Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அம்மாவே தெய்வம் உலகிலே!
3 posters
Page 1 of 1
அம்மாவே தெய்வம் உலகிலே!
![அம்மாவே தெய்வம் உலகிலே! E_1347602212](https://2img.net/h/img.dinamalar.com/data/uploads/E_1347602212.jpeg)
ஆவணி வளர்பிறை சதுர்த்தி திதியையே விநாயகர் சதுர்த்தி என்கிறோம். வியாசர் எழுதிய, 18 புராணங்களில் ஒன்று, பிரமாண்ட புராணம். இதில், லலிதோபாக்யானம் என்ற பகுதி இருக்கிறது. அதில், விநாயகரின் பிறப்பு பற்றி வித்தியாசமாகக் கூறப்பட்டுள்ளது. அன்னை பராசக்தி, லலிதாம்பிகை என்ற பெயரில், தேவர்களுக்கு உதவி செய்ய வந்தாள். பண்டாசுரன் என்பவன் தேவர்களைக் கொடுமைப்படுத்தி வந்தான். அவனை அழிக்க வேண்டு மென, தேவர்கள் அம்பாளிடம் முறையிட்டனர்.
அம்பாளும், அவர்கள் மீது கருணை கூர்ந்து, பண்டாசுரனு டன் போர் தொடுக்க கிளம்பினாள். அவளுடன் தேவப்பெண்கள் மட்டுமே அடங்கிய படை ஒன்றும் கிளம்பியது. அவர்கள் அக்னி கோட்டை அமைத்து பாதுகாப் பாக தங்கியிருந்தனர். பண்டா சுரனுக்கு, விசுக்ரன் என்ற படைத்தளபதி இருந்தான். அவன் மந்திர தந்திரம் அறிந்தவன். அம்பாளின் படையை அடக்குவது எப்படி என்று யோசித்தான். பலத்தால், அவர்களை அடக்க முடியா தென்பதை அவன் அறிவான். எனவே, மந்திரத்தை பயன் படுத்தி, ஒரு யந்திரம் செய்தான். அதற்கு, "விக்ன யந்திரம்' என்று பெயர். விக்னம் என்றால் தடை.
அந்த யந்திரத்தின் தன்மை என்ன தெரியுமா?
யாருக்கு சாதகமாகப் போரிடு கிறார்களோ, அவர்களுக்கு எதி ராகவே மனநிலையை திருப்பி விட்டு விடும். அந்த யந்திரத்தை, அவன் அக்னி கோட்டைக்குள் வீசி விட்டான். அது உள்ளே வந்து விழுந்ததோ இல்லையோ, சக்தியின் படைகளின் மனமும் மாறிவிட்டது.
"இந்த அம்பாள் என்ன பெரிய ஆளா! இவள் சக்தி வாய்ந்தவளாக இருந்தால், சிவனுடைய மனைவி என்ற அந்தஸ்து பெற்றவளாக இருந்தால், தனியாக நின்றே பண்டாசுரனை ஜெயித்திருக்கலாமே! நம்மை இவள் அழைத்து வந்திருக்கிறாள் என்றால், அவளை விட, நம் வீரத்தை அதிகம் நம்புகிறாள் என்று தானே பொருள்! இப்படிப்பட்டவளுக்காக, நாம் ஏன் வீணாக அசுரர்களைப் பகைத்து உயிரிழக்க வேண்டும்! இந்தப் போரில் நாம் பங்கேற்கக்கூடாது...' என்று முடிவெடுத்தனர்.
ஆனால், இந்த லீலைகள் எல்லாவற்றையுமே அம்பாளே செய்கிறாள் என்பது படைகளுக்கு தெரியாது. இந்த விக்னத்தைக் களைய, சிவசக்தி அம்சத்துடன் ஒருவன் வந்தாக வேண்டும்! அவனை உலகமே முழுமுதற்கடவுளாக வணங்க வேண்டும் என்பதல்லவா அவளது நோக்கம்.
எனவே, அவள் அக்னி கோட்டைக்கு சிவனை வரவழைத் தாள். அவரை நோக்கி சிரித்தாள். அந்த சிரிப்பின் அழகில் சொக்கிப்போன சிவனும் சிரித்தார். அவர்களது சிரிப்பிலேயே அவதரித்தார் வெள்ளைக் கொம்பனான விநாயகப் பெருமான்.
தங்கள் அன்பு மகனை உச்சிமோந்த பெற்றோர், "விநாயகா... நீ அக்கினி கோட்டைக்குள் கிடக்கும் யந்திரத்தை கண்டுபிடித்து, அதை அழித்து விடு' என்றனர்.
விநாயகரும் அந்த யந்திரத்தை தன் தந்தத்தால் குத்தி சின்னா பின்னமாக்கினார். யந்திரம் அழிந்ததுமே, அம்பாளுடன் சென்றிருந்த படைகளின் மனம் மாறியது. "ஆகா... நமக்குள் ஏ@தா மாற்றம் ஏற்பட்டதே! அது எப்படி? அம்பாளுக்கு எதிராக நடந்து விட்டோமே...' என வருந்தினர். அம்பாளின் திருப் பாதத்தில் விழுந்து மன்னிப்பு கேட்டனர்.
அம்பாள் அவர்களைத் தேற்றி, "இது எல்லாமே என்னால் நடந்தது. நாம் செய்யப் போகும் இந்த தர்மயுத்தம் மட்டுமல்ல, இவ்வுலகில் எந்தச் செயலைத் துவங்கினா<லும் அது தடையின்றி வெற்றிகரமாக முடிய, என் மகன் விக்னேஸ் வரனை வணங்கிய பிறகே துவங்க வேண்டும் என்பதற்காகவே, இந்த நாடகத்தை நிகழ்த்தினேன்...' என்றாள். பின், படையினர் தீரமாகப் போரிட்டு, பண்டாசுரனை அழித்தனர்.
அம்மாவின் கட்டளையை நிறைவேற்ற பிறந்த பிள்ளை விக்னேஸ்வரர். விக்னம் என்றால் தடை. ஈஸ்வரர் என்றால் கடவுள். தடைகளை நீக்குபவர் என்பதால் விநாயகருக்கு, "விக்னேஸ்வரர்' என்ற பெயர் வந்தது. இளைஞர்களே... உங்கள் அன்னையை தெய்வமாக மதித்து, அவளது விருப்பத்தை நிறைவேற்றுங்கள். விநாயகர் சதுர்த்தி நன்னாளில் உறுதி எடுப்பீர்களா?
நன்றி : தினமலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அம்மாவே தெய்வம் உலகிலே!
/// உங்கள் அன்னையை தெய்வமாக மதித்து, அவளது விருப்பத்தை நிறைவேற்றுங்கள்.///
சிறந்த கட்டுரைப் பகிர்வுக்கு நன்றி அக்கா!
சிறந்த கட்டுரைப் பகிர்வுக்கு நன்றி அக்கா!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அம்மாவே தெய்வம் உலகிலே! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அம்மாவே தெய்வம் உலகிலே!
சிவா wrote:/// உங்கள் அன்னையை தெய்வமாக மதித்து, அவளது விருப்பத்தை நிறைவேற்றுங்கள்.///
சிறந்த கட்டுரைப் பகிர்வுக்கு நன்றி அக்கா!
ஆமாம் சிவா, கடவுள் எல்லோரிடமும் இருக்க முடியாது என்றுதான் தாயை அனுப்பி இருப்பதாக சொல்வார்கள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அம்மாவே தெய்வம் உலகிலே!
யினியவன் wrote:நல்ல பகிர்வும்மா.
அப்ப சனீஸ்வரன் தான் *** ய அனுப்பி இருப்பாரோ?![]()
ஐயோ .............. அந்த நக்ஷத்திரம் யாரு பா ? எனக்கு புரியலையே? தனி மடலிலாவது சொல்லுங்கோ இனியவன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அம்மாவே ஆன்மா
» எழுதுகோலும் தெய்வம்; எழுத்தும் தெய்வம்
» உலகிலே அழகான குழந்தை.
» உலகிலே மிக பெரிய நத்தை
» உலகிலே மிக பெரிய விலங்குகள்
» எழுதுகோலும் தெய்வம்; எழுத்தும் தெய்வம்
» உலகிலே அழகான குழந்தை.
» உலகிலே மிக பெரிய நத்தை
» உலகிலே மிக பெரிய விலங்குகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|