ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகளுக்கு ஏற்படக் கூடிய ஆபத்துக்களை தவிர்ப்பது எப்படி? - சில பயனுள்ள அறிவுரைகள்

4 posters

Go down

குழந்தைகளுக்கு ஏற்படக் கூடிய ஆபத்துக்களை தவிர்ப்பது எப்படி? - சில பயனுள்ள அறிவுரைகள் Empty குழந்தைகளுக்கு ஏற்படக் கூடிய ஆபத்துக்களை தவிர்ப்பது எப்படி? - சில பயனுள்ள அறிவுரைகள்

Post by அசுரன் Sat Oct 27, 2012 10:46 pm


குழந்தைகளுக்கு ஏற்படக் கூடிய ஆபத்துக்களை தவிர்ப்பது எப்படி? - சில பயனுள்ள அறிவுரைகள் Mother&child

குழந்தைகளின் பாதுகாப்பு பெற்றோர் கையில்

ஒவ்வொரு குழந்தையின் பெற்றோரும் தம் குழந்தை தனது வாழ்வில் எல்லா வளங்களும் நலங்களும் பெற்று, உலகிலுள்ள மற்ற அனைவருடனும் அன்புடனும் நட்புடனும் பெரியவனாக நல்வாழ்வு வாழ வேண்டும் எனவே விரும்புகின்றார்கள். அதற்காக அவர்கள் இறைவனை வேண்டவும் தவறுவதில்லை.

இந்தப்பணி அன்னையின் கருத்தரிப்புக் காலத்திலிருந்தே ஆரம்பிக்கின்றது முதலில் குழந்தை ஆரோக்கியமாகப் பிறப்பதற்கு அன்னை எவ்வாறு வாழ வேண்டும், எந்த வகையான உணவு உண்ண வேண்டும், எப்படிப்பட்ட உடற் பயிற்சிகளையும் பிற மருத்துவ உதவிகளையும் எடுத்துக் கொள்ள வேண்டுமென்பதை அறிந்து அதற்கேற்ப நடந்துகொள்வது அவசியம்.

குழந்தை பிறந்தவுடன் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், குழந்தையின் ஆரோக்கியத்தை அறிதல், அதற்கேற்றபடிக் குழந்தையைப் பராமரித்தல் ஆகியவற்றைப் பெற்றோர் அறிந்து பின்பற்ற வேண்டும்.

குழந்தை வளருகையில் அதற்கேற்ற உணவு, உடை, மற்றும் இருப்பிடம் ஆகிய அடிப்படைத் தேவைகள செவ்வனே பூர்த்தி செய்ய வேண்டும். குழந்தைக்கு நோய்கள் வராமல் தடுக்கத் தேவையான மருத்துவ உதவிகள் எவை? அவற்றை எப்பொழுது கிடுக்க வேண்டும் என்பன போன்ற விவரங்களைத் தெளிவாகத் தெரிந்து காலம் தாழ்த்தாமல் உரிய நேரத்தில் அவற்றைப் பூர்த்திசெய்ய வேண்டும். குழந்தைக்கு வளர்ச்சிக்கேற்ற சத்தான சரிவிகித உணவு தருவது மிகவும் இன்றியமையாதது, அதிலும் தாய்ப்பால் கொடுப்பது மிகவும் அவசியம்.

ஒரு பெண் வாழ்நாளில் தன் பெண்மையின் பெருமையை முழுமையாக உணர்ந்து அகம் மகிழும் தருணம் தான் பெற்ற பிள்ளையை மார்போடு அணைத்து மகிழும் நேரமாகும். அத்தாய் தன் குழந்தையை நன்கு வளர்க்க அவள் முதலில் தான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அதற்கு ஆவன செய்ய வேண்டிய கடமை தந்தையுடையதாகும்.

தாயின் உடல் ஆரோக்கியத்தைப் பேணிக்காக்க வேண்டியது மிகவும் அவசியம், அதிலும் குறிப்பாக, குழந்தை தாய்ப்பால் உண்டு வளரும் காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தாய்க்கும் குழந்தைக்கும் உள்ள பந்தத்தைப் போல் உலகில் பேரின்பம் தரும் பொருள் வேறெதுவும் கிடையாது.

அத்தகைய பந்தம் சிறப்பாக அமையத் தாய் தன் குழந்தையுடன் அதிகபட்ச நேரத்தைச் செலவிட வேண்டும். அந்தக் குழந்தைக்கு விளையாட்டுக் காட்டிச் சிரிக்க வைப்பது, பேசச் சொல்லிக்கொடுப்பது போன்றவற்றில் மிக்க அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இத்தகைய சமயங்களில் தந்தையும் தாயுடன் சேர்ந்துகொண்டு குழந்தையுடன் பொழுதை இனிமையாகக் கழிப்பதில் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். குழந்தை வளர வளர, பிறருடன் பயமின்றி நேயமாகப் பழக வாய்ப்பளிக்க வேண்டும். இந்த உலகத்தோடு ஒன்றி வாழப் பழக்க வேண்டும். குழந்தையின் மன வளர்ச்சிக்கு இது மிகவும் அவசியம்.

* சின்ன சின்னப் பொருட்கள் தரையில் கிடந்தால் உடனே அதை எடுத்து மறைத்து விடுங்கள். குழந்தைகள் அதை எடுத்து வாயிலோ மூக்கிலோ போட்டுக் கொள்ளாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

* சுவர் விளிம்புகள், கதவு மேஜை விளிம்புகள் கூராக இல்லாமல் பார்த்து அமைக்கவும்.

* குழந்தைகள் அறைக்குள் சென்று கதவை தாள் போட்டுக் கொள்ளாத வண்ணம் உயரமாக தாள்பாளை அமைக்கவும்.

* குழந்தைகளுக்கான மருந்து குப்பியில் வேறு எதையும் ஊற்றி வைக்காதீர்கள் அவசரத்தில் மருந்தென்று மறந்து கொடுத்து விடுவோம்.

* கத்திகள், ஊசிகள், கத்திரிகள், மருந்து மாத்திரைகள் ஆகியவற்றை குழந்தைக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்.

* குழந்தைக்கு எட்டாத இடத்தில்தான் மண்ணெண்ணெய், பினாயில் போன்றவற்றை வைக்கவேண்டும். முக்கியமாக ஒன்றரையிலிருந்து இரண்டரை வயதுக் குழந்தை உள்ளவர்கள் வீட்டில் இந்த விஷயத்தில் மிகவும் முன்னெச்சரிக்கை தேவை.

* கொசுவர்த்தி சுருள்கள் மூடிய அறைக்குள் மூச்சுத் திணறலை உண்டாக்கும். பதிலாக கொசு வலை பாவிக்கலாம். கொசுவிரட்டி மருந்துகள் குழந்தைக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்.

* இரும்பு பீரோக்களைப் பற்றிப் பிடித்து குழந்தகள் ஏறும். அப்படியே பீரோ சரிந்து விழுந்து குழந்தையை நசுக்கி விடும். பீரோக்களை சுவருடன் அசையாமல் பிணைத்து வைக்கவும்.

* ஜிப் வைத்த உடைகளை முடிந்த அளவுக்கு தவிர்க்கலாம். அல்லது உள்ளாடை அணிவித்த பிறகு அதுபோன்ற உடைகளை அணிவிக்க வேண்டும். (ஜிப்பை இழுக்கும்போது ஆணுடம்பின் தோலோடு சிக்கிக் கொண்டுவிட்டால்?!)

* தொட்டிகள் அல்லது பெரிய பாத்திரங்களில் தண்ணீர் நிரப்பி திறந்து வைக்காதீர்கள். குழந்தை உள்ளே விழ சாத்தியம் இருக்கிறது.

* சமையலறையில் முடிந்தவரை குழந்தை செல்லாமல் தவிர்க்கப் பாருங்கள். இடுப்பில் குழந்தையைத் தூக்கிக்கொண்டே கொதிக்கும் கறியை ஒரு அம்மா இறக்கி வைத்திருக்கிறார். அப்போது குழந்தை சற்றே திமிர, * கறி குழந்தையின் காலில்பட்டு, அங்கு தோல் அவிந்து விட்டது.

* கதவை திறந்து குழந்தை சாலையில் சென்று விடாமல் இருக்க கதவு தாள்பாள் கைக்கு எட்டாத உயரத்தில் வைக்கவும்.

* பெட் ரூமில் படுத்துக் கொண்டே சுவிட்ச் போட தாழ்வாக சுவிட்ச் போர்டுகளும் ப்ளக் பாயின்றுகளும் சில இடங்களில் இருக்கும். குழந்தைகள் பேனா அல்லது கம்பியை ப்ளக் பாயின்றுக்குள் செருகி மின்சாரத் * தாக்குதலுக்கு ஆளாகலாம். அத்தகைய இடங்களில் பாதுகாப்பான விஷேச ப்ளக் பாயின்றுகள் உபயோகிக்கலாம் அல்லது அத்தகைய மின் இணைப்பைத் தவிர்க்கலாம்.

* வீட்டில் உபயோகப்படுத்தும் எலெக்ட்ரானிக் பொருட்களின் மின் இணைப்புகள் குழந்தைகள் கை படாத வகையில் இருக்க வேண்டும்.

* மிக்ஸி, கிரைண்டர் உபயோகம் முடிந்தால் சுவிட்சை அணைப்பதோடு ப்ளக்கையும் உருவிப் போடுவது நல்லது. சுவிட்ச் போட்டு விளையாடுவது குழந்தைகளுக்கு ரொம்பப் பிடிக்கும்.

* மொபைல், எலெக்ட்ரிக் ரேசர் போன்ற பொருட்களை குழந்தைகள் தண்ணீருக்குள் தூக்கிப் போட்டு விடலாம் அல்லது பிரித்து மேய்ந்து விடலாம் எனவே அதை விளையாடக் கொடுக்காதீர்கள்.

* இஸ்திரி செய்து விட்டு இஸ்திரி பெட்டியை சூடாக குழந்தைகள் அருகே விட்டு செல்லக் கூடாது.

* சுமார் ஒரு வயது வரை தரைமட்டத்தில் உள்ள பொருள்களைக் கையாளும் குழந்தை அதற்குப் பிறகு எதையாவது பிடித்துக் கொண்டு நிற்கவேண்டும், நடக்க வேண்டும் என முயற்சிக்கிறது. ஸ்டூலைப் பிடித்துக் * கொண்டு நிற்பது, டைனிங் டேபிளில் உள்ள துணியை இழுப்பது போன்ற முயற்சிகளையெல்லாம் செய்யும் காலகட்டம் இது என்பதால் அதிக விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.

* சுமார் இரண்டு வயதில் ஸ்டூலின்மீது ஏறுவது மட்டுமல்ல. பிற சாகசங்களையும் செய்து பார்க்க முயற்சிக்கிறது. மேஜை டிராயரை இழுக்க முயற்சிக்கிறது. நம்மைப் போலவே காஸ் லைட்டரை அழுத்திப் பார்க்க * ஆசைப்படுகிறது. சிகரெட் லைட்டர், காஸ் லைட்டர் ஆகியவற்றை குழந்தைகளுக்கு எட்டாத இடங்களில் வைத்திருப்பது மிக அவசியம்.

* ஏணிப்படிகளில் ஏற குழந்தைகள் முயற்சிக்கும். சிறு குழந்தைகள் அவ்வாறு ஏறாமல் இருக்க மரத்தில் சின்ன தடுப்புக் கதவு ஒன்று போட்டு பூட்டி வைக்கலாம்.

* சென்ட், ஷேவிங் லோஷன் போன்றவற்றை அப்பா ஸ்ப்ரே செய்து கொள்வதைப் பார்க்கும் குழந்தைக்குதானே அவற்றை முயற்சித்துப் பார்க்கும் ஆர்வம் பொங்கும். முக்கியமாக, ஷேவிங் ப்ளேடுகள் மற்றும் ரேஸர்களை மறந்தும்கூட குழந்தைக்கு எட்டும் இடத்தில் வைத்து விடவேண்டாம்.

* வாயில் போட்டு விழுங்கும் அபாயமுள்ள விளையாட்டுப் பொருட்களை சிறு குழந்தைகளுக்குக் கொடுக்காதீர்கள்.

* கீழே விழுந்த அல்லது கீழே கிடக்கும் எதையும் வாயில் போடக்கூடாது என அறிவுறுத்துங்கள்.

* தரையில் குழந்தைகள் சிறு நீர் கழித்தால் உடனே அந்த ஈரத்தை துடைத்து விடவும். குழந்தை அதில் வழுக்கி விழ நேரும்

* சூடான எந்தப் பொருளையும் டைனிங் டேபிளின் முனைக்கருகே வைக்க வேண்டாம். அந்த மேஜைமீது விரிக்கப்படும் துணி, மேஜையின் எல்லையைத் தாண்டிக் கீழே தொங்கவேண்டாம்.

* ஜன்னல்கள், பால்கனிகள் போன்றவற்றின் வழியாகக் குழந்தை கீழே விழுந்துவிடும் வாய்ப்பு உண்டு. போதிய தடுப்புக் கம்பிகளை உடனடியாகப் பொருத்துங்கள்.

* கதவை மூடும்போது குழந்தை கையை நசுக்கிக் கொள்வது வெகு சகஜம். கவனம் தேவை.

* எங்கேயாவது மோட்டார் சயிக்கிளில் போய் விட்டு வீட்டிற்கு வரும்போது மோட்டார் சயிக்கிளில் சைலென்ஸர் சூடாக இருக்கும் . குழந்தைகள் அப்பா என்று ஓடி வந்து சைலன்ஸரில் பட்டுவிடலாம்.

* வீட்டில் மோட்டார் சயிக்கிளில் போன்ற வாகனங்களில் குழந்தைகள் ஏற முயற்சித்து விழுந்து ஆபத்து உண்டாக்கலாம். சைக்கிளில் செயின் கார்டு தேவை.மோட்டார் சயிக்கிளில் மூடி வைக்கலாம்.

* கார், வான் வைத்திருப்போர் வாகனத்தை பின்னுக்கு அல்லது முன்னுக்கு எடுக்கும் போது அவதானமக இருங்கள். குழந்தைகள் உங்க்களுக்கு பின்னால் வந்து நிற்கலாம். நீங்களே உங்கள் பிள்ளையை உங்கள் வாகனத்தால் நசிக்கவும் ஏற்படும்.

* குழந்தைகளை ஒருபோதும் அதிகமான வெப்பத்துக்கு உட்படுத்த வேண்டாம். நீண்டதூரம் குழந்தையை அழைத்துச் செல்ல வேண்டுமென்றால் இருசக்கர வாகனங்களில் செல்வது சரியல்ல.

* குழந்தைகளை ஷாப்பிங் போகும் போது கொண்டு செல்லதீர்கள்.

* தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் குழந்தைகள் நெருப்புக் காயம் படாமல் கண்காணிப்பாக இருங்கள்.

* வீட்டில் அனாவசியமாக குப்பை போல் தேவையற்றப் பொருட்களை கொட்டி வைப்பது நல்லதல்ல. ஊர்வன மற்றும் விஷ ஜந்துக்கள் அதில் மறைந்திருக்கலாம்.

* குழந்தைகள் மண்ணில் விளையாடுவதை அனுமதிக்காதீர்கள்.

* துரு பிடித்த மற்றும் கிருமித் தொற்று ஏற்படுத்தும் பொருட்களை அப்புறப்படுத்தவும். டெட்டானஸ் போன்ற கொடிய கிருமிகள் அவற்றில் காணப்படலாம். அப்படிப் பட்ட பொருட்களால் காயம் பட்டால் உடனே தடுப்பூசி போடவும்.

* தரையை அடிக்கடி டெட்டால் போன்ற கிருமி நாசினிகளைக் கொண்டு சுத்தமாக வைத்திருக்கவும்.

* குழந்தைகளது விளையாட்டுப் பொருட்களையும் அடிக்கடி கழுவி சுத்தமாக்கிக் கொடுக்கவும்.

* குழந்தகளுக்கு உடைகள்,ஷூ போடும்போது நன்றாக உதறிய பின் போடவும்.

* நாய் பூனை போன்ற செல்லப் பிராணிகளை குழந்தைகள் உள்ள வீட்டில் வளர்க்கதீர்கள்.அதன் உமிழ் நீர்,நகம்,முடி ஆகியவற்றில் நோயுண்டாக்கும் ஏராளம் கிருமிகள் உள்ளன.

* வீடுகளில் தரைப்பகுதி அதிக ஏற்றத் தாழ்வுகள் இல்லாது சமமாக அமைக்க வேண்டும்.

* குழந்தைகளுக்கு நல்ல ஆடையிட்டு அழகு பாருங்கள். தங்க நகைகள் வேண்டாம். திருடர்களை ஈர்க்கும்.

* விருந்தினர் வீடுகளுக்குக் செல்லும்போது கவனம் தேவை. அங்கு பழக்கமில்லாத இடங்களில் புதிய ஆபத்துகள் காத்திருக்கலாம்.

* நெருங்க்கிய உறவுகளில் திருமணம் செய்து கொள்வதால் பிறக்கும் குழந்தைகள் குறையுடன் பிறக்கும் வாய்ப்புகள் அதிகம்.

* கர்ப்பிணிகள் மருத்துவர் ஆலோசனையின்றி கண்ட கண்ட மாத்திரைகள் சாப்பிடுவது கருவில் இருக்கும் குழந்தைக்கு நிச்சயம் பாதிப்பு உண்டாக்கும்.

* சிகரெட், போதைப் பொருட்கள் தாய் உபயோகிப்பது கருவில் உள்ள குழந்தையைப் பாதிக்கும்.

* தாய் உண்ணும் உணவில் போதிய சத்துக் குறைவு, தாய்க்கு ஏற்படும் மன அழுத்தம் வயிற்றிலிருக்கும் குழந்தையை பாதிக்கும்.

* குழந்தகளின் பால் புட்டிகளை நிப்பிள்களை கொதிக்கும் நீரில் போட்டு கிருமி நீக்கம் செய்து பால் நிரப்பிக் கொடுக்கவும். வாரம் ஒரு முறை நிப்பிளை மாற்றவும்

* மீதம் வைத்த பாலை சிறிது நேரம் கழித்துக் கொடுக்கக் கூடாது. ஊற்றி விடவும்.

* குழந்தைகளை தலைக்கு மேல் தூக்கிப் போட்டு விளையாட்டுக் காட்டக் கூடாது.

நன்றி பணிப்புலம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

குழந்தைகளுக்கு ஏற்படக் கூடிய ஆபத்துக்களை தவிர்ப்பது எப்படி? - சில பயனுள்ள அறிவுரைகள் Empty Re: குழந்தைகளுக்கு ஏற்படக் கூடிய ஆபத்துக்களை தவிர்ப்பது எப்படி? - சில பயனுள்ள அறிவுரைகள்

Post by அருண் Sun Oct 28, 2012 8:43 pm

மிகவும் பயனுள்ள கட்டுரை அண்ணா..! மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

குழந்தைகளுக்கு ஏற்படக் கூடிய ஆபத்துக்களை தவிர்ப்பது எப்படி? - சில பயனுள்ள அறிவுரைகள் Empty Re: குழந்தைகளுக்கு ஏற்படக் கூடிய ஆபத்துக்களை தவிர்ப்பது எப்படி? - சில பயனுள்ள அறிவுரைகள்

Post by sureshyeskay Sun Oct 28, 2012 8:45 pm

அன்பர் றினா கவனிக்கவும்
sureshyeskay
sureshyeskay
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 19/10/2012

Back to top Go down

குழந்தைகளுக்கு ஏற்படக் கூடிய ஆபத்துக்களை தவிர்ப்பது எப்படி? - சில பயனுள்ள அறிவுரைகள் Empty Re: குழந்தைகளுக்கு ஏற்படக் கூடிய ஆபத்துக்களை தவிர்ப்பது எப்படி? - சில பயனுள்ள அறிவுரைகள்

Post by பூவன் Sun Oct 28, 2012 9:01 pm

நல்ல பதிவு அண்ணா , உங்களை போல் உள்ளவருக்கு அத்தியாவசியமான பதிவு ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குழந்தைகளுக்கு ஏற்படக் கூடிய ஆபத்துக்களை தவிர்ப்பது எப்படி? - சில பயனுள்ள அறிவுரைகள் Empty Re: குழந்தைகளுக்கு ஏற்படக் கூடிய ஆபத்துக்களை தவிர்ப்பது எப்படி? - சில பயனுள்ள அறிவுரைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum