Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மின்வெட்டு:தமிழக அமைச்சரவை இன்று முக்கிய முடிவு.....
4 posters
Page 1 of 1
மின்வெட்டு:தமிழக அமைச்சரவை இன்று முக்கிய முடிவு.....
மின் தட்டுப்பாட்டை சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று கூடி ஆலோசிக்க உள்ளது.
தமிழகத்தில் தற்போது நிலவும் மின் தட்டுப்பாடு,அதனால் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா நேற்று ஆலோசனை நடத்தினார்.
இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அரசின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், அதுபோன்ற அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில்,மின் தட்டுப்பாட்டைச் சமாளிப்பது குறித்து இன்று நடைபெற உள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
சூரிய மின்சக்தியை ஊக்குவிப்பது,அதற்கான மானியங்களை அதிகப்படுத்துவது உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்து முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், வெளிச்சந்தையில் மின்சாரம் பெறுவது போன்ற நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது
நன்றி tcn நியூஸ் .....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: மின்வெட்டு:தமிழக அமைச்சரவை இன்று முக்கிய முடிவு.....
மின்வெட்டு ஒரு பார்வை ,,,,,,,,,
கோடைக் காலம் கழிந்த பிறகும் மின்வெட்டுப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கவில்லை என்பதுடன் பவர் கட் நேரம் இன்னும் அதிகரிக்கவே தமிழகம் முழுவதும் தகிக்கிறது. சென்னை தவிர பிற மாவட்டங்கள் அனைத்திலும் தினமும் 12 மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்படவே, அரசுக்கு எதிராக உக்கிரமாக இருக்கிறார்கள் பொதுமக்கள்!
கடந்த சில வருடங்களாகவே இந்தச் சிக்கல் இருந்து வந்தாலும், சமீபத்திய இரண்டு வாரங்களில் எகிறி நிற்கிறது மின்வெட்டு சாதனை. இந்த விவகாரம் குறித்து கொதித்துப் பேசும் தமிழ்நாடு ஊரகத் தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவரான ஜேம்ஸ், ''தமிழ்நாட்டில் நான்கு வருடங்களாகவே மின் தட்டுப்பாடு பிரச்னை இருக்கிறது. ஆனால், கடந்த ஆட்சியில் கடும் மின்பற்றாக்குறை இருந்த சமயத்தில் குஜராத் போன்ற மாநிலங்களில் இருந்து மின்சாரத்தைக் கொள்முதல் செய்தாங்க. மின்வெட்டு நேரங்களை இரண்டு மணி நேரம், நாலு மணி நேரம்னு திறமையா சமாளிச்சாங்க. இந்த அரசாங்கமோ, எத்தனை மணி நேரம் மின்வெட்டு ஆனாலும் பரவாயில்லை, வெளியில் இருந்து மின்சாரம் வாங்குவது இல்லை என்று பிடிவாதமா இருக்கு.
தமிழ்நாட்டுத் தொழிற்சாலைகளுக்கு ஆர்டர் கொடுத் தால், பொருட்கள் சரியான நேரத்துக்கு சப்ளை ஆவது இல்லை என்ற காரணத்தால் குஜராத் மாதிரியான மாநிலங்களைப் பலரும் தேடிப்போக ஆரம்பிச்சிட்டாங்க. ஏற்கெனவே, வங்கியிலும் தனியார் நிதி நிறுவனங்களிலும் வாங்கிய கடன், இப்போ வட்டியோட சேர்த்து நெஞ்சை அடைக்குது. மொத்த ஆர்டரும் போயிடும் போல இருக்கு. அதனால், கண்ணுக்குத் தெரிய எதிர்காலமே இல்லைங்க'' என்கிறார் வேதனையோடு.
தனியார் மருத்துவமனைகளில் எல்லாம் ஜெனரேட்டர் வந்துவிட்டது. ஆனால், பல அரசு மருத்துவமனைகளில் ரொம்பவே அவதிப்படுகிறார்கள். பச்சிளங்குழந்தைகளும் தீக்காயம் பட்ட நோயாளிகளும் படும் வேதனை உச்சகட்டம். மாவட்ட அரசு மருத்துவமனைகளில், பிணங்கள் இருக்கும் ஃப்ரீஸர்களுக்கு மின்சப்ளை இல்லாததால் துர்நாற்றம் தாங்க முடியவில்லை. மின் மயானங்களில் ஒரு நாளைக்கு ஐந்து பிணங்கள் எரிந்த நிலை மாறி, இரண்டு என்றாகி விட்டது. மற்றவற்றை, கட்டை வைத்து எரிக்கத் தொடங்கி விட்டனர். ஒரு பிணம் எரிந்துகொண்டு இருக்கும்போது மின்சாரம் கட் ஆனால்... மீதி எரிவதற்கு கரன்ட் இப்ப வருமா... வராதா? இது கெட்ட சகுனமோ? என்று சோகத்துடன் கூடுதல் மன வருத்தப்படுகிறார்கள்.
சேலம் ஸ்டீல் ஃபர்னிச்சர் சங்கத்தின் செயலாளர் ஈசன் எழில் விழியன் நம்மிடம், '' இரண்டு மணிநேரம் கட் ஆனால் பவர் கட் என்று சொல்லலாம். ஆனால் இப்போது கரன்ட் சுத்தமாவே கிடையாதுங்கிறதுதான் உண்மை. ஒரு நாளைக்கு 14 மணி நேரம் பவர் கட் என்றால், எப்படித் தொழில் செய்ய முடியும்? வேலை ஆட்களுக்கு வேலையும் கொடுக்க முடியலை. அவங்களை சும்மா உட்கார வெச்சுக்கிட்டு சம்பளமும் கொடுக்க முடியலை. எப்போ கரன்ட் வரும்... போகும்னு யாருக்கும் தெரியலை. நெருக்கடிக் காலம்னு சொல்வாங்க இல்லையா... அப்படி ஒரு சூழ்நிலையில்தான் இப்போ தமிழகம் இருக்கு.
போன ஆட்சியில ஆற்காடு வீராசாமியை, 'பவர்கட்’ அமைச்சர்னு கிண்டல் பண்ணுவாங்க. ஆனா இப்போ ஆற்காடு வீராசாமி எவ்வளவோ பரவாயில்லைனு சொல்ல வெச்சுட்டாங்க. இதில், ஜெயலலிதா உடனடியாகத் தலையிட்டு நல்ல முடிவு எடுக்கலைன்னா... கூடங்குளத்தில் மக்கள் பொங்கிய மாதிரி தமிழ்நாடு முழுக்கப் பொங்க ஆரம்பிச்சுடுவாங்க'' என்று வேதனையில் வெடித்தார்.
மதுரை, நெல்லை மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட தென் தமிழக மாவட்டங்கள் வியர்வையில் கரைகின்றன. அனல் மின் நிலையத்தைத் தன் மடியில் வைத்திருக்கும் தூத்துக்குடியில் 12 மணி நேரம் பவர் கட் பாடாய்ப்படுத்துகிறது. ஸ்ரீவைகுண்டம் பகுதியில் கிணற்றுப் பாசனத்தை நம்பியிருக்கும் பல்லாயிரம் ஏக்கர் வாழைத் தோட்டங்கள் தண்ணீர் இல்லாமல் கருக ஆரம்பித்து விட்டது. தமிழகத்துக்கே சோறு போடும் டெல்டா விவசாயிகள், கருகும் பயிர்களைப் பார்த்து கண்ணீர் வடித்து நிற்கிறார்கள். அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயி அச்சுதன், ''மின் வெட்டுப் பிரச்னையால் மொத்தமாகவே விவசாயம் அழிஞ்சுபோச்சு. தினமும் கரென்ட்டை நிறுத்துறது இல்லாம, வாரத்துக்கு ஒருநாள் முழுசாவும் நிறுத்திக் கழுத்தறுக்குறாங்க. மின்வெட்டுப் பிரச்னையால், விவசாயிங்க நிலைமை பாதாளத்துக்குப் போயிருச்சு. இதோட விளைவு, உணவுப் பொருள் எல்லாத்துக்குமே கடுமையான தட்டுப்பாடு வரப்போகுது. ஆனா, இதைப்பத்திக் கொஞ்சமும் கவலைப்படாத அரசாங்கம், பன்னாட்டு கம்பெனிகளுக்கு மட்டும் தடையில்லா மின் சாரத்தை அள்ளி வழங்குது. ஜெனரேட்டர் வெச்சுத் தொழில் நடத்தும் அளவுக்குக் காசு வெச்சிருக்கிறவங்களுக்கு கூடுதல் நேரம் பவர் கட் பண்ணிட்டு, எங்களை மாதிரி விவசாயம் செய்றவங்களுக்குக் கொடுத்தா என்னவாம்? பயிரைக் காயவிட்டு, பட் டினியில் மக்களை சாகடிச்சுட்டு வெறும் காரையும் மொபைலையும் தயாரிச்சு என்ன புண்ணியம்?'' என்று கேட்கிறார் வேதனையுடன்.
என்னதான் தீர்வு என்று தமிழக மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனிடம் பேசினோம். ''கடுமையான மின்தடைக்குக் கடந்த தி.மு.க. அரசின் செயல்பாடுதான் காரணம். தமிழக முதல்வரின் உத்தரவுப்படி மின்சார உற்பத்திக்குத் தேவையான நடவடிக்கைகளைத் தீவிரமாக எடுத்து வருகிறோம். டிசம்பர் மாத இறுதிக்குள் மின்தடை சீராகிவிடும். 2013-ம் ஆண்டு முதல் தமிழகம் மின்சாரத்தில் தன்னிறைவு பெற்றுவிடும். அதன்பிறகு, மின் தடை என்ற பேச்சுக்கே இடம் இல்லை'' என்று நம்பிக்கையுடன் சொன்னார்.
தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் அதிகாரிகளோ, ''காற்றாலைகளில் ஏற்ற இறக்கத்தோடு காற்று வீசுவதால், மின் உற்பத்தி மிகவும் குறைவாக இருக்கிறது. மத்திய மின் தொகுப்பில் இருந்து தமிழகத்துக்குக் கொடுக்க வேண்டிய மின்சாரத்தில் 1,000 மெகா வாட் குறைவாகத்தான் கிடைக்கிறது. அதோடு, தமிழகத்தில் இருக்கும் நீர்த்தேக்கங்களிலும் தண்ணீர் இல்லை என்பதால், தண்ணீரில் இருந்து கிடைக்கும் மின்சாரமும் தடைபட்டு இருக்கிறது. மின் கட்டமைப்பு மூலமாகக் கிடைக்கும் மின்சாரமும் வருவது இல்லை. வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படும் மின்சாரமும் ஒழுங்கு முறை ஆணையத்தின் சில கட்டுப்பாடுகளால் நமக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தக் குறை எல்லாம் இப்போதைக்கு சரியாகும் என்று நம்பிக்கையே இல்லை'' என்கிறார்கள்.
திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி கிராமத்தில் தமிழக மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வீடு இருக்கிறது. அந்த வீட்டுக்கு அதிகத் திறன்கொண்ட ஜெனரேட்டர் ஒன்றை சில தினங்களுக்கு முன் பொருத்திவிட்டாராம் அமைச்சர்.
அமைச்சர் வாங்கலாம். ஆனால், அடித்தட்டு மக்கள்..?
கோடைக் காலம் கழிந்த பிறகும் மின்வெட்டுப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கவில்லை என்பதுடன் பவர் கட் நேரம் இன்னும் அதிகரிக்கவே தமிழகம் முழுவதும் தகிக்கிறது. சென்னை தவிர பிற மாவட்டங்கள் அனைத்திலும் தினமும் 12 மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்படவே, அரசுக்கு எதிராக உக்கிரமாக இருக்கிறார்கள் பொதுமக்கள்!
கடந்த சில வருடங்களாகவே இந்தச் சிக்கல் இருந்து வந்தாலும், சமீபத்திய இரண்டு வாரங்களில் எகிறி நிற்கிறது மின்வெட்டு சாதனை. இந்த விவகாரம் குறித்து கொதித்துப் பேசும் தமிழ்நாடு ஊரகத் தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவரான ஜேம்ஸ், ''தமிழ்நாட்டில் நான்கு வருடங்களாகவே மின் தட்டுப்பாடு பிரச்னை இருக்கிறது. ஆனால், கடந்த ஆட்சியில் கடும் மின்பற்றாக்குறை இருந்த சமயத்தில் குஜராத் போன்ற மாநிலங்களில் இருந்து மின்சாரத்தைக் கொள்முதல் செய்தாங்க. மின்வெட்டு நேரங்களை இரண்டு மணி நேரம், நாலு மணி நேரம்னு திறமையா சமாளிச்சாங்க. இந்த அரசாங்கமோ, எத்தனை மணி நேரம் மின்வெட்டு ஆனாலும் பரவாயில்லை, வெளியில் இருந்து மின்சாரம் வாங்குவது இல்லை என்று பிடிவாதமா இருக்கு.
தமிழ்நாட்டுத் தொழிற்சாலைகளுக்கு ஆர்டர் கொடுத் தால், பொருட்கள் சரியான நேரத்துக்கு சப்ளை ஆவது இல்லை என்ற காரணத்தால் குஜராத் மாதிரியான மாநிலங்களைப் பலரும் தேடிப்போக ஆரம்பிச்சிட்டாங்க. ஏற்கெனவே, வங்கியிலும் தனியார் நிதி நிறுவனங்களிலும் வாங்கிய கடன், இப்போ வட்டியோட சேர்த்து நெஞ்சை அடைக்குது. மொத்த ஆர்டரும் போயிடும் போல இருக்கு. அதனால், கண்ணுக்குத் தெரிய எதிர்காலமே இல்லைங்க'' என்கிறார் வேதனையோடு.
தனியார் மருத்துவமனைகளில் எல்லாம் ஜெனரேட்டர் வந்துவிட்டது. ஆனால், பல அரசு மருத்துவமனைகளில் ரொம்பவே அவதிப்படுகிறார்கள். பச்சிளங்குழந்தைகளும் தீக்காயம் பட்ட நோயாளிகளும் படும் வேதனை உச்சகட்டம். மாவட்ட அரசு மருத்துவமனைகளில், பிணங்கள் இருக்கும் ஃப்ரீஸர்களுக்கு மின்சப்ளை இல்லாததால் துர்நாற்றம் தாங்க முடியவில்லை. மின் மயானங்களில் ஒரு நாளைக்கு ஐந்து பிணங்கள் எரிந்த நிலை மாறி, இரண்டு என்றாகி விட்டது. மற்றவற்றை, கட்டை வைத்து எரிக்கத் தொடங்கி விட்டனர். ஒரு பிணம் எரிந்துகொண்டு இருக்கும்போது மின்சாரம் கட் ஆனால்... மீதி எரிவதற்கு கரன்ட் இப்ப வருமா... வராதா? இது கெட்ட சகுனமோ? என்று சோகத்துடன் கூடுதல் மன வருத்தப்படுகிறார்கள்.
சேலம் ஸ்டீல் ஃபர்னிச்சர் சங்கத்தின் செயலாளர் ஈசன் எழில் விழியன் நம்மிடம், '' இரண்டு மணிநேரம் கட் ஆனால் பவர் கட் என்று சொல்லலாம். ஆனால் இப்போது கரன்ட் சுத்தமாவே கிடையாதுங்கிறதுதான் உண்மை. ஒரு நாளைக்கு 14 மணி நேரம் பவர் கட் என்றால், எப்படித் தொழில் செய்ய முடியும்? வேலை ஆட்களுக்கு வேலையும் கொடுக்க முடியலை. அவங்களை சும்மா உட்கார வெச்சுக்கிட்டு சம்பளமும் கொடுக்க முடியலை. எப்போ கரன்ட் வரும்... போகும்னு யாருக்கும் தெரியலை. நெருக்கடிக் காலம்னு சொல்வாங்க இல்லையா... அப்படி ஒரு சூழ்நிலையில்தான் இப்போ தமிழகம் இருக்கு.
போன ஆட்சியில ஆற்காடு வீராசாமியை, 'பவர்கட்’ அமைச்சர்னு கிண்டல் பண்ணுவாங்க. ஆனா இப்போ ஆற்காடு வீராசாமி எவ்வளவோ பரவாயில்லைனு சொல்ல வெச்சுட்டாங்க. இதில், ஜெயலலிதா உடனடியாகத் தலையிட்டு நல்ல முடிவு எடுக்கலைன்னா... கூடங்குளத்தில் மக்கள் பொங்கிய மாதிரி தமிழ்நாடு முழுக்கப் பொங்க ஆரம்பிச்சுடுவாங்க'' என்று வேதனையில் வெடித்தார்.
மதுரை, நெல்லை மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட தென் தமிழக மாவட்டங்கள் வியர்வையில் கரைகின்றன. அனல் மின் நிலையத்தைத் தன் மடியில் வைத்திருக்கும் தூத்துக்குடியில் 12 மணி நேரம் பவர் கட் பாடாய்ப்படுத்துகிறது. ஸ்ரீவைகுண்டம் பகுதியில் கிணற்றுப் பாசனத்தை நம்பியிருக்கும் பல்லாயிரம் ஏக்கர் வாழைத் தோட்டங்கள் தண்ணீர் இல்லாமல் கருக ஆரம்பித்து விட்டது. தமிழகத்துக்கே சோறு போடும் டெல்டா விவசாயிகள், கருகும் பயிர்களைப் பார்த்து கண்ணீர் வடித்து நிற்கிறார்கள். அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயி அச்சுதன், ''மின் வெட்டுப் பிரச்னையால் மொத்தமாகவே விவசாயம் அழிஞ்சுபோச்சு. தினமும் கரென்ட்டை நிறுத்துறது இல்லாம, வாரத்துக்கு ஒருநாள் முழுசாவும் நிறுத்திக் கழுத்தறுக்குறாங்க. மின்வெட்டுப் பிரச்னையால், விவசாயிங்க நிலைமை பாதாளத்துக்குப் போயிருச்சு. இதோட விளைவு, உணவுப் பொருள் எல்லாத்துக்குமே கடுமையான தட்டுப்பாடு வரப்போகுது. ஆனா, இதைப்பத்திக் கொஞ்சமும் கவலைப்படாத அரசாங்கம், பன்னாட்டு கம்பெனிகளுக்கு மட்டும் தடையில்லா மின் சாரத்தை அள்ளி வழங்குது. ஜெனரேட்டர் வெச்சுத் தொழில் நடத்தும் அளவுக்குக் காசு வெச்சிருக்கிறவங்களுக்கு கூடுதல் நேரம் பவர் கட் பண்ணிட்டு, எங்களை மாதிரி விவசாயம் செய்றவங்களுக்குக் கொடுத்தா என்னவாம்? பயிரைக் காயவிட்டு, பட் டினியில் மக்களை சாகடிச்சுட்டு வெறும் காரையும் மொபைலையும் தயாரிச்சு என்ன புண்ணியம்?'' என்று கேட்கிறார் வேதனையுடன்.
என்னதான் தீர்வு என்று தமிழக மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனிடம் பேசினோம். ''கடுமையான மின்தடைக்குக் கடந்த தி.மு.க. அரசின் செயல்பாடுதான் காரணம். தமிழக முதல்வரின் உத்தரவுப்படி மின்சார உற்பத்திக்குத் தேவையான நடவடிக்கைகளைத் தீவிரமாக எடுத்து வருகிறோம். டிசம்பர் மாத இறுதிக்குள் மின்தடை சீராகிவிடும். 2013-ம் ஆண்டு முதல் தமிழகம் மின்சாரத்தில் தன்னிறைவு பெற்றுவிடும். அதன்பிறகு, மின் தடை என்ற பேச்சுக்கே இடம் இல்லை'' என்று நம்பிக்கையுடன் சொன்னார்.
தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் அதிகாரிகளோ, ''காற்றாலைகளில் ஏற்ற இறக்கத்தோடு காற்று வீசுவதால், மின் உற்பத்தி மிகவும் குறைவாக இருக்கிறது. மத்திய மின் தொகுப்பில் இருந்து தமிழகத்துக்குக் கொடுக்க வேண்டிய மின்சாரத்தில் 1,000 மெகா வாட் குறைவாகத்தான் கிடைக்கிறது. அதோடு, தமிழகத்தில் இருக்கும் நீர்த்தேக்கங்களிலும் தண்ணீர் இல்லை என்பதால், தண்ணீரில் இருந்து கிடைக்கும் மின்சாரமும் தடைபட்டு இருக்கிறது. மின் கட்டமைப்பு மூலமாகக் கிடைக்கும் மின்சாரமும் வருவது இல்லை. வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படும் மின்சாரமும் ஒழுங்கு முறை ஆணையத்தின் சில கட்டுப்பாடுகளால் நமக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தக் குறை எல்லாம் இப்போதைக்கு சரியாகும் என்று நம்பிக்கையே இல்லை'' என்கிறார்கள்.
திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி கிராமத்தில் தமிழக மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வீடு இருக்கிறது. அந்த வீட்டுக்கு அதிகத் திறன்கொண்ட ஜெனரேட்டர் ஒன்றை சில தினங்களுக்கு முன் பொருத்திவிட்டாராம் அமைச்சர்.
அமைச்சர் வாங்கலாம். ஆனால், அடித்தட்டு மக்கள்..?
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: மின்வெட்டு:தமிழக அமைச்சரவை இன்று முக்கிய முடிவு.....
என்னதான் தீர்வு என்று தமிழக மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனிடம் பேசினோம். ''கடுமையான மின்தடைக்குக் கடந்த தி.மு.க. அரசின் செயல்பாடுதான் காரணம். தமிழக முதல்வரின் உத்தரவுப்படி மின்சார உற்பத்திக்குத் தேவையான நடவடிக்கைகளைத் தீவிரமாக எடுத்து வருகிறோம். டிசம்பர் மாத இறுதிக்குள் மின்தடை சீராகிவிடும். 2013-ம் ஆண்டு முதல் தமிழகம் மின்சாரத்தில் தன்னிறைவு பெற்றுவிடும். அதன்பிறகு, மின் தடை என்ற பேச்சுக்கே இடம் இல்லை'' என்று நம்பிக்கையுடன் சொன்னார்.
ஆமா இப்படியே வெறும் வாய மெல்ல வேண்டியதுதான் . வெட்ககேடு
ஆமா இப்படியே வெறும் வாய மெல்ல வேண்டியதுதான் . வெட்ககேடு
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
வின்சீலன்- இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
Re: மின்வெட்டு:தமிழக அமைச்சரவை இன்று முக்கிய முடிவு.....
நல்லாவே கதை சொல்றிங்க..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: மின்வெட்டு:தமிழக அமைச்சரவை இன்று முக்கிய முடிவு.....
அருண் wrote:நல்லாவே கதை சொல்றிங்க..!
நல்லாவே கதை சொல்றாங்க நண்பரே நான் கதை சொல்லல ..........
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: மின்வெட்டு:தமிழக அமைச்சரவை இன்று முக்கிய முடிவு.....
நீங்க புடுங்கறது எல்லாமே தேவை இல்லாத ஆணித்தான் அதுனால ஆணியே புடுங்கவேண்டாம் அண்ணாச்சிகளா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Similar topics
» அரசு ஊழியர் ஊதிய உயர்வு; அமைச்சரவை இன்று முடிவு
» நளினி உட்பட 7 பேரை விடுதலை செய்ய கவர்னருக்கு பரிந்துரை - தமிழக அமைச்சரவை முடிவு
» தெலங்கானா அமைச்சரவை இன்று கூடுகிறது: பேரவையைக் கலைப்பது குறித்து முடிவு?
» கூடங்குளம் பிரச்னையில் இறுதி நடவடிக்கை ஜெயலலிதா இன்று முக்கிய முடிவு
» கேரளாவுக்கு பதிலடி கொடுக்க தமிழக சட்டசபையில் இன்று தீர்மானம் : கருணாநிதியும் பங்கேற்க முடிவு
» நளினி உட்பட 7 பேரை விடுதலை செய்ய கவர்னருக்கு பரிந்துரை - தமிழக அமைச்சரவை முடிவு
» தெலங்கானா அமைச்சரவை இன்று கூடுகிறது: பேரவையைக் கலைப்பது குறித்து முடிவு?
» கூடங்குளம் பிரச்னையில் இறுதி நடவடிக்கை ஜெயலலிதா இன்று முக்கிய முடிவு
» கேரளாவுக்கு பதிலடி கொடுக்க தமிழக சட்டசபையில் இன்று தீர்மானம் : கருணாநிதியும் பங்கேற்க முடிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|