ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு

+2
Manik
மீனு
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு Empty தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு

Post by மீனு Sun Oct 11, 2009 4:44 am

1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு

எழுத்துக்களெல்லாம் அகரத்தை முதலாக உடையன: அதுபோல உலகம் கடவுளை முதலாக உடையது.

2. கற்றதனால் ஆய பயன்என்கொல் வாலறிவன் நற்றாள் தொழா அர் எனின்

மெய்யறிவு உடைய கடவுளை வணங்காராகில் கற்றதனாற் பயனில்லை

3. மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்.

கடவுளடிகளைச் சேர்ந்தவர்கள் மோட்சத்தில் வாழ்வார்கள்.

4. வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல.

கடவுளடிகளைச் சேர்ந்தவர்களுக்குப் பிறவித் துன்பங்கள் இல்லை.

5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

கடவுளுடைய கீர்த்தியை விரும்பினவரிடத்து நல்வினை தீவினை என்னும் இரு வினைகளும் அடையா.

6. பொறிவாயில் ஐந்துஅவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்.

கடவுள் வழியிலே நின்றவர்கள் நீடூழி வாழ்வார்கள்.

7. தனக்குஉவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது.

கடவுளுடைய திருவடிகளைச் சேராதவர்களுக்கு மனக்கவலை நீக்குதல் இல்லை.

8. அறஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் பிறஆழி நீந்தல் அரிது.

கடவுளடிகளைச் சேராதார்க்குப் பொருளும் இன்பமுமாகிய கடல்களைக் கடத்தல் கூடாது.

9. கோள்இல் பொறியில் குணம்இலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை.

கடவுள் பாதங்களை வணங்காத தலை பயன்படாது.

10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்.

கடவுள் பாதங்களைச் சேர்ந்தவர்கள் பிறவிக்கடலைக் கடப்பார்கள். சேராதவர்கள் பிறவிக்கடலைக் கடக்க மாட்டார்கள்.


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு Empty Re: தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு

Post by Manik Sun Oct 11, 2009 12:59 pm

தினம் ஒரு குறள் மிகவும் நல்ல விசயம் வாழ்க்கையை நெறிமுறையோடு கடைப்பிடிக்க குறள் மிகவும் அவசியாமான ஒன்று


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு Empty Re: தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு

Post by mdkhan Sun Oct 11, 2009 1:06 pm

தினம் ஒரு "குறள்"

மீனுவின் ஆக்கங்களில் அழகுக்கு அழகு சேர்க்கும் பூவினால் கோர்க்கப்படும் மாலை இது
[You must be registered and logged in to see this image.]

தொடர வாழ்த்துகிறேன்.


[You must be registered and logged in to see this image.]
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு Empty Re: தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு

Post by மீனு Sun Oct 11, 2009 1:08 pm

நன்றிகள்..மாணிக் ..தினம் தகவல் தரும் மாணிக்...
நன்றிகள் கான்..உங்கள் ரோஸ் மாலை அழகு..பிடித்து இருக்கு..தேங்க்ஸ்..


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு Empty Re: தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு

Post by gv.raj Sun Oct 11, 2009 2:11 pm

தினமும் குறளைப்பற்றி படித்து எழுதுவீர்களா இல்லை உங்கள் மனதில் ஏற்கனவே பதிந்துள்ளீரா
gv.raj
gv.raj
பண்பாளர்


பதிவுகள் : 91
இணைந்தது : 06/07/2009

http://gvraj1969.blogspot.com/

Back to top Go down

தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு Empty Re: தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு

Post by மீனு Sun Oct 11, 2009 2:16 pm

gv.raj wrote:தினமும் குறளைப்பற்றி படித்து எழுதுவீர்களா இல்லை உங்கள் மனதில் ஏற்கனவே பதிந்துள்ளீரா

மனதில் எல்லாம் இல்லை நண்பரே..படிப்பேன் அதை தருவேன்


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு Empty Re: தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு

Post by Manik Sun Oct 11, 2009 2:27 pm

ஓ படிச்சே அதற்கான விளக்கத்தையும் கொடுக்கிறீங்களா நல்ல முன்னேற்றம்


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு Empty Re: தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு

Post by மீனு Sun Oct 11, 2009 2:32 pm

Manik wrote:ஓ படிச்சே அதற்கான விளக்கத்தையும் கொடுக்கிறீங்களா நல்ல முன்னேற்றம்

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு Empty Re: தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு

Post by மீனு Mon Oct 12, 2009 6:47 am




11. வான்நின்று உலகம் வழங்கி வருதலான் தான்அமிழ்தம் என்று உணரற் பாற்று

மழை நீங்காமற் பெய்ய உயிர்கள் நிலைபெற்று வருகையால் அம்மழை உயிர்களுக்கு அமிழ்தம்.

12. துப்பார்க்குத் துப்புஆய துப்புஆக்கித் துப்பார்க்குத் துப்புஆய தூஉம் மழை

உண்பவர்க்கு நன்மையாகிய உணவுகளை உண்டாக்கி அவ் உணவை உண்பவர்க்குத் தானும் உணவாகி நிற்பது மழை.

13. விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி.

மழை பெய்யாது பொய்க்குமாகில் உலகிற் பசியானது உயிர்களை வருத்தும்.

14. ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும் வாரி வளம்குன்றிக் கால்.

மழை வளங் குறைந்தால் பயிர் செய்ய உழவர் ஏருழார்.

15. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை.

கெடுப்பதும் கெட்டவரைக் காப்பதும் மழை.

16. விசும்பின் துளிவீழின் அல்லால்மற்று ஆங்கே பசும்புல் தலைகாண் பரிது

மழை பெய்யாவிடில் புல்லின் தலையைக் காணுதலரிது.

17. நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்துஎழிலி தான்நல்காது ஆகி விடின்.

மழை பொழியாவிட்டால் நெடிய கடலும் வளங்குறையும்.

18. சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

மழை பெய்யாவிட்டால் இவ்வுலகில் தேவர்களுக்கும் பூசை நடவாது.

19. தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் வானம் வழங்காது எனின்.

மழை பொழியாவிடில் உலகத்தில் தருமமும் தவமும் நடைபெறா.

20. நீர்இன்று அமையாது உலகுஎனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு.

எவ்வகை மேன்மையுடையோர்க்கும் நீரையல்லாமல் உலகியலானது நடவாது. அதுபோல மழையில்லாமல் நீரொழுக்கங் கிடையாது.

அன்புடன் மீனு.. [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு Empty Re: தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு

Post by மீனு Wed Oct 14, 2009 10:26 am

21. ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு.

நூல்களது துணிவானது துறந்தவர் மகிமையை மேலானது என்று விரும்பும்.

22. துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

துறந்தவர் பெருமையைச் சொல்லில், இறந்தவர்களை எண்ணிக் கொண்டது போலாகும்.

23. இருமை வகைதெரிந்து ஈண்டு அறம்பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு.

துறவறத்தைக் கொண்டவரது பெருமையே இவ்வுலகில் உயர்ந்தது.

24. உரன்என்னும் தோட்டியான் ஓர்ஐந்தும் காப்பான் வரன் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து.

ஐம்பொறிகளை ஐம்புலன்களிற் செல்லாமல் காப்பவன் மோட்ச நிலத்துக்கு வித்தாவான்.

25. ஐந்துஅவித்தான் ஆற்றல் அகல்விசும்பு உளார்கோமான் இந்திரனே சாலும் கரி.

ஐந்து இந்திரியங்களை அடக்கியவனுடைய வல்லமைக்குத் தேவேந்திரனே சாட்சி.

26. செயற்குஅரிய செய்வார் பெரியர்: சிறியர் செயற்குஅரிய செய்கலா தார்.

பெரியோர் செய்தற்கரியவைகளைச் செய்வார். சிறியோர் செய்தற்கரியவைகளைச் செய்யார்.

27. சுவைஒளி ஊறுஓசை நாற்றம்என்ற ஐந்தின் வகைதெரிவான் கட்டே உலகு

உலகமானது ஐந்து தன் மாத்திரைகளை அறிபவனிடத்தேதான்.

28. நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்.

முனிவரது மகிமையை அவர்கள் மந்திரங்களே காட்டும்.

29. குணம்என்னும் குன்றுஏறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது.

முனிவர்கள் கோபமானது கோபிக்கப்பட்டவராலே தடுத்தல் கூடாது.

30. அந்தணர் என்போர் அறவோர்மற்று எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டுஒழுக லான்.

அந்தணர் என்று சொல்லப்படுவோர் முனிவர்களே.


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு Empty Re: தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum