Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை !
+9
தமிழ்நேசன்1981
mbalasaravanan
ஜாஹீதாபானு
Muthumohamed
உமா
jhema
அசுரன்
யினியவன்
krishnaamma
13 posters
Page 1 of 9
Page 1 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை !
இந்த ஐடியா எனக்கு நம் புது தோழி ஹேமாவால் வந்தது . அவங்க வேண்டு கோளுக்கு இணங்க துவங்குகிறேன். இங்கு எனக்கு தெரிந்த உணவு வகைகளை போடுகிறேன், நீங்களும் உங்களுக்கு தெரிந்த நம் தமிழரின் பழைய உணவுவகைகளை இங்கு பகிருங்கள்
குறிப்பு :சோளம், கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி, வரகு, பனிவரகு என்பன சிறுதானியங்களாகும். இச்சிறு தானியங்கள் அதிக நார்ச்சத்து கொண்டவையாகவும் எளிதில் செரிமானம் அடையக்கூடியதுமாகும். இவ்வகை சிறுதானியங்களில் குறைந்தளவே குளுகோஸ் இருப்பதால் இவை மனிதனை சர்க்கரை நோயிலிருந்து காப்பாற்றக் கூடியவை.எனவே நாம் அப்ப அப்ப இவைகளை நம் உணவில் சேர்ப்பது நல்லது
குறிப்பு :சோளம், கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி, வரகு, பனிவரகு என்பன சிறுதானியங்களாகும். இச்சிறு தானியங்கள் அதிக நார்ச்சத்து கொண்டவையாகவும் எளிதில் செரிமானம் அடையக்கூடியதுமாகும். இவ்வகை சிறுதானியங்களில் குறைந்தளவே குளுகோஸ் இருப்பதால் இவை மனிதனை சர்க்கரை நோயிலிருந்து காப்பாற்றக் கூடியவை.எனவே நாம் அப்ப அப்ப இவைகளை நம் உணவில் சேர்ப்பது நல்லது
Last edited by krishnaamma on Thu May 12, 2016 10:44 am; edited 3 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மல்டி கிரைன் கஞ்சி - பல தானிய கஞ்சி
முன்பே நான் வேறு ஒரு கஞ்சி 'சத்துமாவு கஞ்சி'ஒன்று போட்டுள்ளேன், அது போல த்தான் இதுவும் ஆனால் இதில் பல சிறுதானியங்கள் சேர்த்துள்ளேன்
தேவையானவை:
கேழ்வரகு - கால் கிலோ
கொள்ளு, கோதுமை, சோளம், சிவப்பு அரிசி - தலா இரண்டு டேபிள் ஸ்பூன்
பொட்டுக்கடலை, கம்பு - தலா நாலு டேபிள் ஸ்பூன்
முந்திரி, பாதாம் - தலா 10
ஏலக்காய் - 5
பார்லி - 4 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை தேவைக்கு ஏற்ப
செய்முறை:
கேழ்வரகு, கொள்ளு, கோதுமை, கம்பு ஆகியவற்றை ஊற வைத்து தண்ணீரை வடிகட்டி, ஒரு துணியில் போட்டு முடிந்து வைத்தால் காலையில் முளைவிட்டிருக்கும்.
முளைகட்டிய தானியங்களை நிழலில் உலர்த்தவும்.
வெறுமன வாணலியில் பொட்டுக்கடலை, சோளம், பாதாம், முந்திரி, சிவப்பு அரிசி, பார்லி, ஏலக்காய் எல்லாவற்றையும் தனித்தனியாக நன்கு ஆனால் காந்தாமல் வறுக்கவும்.
முளைகட்டிய தானியங்களை நிழலில் உலர்த்தவும்.
முளை விட்ட தானியங்கள் மற்றும் வறுத்து வைத்தவற்றையும் சேர்த்து அரவை மெஷினில் நைஸாக அரைத்துக் வைத்துக் கொள்ளவும்.
கஞ்சி போட:
ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் 2 டேபிள்ஸ்பூன் மாவு போட்டு நன்கு கலந்து கொள்ளவும்.
கட்டி இல்லாமல் இருக்கணும்.
பிறகு அடுப்பில் வைத்து கைவிடாமல் கிளறவும்.
சில நிமிடங்களில் இது கெட்டியாக வெந்துவிடும்.
இதனுடன் சர்க்கரை மற்றும் பால் கலந்து கொடுக்கவும்.
நல்லா பசி தாங்கும் .
குறிப்பு: 1 . அனைத்து தானியங்களும் கலந்திருப்பதால் குழந்தை ஆரோக்கியமாக வளரத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறது. குழந்தைக்கு எளிதில் ஜீரணம் ஆகும். 4 மாதம் முதல் 2 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு கூட இதைக் கொடுக்கலாம்.
பெரியவர்களும் குடிக்கலாம்.
2 . வேண்டுமானால் கஞ்சி போடாமல் உருண்டை செய்யலாம். இந்த பொடி இல் கொஞ்சம் நெய் விட்டு சர்க்கரை சேர்த்து உருண்டை செய்தும சாப்பிடலாம்
3 . ஒருவேளை முளைவிட்ட தானியங்கள் நன்றாக காயவில்லை என்று நினைத்தீர்கள் என்றால் அவற்றையும் வறட்டு வாணலி இல் வறுத்துக்கொள்ளவும்.
தேவையானவை:
கேழ்வரகு - கால் கிலோ
கொள்ளு, கோதுமை, சோளம், சிவப்பு அரிசி - தலா இரண்டு டேபிள் ஸ்பூன்
பொட்டுக்கடலை, கம்பு - தலா நாலு டேபிள் ஸ்பூன்
முந்திரி, பாதாம் - தலா 10
ஏலக்காய் - 5
பார்லி - 4 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை தேவைக்கு ஏற்ப
செய்முறை:
கேழ்வரகு, கொள்ளு, கோதுமை, கம்பு ஆகியவற்றை ஊற வைத்து தண்ணீரை வடிகட்டி, ஒரு துணியில் போட்டு முடிந்து வைத்தால் காலையில் முளைவிட்டிருக்கும்.
முளைகட்டிய தானியங்களை நிழலில் உலர்த்தவும்.
வெறுமன வாணலியில் பொட்டுக்கடலை, சோளம், பாதாம், முந்திரி, சிவப்பு அரிசி, பார்லி, ஏலக்காய் எல்லாவற்றையும் தனித்தனியாக நன்கு ஆனால் காந்தாமல் வறுக்கவும்.
முளைகட்டிய தானியங்களை நிழலில் உலர்த்தவும்.
முளை விட்ட தானியங்கள் மற்றும் வறுத்து வைத்தவற்றையும் சேர்த்து அரவை மெஷினில் நைஸாக அரைத்துக் வைத்துக் கொள்ளவும்.
கஞ்சி போட:
ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் 2 டேபிள்ஸ்பூன் மாவு போட்டு நன்கு கலந்து கொள்ளவும்.
கட்டி இல்லாமல் இருக்கணும்.
பிறகு அடுப்பில் வைத்து கைவிடாமல் கிளறவும்.
சில நிமிடங்களில் இது கெட்டியாக வெந்துவிடும்.
இதனுடன் சர்க்கரை மற்றும் பால் கலந்து கொடுக்கவும்.
நல்லா பசி தாங்கும் .
குறிப்பு: 1 . அனைத்து தானியங்களும் கலந்திருப்பதால் குழந்தை ஆரோக்கியமாக வளரத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறது. குழந்தைக்கு எளிதில் ஜீரணம் ஆகும். 4 மாதம் முதல் 2 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு கூட இதைக் கொடுக்கலாம்.
பெரியவர்களும் குடிக்கலாம்.
2 . வேண்டுமானால் கஞ்சி போடாமல் உருண்டை செய்யலாம். இந்த பொடி இல் கொஞ்சம் நெய் விட்டு சர்க்கரை சேர்த்து உருண்டை செய்தும சாப்பிடலாம்
3 . ஒருவேளை முளைவிட்ட தானியங்கள் நன்றாக காயவில்லை என்று நினைத்தீர்கள் என்றால் அவற்றையும் வறட்டு வாணலி இல் வறுத்துக்கொள்ளவும்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை !
நேற்று கஞ்சீவரம் இட்லி
இன்று மல்டி கிரெயின் கஞ்சி
அடுத்தது என்னம்மா?
பகிர்வுக்கு நன்றிம்மா.
இன்று மல்டி கிரெயின் கஞ்சி
அடுத்தது என்னம்மா?
பகிர்வுக்கு நன்றிம்மா.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ராகி தித்திப்பு தோசை
தேவையானவை:
ஒரு கப் கேழ்வரகு மாவு (முளைகாட்டிய கேழ்வரகை அரைத்தது )
அரை கப் வெல்லம்
கொஞ்சம் ஏலக்காய் பொடி
4 டீஸ்பூன் - அரிசி மாவு
ஒரு கப் நெய் - தோசை வார்க்க
நாலு டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல் - தேவையானால்
செய்முறை:
வெல்லத்தைப் பொடித்து கொஞ்சம் தண்ணீர் விட்டுக் கரைக்கவும்.பின் வடிகட்டவும்.
ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, அரிசி மாவு, ஏலப்பொடி சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
தேங்காய் துருவலை போடவும்.
தோசைக்கல்லில் நெய் விட்டு, இந்த மாவை தோசையாக வார்த்து எடுக்கவும்.
ரொம்ப சுவையாக இருக்கும் இந்த தோசை
ஒரு கப் கேழ்வரகு மாவு (முளைகாட்டிய கேழ்வரகை அரைத்தது )
அரை கப் வெல்லம்
கொஞ்சம் ஏலக்காய் பொடி
4 டீஸ்பூன் - அரிசி மாவு
ஒரு கப் நெய் - தோசை வார்க்க
நாலு டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல் - தேவையானால்
செய்முறை:
வெல்லத்தைப் பொடித்து கொஞ்சம் தண்ணீர் விட்டுக் கரைக்கவும்.பின் வடிகட்டவும்.
ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, அரிசி மாவு, ஏலப்பொடி சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
தேங்காய் துருவலை போடவும்.
தோசைக்கல்லில் நெய் விட்டு, இந்த மாவை தோசையாக வார்த்து எடுக்கவும்.
ரொம்ப சுவையாக இருக்கும் இந்த தோசை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை !
யினியவன் wrote:நேற்று கஞ்சீவரம் இட்லி
இன்று மல்டி கிரெயின் கஞ்சி
அடுத்தது என்னம்மா?
பகிர்வுக்கு நன்றிம்மா.
நன்றி இனியவன் நான் இப்போதான் அந்த ஹேமாவின் பதிவை பார்த்தேன் அதுதான் போட்டேன் இன்னும் நிறைய இருக்கு போட, எனக்குத்தான் டைம் இல்லை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பன்சி ரவா உப்புமா
தேவையானவை:
கால் கிலோ பன்சி ரவா அதாவது சோள ரவை
கேரட், குடமிளகாய், பெரிய வெங்காயம்,உருளைகிழங்கு , பீன்ஸ் என உங்களுக்கு பிடித்த கறிகாய்கள்- எல்லாமாக நறுக்கினது ஒரு பெரிய கப்
தாளிக்க -கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு மற்றும் கடலை பருப்பு
காரத்துக்கு பச்சை மிளகாய்
தேவையானால் -எலுமிச்சம்பழம் - அரை மூடி
கொஞ்சம் கொத்தமல்லி (நறுக்கியது)
உப்புமா செய்ய நெய்யும் எண்ணெய் யும் கலந்து வைத்துக்கொள்ளவும்
உப்பு
செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு ,கறிவேப்பிலை, பச்சைமிளகாய் தாளித்து, அதனுடன் வெங்காயம், கேரட், குடமிளகாய், பீன்ஸை நறுக்கி சேர்த்து வதக்கவும்.
ஒரு பங்கு ரவைக்கு மூன்று பங்கு தண்ணீர் எடுத்துக் கொண்டு, ஒரு பத்திரத்தில் கொதிக்க விடவும்.
காய்கறிகள் வதங்கினதும் ரவையை போட்டு நன்கு வறுக்கவும்.
ரவை நன்கு வறுபட்டதும் கொதித்துக் கொண்டிருக்கும் தண்ணிரை விடவும்.
உப்பு போடவும்.
நன்கு கிளறி அடுப்பை மிதமான தீயில் வைத்து, மூடி வைத்தால் நன்கு வெந்து விடும்.
தேவையானால் இதில் எலுமிச்சம்பழம் பிழிந்து, கொத்தமல்லி தூவி இறக்கவும்.
இது, எளிதில் ஜீரணமாகக் கூடிய டிபன் வகைகளில் ஒன்று. எளிதாக தயாரிக்கக் கூடியதும் கூட!
இங்கு பெங்களூரில் இந்த ரவை நிறைய கிடைக்கிறது
கால் கிலோ பன்சி ரவா அதாவது சோள ரவை
கேரட், குடமிளகாய், பெரிய வெங்காயம்,உருளைகிழங்கு , பீன்ஸ் என உங்களுக்கு பிடித்த கறிகாய்கள்- எல்லாமாக நறுக்கினது ஒரு பெரிய கப்
தாளிக்க -கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு மற்றும் கடலை பருப்பு
காரத்துக்கு பச்சை மிளகாய்
தேவையானால் -எலுமிச்சம்பழம் - அரை மூடி
கொஞ்சம் கொத்தமல்லி (நறுக்கியது)
உப்புமா செய்ய நெய்யும் எண்ணெய் யும் கலந்து வைத்துக்கொள்ளவும்
உப்பு
செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு ,கறிவேப்பிலை, பச்சைமிளகாய் தாளித்து, அதனுடன் வெங்காயம், கேரட், குடமிளகாய், பீன்ஸை நறுக்கி சேர்த்து வதக்கவும்.
ஒரு பங்கு ரவைக்கு மூன்று பங்கு தண்ணீர் எடுத்துக் கொண்டு, ஒரு பத்திரத்தில் கொதிக்க விடவும்.
காய்கறிகள் வதங்கினதும் ரவையை போட்டு நன்கு வறுக்கவும்.
ரவை நன்கு வறுபட்டதும் கொதித்துக் கொண்டிருக்கும் தண்ணிரை விடவும்.
உப்பு போடவும்.
நன்கு கிளறி அடுப்பை மிதமான தீயில் வைத்து, மூடி வைத்தால் நன்கு வெந்து விடும்.
தேவையானால் இதில் எலுமிச்சம்பழம் பிழிந்து, கொத்தமல்லி தூவி இறக்கவும்.
இது, எளிதில் ஜீரணமாகக் கூடிய டிபன் வகைகளில் ஒன்று. எளிதாக தயாரிக்கக் கூடியதும் கூட!
இங்கு பெங்களூரில் இந்த ரவை நிறைய கிடைக்கிறது
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மல்டி கிரைன் சுண்டல்
தேவையானவை:
பாசிப்பயறு, கொண்டைக்கடலை, கொள்ளு, வேர்க்கடலை (நான்கும் முளைகட்டியது) - தலா ஒரு கப்
கேரட், தேங்காய் துருவல் - தலா ஒரு கப்
நறுக்கிய வெள்ளரி - ஒரு கப்
தனியா, கடலைப்பருப்பு, எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன்
வத்த மிளகாய் - இரண்டு அல்லது முன்று
நறுக்கிய கொத்தமல்லி - கொஞ்சம்
உப்பு
செய்முறை:
முளைகட்டிய நான்கு பயறுகளையும் உப்பு சேர்த்து குக்கரில் வேக வைத்து, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும்
வாணலில் துளி எண்ணெய் விட்டு, துருவிய தேங்காய் கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல் , தனியாவைப் போட்டு வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் பொடிக்கவும்.
வேகவைத்தவற்றை தண்ணீர் வடித்து வைத்துக்கொலல்வும்.
வாணலி இல் கொஞ்சம் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளிக்கவும்.
வெந்த , வடித்த பயறுகளை போடவும்.
மிக்ஸியில் பொடித்ததைப் போட்டு, கேரட் துருவல், வெள்ளரித் துண்டுகள், நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து ஒரு வதக்கு வதக்கவும். '
மல்டி கிரைன் சுண்டல் ரெடி
இது புரோட்டீன் சத்து நிறைந்தது; உடம்புக்கு ரொம்ப நல்லது
குறிப்பு : இதில் சொன்ன பயறுகள் தான் உபயோகிக்கனும் என்று இல்லை; உங்களுக்கு விருப்பமானவற்றையும் போட்டு இதே முறை இல் செய்யலாம்.
பாசிப்பயறு, கொண்டைக்கடலை, கொள்ளு, வேர்க்கடலை (நான்கும் முளைகட்டியது) - தலா ஒரு கப்
கேரட், தேங்காய் துருவல் - தலா ஒரு கப்
நறுக்கிய வெள்ளரி - ஒரு கப்
தனியா, கடலைப்பருப்பு, எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன்
வத்த மிளகாய் - இரண்டு அல்லது முன்று
நறுக்கிய கொத்தமல்லி - கொஞ்சம்
உப்பு
செய்முறை:
முளைகட்டிய நான்கு பயறுகளையும் உப்பு சேர்த்து குக்கரில் வேக வைத்து, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும்
வாணலில் துளி எண்ணெய் விட்டு, துருவிய தேங்காய் கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல் , தனியாவைப் போட்டு வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் பொடிக்கவும்.
வேகவைத்தவற்றை தண்ணீர் வடித்து வைத்துக்கொலல்வும்.
வாணலி இல் கொஞ்சம் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளிக்கவும்.
வெந்த , வடித்த பயறுகளை போடவும்.
மிக்ஸியில் பொடித்ததைப் போட்டு, கேரட் துருவல், வெள்ளரித் துண்டுகள், நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து ஒரு வதக்கு வதக்கவும். '
மல்டி கிரைன் சுண்டல் ரெடி
இது புரோட்டீன் சத்து நிறைந்தது; உடம்புக்கு ரொம்ப நல்லது
குறிப்பு : இதில் சொன்ன பயறுகள் தான் உபயோகிக்கனும் என்று இல்லை; உங்களுக்கு விருப்பமானவற்றையும் போட்டு இதே முறை இல் செய்யலாம்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேங்காய்ப் பால் - தினை மாவு அப்பம்
சமையல் குறிப்பு க்கு முன் தினை பற்றிய ஒரு சின்ன விளக்கம் ஆங்கிலத்தில் இது மில்லட் எனும் வகையில் வகைப்படுத்தப்பட்டுள்ள தானியமாகும். ஆங்கிலத்தில் மில்லட் என்பது சோளம், கம்பு கேப்பை (கேழ்வரகு) போன்ற தானிய வகையைக் குறிப்பதாகும்.
நன்றி : விக்கி பிடியா
தேவையானவை:
தேங்காய் - அரை மூடி
நெய் அப்பம் பொரிக்க
தினை - 200 கிராம்
பொடித்த வெல்லம் - ஒரு கப்
வாழைப்பழம் - 1
ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ளவும்.
தினையை வறுத்து மாவாக அரைக்கவும்.
வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி, அதனுடன் தேங்காய்ப் பால், தினை மாவு, ஏலக்காய்த்தூள், வாழைப்பழம் சேர்த்து, நன்கு கெட்டியாகக் கரைக்கவும்.
அப்பக்காரலில் நெய் விட்டு , ஒவ்வொரு குழியிலும் மாவை ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, வேக வைத்து எடுக்கவும்.
நன்றி : விக்கி பிடியா
தேவையானவை:
தேங்காய் - அரை மூடி
நெய் அப்பம் பொரிக்க
தினை - 200 கிராம்
பொடித்த வெல்லம் - ஒரு கப்
வாழைப்பழம் - 1
ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ளவும்.
தினையை வறுத்து மாவாக அரைக்கவும்.
வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி, அதனுடன் தேங்காய்ப் பால், தினை மாவு, ஏலக்காய்த்தூள், வாழைப்பழம் சேர்த்து, நன்கு கெட்டியாகக் கரைக்கவும்.
அப்பக்காரலில் நெய் விட்டு , ஒவ்வொரு குழியிலும் மாவை ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, வேக வைத்து எடுக்கவும்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராகி ரொட்டி
தேவையானவை :
கேழ்வரகு மாவு ஒரு கப்
பொடியாக நறுக்கின வெங்காயம் ஒரு கப்
கொஞ்சம் கொத்துமல்லி பொடியாக நறுக்கவும்.
பொடியாக நறுக்கின பச்சை மிளகாய்
உப்பு
சர்க்கரை ஒரு சிட்டிகை
எண்ணெய்
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் எல்லாவற்றையும் போட்டு நன்கு கலக்கவும்.
கொஞ்சம் தண்ணீர் விட்டு பிசையவும்.
அரஞ்சு பழ சைசில் உருண்டைகளாக்கவும்.
வாழை இலை அல்லது பிளாஸ்டிக் பேப்பர் இல் வைத்து துளி எண்ணெய் தடவவும்.
ஒரு உருண்டையை இலை இன் மேல் வைத்து ரொட்டி போல தட்டவும்.
மெல்ல எடுத்து அடுப்பில் வைத்திருக்கும் தோசை கல்லில் போடவும்.
எண்ணெய் விட்டு இரு புறமும் நன்கு வெந்ததும் எடுக்கவும்.
சுவையான ராகி ரொட்டி தயார்.
குறிப்பு : இதை தேங்காய் போட்டும் செய்யலாம்
முருங்கை இலை போட்டும் செய்யலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு ரொம்ப நல்லது இது என்ன, கலர் கொஞ்சம் கம்மியாய் இருக்கும் அவ்வளவுதான்
கேழ்வரகு மாவு ஒரு கப்
பொடியாக நறுக்கின வெங்காயம் ஒரு கப்
கொஞ்சம் கொத்துமல்லி பொடியாக நறுக்கவும்.
பொடியாக நறுக்கின பச்சை மிளகாய்
உப்பு
சர்க்கரை ஒரு சிட்டிகை
எண்ணெய்
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் எல்லாவற்றையும் போட்டு நன்கு கலக்கவும்.
கொஞ்சம் தண்ணீர் விட்டு பிசையவும்.
அரஞ்சு பழ சைசில் உருண்டைகளாக்கவும்.
வாழை இலை அல்லது பிளாஸ்டிக் பேப்பர் இல் வைத்து துளி எண்ணெய் தடவவும்.
ஒரு உருண்டையை இலை இன் மேல் வைத்து ரொட்டி போல தட்டவும்.
மெல்ல எடுத்து அடுப்பில் வைத்திருக்கும் தோசை கல்லில் போடவும்.
எண்ணெய் விட்டு இரு புறமும் நன்கு வெந்ததும் எடுக்கவும்.
சுவையான ராகி ரொட்டி தயார்.
குறிப்பு : இதை தேங்காய் போட்டும் செய்யலாம்
முருங்கை இலை போட்டும் செய்யலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு ரொம்ப நல்லது இது என்ன, கலர் கொஞ்சம் கம்மியாய் இருக்கும் அவ்வளவுதான்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பாஜ்ரா ரொட்டி- கம்பு ரொட்டி
தேவையானவை :
கம்பு மாவு ஒரு கப்
உப்பு
நெய்
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் கம்பு மாவு மற்றும் உப்புபோட்டு நன்கு கலக்கவும்.
கொஞ்சம் தண்ணீர் விட்டு பிசையவும்.
அரஞ்சு பழ சைசில் உருண்டைகளாக்கவும்.
ஈர துணியில் ஒரு உருண்டையை வைத்து ரொட்டி போல தட்டவும்.
மெல்ல எடுத்து அடுப்பில் வைத்திருக்கும் தோசை கல்லில் போடவும்.
நெய் விட்டு இரு புறமும் நன்கு வெந்ததும் எடுக்கவும்.
சுவையான கம்பு ரொட்டி தயார்.
குறிப்பு : இந்த மாவு கொஞ்சம் கூட 'பிசுக்கே' இல்லாமல் இருக்கும். விண்டு விண்டு வரும், எனவே சிறிய ரொட்டிகள் செய்வது நல்லது. நிறைய நெய் போடணும், ஏன் என்றால் இது ரொம்ப 'சூடு'. இது நாங்க ராஜஸ்தானில் சாப்பிட்ட பக்குவம். நம்மூரில் எப்படி செய்வார்கள் என்று யாராவது தெரிந்தவர்கள் எழுதுங்கோ
கம்பு மாவு ஒரு கப்
உப்பு
நெய்
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் கம்பு மாவு மற்றும் உப்புபோட்டு நன்கு கலக்கவும்.
கொஞ்சம் தண்ணீர் விட்டு பிசையவும்.
அரஞ்சு பழ சைசில் உருண்டைகளாக்கவும்.
ஈர துணியில் ஒரு உருண்டையை வைத்து ரொட்டி போல தட்டவும்.
மெல்ல எடுத்து அடுப்பில் வைத்திருக்கும் தோசை கல்லில் போடவும்.
நெய் விட்டு இரு புறமும் நன்கு வெந்ததும் எடுக்கவும்.
சுவையான கம்பு ரொட்டி தயார்.
குறிப்பு : இந்த மாவு கொஞ்சம் கூட 'பிசுக்கே' இல்லாமல் இருக்கும். விண்டு விண்டு வரும், எனவே சிறிய ரொட்டிகள் செய்வது நல்லது. நிறைய நெய் போடணும், ஏன் என்றால் இது ரொம்ப 'சூடு'. இது நாங்க ராஜஸ்தானில் சாப்பிட்ட பக்குவம். நம்மூரில் எப்படி செய்வார்கள் என்று யாராவது தெரிந்தவர்கள் எழுதுங்கோ
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» Krishnamma's recipe menus - ஓட்ஸ் இல் பலவகை உணவுகள்
» சிறு தானியங்கள்
» சீரான ஆரோக்கியத்திற்கு சிறு தானியங்கள்
» உடலுக்கு நலம் தரும் சிறு தானியங்கள்
» புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo
» சிறு தானியங்கள்
» சீரான ஆரோக்கியத்திற்கு சிறு தானியங்கள்
» உடலுக்கு நலம் தரும் சிறு தானியங்கள்
» புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo
Page 1 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|