ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவாடானை அருகே கிறிஸ்தவ கோவில் விழாவில் நடந்த முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு

2 posters

Go down

 திருவாடானை அருகே கிறிஸ்தவ கோவில் விழாவில் நடந்த முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு Empty திருவாடானை அருகே கிறிஸ்தவ கோவில் விழாவில் நடந்த முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு

Post by சிவா Mon Oct 08, 2012 11:59 am

திருவாடானை அருகே, கிறிஸ்தவ கோவில் விழாவில் ஒரு பிரிவினர் நடத்திய முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

மறை மாவட்ட வெள்ளி விழா

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா ஓரிïரில் புனித அருளானந்தர் ஆலயம் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று கிறிஸ்தவர்கள் யாத்திரையாக வந்து ஜெபிப்பது வழக்கம். மதுரை உயர் மறை மாவட்டத்தில் இருந்து சிவகங்கை மறைமாவட்டம் உருவாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததற்கான வெள்ளிவிழா, புனித ஓரிïர் ஆலயத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் மதுரை உயர் மறை மாநில பேராயர் பீட்டர்பெர்னாண்டோ மற்றும் பல்வேறு மறை மாவட்ட ஆயர்கள் உள்பட ஏறத்தாழ 25 ஆயிரம் பேர் இந்த விழாவில் கலந்துகொள்ள வந்திருந்தனர்.

முற்றுகை போராட்டம்

நேற்று காலை ஆலயம் முன்பு திருப்பலிக்காக அனைவரும் அமர்ந்திருந்தனர். 10.30 மணிக்கு திருப்பலியை சிவகங்கை மறைமாவட்ட ஆயர் சூசைமாணிக்கம் தொடங்கியபோது மேடையின் அருகே கிறிஸ்தவர்கள் கூட்டமைப்பின் தலைவர் ஸ்டீபன்ராஜ் தலைமையில் 400 பேர் திரண்டு வந்து முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது..

கிறிஸ்தவர்கள் கூட்டமைப்பு, கிறிஸ்தவ விடுதலை இயக்கம், உழைக்கும் மக்கள் உரிமை இயக்கம், பெண்கள் இயக்கம் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த அவர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்தும், கறுப்பு கொடியுடனும் வந்திருந்தனர்.

திருப்பலி நிறுத்தம்

அவர்கள் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த குரு மாணவரை ஏற்று குருபட்டம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பதற்றநிலை உருவானதால் திருப்பலி நிறுத்தப்பட்டது. மீண்டும் திருப்பலி நிகழ்ச்சியை தொடங்க முயன்றபோது பந்தலில் அமைக்கப்பட்டு இருந்த டிïப்லைட், ஒலிபெருக்கி ஆகியவற்றை சிலர் அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டனர்.

இதனால் விழாவுக்கு வந்திருந்தவர்கள் அங்குமிங்கும் சிதறி ஓடினர். சிலர் திருப்பலி மேடையை நோக்கி செருப்புகளை வீசி எறிந்தனர். ரகளையின்போது ஒலிபெருக்கி விழுந்ததில் ஒருவர் படுகாயம் அடைந்தார். உடைந்த டிïப்லைட் குத்தியதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காயம் அடைந்தார். இதையடுத்து ஆயர்கள், அருட்தந்தையர்கள் பாதுகாப்பாக அழைத்துச்செல்லப்பட்டனர். அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

போராட்டம் ஏன்?

முன்னதாக வெள்ளையபுரம் அருகே மண்டலகோட்டை கிராமத்தின் அருகே பெண்கள் உள்பட ஆயர்களுக்கு கறுப்பு கொடி காட்டினர். இதனால் அங்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்த சம்பவம் குறித்து சிவகங்கை மறைமாவட்ட ஆயர் சூசைமாணிக்கம் கூறியதாவது:-

திருச்சி தூயபவுல் குருத்துவ கல்லூரியில் மதுரை உயர் மறை மாநிலத்துக்கு உட்பட்ட 6 பேர் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டதால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.

நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களில் ஒருவர் சிவகங்கை மறைமாவட்டத்தை சேர்ந்த குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர். இதற்காக கடந்த ஒரு ஆண்டாக அந்த அமைப்பினர் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.

புண்படுத்திவிட்டனர்

அவர்களின் கோரிக்கையின் அடிப்படையில் 2 ஆண்டுகள் காத்திருந்த பின்னர் வேறு சபையில் பணிபுரிய பரிந்துரை கடிதம் தரப்படும் என எழுத்து பூர்வமாக கடிதம் கொடுத்தோம். ஆனால், தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் அவர்கள், தற்போது இந்த விழாவிலும் புனிதத்தன்மையை சீர்குலைத்து, அனைவரையும் புண்படுத்திவிட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


 திருவாடானை அருகே கிறிஸ்தவ கோவில் விழாவில் நடந்த முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 திருவாடானை அருகே கிறிஸ்தவ கோவில் விழாவில் நடந்த முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு Empty Re: திருவாடானை அருகே கிறிஸ்தவ கோவில் விழாவில் நடந்த முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு

Post by அசுரன் Mon Oct 08, 2012 12:14 pm

இது என்ன விபரீதம்... குருத்துவம் பயல சென்றவர்கள் குற்ற செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது... கடவுள் பணி செய்ய செல்வது என்பது எல்லாராலும் முடியாத ஒன்று.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum