ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவ்வை பாட்டியின் 'கல்விஒழுக்கம்' நூல் !

5 posters

Go down

அவ்வை பாட்டியின் 'கல்விஒழுக்கம்' நூல் ! Empty அவ்வை பாட்டியின் 'கல்விஒழுக்கம்' நூல் !

Post by சாமி Sun Oct 21, 2012 1:31 pm

கல்விக்கு அடிப்படை ஒழுக்கம். பளபளப்பிலும், படாடோபத்திலும் கிடைப்பதல்ல கல்வியொழுக்கம். அது எப்படி இருக்க வேண்டும் என்பதை அதே தலைப்பிலே அருளி இருக்கிறார் ஒளவை மூதாட்டி. ஒளவையின் தமிழ் நூல்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டதாகும். ஆனால், ஏழெட்டு நூல்களே இப்போது முழுமையாக இருப்பவை.

ஒளவையின் இந்தக் "கல்வியொழுக்கம்' நூலானது நூறாண்டு காலம் காணாமல் போய், "சிலம்புச் செல்வர்' ம.பொ.சி.யால் தேடிப் பதிப்பிக்கப் பெற்றதாகும்.

"கல்வியொழுக்கம் வரிவரியாக அகர வரிசைப்படி பாடப்பட்டதாகும். இலண்டன் பிரதியில் மொத்தம் 86 வரிகள் உள்ளன. "அஞ்சு வயதில் ஆதியை யோது'' என்பதை முதல் வரியாகக் கொண்டு நூல் தொடங்குகிறது. இலண்டன் மியூசியத்திலிருந்து எனக்குக் கிடைத்த பிரதி முழுமையானதில்லை. 85-வது வாக்கியம் வரை மூலமும், தமிழ் உரையும், ஆங்கில மொழிபெயர்ப்பும் முழுமையாக உள்ளன. 86-வது வாக்கியத்திற்குத் தமிழ் உரையோ, ஆங்கில மொழிபெயர்ப்போ இல்லை. "வெளவிப் படிக்க வாழ் வுண்டாமே!'' என்ற மூலம் மட்டுமே இருக்கின்றது. கிடைத்த பிரதியின் அமைப்பைப் பார்க்குமிடத்து,

86-க்கு மேலும் வாக்கியங்கள் இருக்க வேண்டுமென்று நினைக்கத் தோன்றுகிறது. பதிப்பாசிரியர் கே.எஸ். அவர்கள் ஆங்கிலத்தில் எழுதியுள்ள முன்னுரையில் 94-வது வாக்கியம் பற்றி விமர்சிக்கப்படுகிறது. இதனாலும், 94-க்கு மேற்பட்ட வாக்கியங்கள் கொண்டதாக நூல் அமைந்திருக்க வேண்டுமென்று தெரிகிறது'' எனக் கல்வியொழுக்கம் நூலின் முன்னுரையில் "சிலம்புச் செல்வர்' ம.பொ.சி. குறிப்பிட்டுள்ளார்.

உலகில் கல்வியும், கல்வியோடு சேர்ந்த ஒழுக்கமும் காலமெல்லாம் நிலைக்கட்டும்!

1. அஞ்சு வயதில் ஆதியை ஓது
2. ஆதியை ஓத அறிவுண்டாமே
3. இனியது கொடுத்தே எழுத்தை அறி
4. ஈட்டிய நற்பொருள் எழுத்தே ஆகும்
5. உடைமை என்பது கல்வி உடைமை

6. ஊமை என்பவர் ஓதாதவரே
7. எழுதப் படுவது எழுத்தே ஆகும்
8. ஏழை என்பவர் எழுத்தறியாதவர்
9. ஐயம் ஏற்கினும் அறிவது எழுத்தே
10. ஒரு பொழுதாகிலும் ஓதி நன்கு அறி

11. ஓதல் உடைமை வேதவித்தை
12. ஒüவியம் இல்லாதவர் ஆமெழுத்து அறிந்தவர்
13. கண் உடையவர்கள் கற்றவர் தாமே
14. காவலன் எனினும் கணக்கை ஓர்ந்து அறி
15. கிடையாவுடமை கல்வியுடைமை

16. கீர்த்தியும் பெருமையும் கிடைப்பது கல்வி
17. குறைவறக் கற்றவன் கோடியில் ஒருவன்
18. கூர்மை என்பது குன்றாக் கல்வி
19. கெடுப்பினும் கல்வி கேடுபடாது
20. கேள்வியுடைமை தாழ்விலாச் செல்வம்

21. கைப்பொருள் என்பது கசடறு கல்வி
22. கொற்றவன் தன்னிலும் கற்றவன் உயர்ந்தவன்
23. கோதறு கல்வி குவலயந் தருமே
24. சகல கலைக்கும் தலைமை எழுத்தே
25. சாத்திரங் கற்றவன் தன்னையறிந்தவன்

26. சிறுமையில் கல்வி சிலையில் எழுத்தே
27. சீரிய தமிழைத் தெளிய ஓது
28. சுற்றம் என்பது துகளது கல்வி
29. சூட்சமும் தூலமும் தோன்றும் கல்வி
30. சென்ற இடமெல்லாம் சிறப்பே கல்வி

31. சேயன் என்பவன் தீங்கறக் கற்றவன்
32. சைகையும் சமர்த்தும் தந்திடும் கல்வி
33. சொல்லும் பொருளும் தோன்றக் கற்றறி
34. சோம்பர் என்பவர் சொல் எழுத்தறியார்
35. தகும் எழுத்தை அறிந்தவன் தலைவனாவான்

36. தான் கற்றவற்றைச் சபையினில் ஓது
37. திருந்த ஓதிடில் திருவுண்டாமே
38. தீரக் கற்றவன் தேசிகனாவான்
39. துறவோர் என்பவர் துரிசறக் கற்றவர்
40. தூர்த்தர் என்பவர் சொல் எழுத்து அறியார்

41. தெளிய ஓதத் திறமுண்டாமே
42. தேசமும் நாடும் திருந்த ஓது
43. தைக்கக் கற்றவன் சமர்த்தனாவான்
44. தொன்னூல் முழுவதும் தோன்றக் கற்றறி
45. தோழன் ஆவது தோர்விலாக் கல்வி

46. நற்பொருள் கொடுத்து நன்றாய் ஓது
47. நானிலம் முழுவதும் நயந்தருங் கல்வி
48. நில்லாது எதுவும், நிலையே கல்வி
49. நீச்சு அரிதாயினும் கற்பது நிலைமை
50. நுண்பொருள் கொடுத்து நூல் பல அறி

51. நூறாண்டாயினும் கல்வியை நோக்கு
52. நெடுங்கடல் ஓடினும் நிலையே கல்வி
53. நேராக் கல்வி நிலையாகாதே
54. நையக் கற்பினும் நொய்ய நன்குரை
55. நொந்து அறியாதவர் செந்தமிழ் கற்றோர்

56. நோகாது உண்பவர் நும்பொருள் அறிந்தோர்
57. பலகலை கற்றவ(னி)ன் பகையைக் கைவிடு
58. பாவலர் என்பவர் பழுதறக் கற்றோர்
59. பிழையறக் கற்பவர் பெரியவராமே
60. பூடும் செல்வமும் பெறத் தரும் கல்வி

61. புரையறக் கற்றவன் புவி ஆள்பவனே
62. பூமியில் செல்வம் புகழ் பெருங்கல்வி
63. பெருமை பெறுவது பேசருங் கல்வி
64. பேதை என்பவர் பெருநூல் அறியார்
65. பையப் பையப் படித்தே ஒழுகு

66. பொருள் மிகக்கொடுத்துப் போதக் கற்றறி
67. போதக் கற்றவன் புண்ணியஞ் செய்தவன்
68. மன்னராயினும் மறைகளை ஓது
69. மாசறக் கற்றோர் மாநிலம் ஆள்வர்
70. மிகப் பெருஞ்செல்வம் விளைத்திடும் கல்வி

71. மீசுரம் கொடுத்து வித்தையை விரும்பு
72. முத்தமிழ் தமக்கு மூப்பு இல்லை
73. மூதறிவை உயர்த்தும் தீதில்லாக் கல்வி
74. மெலியர் ஆயினும் வேண்டுவது எழுத்தே
75. மேலோரென்ன வித்தையைக் கற்றறி

76. மையறு கல்வி கைவிடாது ஓது
77. மொழிவது அகார முதல் எழுத்தாமே
78. மோக விகாரர் முன்னூல் பாரார்
79. வழக்கறிவுறுத்தும் மாசறு கல்வி
80. வாட்டம் தராது மறவாக் கல்வி

81. வித்தை கல்லாதவர் வெறியராவார்
82. வீரியம் பேசார் வித்தை அறிந்தோர்
83. வெண்பா முதலாக விளங்கவே ஓது
84. வேதம் முதலாய் விரைந்து அறிந்தது ஓது
85. வையகமெல்லாம் வாழ்ந்தவே ஓது


("சுடர்மணிக் கவிஞர்' வேம்பத்தூர் கிருஷ்ணன் பதிப்பித்த "கல்வியொழுக்கம்' நூலிலிருந்து...) நன்றி - தினமணி
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

அவ்வை பாட்டியின் 'கல்விஒழுக்கம்' நூல் ! Empty Re: அவ்வை பாட்டியின் 'கல்விஒழுக்கம்' நூல் !

Post by அசுரன் Sun Oct 21, 2012 2:04 pm

வித்தை கல்லாதவர் வெறியர் ஆவார்... அருமையான அவ்வையின் மொழிகள்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அவ்வை பாட்டியின் 'கல்விஒழுக்கம்' நூல் ! Empty Re: அவ்வை பாட்டியின் 'கல்விஒழுக்கம்' நூல் !

Post by சதாசிவம் Sun Oct 21, 2012 5:30 pm

அரிய தகவல் அறியச் செய்தமைக்கு நன்றி சாமி.

இன்றைய மக்கள் அறிய வேண்டியது தமிழ் கூறும் நன்னூல்களைத் தான்,,,,பகிர்விக்கு மிக்க நன்றி
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

அவ்வை பாட்டியின் 'கல்விஒழுக்கம்' நூல் ! Empty Re: அவ்வை பாட்டியின் 'கல்விஒழுக்கம்' நூல் !

Post by கரூர் கவியன்பன் Sun Oct 21, 2012 5:35 pm

தங்களின் அரிய செயலுக்கு மிக்க நன்றியும் பாராட்டுகளும். நீங்கள் கொடுத்திருக்கிற பாடலை பார்க்கும் போது இது வெறும்85 க்கு மேலேயே அல்லது 95 மேலேயே இருக்கும் என்ற எண்ணம் தோன்றவில்லை எனக்கு .மாறாக இதன் அகர வரிசை அமைந்திருப்பதை பார்க்கும் போது தமிழ் மொழியில் உள்ள அனைத்து எழுத்துகளுக்கும் நிச்சயமாக பாடல் வரிகள் அமையப்பெற்றிருக்க வேண்டும் என்பது மட்டும் உறுதி


[You must be registered and logged in to see this link.]


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

அவ்வை பாட்டியின் 'கல்விஒழுக்கம்' நூல் ! Empty Re: அவ்வை பாட்டியின் 'கல்விஒழுக்கம்' நூல் !

Post by மாணிக்கம் நடேசன் Mon Oct 22, 2012 6:15 am

அழகான ஒளவைமொழியை

அருமையாக பகிர்ந்திட்ட சாமிக்கு

அன்பான நன்றி.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

அவ்வை பாட்டியின் 'கல்விஒழுக்கம்' நூல் ! Empty Re: அவ்வை பாட்டியின் 'கல்விஒழுக்கம்' நூல் !

Post by சாமி Mon Nov 05, 2012 3:18 pm

பதிப்புகள்
கல்வியொழுக்கம் தமிழில் முதன்முறையாக யாழ்ப்பாணம் கரவெட்டி கிழக்சைச் சேர்ந்த க.பொன்னம்பலம் என்பவரால் 1926}ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. சுவடி கிடைத்த விபரம் எதுவும் கூறப்படவில்லை. மீண்டும் முதல் பதிப்பை வெளியிட்ட க.பொன்னம்பலத்தின் தம்பி மருத்துவர் க.குழந்தைவேலு யாழ்ப்பாணம் சுன்னாகம் திருமகள் அச்சகத்தில் 1968-ஆம் ஆண்டு வெளியிட்டார்.

÷பெரும் புலவர் வே.ரா.தெய்வசிகாமணிக் கவுண்டர் 1953-ஆம் ஆண்டு ஈரோடு செங்குந்தர் உயர்நிலைப் பள்ளி ஆண்டு மலரில் கல்வியொழுக்கத்தை வெளியிட்டு, பின் அதைத் தனி நூலாகவும் வெளியிட்டார்.

÷1966-ஆம் ஆண்டு தாம் எழுதிய "அவ்வையார்' என்னும் நூலில் கல்வியொழுக்கம் பற்றிக் குறிப்பிட்ட "சிலம்புச் செல்வர்' ம.பொ.சி., பின் கல்வி ஒழுக்கத்தைத் தனி நூலாகவும் வெளியிட்டார்.

÷1995-ஆம் ஆண்டு "அருட்செல்வர்' டாக்டர் நா.மகாலிங்கம் அவர்களின் நாண்மங்கல நாளில் திருவிடை

மருதூரில் கல்வியொழுக்கம் நூல் என்னால் வெளியிடப்பட்டது.

÷தாயம்மாள் அறவாணன் எழுதிய "அவ்வையார்' நூலில் கல்வியொழுக்கம் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலின் சிறப்பறிந்த மேனாட்டவர்கள் ஆங்கிலத்திலும், ஜெர்மானிய மொழியிலும் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளார்கள். ஜெர்மானிய மொழியில் வெளியிட்டவர் வான் ரூதீன் என்பவர்.

÷"உரைவேந்தர்' அவ்வை துரைசாமிப்பிள்ளை, "அவ்வையார் கல்வியொழுக்கம்' என்றொரு நூல் செய்திருப்பதாகக் கேள்வி; அன்றி அதனைக் கண்டதில்லை. அதனை மேல் நாட்டறிஞர்கள் மொழி பெயர்த்திருப்பதாகவும் அறிய முடிகிறது.

ஓலைச் சுவடிகள்
தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழக ஓலைச்சுவடித் துறையில் எட்டு கல்வியொழுக்கம் ஓலைச்சுவடிகள் உள்ளன. ஈரோடு கலைமகள் கல்வி நிலைய அருங்காட்சியகத்தில் இரண்டு கல்வியொழுக்கம் ஓலைச்சுவடிகள் உள்ளன. ஈரோடு அரசு அருங்காட்சியகத்திலும், பேரூர் சாந்தலிங்கர் திருமடத்திலும் பல கல்வியொழுக்கம் ஓலைச் சுவடிகள் உள்ளன. சில ஏடுகள் தனியார் வசமும் உள்ளன.

கொடுமணலில் படிப்பு
மேற்கண்ட சுவடிகள் அனைத்தும் தொல்பொருள் சிறப்புமிக்க கொடுமணலில் கிடைத்தவை என்பது குறிப்பிடத்தக்கது. கொடுமணலில் கல்வி கற்ற மாணவர்கள் கல்வியொழுக்கம் நூலை ஓலைச் சுவடியில் எழுதிவைத்து ஆசிரியர் மூலமாகப் படித்திருக்கின்றனர்.

÷பல ஓலைச்சுவடிகளில் "யிது கனகசபாபதி ஏடு, "யிது பொன்னையன் ஏடு' என்று அறியவும் "யிது சுப்பிரமணியன் ஏடு', "எடுத்தவன் குடுக்கவும், குடாதொழியில் நரகத்துக்கு ஏது', "யிது றாமசாமி ஏடு எடுத்த இடத்தில் வைக்கவும்' என்று பலவாறு எழுதப்பட்டுள்ளன. எனவே, கொடுமணலில் கல்வியொழுக்கம் மாணவர்களுக்குக் கற்பிக்கப்பட்டுள்ளது.

சில புலவர்கள் மாணவர்கட்கு கல்வியொழுக்க ஏட்டுச் சுவடியை எழுதித் தந்துள்ளனர். "யிது குப்புசாமி குமாரன் தம்பணன் ஏடு எழுதியது வெள்ளோடு ரத்தினாசலப் புலவன்' என்று ஒரு சுவடியில் காணப்படுகிறது.

பாடபேதம்
பல காலங்களில் பயிலப்பட்ட கல்வியொழுக்கம் பலரால் எழுதப்பட்டதால் பல பாடபேதங்கள் ஏற்பட்டுள்ளன.

""நூறாண் டாயினும் கல்வியை நோக்கு'' என்ற தொடர், ""நூற்றுண் டாயினும் நூல்பல கல்'' என்றும், ""கைப்பொருள் என்பது கசடறு கல்வி'' என்ற தொடர், ""கைப்பொருள் தன்னிலும் மெய்ப்பொருள் கல்வி'' என்றும், ""தெளிய ஓதத் திறமுண்டாமே'' என்ற தொடர் ""தெளிய ஓதத் திருவுண் டாமே'' என்றும் சில ஏடுகளில் எழுதப்பட்டுள்ளன. வேறு சில பாடபேதங்களும் உள்ளன.

சில மாற்றங்கள்
சில தொடர்கள் முற்றிலும் மாற்றப்பட்டுள்ளன. ""பூமியில் செல்வம் புகழ்பெருங் கல்வி'' என்ற தொடருக்குப் பதிலாக ""பூலோ கத்தின் பொருளே கல்வி'' என்ற தொடர் எழுதப்பட்டுள்ளது. கொடுமணலில் கிடைத்த இரண்டு ஓலைச் சுவடிகளில்,

""அஞ்சு வயதில் ஆதியை ஓது''

""ஆதியை ஓத அறிவுண் டாமே''

என்பதற்குப் பதிலாக

""அஞ்சு வயதில் ஆரியம் ஓது''

""ஆரியம் ஓத அறிவுண் டாமே''

என்று எழுதப்பட்டுள்ளது. ஐந்து வயதில் கல்வி தொடங்குவதுதான் அக்கால வழக்கம். இராசிபுரம் முத்துக்காளிப்பட்டியில் ஓய்வு பெற்ற சார்பதிவாளர் நா.குமாரசாமி தமிழ்மணி (21.10.12-இல் வெளியான) கட்டுரை பார்த்து தன்னிடம் உள்ள கல்வியொழுக்கம் ஓலைச் சுவடியில் ""ஆதி'' என்பதற்குப் பதிலாக ""ஆரியம்'' என்று இருப்பதாகத் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தொடக்கம்
பல ஏடுகளிலும், ""அரகரா அவ்வையார் அருளிச் செச கல்வியொழுக்கம்'' என்று ஏட்டின் மையத்தில் எழுதப்பட்டுள்ளது. நூல் தொடக்கத்தில் ""கல்வி யொழுக்கம் கருத்துடன் கற்கச்; செல்வம் மிகுத்துச் சிறப்புண் டாமே'' என்றும் எழுதப்பட்டுள்ளது. இத்தகு பல சிறப்புகள் பெற்ற கல்வியொழுக்கம் என்ன காரணத்தாலோ நாட்டில் பயிலப்படாமல் குடத்தினுள் இட்ட விளக்காக அதன் சிறப்பு வெளிப்படாமல் இருக்கிறது.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

அவ்வை பாட்டியின் 'கல்விஒழுக்கம்' நூல் ! Empty Re: அவ்வை பாட்டியின் 'கல்விஒழுக்கம்' நூல் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அறிமுக நூல் - 2 திருக்குறள் ! நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» கவிதைக் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
» அவ்வை-யார் ?
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum