Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அப்படியானால் எதுதான் ஊழல்?
3 posters
Page 1 of 1
அப்படியானால் எதுதான் ஊழல்?
மத்திய அரசாங்கத்திலும், மாநில அரசாங்கங்களிலும் சரி, ஒவ்வொரு ஊழலாக வெளியே வந்துகொண்டிருக்கிறது. இது ஒருபக்கம் பொதுமக்களுக்கு கோபத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தினாலும், மறுபக்கம் எதிர்காலத்தை நினைத்து பெரிய மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இனி இந்த நாட்டில் அரசியல்வாதிகள் ஊழல் செய்துவிட்டு, எளிதில் தப்பித்துவிட முடியாது. எந்த ஊழல் என்றாலும், எப்படியும் வெளியே வந்தே தீரும். ஒன்று உடனடியாக இந்திய தலைமை கணக்கு அதிகாரி மூலம் வெளியே வந்துவிடுகிறது. அல்லது கெஜ்ரிவால் போல ஊழலுக்கு எதிரான இயக்கங்கள் பகிரங்கப்படுத்திவிடுகின்றன. நீதிமன்றங்களும் சாட்டையை எடுத்து சுழற்றிவிடுகிறது. மக்களுக்கும் விழிப்புணர்வு வந்துவிட்டது. ஒரு ஆட்சியில் உப்பைத் தின்றுவிட்டால், அடுத்த ஆட்சியில் கண்டிப்பாக தண்ணீர் குடித்துத்தான் தீரவேண்டும் என்ற நிலை நாட்டில் நடைமுறையாகிவிட்டது. அரசின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் தவறு செய்யாத உத்தமர்களாக இருந்து பயனில்லை. அவர்களுக்கு கீழே உள்ள அமைச்சர்கள், கட்சி தலைவர்கள், மாவட்டங்களில் உள்ள தலைவர்கள் வரை தங்கள் எல்லையை மீறாமல், விழிப்புடன் பார்த்துக்கொள்ள வேண்டிய அவசர அவசியம் உருவாகிவிட்டது. ஏனெனில், ஒருவருடைய தவறு வெளியே வரும்போது, அந்த அரசுக்கே, அந்த கட்சிக்கே அவப்பெயரை ஏற்படுத்திவிடுகிறது.
ஒவ்வொரு ஊழலாக, ஒவ்வொரு முறைகேடாக, வெளியே வந்து மக்களை தலைசுற்ற வைத்துள்ள இந்த நேரத்தில், ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பை நடத்தும் கெஜ்ரிவால் மத்திய சட்ட மந்திரி சல்மான் குர்ஷித்தை தலைவராகவும், அவரது மனைவி லூயிஸ் குர்ஷித்தை திட்ட இயக்குனராகவும் கொண்டு உத்தரபிரதேச மாநிலத்தில் செயல்படும் டாக்டர் ஜாகீர் உசேன் நினைவு அறக்கட்டளை மீது ஒரு பெரிய குண்டை தூக்கிப்போட்டு இருக்கிறார். மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக நடத்துகிறோம் என்று சொல்லும் இந்த அறக்கட்டளை, அவர்களின் நல உதவிகளுக்காக மத்திய அரசாங்கத்திடம் இருந்து பெற்றுள்ள ரூ.71 லட்சத்து 50 ஆயிரம் நிதி உதவியில் முறைகேடு செய்திருப்பதாக புகார் கூறியுள்ளார். உதவிகள் வழங்கியதாக கூறும் பட்டியலில் உள்ளவர்களில் பலர் அந்த இடத்திலேயே இல்லை, சிலருடைய பெயர்தான் இருக்கிறது, உதவிகள் வழங்கப்படவில்லை என்றெல்லாம் அடுக்கடுக்காக புகார்களைக் கூறியுள்ளார். சல்மான் குர்ஷித்தும், அவரது மனைவி லூயிசும் இதில் முறைகேடே நடக்கவில்லை, எந்த விசாரணைக்கும் தயார் என்று கூறியிருக்கிறார்கள். உத்தரபிரதேச மாநில காவல்துறையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு இந்த புகார் மீது விசாரணை நடத்துகிறது என்று முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் கூறியிருக்கிறார். ஆனால் இதில் கெஜ்ரிவாலுக்கு நம்பிக்கையில்லை. அகிலேஷ் யாதவின் தந்தை முலாயம்சிங் யாதவ் மீது ஊழல் குற்றச்சாட்டு வழக்கு நடந்துவருகிறது. அதை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள், இதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று அகிலேஷ் யாதவ் சொல்லக்கூடும் என்று கெஜ்ரிவால் சொல்வதும் சிந்திக்க வைக்கிறது.
எனவே, மத்திய அரசாங்கம் இதில் பாரபட்சமற்ற ஒரு விசாரணையை நடத்தவேண்டும் என்ற கோரிக்கையிலும் அர்த்தம் இருக்கிறது. இதுவரையில் சரிதான். ஆனால் இந்த விஷயத்தில் மத்திய இரும்புத்துறை மந்திரி பெனி பிரசாத் வர்மா வெளியிட்ட கருத்துகள்தான், நாடு எங்கே போய்க்கொண்டு இருக்கிறது? என்று சந்தேகப்பட வைத்துவிட்டது. ஒரு மத்திய மந்திரிக்கு ரூ.71 லட்சம் என்பது மிக சிறிய தொகை. இந்த தொகைக்கு சல்மான் குர்ஷித் தவறு செய்யமாட்டார் என்று ஊழலுக்கு புது வியாக்கியானம் அளித்துள்ளார். நமது பாஷையில் சொல்லப்போனால், மத்திய மந்திரிக்கு ரூ.71 லட்சம் என்பது ஜ×ஜ×பி என்று கூறி இருக்கிறார். ரூ.71 கோடியாக இருந்திருந்தால், நானே கூட இதை சீரியசாக எடுத்து இருப்பேன் என்று சொல்லியிருக்கிறார். ஒரு மத்திய மந்திரிக்கு ரூ.71 லட்சம் பெரிய தொகை இல்லையென்றால், அவருக்கு ஊழலின் எல்லைதான் எது? என்று மக்கள் கேட்கிறார்கள். ரூ.50 லஞ்சம் வாங்குபவனைக்கூட லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்துவிடுகிறார்கள். இதுவே ஒரு அளவுகோல் என்றால், ஒவ்வொரு வேலைக்கும், ஒவ்வொரு ஊழல்தொகையை சிறிய தொகை என்று நிர்ணயித்துவிடுவார்களா? என்கிற குரலும் எழுந்துள்ளது. எனவே, இந்த ஜ×ஜ×பி பேச்செல்லாம் வேண்டாம், சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராக இருக்கவேண்டும் என்ற அடிப்படையில், ஒரு முழுவிசாரணை நடத்தி, யார் சொல்வது உண்மை? என்று நாட்டுக்கு விரைவில் சொல்லவேண்டும் என்கிறார், மூத்த பத்திரிகையாளர் ஒருவர்.
தினத்தந்தி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அப்படியானால் எதுதான் ஊழல்? Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அப்படியானால் எதுதான் ஊழல்?
ஊழல் நம் அணுவில் கலந்துவிட்டது.
அணு உலை நிறுவுவதை விட்டு அனைவருக்கும் ஊழல் அற்ற
அணு மாற்று சிகிச்சைக்கு ரிசர்ச் தொடங்கவேண்டும்.
அதற்கு லட்சம் கோடிகளுக்கு மேல் நிதி ஒதுக்கி அதில்
ஊழல் இல்லாம திட்டத்தை நிறைவேற்ற செவ்வாய்
கிரகத்து வாசிகளிடம் காண்டி ராக்ட் கொடுக்கணும்.
அந்த காண்டிராக்ட் கொடுப்பதில் ஊழல் பண்ணிடுவாங்களோ?
அணு உலை நிறுவுவதை விட்டு அனைவருக்கும் ஊழல் அற்ற
அணு மாற்று சிகிச்சைக்கு ரிசர்ச் தொடங்கவேண்டும்.
அதற்கு லட்சம் கோடிகளுக்கு மேல் நிதி ஒதுக்கி அதில்
ஊழல் இல்லாம திட்டத்தை நிறைவேற்ற செவ்வாய்
கிரகத்து வாசிகளிடம் காண்டி ராக்ட் கொடுக்கணும்.
அந்த காண்டிராக்ட் கொடுப்பதில் ஊழல் பண்ணிடுவாங்களோ?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» எதுதான் அழகென்பது - கவிதை
» உண்மையில் எதுதான் காதல்?
» இறுதியில், எதுதான் சாசுவதம்?
» இந்தியாவின் தேசிய மந்திரம் - எங்கும் ஊழல், எதிலும் ஊழல்!
» நீங்க அறிவாளியா? அப்படியானால் பதில் அளியுங்கள்
» உண்மையில் எதுதான் காதல்?
» இறுதியில், எதுதான் சாசுவதம்?
» இந்தியாவின் தேசிய மந்திரம் - எங்கும் ஊழல், எதிலும் ஊழல்!
» நீங்க அறிவாளியா? அப்படியானால் பதில் அளியுங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|