ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொலைக்காட்சி

5 posters

Go down

தொலைக்காட்சி Empty தொலைக்காட்சி

Post by ramkumark5 Mon Oct 22, 2012 9:37 pm

தொலைக்காட்சி

ன்று ஆகாஷும், ஆர்த்தியும் மிக மகிழ்ச்சியுடனும் ஒரு விதமான படபடப்புடனும் இருந்தனர். வீட்டிற்கு முதல் முறையாக தொலைக்காட்சி பெட்டி வர போகிறது என்பதால் தான் இந்த மகிழ்ச்சியும், படபடப்பும். அது வரை ஊர் பஞ்சாயத்து அலுவலகத்திற்கான கட்டிடத்தில் பொருத்தப்பட்ட தொலைக்காட்சியை மட்டுமே பார்த்திருந்த ஆர்த்திக்கும், ஆகாஷுக்கும் இது பெரிய விஷயம் தானே.

தொலைக்காட்சி வீட்டிற்கு வந்தது வெள்ளிக்கிழமை என்பதால் அன்று எப்படியாவது வீட்டிலேயே ஒளியும் ஒலியும் பார்த்து விடலாம் என்று நம்பி இருந்தனர் ஆகாஷும், ஆர்த்தியும். அவர்களின் அப்பா ஆதிகேசவன் தொலைக்காட்சி இருந்த பெட்டியையும்,தெர்மோகோலையும் அகற்ற ஒரு அதிசயத்தை பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தனர்.


தொலைக்காட்சி 4140925952_8277c54be0_z


தன் பிள்ளைகளிடம் மாடியில் உணர்க்கொம்புகள்(ஆன்டெனா) மாட்ட ஆள் கூட்டி வருகிறேன் என்று கூறி விட்டு ஆதிகேசவன் கிளம்பினான். ஊரிலேயே உணர்க்கொம்புகள் மாட்ட தெரிந்தவன் என்றால் அது பஞ்சாயத்து அலுவலகத்தில் எடுபிடி வேலை பார்க்கும் செல்வேந்திரன் மட்டுமே.

எவ்வளவு தேடியும் செல்வேந்திரன் கிடைக்கவில்லை என்பதால் அவன் வீட்டிற்கே சென்றான் ஆதி. வீட்டில் விசாரித்த போது தான் தெரிந்தது செல்வேந்திரன் பஞ்சாயத்து தலைவருடன் அலுவல் விடயமாக மதுரை சென்றிருக்கிறான் என்பது. அப்போது பொழுதும் இறங்கி இருந்தது. இதற்கு மேல் பக்கத்து ஊருக்கு சென்று ஆள் கூட்டி வருவது என்றால் கூட சிரமம் என்பதால் ஏமாற்றத்துடன் வீட்டிற்கு திரும்பினான்.

வீட்டில் வந்து நடந்ததை சொல்ல ஆகாஷும், ஆர்த்தியும் சோகத்தில் ஆழ்ந்தனர். இருவரையும் அன்றிரவு பஞ்சாயத்து அலுவலகத்திற்கு அழைத்து சென்று அங்கிருக்கும் தொலைக்காட்சியில் ஒளியும் ஒலியும் பார்க்கும்படி செய்தான். மீண்டும் வீட்டிற்கு திரும்பியிருந்த ஆகாஷுக்கும், ஆர்த்திக்கும் அவர்கள் அம்மா அகிலா கோழி அடித்து குழம்பு வைத்திருந்தாள்.

சாப்பாடு போட்டு தட்டில் வைக்கப்பட்ட பின்னரும் ஆகாஷும், ஆர்த்தியும் தொலைக்காட்சியையே பார்த்துக் கொண்டிருந்தனர். பிறகு ஆதி வந்து இருவரையும் சமாதானப்படுத்த, ஏதோ அரை குறையாக சாப்பிட்டு விட்டு தொலைக்காட்சி திரைக்கு அருகில் சென்று இருவரும் படுத்து கொண்டனர்.

மறுநாள் காலை பொழுது விடிந்ததும் செல்வேந்திரனை அழைத்து வந்து உணர்கொம்புகளை மாட்ட செய்தான் ஆதி. உணர்க்கொம்புகளை செல்வேந்திரன் லேஸ் லேசாக திருப்ப திரையில் படம் தெரிய ஆரம்பித்தது. திரையில் ஷோபனா ரவி செய்திகள் வாசித்து கொண்டிருக்க, அவர் சொல்லும் விஷயம் என்னவென்று புரியாவிட்டாலும் ஆகாஷும், ஆர்த்தியும் இரு கண் மாறாமல் அந்த நிகழ்ச்சியையே பார்த்துக் கொண்டிருந்தனர். பள்ளிக்கு செல்வதற்கான நேரமாகியும் இருவரும் கிளம்புவதாய் இல்லை. அந்த மகிழ்ச்சி வெள்ளத்தில் இருவரும் அன்று பள்ளிக்கு விடுப்பே எடுத்து விட்டனர்.

பின்னர் அந்த தொலைக்காட்சி அவர்கள் வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறி இருந்தது. பத்து வருடங்களாய் தொலைக்காட்சியை ஒரு பொக்கிஷமாகவே பார்த்துக் கொண்டனர் ஆர்த்தியும், ஆகாஷும். ஒரு சமயத்தில் தொலைக்காட்சி சரியாக வேலை செய்யாமல் போக தொலைக்காட்சியை லேசாக மேலே இருந்து தட்டினாலே (அடித்தாலே) வேலை செய்ய ஆரம்பித்தது. நாட்கள் செல்ல செல்ல தட்டலின் பலத்தை அதிகப் படுத்த வேண்டியிருந்தது. ஒரு சமயத்தில் எப்படி தட்டினாலும் வேலை செய்யாமலே போக அந்த தொலைக்காட்சியை தூக்கி எறிய வேண்டிய கட்டாயம் வந்தது.

இருந்தாலும் ஆகாஷுக்கு தூக்கிப்போட மனமில்லை என்பதால் அதை வீட்டு பரணின் மீது தூக்கி வைத்தனர். இப்போது நவீன அமைப்புகள் நிறைந்த புதிய வண்ண தொலைக்காட்சி வீட்டிற்கு வந்தாலும் எத்தனை துல்லியமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பட்டாலும் ஆகாஷுக்கு அந்த கருப்பு வெள்ளை தொலைக்காட்சியை பார்த்த திருப்தி ஏற்படவில்லை. இப்போதும் கூட சில நேரங்களில் எதையோ நினைத்தவனாய் புதிய தொலைக்காட்சியின் மேல் கைகளால் தட்டி (அடித்து) விடுவான்.


உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களையும் கருத்துக்களையும் அனைவரும் எழுதி பழகுங்கள். அது உங்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தையும் புத்துணர்வையும் அளிக்கும். அப்படி ஒரு மாற்றத்தையும், புத்துணர்வையும் தேடியே நான் எழுதுகிறேன். என் எழுத்துக்கள் என்னுள் புத்துணர்வை ஏற்படுத்துகிறது. என் எழுத்துக்களை படிக்கும் உங்களுக்கும் அதே புத்துணர்வு ஏற்படுத்தும் என்றே நம்புகின்றேன்.

என்றும் அன்போடு
ஆர்.கே
ramkumark5
ramkumark5
பண்பாளர்


பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Back to top Go down

தொலைக்காட்சி Empty Re: தொலைக்காட்சி

Post by கரூர் கவியன்பன் Mon Oct 22, 2012 9:45 pm

இதுபோன்ற அனுபவம் எங்கள் வீட்டினிலும் நடந்தேறி இருக்கிறது ராம்குமார். மீண்டும் பழைய நினைவுகள் வந்து சென்றன
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

தொலைக்காட்சி Empty Re: தொலைக்காட்சி

Post by அசுரன் Mon Oct 22, 2012 10:33 pm

அந்த கால நினைவுகள் மீண்டும் நினைத்து பார்க்க வைத்த அருமையான சிறுகதை.. நண்பரே சிறுகதைகளை எழுதுவதில் நீங்கள் சிறந்தவராக விளங்குகிறீர்கள். உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தொலைக்காட்சி Empty தொலைக்காட்சி

Post by ரா.ரா3275 Mon Oct 22, 2012 10:45 pm

///உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களையும் கருத்துக்களையும் அனைவரும் எழுதி பழகுங்கள். அது உங்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தையும் புத்துணர்வையும் அளிக்கும். அப்படி ஒரு மாற்றத்தையும், புத்துணர்வையும் தேடியே நான் எழுதுகிறேன். என் எழுத்துக்கள் என்னுள் புத்துணர்வை ஏற்படுத்துகிறது. என் எழுத்துக்களை படிக்கும் உங்களுக்கும் அதே புத்துணர்வு ஏற்படுத்தும் என்றே நம்புகின்றேன்.

என்றும் அன்போடு
ஆர்.கே.///

அடடா...அற்புதம் ராம்குமார்...இப்படி ஒரு எண்ண வெளிப்பாட்டை எந்தப் பதிவரும்
எழுத்தில் இப்படி சொன்னதாய் நான் பார்த்ததாக நினைவில்லை...மிக அருமையான ஒரு வெளிப்பாடு...

இதை அப்படியே உங்கள் எழுத்தும் அடைகாக்கிறது...ஆகச் சிறந்த எழுத்தும் படைப்புகளும் உங்களிடமிருந்து தொடர்ந்து வெளிவரட்டும்...வெல்லட்டும்...வாழ்த்துகள்...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

தொலைக்காட்சி Empty Re: தொலைக்காட்சி

Post by ramkumark5 Mon Oct 22, 2012 11:06 pm

அசுரன் wrote:அந்த கால நினைவுகள் மீண்டும் நினைத்து பார்க்க வைத்த அருமையான சிறுகதை.. நண்பரே சிறுகதைகளை எழுதுவதில் நீங்கள் சிறந்தவராக விளங்குகிறீர்கள். உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

மிக்க நன்றி.
ramkumark5
ramkumark5
பண்பாளர்


பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Back to top Go down

தொலைக்காட்சி Empty Re: தொலைக்காட்சி

Post by ramkumark5 Mon Oct 22, 2012 11:11 pm

ரா.ரா3275 wrote:
அடடா...அற்புதம் ராம்குமார்...இப்படி ஒரு எண்ண வெளிப்பாட்டை எந்தப் பதிவரும்
எழுத்தில் இப்படி சொன்னதாய் நான் பார்த்ததாக நினைவில்லை...மிக அருமையான ஒரு வெளிப்பாடு...

இதை அப்படியே உங்கள் எழுத்தும் அடைகாக்கிறது...ஆகச் சிறந்த எழுத்தும் படைப்புகளும் உங்களிடமிருந்து தொடர்ந்து வெளிவரட்டும்...வெல்லட்டும்...வாழ்த்துகள்...


நன்றி ரா.ரா.
இன்னும் பல நல்ல படைப்புகளை தர இது ஒரு நல்ல ஊக்கம்.
வெல்லட்டும் தமிழ்.
ramkumark5
ramkumark5
பண்பாளர்


பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Back to top Go down

தொலைக்காட்சி Empty Re: தொலைக்காட்சி

Post by ரா.ரா3275 Mon Oct 22, 2012 11:18 pm

ramkumark5 wrote:
ரா.ரா3275 wrote:
அடடா...அற்புதம் ராம்குமார்...இப்படி ஒரு எண்ண வெளிப்பாட்டை எந்தப் பதிவரும்
எழுத்தில் இப்படி சொன்னதாய் நான் பார்த்ததாக நினைவில்லை...மிக அருமையான ஒரு வெளிப்பாடு...

இதை அப்படியே உங்கள் எழுத்தும் அடைகாக்கிறது...ஆகச் சிறந்த எழுத்தும் படைப்புகளும் உங்களிடமிருந்து தொடர்ந்து வெளிவரட்டும்...வெல்லட்டும்...வாழ்த்துகள்...


நன்றி ரா.ரா.
இன்னும் பல நல்ல படைப்புகளை தர இது ஒரு நல்ல ஊக்கம்.
வெல்லட்டும் தமிழ்.

ஊக்கம் தர நம் தளமும் உறவுகளும் இருக்கிறது...அப்புறம் திறமை எப்போதும் புதைக்கப்பட்டாலும் முளைத்தே தீரும்...
"வீரியமுள்ள விதை பாறையிலும் முளைக்கும்"...தொடர்ந்து படியுங்கள்...படையுங்கள்...வெற்றி வெகு தூரமில்லை...


தொலைக்காட்சி 224747944

தொலைக்காட்சி Rதொலைக்காட்சி Aதொலைக்காட்சி Emptyதொலைக்காட்சி Rதொலைக்காட்சி A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

தொலைக்காட்சி Empty Re: தொலைக்காட்சி

Post by அருண் Tue Oct 23, 2012 12:38 am

மிக அருமை ராம் குமார்;
உணர்வு பூர்வமான கதை ..! மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

தொலைக்காட்சி Empty Re: தொலைக்காட்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum