ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீர்க்க சுமங்கலி பவ!

3 posters

Go down

 தீர்க்க சுமங்கலி பவ! Empty தீர்க்க சுமங்கலி பவ!

Post by சிவா Mon Oct 08, 2012 12:38 pm

 தீர்க்க சுமங்கலி பவ! E_1349333054

ஒரு சமயம் குருஷேத்திர யுத்த களத்தில், "பிரியத்தினால் அவர்களை கொல்லாமல் பீஷ்மர் விட்டு வைத்திருப்பதாகச் சொல்லி திட்டினான் துரியோதனன்.

அதைப் பொறுக்க முடியாத பீஷ்மர், துரியோதனனிடம் சொன்னார்.

""துரியோதனா அதிகம் பேசாதே! இத்துடன் உன் பேச்சை நிறுத்திக் கொள். நாளை சூரியன் அஸ்தமனம் ஆவதற்குள் பாண்டவர்கள் ஐவரையும் கொன்று உன்னைச் சந்தோஷப்படுத்தி இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருகிறேன்,'' என்றார்.

அவருடைய பயங்கர சபதம் கவுரவ அணியினருக்கு தெரிந்தபோது, அவர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர். இது பாண்டவர்களுக்கும் தெரிய வந்தது.

"பாண்டவர் அனைவரையும் காப்பேன்' என்று அதற்கு முன்பே, சகாதேவனிடம் வாக்குறுதி தந்திருந்தார் கிருஷ்ணர்.

பீஷ்மர் சொல் மாறுகிறவர் அல்ல. ஆகையினால், பீஷ்மரின் சபதத்தை யுக்தியால் முறியடிக்க வேண்டும் என்று முடிவு செய்தார் கிருஷ்ணர். அவர் பாஞ்சாலியிடம் சென்று, ""என்னுடன் வா!'' என்று அவளைத் தனியே அழைத்துச் சென்றார்.

"இப்போது நாம் ஒருவர் கண்ணிலும் படாமல் பீஷ்மர் இருக்கும் பாசறைக்குப் போகப் போகிறோம். நீ பாஞ்சாலி என்று வெளியிடாமல், பீஷ்மரை இருளிலேயே வணங்கு.

உன் வளையல் ஒலி கேட்டவுடன் பீஷ்மர், கவுரவர் தரப்பிலிருந்து யாரோ ஒரு ராஜ ஸ்திரீதான் வந்திருக்க வேண்டும் என்று கருதி அபயம் அளிக்கும் நோக்கத்துடன், "தீர்க்க சுமங்கலியாக இரு அம்மா!' என்று வாழ்த்துவார். அப்படி அவர் வாழ்த்தி விட்டால், பாண்டவர்களைக் கொல்ல முடியாது!'' என்று சொல்லி விட்டு, அவளை அழைத்துச் சென்றார் கிருஷ்ணர்.

பீஷ்மரின் பாசறைக்குள் காலடி எடுத்து வைத்தாள் அவள். செருப்பு வேறு சரக்... சரக் என்று சப்தமிட்டது. இந்தச் சப்தம் கேட்டால், உடனே பீஷ்மர் "யாரது?' என்று கேள்வி கேட்பார். இவள் பாஞ்சாலி என்ற உண்மையை சொல்ல நேரிடும். அப்படி உண்மையை சொன்னால் தன்னுடைய திட்டம் தவிடு பொடியாகி விடும் என்று உணர்ந்த கிருஷ்ணர், ""செருப்புகளைக் கழற்றி விடு!'' என்று ஜாடை செய்தார். பாஞ்சாலி கிருஷ்ணர் ஆணைக்குக் கட்டுப்பட்டாள். ஆனால், அந்தச் செருப்புகளை என்ன செய்வது? அங்கேயே விட்டாலும் காரியம் கெட்டு விடுமே, என்று தடுமாறினாள் பாஞ்சாலி.

ஆனால், கிருஷ்ணர், சலங்கைகள் கோர்க்கப்பட்டிருந்த அந்தச் செருப்புகளைக் கீழே குனிந்து எடுத்து அதன் சலங்கைகள் ஒலித்து விடாதபடி தன் மார்போடு அணைத்துக் கொண்டார்.

பாஞ்சாலி உள்ளே சென்றாள். பீஷ்மரின் பாதத்தில் வீழ்ந்து பணிந்தாள்.

"தீர்க்க சுமங்கலியாக இரு குழந்தாய்!'' என்று வாழ்த்தினார் பீஷ்மர்.

ஆனால், பாஞ்சாலி மீண்டும், மீண்டும் வணங்கினாள். ஒவ்வொரு முறை வணங்கும் போதும், "தீர்க்க சுமங்கலியாக இரு!' என்று சொல்ல வேண்டியது மரபாதலால் அவர் அவ்விதமே சொன்னார்.

இவ்வாறு ஐந்து நமஸ்காரங்களை செய்தவுடன், அவர் மனம் திடுக்கிட்டது. "வந்திருப்பது யார் என்று தெரியாமல், ஆசி வழங்கி விட்டோமோ!' என்று யோசித்தார்.

ஒருவேளை பாஞ்சாலியாக இருந்தால்...?

உடனே அவர், ""யார் நீ... முதலில் அதைச் சொல்,'' என்றார்.

"நான்தான் பாஞ்சாலி!' என்றாள் அவள்.

மீண்டும் திடுக்கிட்டார் பீஷ்மர் .

"என்னுடைய சபதத்தைத் தெரிந்து கொண்டு, உன் கணவன்மார் உயிரைக் காக்கச் சாமர்த்தியமாக யுக்தி செய்து என் சபதத்தை முறியடித்து விட்டாய். நீ பெண்ணாக இருந்ததால் தப்பினாய். பெண்களை நான் எப்போதும் தண்டிப்பது இல்லை. ஆகவே, உன்னை எவன் இங்கே அழைத்து வந்தானோ, அவனை நான் தண்டிக்கிறேன்!'' என்று கூறியவராகத் தீப்பந்தத்தைக் கொளுத்திக் கொண்டு பாசறைக்கு வெளியே வந்தார்.

வெளியே மழை பெய்து கொண்டிருந்தது. அந்த மழையில் பாஞ்சாலியின் செருப்புகளை மார்புடன் அணைத்து, அவை நனையாமல் இருக்கத் தன் பீதாம்பரத்தால் அதைப் போர்த்திய கிருஷ்ணர் புன்னகையுடன் நின்றார்.

பீஷ்மர் திடுக்கிட்டார்...

அங்கே கிருஷ்ணரிடம் ரட்சிக்கும் தன்மை மட்டும்தான் இருந்தது. அவரிடம் அகங்காரம் இல்லை. தான் என்கின்ற கர்வம் இல்லை. உண்மையான ஒரு தேச பக்தன் என்ற தொண்டு உள்ளமே இருந்தது.

தேச பக்தன் என்பவன் கிருஷ்ணரைப் போல் இருக்க வேண்டும். ஒருவனைக் காப்பாற்றும் எண்ணம் கொண்டவன் கிருஷ்ணரைப் போல் இருக்க வேண்டும்.

சிறுவர் மலர்


 தீர்க்க சுமங்கலி பவ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 தீர்க்க சுமங்கலி பவ! Empty Re: தீர்க்க சுமங்கலி பவ!

Post by யினியவன் Tue Oct 09, 2012 12:53 pm

சாணக்கியத்தனம் சண்டித்தனத்தினும்
வெற்றி பயக்கும் என உரைக்கும் கதை.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 தீர்க்க சுமங்கலி பவ! Empty Re: தீர்க்க சுமங்கலி பவ!

Post by கரூர் கவியன்பன் Tue Oct 09, 2012 3:09 pm

சாதுரியத்தை உணர்த்தும் கதை.
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

 தீர்க்க சுமங்கலி பவ! Empty Re: தீர்க்க சுமங்கலி பவ!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum