ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவுகிறது : மதுரையில் இதுவரை ஐந்து பேர் பலி

2 posters

Go down

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவுகிறது : மதுரையில் இதுவரை ஐந்து பேர் பலி Empty தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவுகிறது : மதுரையில் இதுவரை ஐந்து பேர் பலி

Post by balakarthik Sun Oct 14, 2012 12:14 pm

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவுகிறது : மதுரையில் இதுவரை ஐந்து பேர் பலி Tamil_News_large_564911

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வாலிபர், சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த காய்ச்சல், தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது; மதுரையில் மட்டும் இதுவரை, ஐந்து பேர், பலியாகியுள்ளனர்.

சென்னை, ஐஸ் அவுஸ் போலீஸ் குடியிருப்பைச் சேர்ந்தவர் சாம்ஜி, 26; முதுநிலை பட்டதாரியான இவர், கை, கால்கள் செயலிழந்து, கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த, 11ம் தேதி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சாம்ஜி, நேற்று காலை, இறந்தார்.

இதுகுறித்து, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியதாவது: சாம்ஜி, இங்கு அனுமதிக்கப்படுவதற்கு முன், தனியார் மருத்துவமனை ஒன்றில், 20 நாட்கள் சிகிச்சை பெற்றுள்ளார். ரத்தத்தில் நோய் எதிர்ப்பு அணுக்கள் மிகவும் குறைந்த நிலையில், அனுமதிக்கப்பட்ட அவர், பல உறுப்புகள் பாதிப்பால் இறந்துள்ளார். டெங்கு காய்ச்சலை உறுதி செய்வதற்காக, சாம்ஜிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகள், இன்னும் வரவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.


இதுவரை பலி 5:

மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில், டெங்கு காய்ச்சல், வேகமாக பரவி வருகிறது. மதுரை அரசு மருத்துவமனையில், கடந்த ஒரு மாதமாக அனுமதிக்கப்பட்டவர்களில், 20 பேருக்கு, டெங்கு இருப்பது தெரிந்துள்ளது. இதுவரை, ஐந்து பேர் இறந்துள்ளனர்.இங்கு, கடந்த வாரத்தில் மூன்று குழந்தைகள் இறந்தனர். ரத்தப் பரிசோதனை முடிவுகள் வரும் முன் இறந்ததால், டெங்கு காய்ச்சலால் இறந்தனர் என, பதிவு செய்யப்படவில்லை. பரிசோதனை ஒரு பக்கம், சிகிச்சை ஒரு பக்கம், அறிக்கை ஒரு பக்கம் என, மூன்று முனைகளில் செயல்படுவதால், பரிசோதனை முடிவுகள், இறப்பிற்கான காரணத்தில் குறிப்பிடப் படுவதில்லை.தற்போது, அரசு மருத்துவமனையில், 20 பேர், டெங்கு காய்ச்சலுக்காக சிகிச்சை பெறுகின்றனர்.பாதிக்கப்பட்டவர்களுக்கு, 304வது வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மூன்று பெண்கள் வேறு வார்டுகளில் சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவமனைக்கு வரும், டெங்கு பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மதுரை மாவட்டம் மேலூரில் தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ரத்தப் பரிசோதனை செய்ததில், 13 பேருக்கு, டெங்கு என, தெரிந்தது. குழந்தை முதல், 13 வயதுக்கு உட்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதால், பெற்றோர் பீதியில் உள்ளனர்.மேலூரில், 300 பேருக்கு தொடர் காய்ச்சல் உள்ளது. இதில் பலர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்; மற்றவர்கள்,மேலூர் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர்.அவர்களுக்கு ரத்தப் பரிசோதனை செய்யப்படுகிறது. நேற்று முன்தினம் பரிசோதனைக்கு ரத்தம் கொடுத்து சென்றவர்களில், ஐந்து பேருக்கு, டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது; அவர்களிடம் பெயர் முகவரி பெறாததால், தகவல் தர முடியவில்லை.

டெங்கு காய்ச்சல், ஏற்கனவே நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிக அளவில் உள்ளது. இப்போது, வடமாவட்டங்களிலும், இந்த காய்ச்சல் பரவுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.


மாணவன் பலி?

காய்ச்சலுக்கு, மேல்சிகிச்சை பெற, அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட, பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.சென்னை, திருவேற்காட்டைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். மேஸ்திரி பணி புரிந்துவரும் இவரின் மகன் சுதாகர், 18. அரும்பாக்கத்தில் உள்ள, அரசு பள்ளியில், பிளஸ் 2 படித்து வந்தான். கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுதாகர், இரு தினங்களுக்கு முன், பூந்தமல்லி நெடுஞ்சாலை, வேலப்பன்சாவடியில் உள்ள, தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். இந்நிலையில், மேல்சிகிச்சைக்காக, நேற்று மாலை, சென்னை, ராஜிவ்காந்தி, அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டான். சுதாகரை பரிசோதித்த மருத்துவர்கள், "ஏற்கனவே, அவன் இறந்துவிட்டான்' என, தெரிவித்தனர். காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வந்த சுதாகருக்கு, டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்ததா என்பதை, கடைசிவரை, மருத்துவர்கள் உறுதி செய்யவில்லை என, அவனின் உறவினர்கள் தெரிவித்தனர்.

ஒரே நாளில் 14 பேருக்கு "டெங்கு' பாதிப்பு:

சென்னையில், 11 சிறுவர்கள் உட்பட 14 பேர், "டெங்கு' காய்ச்சல் அறிகுறியுடன், அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, 12 நாட்களில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.நாகை, தஞ்சை, வேலூர் மாவட்டங்களை தொடர்ந்து, சென்னையிலும், "டெங்கு' தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றுமுன்தினம் நிலவரப்படி, சென்னையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 26 பேர், "டெங்கு' அறிகுறிகளுடன், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இவர்களில், வில்லிவாக்கம், மேடவாக்கம்,திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து, டெங்கு காய்ச்சல் பாதிப்புடன், சென்னை, ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரில், ஆறு பேருக்கு, நேற்று முன்தினம், "டெங்கு' உறுதிச் செய்யப்பட்டது. இந்நிலையில், இங்கு சிகிச்சை பெற்றுவரும், செம்மஞ்சேரி, குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்த, 13 வயது சிறுமிக்கு, நேற்று, "டெங்கு' கண்டறியப்பட்டுள்ளது.மேலும், சென்னையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, 12 வயதிற்குட்பட்ட, சிறுவர், சிறுமியர், ஏழு பேர், "டெங்கு' அறிகுறியுடன், எழும்பூர், குழந்தைகள் நல மருத்துவமனையில், சேர்க்கப்பட்டுள்ளனர். ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, குழந்தைகள் வார்டில் நான்கு பேர்; கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மூன்று பேர், "டெங்கு' காய்ச்சல் பாதிப்புடன், நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், 12 நாட்களில், "டெங்கு' காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, சிறப்பு வார்டில் 12 பேர், "டெங்கு' காய்ச்சலுக்கு தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

நன்றி :- தினமலர்

ரசித்த கமெண்டுகள்

Ishan Mohamed Mothi - chennai,இந்தியா

கொசு இல்லாத சிங்கப்பூர் ல டெங்குக்கு தினம்தோறும் அதன் விளைவுகளை விளம்பரம் செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்கள்.... நம்ம நாட்டுல நாசமா போறதுக்கு மட்டும்தான் விளம்பரம் இருக்கு.

Nava Mayam - newdelhi,இந்தியா

ஒட்டு போட்ட குத்தத்துக்கு , தமிழக சிங்கங்களை இப்படி கொசு வலைக்குள்ள சிக்க வச்சு , அடிமை போல அடைச்சு போட்டுடிங்களே ...

Amalraj Penigilapati - castries,செயின்ட் லூசியா

இந்த கொசுக்களை உற்பத்தி செய்வதன் பின்னணியில் கருணாநிதி இருக்கிறார் என்று சுகாதார அமைச்சர் விரைவில் அறிக்கை வெளியிடுவார்..

kochadaiyan - ,இந்தியா

தமிழ்நாட்டில் எங்கு காய்ச்சல் என்று எட்டி பார்த்த இடமெல்லாம் டெங்கு காய்ச்சல்.


ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவுகிறது : மதுரையில் இதுவரை ஐந்து பேர் பலி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவுகிறது : மதுரையில் இதுவரை ஐந்து பேர் பலி Empty Re: தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவுகிறது : மதுரையில் இதுவரை ஐந்து பேர் பலி

Post by Guest Sun Oct 14, 2012 1:44 pm

நம்ம நாட்டுல நாசமா போறதுக்கு மட்டும்தான் விளம்பரம் இருக்கு...

எப்டி பாதிக்க பட்டு இருகாரு பாருங்க..
avatar
Guest
Guest


Back to top Go down

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவுகிறது : மதுரையில் இதுவரை ஐந்து பேர் பலி Empty Re: தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவுகிறது : மதுரையில் இதுவரை ஐந்து பேர் பலி

Post by யினியவன் Sun Oct 14, 2012 2:22 pm

ஊழலுக்கு அப்புறம் இதுதான் அதிகமா பரவுது போல!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவுகிறது : மதுரையில் இதுவரை ஐந்து பேர் பலி Empty Re: தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவுகிறது : மதுரையில் இதுவரை ஐந்து பேர் பலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழகம் முழுவதும் ‘டெங்கு’ காய்ச்சல் வேகமாக பரவுகிறது அரசு ஆஸ்பத்திரிகளில் இதுவரை 2,500 பேருக்கு சிகிச்சை
» தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் டெங்கு சென்னையில் 500 பேர் அட்மிட்: 5 ஆயிரம் பேருக்கு காய்ச்சல் பாதிப்பு
» பன்றிக் காய்ச்சல் நோய்க்கு உலகம் முழுவதும் 2,840 பேர் பலி: உலக சுகாதார மையம்
»  டெங்கு:தமிழகம் முழுவதும் நிலவரம் என்ன?
» குமரி, சென்னையில் பரவுகிறது பன்றிக் காய்ச்சல்-18 பேர் பாதிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum