ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரமே மகேசன்

Go down

மரமே மகேசன் Empty மரமே மகேசன்

Post by சிவா Mon Oct 15, 2012 6:41 pm


மரங்கள் சூழ்ந்த வனங்களிடையே இறைவன் கோவில் கொண்டிருக்கிறான். நாளடைவில் அவ்வகை மரங்களின் எண்ணிக்கை குறைந்து, அக்கோவில்களில் தல விருட்சமாகப் பாதுகாக்கப்பட்டு, காலம்காலமாக வழிபடப்பட்டு வருகின்றது.

கடம்பவனம் என்று மதுரையும், தில்லைவனம் என்று சிதம்பரமும், முல்லைவனம் என்று திருக்கருக்காவுரும், பாதிரிவனம் என்று அவள்இவள் நல்லூரும், வன்னிவனம் என்று அரதைப்பெரும்பாழி என்றழைக்கப்படும் அரித்துவாரமங்களமும், புள்ளைவனம் எனும் ஆலங்குடியும், வில்வவனம் எனும் திருக்கொள்ளம்புதூரும் இதற்கு உதாரணமாக விளங்குகின்றன.



இறைவனும் அதற்கேற்றாற் போல முல்லைவனேசுவரர், வில்வவனேசுவரர் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்கள். மரங்களின் அடியில் விநாயகர், கிராம தேவதைகள் போன்றவர்களின் சிலைகளை வைத்து, நாவலடியார், வேம்படியார், பனையடியார் என்றும் ஆங்காங்கே கும்பிடுகிறார்கள்.

சிவபெருமானின் இன்னொரு உருவமான தட்சணாமூர்த்தி சுவாமி கல் ஆன மரத்தின் அடியில் அமர்ந்து சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் வேதப் பொருட்களை சின்முத்திரை மூலம் உணர்த்துவதை

`கல்ஆலின் புடையமர்ந்து நான்மறை ஆரங்கம்
முதற்கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும்'
என்று

திருவிளையாடல் புராணத்தில் பரஞ்சோதிமுனிவர் கூறுவதுபோல எல்லா சிவன் கோவில் கோஷ்டங்களிலும் தென்முகமாக ஆலமார்ச் செல்வன் என்னும் தட்சணா மூர்த்தி, குருமூர்த்தியாகக் காட்சி அளிக்கிறார்.


மரமே மகேசன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மரமே மகேசன் Empty Re: மரமே மகேசன்

Post by சிவா Mon Oct 15, 2012 6:43 pm

மரமே மகேசன்

ஆனால், மரமே இறைவனாக, மரத்தின் அடியே மகேசுவரனாக உள்ள இடம் பொய்கை நல்லூர் என்றழைக்கப்படும் பரக்கலக்கோட்டை ஆகும். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையிலிருந்து 12 கிலோ மீட்டர் கிழக்கே முத்துப்பேட்டை சாலையில் பாட்டுவனாட்சி ஆற்றின் கீழ்கரையில் தான் இந்த அதிசயத்தலம் உள்ளது.

தலம் என்றதும் பிரமாண்டமான ராஜகோபுரமோ, பெரிய கர்ப்பக்கிரகமோ, கல்மண்டபங்களோ இருக்கும் என்று எண்ணிவிட வேண்டாம்.

இயற்கையோடு இயைந்த இறைவன் மிகப்பழைய, பரந்து விரிந்த வெள் ஆலமரத்தின் அடியிலேயே இருக்கிறான்.

மரத்தடியில் சிவலிங்கம் போன்ற சிலைகளோ, சாமி உருவங்களோ கிடையாது. ஏனெனில் இங்கு மரமே மூர்த்தி, மரமே கருவறை, மரமே கோவில், மரமே தலவிருட்சம் ஆகிறது.

மரத்தடியில் எழுந்து வளைந்துள்ள வேரிலேயே தற்போது திருவாட்சி அமைத்து லிங்கம் போன்று அலங்கரித்து சிவஉருவம் காட்டியுள்ளனர். அதற்கு முன்னால் பித்தளை தகட்டுடன் கூடிய இரண்டு கதவுகளே அமைக்கப்பட்டுள்ளன. முன்புறம் ஒரு நந்தீசர் சிலை உருவம் வைக்கப்பட்டுள்ளது.

`பொது ஆவுடையார்' என்று தமிழிலும் `மத்திய புரீஸ்வரர்' என்று சமஸ்கிருதத்திலும் வழங்கப்பெறும் இறைவன் இங்கே எழுந்தருளிருப்பது பற்றிய புராணக்கதை ஒன்று வழங்கப்பட்டு வருகிறது.


மரமே மகேசன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மரமே மகேசன் Empty Re: மரமே மகேசன்

Post by சிவா Mon Oct 15, 2012 6:43 pm

நள்ளிரவில் நடந்த நடுவர் மன்றம்

இல்லறத்தில் இருந்து சிவனை வழிபட்டு வந்தவர் வானுகோபர். துறவு கொண்டு சிவனை வணங்கி வந்தவர் மகாகோபர். இந்த இரு சிவபோகத் துறவிகளும், இறைவனை அடைய இல்லறமே ஏற்றது என்றும், துறவறமே ஏற்றது என்றும் தமக்குள் வாதிட்டுக் கொண்டு தில்லை அம்பலத்தில் நடனமிடும் இறைவனிடம் நீதி வேண்டினர்.

`தெற்கே பொய்கை நல்லூரில் உறங்கும்புளி, உறங்காப்புளி என்ற இரண்டு புளிய மரங்கள் இருக்கின்றன. அங்கே போய்க் காத்திருங்கள்' என்று இறைவன் அசரீரியாக உத்தரவிட்டான். அதன்பின்னர் கார்த்திகை சோமவாரம் என்று சொல்லப்படும் கார்த்திகை மாத திங்கட்கிழமையன்று தில்லையில் பூஜை முடிந்து, நடை சாத்தப்பட்ட பிறகு நள்ளிரவில் பொய்கை நல்லூரில் நடராஜப் பெருமாள் ஆலமரம் ஒன்றின் அடியில் தோன்றி வழக்காடு மன்றம் நடத்தினாராம்.

உள்ளத்தூய்மையோடு உண்மையான அன்போடு வழிப்பட்டால் இறைவனை துறவறத்தின் மூலமும் அடையலாம், இல்லறத்தின் மூலமும் அடையலாம் என்று மத்தியஸ்தம் செய்து, பொதுவான தீர்ப்பினை வழங்கிச் சென்றார். எனவே மத்தியபுரீஸ்வரர் என்றும் பொது ஆவுடையார் என்றும் இங்குள்ள இறைவன் வழங்கப்படுகிறார்.

அங்குள்ள திருக்குளத்தின் அருகே வீரசத்தி விநாயகரின் சிறிய கோவிலும், அருகே உள்ள புளியமரத்தடியில் நீலநிற மேனியராக அலங்கார வடிவில் இல்லறத்துறவி வான்கோபரும், சிவந்த மேனியராய் ஜடாமுடியுடன் மகாகோபர் என்ற தவநெறித் துறவியும் காட்சி தரும் சுதை சிற்பங்கள் விளங்குகின்றன.


மரமே மகேசன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மரமே மகேசன் Empty Re: மரமே மகேசன்

Post by சிவா Mon Oct 15, 2012 6:44 pm

வினோதமான வழிபாட்டு நேரம்

உலகில் உள்ள மற்ற எல்லாக்கோவில் வழிபாட்டு நேரங்களிலும் முறைகளிலும் இருந்து இந்தக்கோவில் வேறுபட்டு விளங்குகிறது. பொதுவாக எல்லாக்கோவில்களிலும் அதிகாலை முதல் இரவு வரை தொடர்ந்து பூஜைகளும் வழிபாடும் நடப்பது நாமறிந்த ஒன்று. ஆனால் - இங்கு ஒவ்வொரு சோமவாரமும் (திங்கட்கிழமை) இரவு 12 மணிக்குப் பிறகு கதவு திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகிறது. பிறகு நடை சாத்தப்படும். கார்த்திகை மாத சோமவார இரவு பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தவை.

சரி, பகலில் வழிபாடு கிடையாதா?... உண்டு. ஆம், வருடத்தில் ஒரே ஒருநாள் அதுவும் சூரியன் மகர ராசிக்குள் பிரவேசிக்கும் மகர சங்கராந்தி தினமான தைப்பொங்கல் அன்று மட்டும் பகலில் கோவில் திறந்திருக்கும் இரவில் பூட்டப்பட்டு விடும். கோவிலுக்கு வந்து கும்பிட்டுவிட்டு வீட்டில் பொங்கல் வைப்பதை பலர் கடமையாகக் கொண்டுள்ளனர்.

தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் கண்கண்ட தெய்வமாக விளங்கும் பொது ஆவுடையார் பொதுமக்களுக்கும் அனைத்து ஜீவராசிகட்கும் பொதுவானவர் அல்லவா?. எனவே திங்கட்கிழமை நள்ளிரவில் கூட வானந்திரப்பகுதியாக இருந்தும் இங்கே கூட்டம் அலைமோதுகிறது.

பொங்கலன்று பகல் நேரத்தில் பல கிலோமீட்டர் தூரம் வரிசையில் காத்திருந்து வழிபாடு செய்யும் மக்களின் அன்புதான் என்னே!

அதுமட்டுமா, ஒவ்வொருவரும் தங்கள் பிரார்த்தனைக்கேற்றப்படி மூட்டை மூட்டையாக நெல்லும், நவதானியங்களும், புளி, மாங்காய், தேங்காய், காய்கறி போன்ற விளைபொருட்களையும், ஆடு, மாடு, கோழிகளையும் காணிக்கையாகச் செலுத்துகிறார்கள் என்றால் இறைவனிடத்தில் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை அளவிட முடியுமா என்ன?

இந்த ஆலமரத்தின் இலைகளையே பிரசாதமாகக் கொண்டு சென்று தன் வீட்டு தானியக்குதிர்களிலும், பணப்பெட்டியிலும் வைத்து பாதுகாத்து வருகிறார்கள்.

எவ்வளவு இலைகளைப் பறித்தாலும் மீண்டும் துளிர்த்து விடுவதுதான் இந்த ஆலமரத்தின் அற்புதமாகும். கோவில் கட்டிடங்களுக்குள் கொலுவிருக்கும் கடவுளை விட்டு இயற்கையுடன் இணைந்திருக்கும் இறைவனை ஒருமுறையாவது தரிசித்துப் பேறு பெறலாமே.

தினத்தந்தி


மரமே மகேசன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மரமே மகேசன் Empty Re: மரமே மகேசன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum