Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டெங்கு காய்ச்சல்-ஒரு விரிவான பார்வை
5 posters
Page 1 of 1
டெங்கு காய்ச்சல்-ஒரு விரிவான பார்வை
அக்டோபர் 10,2012 சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருவது குறித்தும் , தடுப்பது குறித்தும் முதல்வர் ஜெயலலிதா இன்று ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் சில மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலுக்கு குழந்தைகள் முதல் பெரியவர் வரை பலியாகி வருகின்றனர். நாகை மாவட்டத்தில் 8-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்நிலையி்ல் டெங்கு பாதிப்பினை தடுப்பது குறித்து முதல்வர் ஜெயலலிதா இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இந்த டெங்கு காய்ச்சல் பற்றி கொஞ்சம் விரிவா பாக்கலாம்
டெங்கு காய்ச்சல்
டெங்கு காய்ச்சல் என்பது திடீரென தோன்றும் ஒரு வைரஸ் நோயாகும். இது டெங்கு வைரஸின் டைப்-1, டைப்-2, டைப்-3 மற்றும் டைப்-4 ஆகிய 4 வகை வைரஸ்களாலும் ஏற்படுவது. கொசு மூலம் இது பரவுகிறது. வெப்ப மண்டல மற்றும் வெப்ப மண்டல அணிமையிடம் சார்ந்த நாடுகளில் காணப்படும் ஏடிஸ் ஏஜிப்டி (Aedes aegypti) என்ற ஒரு வகை கொசுவால் இது பரவுகிறது.
இந்நோய் வந்தால் கடும்காய்ச்சலுடன் கடுமையான மூட்டு வலி, தசை வலி, தலைவலி, தோல் நமைச்சல் போன்ற உணர்குறிகள் ஏற்படும். தொற்றுநோய் தீவிரமடைந்த நிலையில் உயிருக்குத் தீங்கு விளைவிக்கும். டெங்கு குருதிப்போக்குக் காய்ச்சல் (கடுமையான குருதிப்போக்கை ஏற்படுத்தும்) மற்றும் டெங்கு அதிர்ச்சிக் கூட்டறிகுறி என்பன உண்டாகும். இது உயிர் ஆபத்துகளை விளைவிக்க கூடிய ஒரு கொடிய நோயாகும். இது உடலை மிகவும் வருத்தும் நோய் ஆகையால் என்பை முறிக்கும் காய்ச்சல் (breakbone fever) எனவும் அழைக்கப்படும்
பரவும் விதம்
(Aedes aegypti) என்கிற கொசு கடிப்பதால் மட்டுமே இந்த நோய் பரவும்
இக்கொசுவை இலகுவில் அடையாளம் காணக்கூடிய சிறப்பம்சமாக கருநிறக் காலில் வெள்ளை வரிகள் காணப்படும். இக்கொசுக்கள் பொதுவாக பகலிலேயே மனிதர்களைக் கடிக்கின்றன. பொதுவாக விடியற்காலையிலும் பிற்பகலிலும் இக்கொசு கடிக்கின்றது.
நோய் அறிகுறிகள் :
1. காய்ச்சல், திடீரெனக் காய்ச்சல் ஏற்பட்டு, 40-40.5 டிகிரி செல்சியஸ் வரை உடல் உஷ்ணம் திடீரென அதிகரித்தல்.
2. சருமத்தில் வேனற்கட்டிகள், அல்லது வெடிப்புகள், நோய் தொற்றிய 3-4 நாட்களில் உடலின் நடுப்பகுதியில் தோன்றி, முகம், கை, கால்கள் என்று பரவ தொடங்கும்.
3. தசை வலி.
4. மூட்டுகளில் வலி.
5. தலைவலி.
சாதாரண டெங்கு காய்ச்சல் ஆபத்தானது அல்ல. சிலநாட்களில் எந்தவித பின்வளைவுகளும் இன்றி தானாகவே குணமாகிவிடும்.
ஆயினும் டெங்கு குருதிப் பெருக்குக் காய்ச்சல் (Dengue Haemorrhagic Fever- DHF) மிகவும் ஆபத்தானது. இதன்போதும் கடுமையான காய்ச்சல் இருக்கும். முகம் சிவத்தல், கடுமையான தலையிடி, கண்வலி, தசைவலி, மூட்டுவலி ஆகியன சேர்ந்திருக்கும். இவை 2 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கலாம்.
அத்துடன் இரத்தம் கசிவதற்கான அறிகுறிகள் ஏதும் தோன்றலாம். உதாரணமாக மூக்கால் இரத்தம் வடிதல், முரசிலிருந்து இரத்தம் கசிதல், தோலில் ஆங்காங்கே சிவப்பான புள்ளிகள் தோன்றல், ஊசி ஏற்றிய இடத்தில் அல்லது குளுக்கோஸ் ஏற்றிய இடத்தில் இரத்தம் கசிந்து கண்டல் போலத் தோன்றுதல், வாந்தியோடு இரத்தம் வருதல், மலம் கருமையாக வெளியேறல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்த வேண்டாம்.
அத்துடன் இந்நோயின் போது ஈரல் வீக்கமடைவதால் பசியின்மை, வயிற்றுநோ, வாந்தி, போன்றவை தோன்றும். சிலருக்கு வயிற்றோட்டமும் ஏற்படுவதுண்டு. அத்தகைய அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.
டெங்கு குருதிப் பெருக்குக் காய்ச்சல் எந்த வயதினரையும் பாதிக்கலாம் ஆயினும் குழந்தைகளைப் பாதிப்பது அதிகமாகும். அதிலும் ஒரு வயதிற்கு உட்பட்ட பிள்ளைகளைத் தாக்கும் போது ஆபத்து அதிகமாகும். நோஞ்சான் பிள்ளைகளைவிட ஆரோக்கியமான பிள்ளைகளையே அதிகம் பாதிப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இதற்கான காரணம் தெளிவாகவில்லை.
டெங்கு கிருமியில் பல உபபிரிவுகள் இருப்பதால் ஒரு முறை டெங்கு வந்தால் மீண்டும் வராது என்று சொல்ல முடியாது. திரும்ப வரக் கூடிய சாத்தியம் உண்டு. உண்மையில் முதல் தடவை வரும்போது பெரிய பாதிப்புகள் இருப்பதில்லை. சாதாரண காய்ச்சல் போல குணமாகிவிடும். ஆயினும் அடுத்த முறை வரும்போதே கடுமையாக இருக்கும். டெங்கு குருதிப் பெருக்குக் காய்ச்சல் போன்றவை அப்பொழுதே வருகின்றன.
பலருக்கு காய்ச்சல் விட்ட பின்னரும் கடுமையான களைப்பு, தலைச்சுற்று, கிறுதி போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். இவை உடலின் உள்ளே குருதிக் கசிவு ஏற்பட்டதால் அல்லது நீர்இழப்பு ஏற்பட்டதால் தோன்றியிருக்கலாம். எனவே அலட்சியப்படுத்தக் கூடாததாகும்.
சிகிச்சை :
டெங்கு காய்ச்சலை பொறுத்தவரை,இதெற்கென்று மருந்துகள் இல்லை (நாட்டு மருந்து ,பாட்டிவைத்தியம் பற்றி சரியாக தெரியாது ) ஓய்வும், திரவங்கள் வகை உணவு அதிகம் உடலில் ஏற்றப்படுவதும், உடல் உஷ்ணத்தைக் குறைக்க அசிட்டாமினோஃபென் மாத்திரைகள் ஆகியவை அவசியம். ரத்த வட்டுக்களை கண்காணிக்கும் அளவுக்கு சீரியஸாகப் போகும் போது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது அவசியம்
தடுக்கும் முறைகள்
முற்றிலுமாக கொசுக்களை தடுப்பது மட்டுமே தீர்வாகும்
கொசுக்களை உடலுக்கு தீங்கில்லாமல் விரட்டும் முறை
படத்தில் காட்டியுள்ளபடி ரெபெல்லென்ட்டில் கற்பூரத்தை வைத்து பிளக் பாயின்ட்டில் மாட்ட வேண்டும். பின்பு switch on செய்தால் கொசுக்கள் ஓடி விடும். கொசுக்கள் அதிகம் உள்ள இடங்களில் கற்பூரத்தை போட்டு வைத்தால் கொசுக்கள் அங்கு தங்காது. முயற்சி செய்து பாருங்கள்.
http://www.eegarai.net/t88629-topic
http://naharvu.blogspot.in/2012/06/blog-post_27.html
இந்த இரண்டு லிங்க் களிலும் சில எளிய வழிமுறைகள் உள்ளது
இனி டெங்கு பற்றிய சில உண்மைகள் சுருக்கமாக
1.இந்த வைரஸ் ஏடீஸ் என்ற கொசு மூலம் பரவகிறது (பெண் கொசு மட்டுமே)
2.இந்த கொசு பகலில் கடிக்கும் பழக்கம் உடையது.
3.இவை சிறு பாத்திரங்கள், உடைந்த பாட்டிலகள்,தேங்கய் இளநீர் ஓடுகள், பூந்தொட்டிகள், ஏர்கூலர் உள்ளே,etcமட்டுமே முட்டையி டும்.
4.இவை தவிர கழிவு நீரிலோ சாக்கடையிலோ முட்டை இடாது
5.எனவே டெங்குவை ஒழிக்க கொசு மருந்து அடிப்பதோ, சாக்கடையை சுத்தம் செய்வதோ பலன் தராது
6.வீட்டை சுற்றிலும் கிடக்கும் பிளாஸ்டிக் பொருட்கள், பாட் டில்கள், தேங்காய் ஓடுகள், உரல்,பழைய காலணிகள், பொருட்கள் எது வாயினும் அதில்தேங்கியுள்ள சிறதளவுநீரை முழுவது மாக வெளி யேற்றினால்மட்டடுமே டெங்குவை தடுக்க முடியும்.
7 .இந்த கொசு, மற்றகொசுக்களைபோல வெகு துரம் பறக்க முடியாது! உங் கள் வீட்டில் உற்பத்தியாகும்கொசு மட்டுமே உங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும்
8. டெங்கு அனைவரையும் தாக்கினாலும் குழந்தைகளுக்கு மட்டு மே ஆபத்தானது.30% குழந்தைகள் மிக ஆபத்தை நெருங்கலாம்
9.மிக முக்கியமானது பாதிக்கபட்ட , காய்ச்சல் உள்ள குழந்தைகள், மீண்டும் அது போன்ற கொசுக்களால் கடிக்கப்படும்போது மட்டுமே ஆபத்தான நில மையை அடையும். இல்லயேல் அது சாதாரண காய்ச்சலாகவே முடியும்!
10.எனவே பாதிக்கப்பட்ட குழந்தைகளை கொசுவலையிட்டு பாதுகாத்தல் மிக மிக முக்கியம்
11 .கொசுக்கள் பரவாமல் தடுப்பது மட்டுமே இதற்கு தீர்வாகும்
"வரும் முன் காப்போம்"
ராஜ்அருண்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
Re: டெங்கு காய்ச்சல்-ஒரு விரிவான பார்வை
நல்ல பயன் உள்ள பதிவு அண்ணா ,
அறியாத செய்திகளை அறிய தந்தமைக்கு நன்றி
அறியாத செய்திகளை அறிய தந்தமைக்கு நன்றி
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: டெங்கு காய்ச்சல்-ஒரு விரிவான பார்வை
மிக மிக தேவையான பகிர்வு ராஜ் அருண்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: டெங்கு காய்ச்சல்-ஒரு விரிவான பார்வை
ஆண் பப்பாளி பூவை காய்ச்சி அந்த நீரை ஒரு நாளுக்கு மூன்று வேளை குடித்து வந்தால், இந்த டிங்கி (எங்கள் ஊரில் இப்படித்தான் சொல்லுவோம்) நல்ல பலன் கிடைக்கும்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: டெங்கு காய்ச்சல்-ஒரு விரிவான பார்வை
மிகவும் பிரயோசனமான பதிவு. நன்றி
இலங்கை மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் இந்த டெங்கு பெரும் உயிரிழப்புக்களைத் தொடர்ந்து தந்து கொண்டே இருக்கின்றது.
நாம் வாழும் இடங்களிலுள்ள சுற்றுப்புறச் சூழலை சரியாகப் பராமரித்து சுத்தமாக வைத்துக் கொள்வதே இதிலிருந்து காத்துக் கொள்வதற்கு சிறந்த வழி. குறிப்பாக நுளம்புகள் பெருகுமிடங்களை அடையாளங்கண்டு அவற்றை அழித்து விட வேண்டும்.
தற்போதிருக்கும் நடைமுறைக் காலகடத்தில் நேரம் என்பது மிகக் குறைவாகவே அனைவருக்கும் காணப்படுகின்றது. ஆனாலும் ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை தினங்களிலாவது இதனைக் கவனித்து வீட்டுக்கும் நாட்டுக்கும் நன்மை தரக்கூடிய வகையில் செயற்படுவோமாக.
இலங்கை மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் இந்த டெங்கு பெரும் உயிரிழப்புக்களைத் தொடர்ந்து தந்து கொண்டே இருக்கின்றது.
நாம் வாழும் இடங்களிலுள்ள சுற்றுப்புறச் சூழலை சரியாகப் பராமரித்து சுத்தமாக வைத்துக் கொள்வதே இதிலிருந்து காத்துக் கொள்வதற்கு சிறந்த வழி. குறிப்பாக நுளம்புகள் பெருகுமிடங்களை அடையாளங்கண்டு அவற்றை அழித்து விட வேண்டும்.
தற்போதிருக்கும் நடைமுறைக் காலகடத்தில் நேரம் என்பது மிகக் குறைவாகவே அனைவருக்கும் காணப்படுகின்றது. ஆனாலும் ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை தினங்களிலாவது இதனைக் கவனித்து வீட்டுக்கும் நாட்டுக்கும் நன்மை தரக்கூடிய வகையில் செயற்படுவோமாக.
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Similar topics
» டெங்கு காய்ச்சல்
» சிறுநீரகக் கற்கள். விரிவான பார்வை
» ஓசூரில் டெங்கு காய்ச்சல்: ஒருவர் பலி
» சூரியபுயல் --ஒரு விரிவான பார்வை
» சென்னைக்கு பரவியது டெங்கு காய்ச்சல்
» சிறுநீரகக் கற்கள். விரிவான பார்வை
» ஓசூரில் டெங்கு காய்ச்சல்: ஒருவர் பலி
» சூரியபுயல் --ஒரு விரிவான பார்வை
» சென்னைக்கு பரவியது டெங்கு காய்ச்சல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|