்திரம் அடையும் வரை தீராது.
Re: விடுதலைப்புலி தளபதி சுட்டுக்கொலை: வைகோ கண்டனம்
இது கோழைகளின் அநாகரீகச் செயல்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Similar topics
» தலைக்கு ரூ. 2 கோடி நிர்ணயிக்கப்பட்ட தலிபான் தளபதி சுட்டுக்கொலை
» ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு: வைகோ கண்டனம்
» சீமான் கைதுக்கு வைகோ கடும் கண்டனம்
» செய்தியாளர்கள் மீதான தொடர் தாக்குதல்களுக்கு வைகோ கண்டனம்
» முதல்வருக்கு அமித்ஷா அனுப்பிய இந்தியில் இரங்கல் கடிதம்: வைகோ கண்டனம்
» ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு: வைகோ கண்டனம்
» சீமான் கைதுக்கு வைகோ கடும் கண்டனம்
» செய்தியாளர்கள் மீதான தொடர் தாக்குதல்களுக்கு வைகோ கண்டனம்
» முதல்வருக்கு அமித்ஷா அனுப்பிய இந்தியில் இரங்கல் கடிதம்: வைகோ கண்டனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|