Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பிக்கு சொந்தமான அரிசி ஆலை இடிப்பு
4 posters
Page 1 of 1
முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பிக்கு சொந்தமான அரிசி ஆலை இடிப்பு
அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டியதாக கூறி முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பிக்கு சொந்தமான அரிசி ஆலை இடிக்கப்பட்டது. போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நேருவின் தம்பி அரிசி ஆலை
திருச்சி மாவட்ட தி.மு.க செயலாளராக இருப்பவர் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு. இவரது தம்பி மணிவண்ணனுக்கு சொந்தமான நவீன அரிசி ஆலை திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பூவாளூரில் உள்ளது.
இந்த அரிசி ஆலையை சீனிவாசன் என்பவரிடம் இருந்து மணிவண்ணன் கடந்த 2009-ம் ஆண்டு வாங்கி விரிவு படுத்தி `ஸ்ரீநாராயண ரெட்டியார் நவீன அரிசி ஆலை' என்ற பெயரில் 2010-ம் ஆண்டு தொடங்கி இருக்கிறார். இந்த அரிசி ஆலையின் முன்பகுதியில் பங்குனி வாய்க்கால் என்ற பாசன வாய்க்கால் உள்ளது.
வாய்க்கால் ஆக்கிரமிப்பு
பங்குனி வாய்க்காலுக்கும் மணிவண்ணனின் நவீன அரிசி ஆலைக்கும் இடைப்பட்ட பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சுமார் 13 ஆயிரம் சதுர அடி இடத்தை ஆக்கிரமிப்பு செய்து மதில் சுவர் எழுப்பி அதில் அரிசி ஆலைக்கு தேவையான கட்டிடங்கள் கட்டியதாகவும், விதிமுறைகளை மீறி பங்குனி வாய்க்காலுக்குள் பில்லர்கள் எழுப்பி பாலம் கட்டியதாகவும் ஏற்கனவே அரசு அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.
இந்நிலையில் லால்குடி ஆர்.டி.ஓ. பார்த்திபன், தாசில்தார் பாலதண்டாயுதம், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் நேற்று காலை மணிவண்ணனுக்கு சொந்தமான அரிசி ஆலைக்கு வந்தனர். கரூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக், திருச்சி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான், லால்குடி துணை சூப்பிரண்டு (பொறுப்பு) பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசாரும் அரிசி ஆலையை சுற்றி குவித்து வைக்கப்பட்டு இருந்தனர். தீயணைப்பு வாகனங்கள். கலவர நேரங்களில் பயன்படுத்தப்படும் கண்ணீர் புகை குண்டு வீச்சு மற்றும் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
அதிகாரிகளுடன் வாக்குவாதம்
வாய்க்கால் மற்றும் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து இந்த அரிசி ஆலை கட்டப்பட்டு இருக்கிறது. எனவே ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்கப்போவதாக கூறி அதிகாரிகள் உள்ளே சென்றனர். இதற்கு மணிவண்ணனின் வழக்கறிஞர்கள் ஓம்பிரகாஷ், பாஸ்கர், ஆலை மேலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முறைப்படி அனுமதி பெறப்பட்டு தான் கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன. ஏன் எங்களுக்கு முன்கூட்டியே நோட்டீசு கொடுக்காமல் திடீர் என வந்து இடிக்க போவதாக கூறுகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்கள். அவர்களது கேள்விகளுக்கு அதிகாரிகள் பதில் அளித்தனர். இதனால் அதிகாரிகளுக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
சர்வேயர்கள் அளந்தனர்
இதனை தொடர்ந்து அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் அரிசி ஆலைக்குள் சென்று ஆக்கிரமிப்பு பகுதிகளை நில அளவை துறை ஊழியர்கள் மூலம் அளந்தனர். இந்த பணிகள் நடந்த போது அரிசி ஆலைக்கு வெளியே நின்று கொண்டிருந்த தி.மு.க பிரமுகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் அதிகாரிகளுக்கு எதிராக கோஷம் போட்டனர். சிலர் அதிகாரிகளை முற்றுகையிடுவது போல் வந்தனர். அவர்களை போலீசார் விரட்டி அடித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நில அளவை துறை சர்வேயர்கள் ஆக்கிரமிப்பு இடங்களை அளந்து குறியீடு செய்து முடிக்கப்பட்டதை தொடர்ந்து அதில் இருந்த கட்டிடங்களை இடிக்கும் பணி தொடங்கியது. முதலில் ஆக்கிரமிப்பு இடத்தில் இருந்த மதில்சுவர் இடிக்கப்பட்டது. மதில் சுவரை இடித்த போது சிலர் பொக்லைன் எந்திரம் முன்வந்து தகராறு செய்தனர். இதனால் பொக்லின் டிரைவர் சாவியை எடுத்துக்கொண்டு ஓடி விட்டார். அதன் பின்னர் வேறு டிரைவர் மூலம் தொடர்ந்து 3 குடோன்களை இடிக்கும் பணி தொடங்கியது. இந்த குடோன்களில் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. ஒரு குடானில் இயந்திரங்கள் இருந்தன. நெல் மூட்டைகளை அரிசி ஆலை ஊழியர்கள் வேறு இடத்திற்கு எடுத்து செல்வதற்காக லாரிகளில் ஏற்றினார்கள். பொக்லைன் எந்திரங்கள், புல்டோசர்கள் மூலம் 3 கட்டிடங்களும் இடித்து தள்ளப்பட்டன.
ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை திருச்சி மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி தியாகராஜன் நேரடியாக வந்து பார்வையிட்டார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லலிதா லட்சுமியும் பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரடியாக கண்காணித்தார்.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பிக்கு சொந்தமான அரிசி ஆலை இடிப்பு
அரசியல் ஆக்கிரமிப்புகள் ஒரு தொடர்கதை அப்படின்னு கவர் ஸ்டோரி எழுதலாம் ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பிக்கு சொந்தமான அரிசி ஆலை இடிப்பு
எதிரெதிர் கட்சியினர் இந்த மாதிரி சண்டைப்போட்டுக்கொண்டு நாட்டுக்கு நல்லத் நடந்தால் சரி
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பிக்கு சொந்தமான அரிசி ஆலை இடிப்பு
மிகவும் நல்லது...இதேபோல் ஆளும் கட்சியினரின் ஆக்கிரமிப்புகளையும் இடிப்பார்களா ?
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பிக்கு சொந்தமான அரிசி ஆலை இடிப்பு
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் நல்லது...இதேபோல் ஆளும் கட்சியினரின் ஆக்கிரமிப்புகளையும் இடிப்பார்களா ?
இயன்ற வரை கொள்ளையடித்துக் கொள்ள ஆளுங்கட்சியினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» நில ஆக்கிரமிப்பு: மாஜி தி.மு.க. அமைச்சர் நேரு, தம்பியின் அரிசி ஆலை இடிப்பு
» முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொச்சியில் கைது!
» முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடத்தி வெட்டிப் படுகொலை!
» அம்பலமாகிறது மாஜி அமைச்சர் நேருவின் ஹோட்டல் ‘ஆட்டம்’
» அமைச்சர் நேருவின் சொத்து மதிப்பு? எஸ்.எம்.எஸ்., பிரசாரத்தால் பரபரப்பு
» முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொச்சியில் கைது!
» முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடத்தி வெட்டிப் படுகொலை!
» அம்பலமாகிறது மாஜி அமைச்சர் நேருவின் ஹோட்டல் ‘ஆட்டம்’
» அமைச்சர் நேருவின் சொத்து மதிப்பு? எஸ்.எம்.எஸ்., பிரசாரத்தால் பரபரப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|