ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊழல் ஒழிய - தேவை மாற்றம்

2 posters

Go down

 ஊழல் ஒழிய - தேவை மாற்றம் Empty ஊழல் ஒழிய - தேவை மாற்றம்

Post by சிவா Wed Sep 26, 2012 10:41 am

 ஊழல் ஒழிய - தேவை மாற்றம் Img1120922043_1_1

மகாத்மா காந்தி என்பவரைப் பற்றி பெருமை பேசப்பட்ட இந்த தேசத்தில், நாட்டின் ஒற்றுமையைப் பற்றி மிக உயர்வாக பேசப்பட்ட ஓர் இடத்தில், மக்கள் இந்த நாட்டுக்காக வீதிகளில் தங்கள் உயிர்களை தியாகம் செய்யவும் தயாராக இருந்தார்கள். ஆனால் வெறும் ஒரே ஒரு தலைமுறைக்குப் பிறகு, நம் நாட்டின் இறையாண்மையின் தரம் மிகவும் தாழ்ந்துவிட்டது. இதை மீண்டும் உயிர்ப்பிக்க என்ன வழி? ஊழலை ஒழிக்க என்ன வழி? விளக்குகிறார் சத்குரு...


சுதந்திரப் போராட்டத்தின்போது, நம்மிடையே கடலளவு தலைவர்கள் இருந்தார்கள், ஆனால் அது வேறுவிதமான தலைமையாக இருந்தது. அப்போது மக்கள் ஒரு ஆக்கிரமிப்பு சக்திக்கு எதிராகப் போராடி வந்தனர். அப்படிப்பட்ட ஒரு தலைவருக்கு சிறந்த உதாரணமாக மகாத்மா காந்தி விளங்கினார். அவர் அற்புதமாக செயலாற்றினார்.

இப்போது இந்த நாட்டுக்கு கண்டிப்பாக வேறொரு தளத்தில் இருக்கும் தலைமை தேவை. அவர்கள் ஞானிகளாக, மகான்களாக இருக்கவேண்டும் என்று நான் சொல்லவில்லை, ஆனால் இப்போது அவர்கள் இந்த தேசத்தின் அடித்தளத்தையே அரித்து தின்று கொண்டிருக்கிறார்கள்.

இதில் அரசியல் தலைமைகளை மட்டும் குற்றம் சொல்வதில் அர்த்தமில்லை; இந்த தேசத்தின் பொதுவான இறையாண்மையே நம்ப முடியாத அளவில் கீழிறங்கிவிட்டது. நான் ஒரு சில சந்திப்புகளுக்குப் போகும்போது, மக்கள் என்னிடம், 'அரசியல்வாதிகள் அனைவருமே ஊழல்வாதிகள்' என்று சொல்கிறார்கள். அதற்கு நான் அவர்களிடம், 'அப்படிச் சொல்லாதீர்கள். இப்போது நான் உங்களிடம் ஒரு எளிய கேள்வியைக் கேட்கிறேன். உங்கள் ஊரில் வண்டியோட்டிக் கொண்டிருக்கிறீர்கள். காவல்துறை அதிகாரி யாரும் அப்போது சாலையில் இல்லை. சாலையில் சிவப்பு விளக்கு எரிகிறது. உங்களில் எத்தனை பேர் நிறுத்திச் செல்வீர்கள்? 10% பேர் கூட நிறுத்த மாட்டீர்கள். அப்படிப்பட்ட உங்களை நான் பிரதமராக ஆக்கினால், நீங்கள் எப்படிப்பட்ட பிரதமராக இருப்பீர்கள்?' என்று கேட்பேன். நம்மைப் போன்றவர்கள் தானே நமக்கு தலைவராக வாய்ப்பார்கள்.

ஆகவே இதில் அரசியல்வாதிகளை மட்டும் குறை சொல்லி பிரயோஜனமில்லை. நமது பொதுவான இறையாண்மைத் தன்மையே மிகவும் தாழ்ந்து போய்விட்டது. அறுபது, எழுபது வருடங்களுக்கு முன்னால், மகாத்மா காந்தி என்பவரைப் பற்றி பெருமை பேசப்பட்ட இந்த தேசத்தில், நாட்டின் ஒற்றுமையைப் பற்றி மிக உயர்வாக பேசப்பட்ட இடத்தில், மக்கள் இந்த நாட்டுக்காக வீதிகளில் தங்கள் உயிர்களை தியாகம் செய்யவும் தயாராக இருந்தார்கள்.

ஆனால் வெறும் ஒரே ஒரு தலைமுறை இடைவெளியில, இந்த இறையாண்மையின் தரம் மிகவும் தாழ்ந்துவிட்டது, இதை மீண்டும் உயர்த்துவதற்கு நாம் உண்மையான முயற்சி எதையும் செய்யவில்லை.
அரசியல்வாதிகளும் உங்களைப் போன்றவர்கள்தான்; அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்; நீங்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை, அவ்வளவுதான் வித்தியாசம், இல்லையா? உங்களுக்கு யாரும் வாக்களிக்க விரும்பவில்லை, சிலர் அவர்களுக்கு வாக்களிக்க விரும்பியிருக்கிறார்கள். சிலருக்கு தங்களுடைய பண்புகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைத்துள்ளது, சிலருக்குக் கிடைக்கவில்லை.

ஆகவே நாம் நம்மைப் போன்றவர்களைத்தான் தேர்ந்தெடுக்கிறோம். எப்போதும், அனைத்துக்கும் அரசியல்வாதிகளை குறை கூறுவது என்பது இந்த நாட்டில் இன்னொரு பொழுதுபோக்கு. நாம் தலைமைகளிடமிருந்து நிறைய எதிர்பார்த்தாலும், நம் தகுதிக்கேற்ற தலைவர்கள்தான் கிடைப்பார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மக்களிடையே ஒற்றுமை இல்லாததால், தலைவர்களிடையேயும் ஒற்றுமை இல்லை.

ஒவ்வொரு பெற்றோரும் தங்களது பிள்ளைகள் மனதில் விதைத்திருக்கும் ஊழலின் விளைவுதான் இது. இது முதலமைச்சரைப் பற்றியோ அல்லது பிரதமரைப் பற்றியோ அல்லது அரசாங்க ஊழியர்களைப் பற்றியோ அல்லது வேறொருவரைப் பற்றியதோ அல்ல.

'உன்னைச் சுற்றி என்ன நடந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படாதே, உன்னை மட்டும் பார்த்துக் கொள்' - இது ஒவ்வொரு பெற்றோரும், ஒவ்வொரு தாயும் தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பாலுடன் சேர்த்து ஊட்டிய ஒரு பண்பு. பெரும்பாலான குடும்பங்கள் தங்களது குழந்தைகளுக்கு இதைத்தான் கற்றுக் கொடுக்கிறார்கள் என்று நினைக்கிறேன், இல்லையா? ஆகவே ஊழல் என்பது இங்கு மிக இயல்பான ஒரு விஷயமாக இருக்கிறது.

இந்த நிலை மாற வேண்டும், ஆனால் இது ஒரே நாளில் மாறிவிடாது. முதலில் நம்மை நாம் மாற்றிக் கொண்டு, பிறகு நம் குழந்தைகளை, நாம் செய்யும் வேலைகளில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்.

இதை நாம் அனைத்து நிலைகளிலும் மாற்ற வேண்டும். இது சுலபமல்ல; இதனால் நிறைய பிரச்சனைகள் ஏற்படும், ஏனென்றால் உங்களைச் சுற்றியிருக்கும் சூழ்நிலைகள், ஒரு நாளில் லட்சம் முறை உங்களை அவற்றின் வழிகளில் உள்ளிழுத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் நாம் உண்மையிலேயே எதையாவது செய்ய வேண்டுமென்றால், நாம் நன்றாக வாழக் கூடிய ஒரு தேசத்தை உருவாக்க வேண்டுமென்றால், இதைச் செய்துதான் ஆக வேண்டும்; வேறு வழியே இல்லை.


 ஊழல் ஒழிய - தேவை மாற்றம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 ஊழல் ஒழிய - தேவை மாற்றம் Empty Re: ஊழல் ஒழிய - தேவை மாற்றம்

Post by மாணிக்கம் நடேசன் Wed Sep 26, 2012 10:53 am

ஊழலை ஓழிக்க தண்டனைகள் கடுமையாக்க வேண்டும், கயூட்டு எனப்படும் இந்த லஞ்சம் வாங்குபவர் பெற்ற தொகைக்கு ஏற்றவாறு தண்டனையும் ஏற்றதாக இருக்கவேண்டும்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum